Author: Editor TN Talks

ஒடிசாவில் இறந்த சகோதரியின் எலும்புக்கூட்டை வங்கிக்கு எடுத்து சென்ற அண்ணனின் செயலால் பரபரப்பு ஏற்பட்டது. ஒடிசா மாநிலம் கியோஞ்சர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜிது முண்டா. இவரது தங்கை கக்ரா முண்டா கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இறந்து போயுள்ளார். கக்ரா முண்டா மல்லிபாசியில் உள்ள ஒடிசா கிராமின் வங்கியில் கணக்கு வைத்திருந்தார். அதில் ரூ.19,300 பணம் இருந்துள்ளது. தங்கை இறந்தவுடன் அந்த பணத்தை எடுப்பதற்காக ஜிது முண்டா, சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று அணுகியுள்ளார். ஆனால் அங்கு கக்ரா முண்டா இறந்தது தெரியாமல் சம்பந்தப்பட்டவர் வந்தால் மட்டுமே பணம் எடுக்க முடியும் என கூறியுள்ளனர். இதனால் என்ன செய்வதென்று தெரியாத ஜிது முண்டா, இடுகாட்டிற்கு சென்று புதைக்கப்பட்ட தனது தங்கையின் உடலை தோண்டு எடுத்து, அந்த எலும்புக்கூட்டை ஆதாராமாகக் காட்ட வங்கிக்கு கொண்டு சென்றுள்ளார். இதனை பார்த்த வங்கி அதிகாரிகள், அதிர்ச்சியில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து ஜிது…

Read More

சென்னையில் பாஜக பெண் நிர்வாகியை செருப்பால் அடித்த பாஜக மண்டலத் தலைவர் மீது பாதிக்கப்பட்டவர் நீலாங்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை பாலவாக்கம் பகுதியைச் சேர்ந்த அம்சா மெய்யப்பன், பாஜக மாவட்ட கூட்டுறவுச் செயலாளராக உள்ளார். இவரை, கடந்த 25ஆம் தேதி, மாவட்ட நிர்வாகிகள் போனில் தொடர்பு கொண்டு பாலவாக்கத்தில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு செல்லும்படி தெரிவித்துள்ளனர். அவ்வாறு  வந்த அம்சாவிடம், தேர்தல் பணியில் ஈடுபட்டதற்காக ஒரு தொகை வழங்கி விட்டு, நோட்டில் கையெழுத்து போட்டுச் செல்லுமாறு கூறியுள்ளனர். எவ்வளவு தொகை என கேட்ட அம்சாவை,  அங்கிருந்த பாஜக மண்டல நிர்வாகி அமர்நாத் மற்றும் அசோக்குமார் ஆகியோர் அவதூறாகப் பேசியதோடு, செருப்பால் அடித்ததாக நீலாங்கரை காவல்நிலையத்தில் அம்சா புகார் அளித்தார். அம்சா காவல்நிலையத்துக்கு வந்ததை அறிந்து பாஜக மாவட்ட நிர்வாகிகள் நேரில் வந்து சமாதானப்படுத்தியும் அவர் ஏற்காததால் அவர்கள் திரும்பிச் சென்றனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…

Read More

இந்தோனேசியாவின் பெகாசி திமூர் ரயில் நிலையத்தில் நடைமேடையில் நின்றிருந்த பயணிகள் ரயில் மீது மற்றொரு விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 14 பேர் உயிரிழந்த நிலையில், 40 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 200-க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக உள்ளதாகவும், விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் தொடர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியும் நடைபெற்று வருவதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

Read More

கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 14-ந்தேதி  தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று அரவான் சாமி கண் திறத்தல் நிகழ்ச்சியும், நாளை (புதன்கிழமை) தேரோட்டமும் நடைபெறுகிறது. கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் திருநங்கைகள் ஆயிரக்கணக்கானோர், கூவாகம் கிராமத்திற்கும், விழுப்புரம் நகருக்கும் வருகை தந்துள்ளனர். இவர்களுக்காக, திருநங்கையர் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அரசு சமூக நலத்துறை, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் ஆகியவை இணைந்து மிஸ் கூவாகம் நிகழ்ச்சியை நடத்தியது. இதில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சென்னை, தூத்துக்குடி, நாமக்கல், ஈரோடு, சேலம், கோவை, திருச்சி, விருதுநகர், தேனி, புதுச்சேரி, பெங்களூரு, மைசூர், மலேசியா, புனே உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 40 திருநங்கைகள் கலந்துகொண்டு விதவிதமான, வண்ண, வண்ண உடைகளில் மேடையில் தோன்றி ஒய்யாரமாக நடந்து வந்தனர். அழகிப் போட்டியின் முதல் சுற்றில் நடை, உடை, பாவனை ஆகியவற்றின் அடிப்படையில்…

Read More

ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் 5.1 ஆகிய பழைய வெர்ஷன்களில் வாட்ஸ் அப் சேவை இனி இயங்காது என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப் பயனர்களுக்கு புதிய அறிவிப்பை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆண்ட்ராய்டு 6.0-க்கும் குறைவான இயங்குதளங்களில் செயல்படக்கூடிய ஸ்மார்ட்போன்களில், செப்டம்பர் 8ம் தேதி முதல் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்படும் என்று மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் ஆகியவற்றை பயனர்களுக்கு வழங்குவதற்காக ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் 5.1 போன்ற பழைய வெர்ஷன்களில் வாட்ஸ் அப் இனி இயங்காது என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. பழைய இயங்குதளம் மற்றும் ஹார்டுவேர் வசதியில் புதிதாக வழங்கப்பட உள்ள பாதுகாப்பு வசதிகள் மற்றும் கூடுதல் அம்சங்களை தர முடியாத சூழல் உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பயனர்களுக்கு ஏற்கெனவே எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் மெட்டா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் தங்கள் இமேஜ்கள் மற்றும்…

Read More

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 1,250 பேர் இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சிலில் வழக்கறிஞர்களாக பதிவு செய்து கொண்டனர். சட்டப்படிப்பை முடித்தவர்கள், பார் கவுன்சிலில் பதிவு செய்தால் மட்டுமே நீதிமன்றங்களில் வழக்கறிஞராக ஆஜராகி வாதிட முடியும். அந்த வகையில், சட்டப்படிப்பை முடித்தவர்கள், வழக்கறிஞர்களாக பதிவு செய்யும் நிகழ்ச்சிகளை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நடத்தியது. சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1250 சட்டப்படிப்பு முடித்தவர்கள், வழக்கறிஞர்களாக பதிவு செய்து கொண்டனர். இதில், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பேரறிவாளனும் ஒருவர். புதிதாக வழக்கறிஞர்களாக பதிவு செய்தவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி கலந்து கொண்டு, சிறப்புரையாற்றினார். முன்னதாக பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், வரவேற்புரையாற்றினார். இந்திய பார் கவுன்சில் துணைத்தலைவர் மூத்த…

Read More

வாக்கு என்ணும் மையக் கட்டுப்பாட்டு அறையில் ஜனநாயகன் படம் பார்த்த ஒப்பந்த ஊழியரை போலீசார் கைது செய்தனர். நடிகர் விஜய் தனது நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். முன்னதாக தனது கடைசிப் படமாக ஜனநாயகன் இருக்கும் என அவர் அறிவித்திருந்தார். கடந்த ஜனவரி மாதம் பொங்கலை ஒட்டி 9-ம் தேதி படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக படம் வெளியாவதில் தடங்கல் ஏற்பட்டது. படத்தில் வன்முறையை தூண்டும் வகையிலான காட்சிகள் இருப்பதாக தணிக்கைக் குழு சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவித்தது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. HD பிரிண்ட்டில் படத்தை பலரும் டவுன்லோடு செய்து பார்த்துவிட்டனர். இப்படத்தை டவுன்லோடு செய்பவர்கள் மீது நடவடிக்கை பாயும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆகினும் படம் காட்டுத்தீயாய்…

Read More

நடிகர் விஜய்யின் கடைசிப் படமான ஜனநாயகன் திரைப்படம் மே மாதம் வெளியாக இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் தனது நடிப்பு தொழிலை விட்டுவிட்டு முழு நேர அரசியல்வாதியாக தனது அடுத்த பயணத்தை தொடர்ந்து வருகிறார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தனித்து களம்கண்ட விஜய்யின் தவெகவிற்கு குறிப்பிட்ட வாக்கு சதவீதம் கிடைக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், அரசியலுக்கு வரும் முன்னர், திரைத்துறையில் அவர் தனது கடைசிப் படமாக அறிவித்த ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 9-ம் தேதி வெளியாக இருந்தது. தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காததால் ஒத்தி வைக்கப்பட்ட இப்படம் இப்போது வரையிலும் வெளியாகவில்லை. தணிக்கை வாரிய மறுஆய்வுக் குழுவின் பரிசீலனையில் இருந்தப் போதே, கடந்த ஏப்ரல் 3-ம் தேதி சட்டவிரோதமாக ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஜனநாயகன் திரைப்படம் மே 8-ம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

Read More

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சி- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்து முடிந்ததையடுத்து, திக் விஜயம் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, வில், அம்பு ஏந்தி சிறப்பு அலங்காரத்தில் சுவாமி மற்றும் அம்மன் பக்தர்களுக்கு காட்சி தந்தனர். சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சி திருக்கல்யாணம் இன்று (28.04.2026) வெகு விமர்சையாக நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு சுந்தரேஸ்வரரும், மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி, சித்திரை வீதிகளில் வலம் வந்தனர். அதனைத் தொடர்ந்து ஆடி வீதியில் திருக்கல்யாண மண மேடையில் எழுந்தருளினர். பின்னர், காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் ரிஷப லக்னத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. வேத மந்திரங்கள், வாத்தியங்கள் முழங்க, சுந்தரேஸ்வரரிடம்…

Read More

மும்பையில் பிரியாணிக்கு பின் தர்ப்பூசணி உண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பை பைதோனி பகுதியை சேர்ந்தவர்கள் அப்துல்லா – நஸ்ரீன் தம்பதி. இவர்களுக்கு ஆயிஷா, ஷைனப் என இரு மகள்கள் இருந்துள்ளனர். கடந்த சனிக்கிழமை அப்துல்லா வீட்டுக்கு உறவினர்கள் வந்துள்ளனர். இரவு 10.30 மணியளவில் உறவினர்களுடன் சேர்ந்து அப்துல்லா குடும்பத்தினர் சிக்கன் பிரியாணி சாப்பிட்டுள்ளனர். உறவினர்கள் சென்ற பிறகு, அப்துல்லா குடும்பத்தினர் நள்ளிரவு 1 மணியளவில் தர்பூசணி சாப்பிட்டதாக சொல்லப்படுகிறது. மறுநாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை காலை 4 பேருக்கும் திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வாந்து, வயிற்றுப்போக்கால் அவதியடைந்தவர்கள், தங்களது குடும்ப மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுள்ளனர். மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4 பேரும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதற்கட்டமாக தர்பூசணி விஷத் தன்மையாக மாறியதால் இந்த துயரன் நேர்ந்திருக்கலாம்…

Read More