Author: Editor TN Talks
நடிகர் தனுஷ் நடிப்பில் வரும் 30-ஆம் தேதி வெளியாகவுள்ள “கர ” படத்திற்கு தடை விதிக்ககோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள கர படத்தில், நடிகர் தனுஷ், மமிதா பைஜு, கே.எஸ். ரவிக்குமார், கருணாஸ், ஜெயராம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வருகிற ஏப்ரல் 30ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சேலம் பூவாய் அம்மன் படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் நடிகரும் தயாரிப்பாளருமான வேங்கை அய்யனார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் ஏற்கனவே மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கரா என்ற தலைப்பில் படப்பெயரை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்து, நடிகர்கள் மாஸ்டர் மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட நடிப்பில் படத்தை தயாரித்து வருவதாக தெரிவித்துள்ளார். தற்போது தனுஷ் நடித்த கர படத்தின் தலைப்பை மாற்றக்கோரி தயாரிப்பாளர் சங்கத்திலும் முறையிட்டதாகவும் ஆனால்…
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில், படுக்கையறையின், டபுள் படுக்கையின் கீழே இருந்த அண்டர் கிரவுண்டில் போலீசார் கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மீரட் போலீசாருக்கு அங்குள்ள ஒரு வீட்டில் ரகசியமாக ஆயுத தொழிற்சாலை செயல்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சோதனை நடத்திய போலீசார் அங்கு படுக்கையறையில் இருந்த டபுள் படுக்கையை நகர்த்தியபோது, அதன் கீழே ரகசிய அறை இருந்ததைக் கண்டுபிடித்தனர். உடனடியாக, அந்த அறைக்குள் சென்ற போலீசார், அங்கு ஆயுதங்கள் செய்யப் பயன்படுத்திய பொருட்களை பறிமுதல் செய்ததோடு, தயாரிக்கப்பட்ட பல கருவிகளையும் கைப்பற்றினர். இது தொடர்பாக இந்த சம்பவ இடத்திலேயே 11 பேரை கைது செய்த போலீசார், மேலும் 10 பேரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களிடம், இதுவரை இந்த ஆயுதங்களை யாருக்கு விற்றுள்ளனர் என்பதை கண்டறிய போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகர் சூர்யா நடத்தி வரும் அகரம் பவுண்டேஷன் பெயரில் முறைகேடு நடப்பதாகவும், விழிப்புடன் இருக்கும்படியும் அகரம் பவுண்டேஷன் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக அகரவும் பவுண்டேஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது;- அகரம் பவுண்டேஷன் (Agaram Foundation) சென்னை தியாகராய நகரில் மட்டுமே தனது அலுவலகத்தைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் வேறு எந்தப் பகுதியிலும் எங்களுக்குக் கிளை அலுவலகங்கள் இல்லை என்பதைப் பொதுமக்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். ‘அகரம் விதை’ திட்டத்திற்கான மாணவர் தேர்வு, சமூகப் பொருளாதார நிலையை அடிப்படையாகக் கொண்டு முற்றிலும் வெளிப்படையான முறையில் நடைபெறுகிறது. பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் இருந்து எவ்வித கட்டணமும் பணமாகவோ, பொருளாகவோ பெறப்படுவதில்லை. சமீபகாலமாக, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சில தனிநபர்களும் அமைப்புகளும் “அகரம்” என்ற பெயரை முறைகேடாகப் பயன்படுத்தி. தவறான தகவல்களைப் பரப்புவதோடு, மாணவர்களையும் பெற்றோர்களையும் பொதுமக்களையும் ஏமாற்ற முயற்சிப்பது கவனத்திற்கு வந்துள்ளது. எனவே, ‘அகரம்’ சார்பாக உங்களை அணுகுவதாகக்…
வாக்கு எண்ணிக்கை மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது. 2026 தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 23.04.2026 அன்று நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 04.05.2026 (திங்கட்கிழமை) அன்று 62 வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெறவுள்ளது. வாக்குகள் எண்ணும் பணி சரியாக காலை 8:00 மணிக்குத் துவங்கும். முதலில் காலை 8:00 மணிக்குத் தபால் வாக்குகள் எண்ணும் பணி துவங்கும். 30 நிமிடங்களுக்கு பிறகு, அதாவது காலை 8:30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (EVM) பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணும் பணி துவங்கும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (EVM) பதிவு செய்யப்பட்ட வாக்குகளை எண்ணும் சுற்றுகளில், கடைசி சுற்று வாக்குகள் எண்ணும் பணி, தபால் வாக்குகள் எண்ணும் பணி முடிக்கப்பட்டவுடன்தான் துவங்கப்படும். ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் ஒரு பகுதியில் தபால் வாக்குகளும், மற்றொரு பகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில்…
சாத்தான்குளத்தில் கிராம நிர்வாக அலுவலர் ஒருவரின் வீடு புகுந்து அவரது பெண் குழந்தையைக் கடத்த முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாத்தான்குளம், ஓடக்கரை தெருவைச் சேர்ந்த சுபாஷ், அரசூர் 1 கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வருகிறார். 26ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இவர் வீட்டில் இருந்தபோது, 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அத்துமீறி வீட்டிற்குள் புகுந்ததோடு, சுபாஷின் மனைவியின் கழுத்தை நெரித்து அவரது கழுத்தில் கிடந்த நகையைப் பறிக்க முயன்றாராம். அவரின் அலறல் கேட்டு உறவினர்கள் ஓடி வந்தபோது, அந்தப் பெண் சுபாஷின் இரண்டரை வயது பெண் குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஓட முயன்றுள்ளார். சுபாஷ் மற்றும் உறவினர்கள் அந்தப் பெண்ணை மறித்து குழந்தையை மீட்டுள்ளனர். தன்னைப் பிடிக்க முயன்றவர்களை அந்தப் பெண் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதன் பின்னர், அந்தப் பெண் மீது புகாரளித்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்க தாமதித்ததாகக் கூறி, சுபாஷின் உறவினர்கள் காவல்…
தமிழ்நாட்டில் வரும் 30-ஆம் தேதி 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களின் கடலோரப்பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 29-ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 30-ஆம்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.…
மே 4ஆம் தேதி மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமையும் என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நம்பிக்கை தெரிவித்துள்ளார். வெள்ளுடை வேந்தர்’ சர்.பிட்டி தியாகராயரின் 175ஆவது பிறந்தநாளை ஒட்டி சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திரு உருவப்படத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். தென் இந்திய நல உரிமைச் சங்கம் என்று திராவிடர் இயக்கத்தை உருவாக்கிய சர்பிடி தியாகராயர், வரலாற்று பெருமைமிக்க ஒரு வாழ்வை அமைத்தவர். உலகம் போற்றும் அளவிற்கு திராவிட மாடல் ஆட்சி வந்துள்ளது அதற்கு அடித்தளம் இட்டவர் சர் பி.டி தியாகராயர். இந்தியாவே திரும்பிப் பார்க்கக் கூடிய ஒரு அற்புதமான ஆட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார். தமிழ்நாடு யாருக்கும் அடிமையாகக் கூடாது. மிகப்பெரிய எழுச்சியை இன்று பார்ப்பதாக கி.வீரமணி கூறினார்.…
இலங்கை சர்வதேச விமான நிலையத்தில், 110 கிலோ போதைப் பொருள்கள் கொண்டு வந்த காரணத்துக்காக 22 புத்த துறவிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தாய்லாந்தில் விடுமுறையை கழிக்கச் சென்ற இலங்கையைச் சேர்ந்த புத்த துறவிகள், மீண்டும் தாய்நாடு திரும்பிய போது, அவர்களின் உடைமைகளை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். அப்போது 22 புத்த துறவிகளின் உடைமைகளில் பயிர் வகையிலிருந்து தயாரிக்கப்படும் போதைப் பொருள்கள் இருந்ததை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 100 கிலோ எடையிலான இந்த போதைப் பொருள்களின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.110 கோடி ஆகும். குஷ் மற்றும் ஐஸ் என்னும் இந்த போதைப் பொருட்களை புத்த துறவிகள் முதன்முறையாக கடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. ஏழை மாணவர்களுக்காக நோட்டுப் புத்தகங்களை அதிகமாக வாங்கிக் கொண்டுவந்த புத்த துறவிகள், அவை வைக்கப்பட்டிருந்த பெட்டிகளில் ரகசிய அறை அமைத்து அதில் போதைப் பொருட்களை கடத்தி வந்ததாகக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரம்…
கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோடியக்கரைக்கு தென்கிழக்கே நாகை மாவட்டம் செருதூரை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இன்று அதிகாலை கடலில் வலையை விரித்து மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு அதிவேக படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள், செருதூரைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களை சுற்றி வளைத்தனர். பின்னர் கத்தி, சுளிக்கி, தடி போன்ற ஆயுதங்களுடன் படகில் ஏறிய இலங்கை கடல் கொள்ளையர்கள் இந்திய மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள் மற்றும் அவர்களது ஜிபிஎஸ் கருவி செல்ஃபோன் உள்ளிட்டவைகளை பறித்துக் கொண்டு அவர்களை தடியால் தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் தாக்குதலை தடுத்த செருதூரை சேர்ந்த பழனிச்சாமி என்ற மீனவருக்கு கை உடைந்ததுடன், மற்ற மீனவர்கள் சக்திமயில், அபிமன், பாலசுப்ரமணியன், அபி ஆகியோருக்கு…
திருமணம் செய்வது என்பது கட்டாயம் இல்லை எனவும், திருமணம் செய்து கொள்ளாமலேயே குழந்தை பெற்றுக் கொள்ளலாம் எனவும் நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணரும், திமுக நிர்வாகியுமான திவ்யா பேட்டி ஒன்றில், திருமணம் செய்து கொண்ட பிறகே குழந்தைகள் பெறலாம் என்பதை தான் ஏற்கவில்லை. திருமணமாகாமலும் குழந்தை பெற்றுக் கொள்ளலாம். தன்னுடைய வாழ்க்கை முடிவுகளுக்கு தந்தை சத்யராஜ் தடைபோட்டது இல்லை எனக் கூறியிருந்தார். திவ்யாவின் கருத்தை சிலர் ஆதரித்தும், பலர் எதிர்த்தும் சர்ச்சையான நிலையில், நடிகர் சத்யராஜ் வீடியோ ஒன்றினை வெளியிட்டிருக்கிறார். நான் ஒரு பெரியாரியவாதி. சாதி, மத சடங்குகளில் எனக்கு உடன்பாடில்லை. திருமணம் என்பது கட்டாயமில்லை. அது தனிநபர் விருப்பத்தை சார்ந்த விஷயம். திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றுக் கொள்வதற்கும் இன்றைய மருத்துவத்துறையில் வாய்ப்புகள் உள்ளது. திவ்யாவின் கருத்துகளில் நானும் உடன்படுகிறேன் என நடிகர் சத்யராஜ் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.