Author: Editor TN Talks
காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாப்பது குறித்த கவலையை மீண்டும் எழுப்பி உள்ள, காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஏப்ரல் 29-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 50-வது கூட்டம், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை அமைப்பதற்கான கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையின் அடிப்படையில், அந்த அணை கட்டுவதற்கு அனுமதி அளித்து பரிந்துரை செய்யுமாறு மத்திய நீர்வள ஆணையம் 2019-ல் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தைக் கேட்டுக் கொண்டது. காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டங்களில் அந்த விரிவான திட்ட அறிக்கையை விவாதிப்பதற்குத் தமிழ்நாடு அரசு தனது எதிர்ப்பைத் தெரிவித்தது. இதன் விளைவாக, அந்த விரிவான திட்ட அறிக்கை நீண்ட காலமாக விவாதிக்கப்படாமலே இருந்தது. அது குறித்து மத்திய…
தஞ்சை பெரிய கோயிலின் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு சித்திரைத் தேரோட்டம் இன்று (27.04.2026) விமர்சையாக நடைபெற்றது. தஞ்சை பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (27.04.2026) காலை நடைபெற்றது. முன்னதாக கடந்த 15-ம் தேதி தேரில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, தேருக்கு வா்ணம் பூசி, அலங்கரிக்கும் பணி தொடங்கியது. 19 அடி உயரம் கொண்ட தோ், அலங்காரத்தின் மூலம் 50 அடி உயரத்தை எட்டியது. சாதாரணமாக 40 டன் எடை கொண்ட இந்தத் தோ் அலங்காரத்துக்கு பிறகு 43 டன்னாக உயா்ந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்குள் ஸ்ரீ தியாகராஜா், ஸ்கந்தா், ஸ்ரீ கமலாம்பாள் புறப்பாடும், முத்துமணி அலங்கார சப்பரத்தில் பஞ்சமூா்த்திகள் புறப்பாடும் நடைபெற்றது. தேரில் ஸ்ரீ தியாகராஜா், கமலாம்பாள் எழுந்தருளினர். பின்னா், திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். தியாகேசா,…
உலக பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து நாள்தோறும் மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் ப்ரியாவிடையுடனும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி தினமும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்து வருகின்றனர். இந்நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் விழா கோயில் வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோயில் ஆறுகால் பீடத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மனுக்கு அரசியாக முடி சூட்டுவதற்காக ராயர் கிரீடம் எனப்படும் ரத்தின ஆபரணங்கள் இழைத்த வைரக் கிரீடம் அனுக்ஞை விநாயகர் சன்னதியில் இருந்து கொண்டு வரப்பட்டு, புனித நீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து மீனாட்சி அம்மனுக்கு பரிவட்டம் கட்டி, வைர கிரீடம் சூட்டப்பட்டு கையில் செங்கோல் வழங்கப்பட்டது. இதையடுத்து…
தமிழகத்தில் 75 ஆண்டுகால சட்டசபை வரலாற்றில் இல்லாத வகையில் புதிய சாதனையாக இந்த சட்டமன்ற தேர்தலில் 85 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. ஆனால், இது முந்தைய தேர்தல்களில் வாக்குகள் அதிகரிக்கும், இயல்பான போக்கோடு ஒத்துப்போவதால், இதுவொரு புதிய உச்சம் கிடையாது எனவும் தேர்தல் கணிப்பாளர்கள் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரிக்கான சட்டமன்ற தேர்தல் தேதி கடந்த மார்ச் மாதம் 15ஆம் நாள் அறிவிக்கப்பட்டது. இதன்படி கேரளா, அஸ்ஸாம், புதுச்சேரியில் கடந்த 9ஆம் தேதி வாக்குபதிவு நடைபெற்றது. தமிழ்நாட்டில் இன்று (ஏப்.23) தேர்தல் நடைபெற்றது. மேற்கு வங்கத்திலும் முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது. சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிந்த கேரளா, அஸ்ஸாம், புதுச்சேரி மாநிலங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமான வாக்குகள் பதிவாகியிருந்தது. இதனால் தமிழ்நாட்டில் எத்தனை சதவீத வாக்குகள் பதிவாகும் எனக் கேள்வி எழுந்தது. இந்த நிலையில், இன்று தமிழ்நாட்டின் 74 ஆண்டு கால…
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் இன்று திருமணம் செய்து கொண்ட தனசேகர் – ப்ரீத்தி தம்பதி, மணக்கோலத்தில் காட்டூர் அரசு நடுநிலைப் பள்ளிக்கு வந்து தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் ஆர்வத்துடன் வந்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர். இந்தச் சூழலில் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. மறைமலைநகர் பகுதியைச் சேர்ந்த தனசேகர் – ப்ரீத்தி ஆகியோருக்கு இன்று காலை திருமணம் நடைபெற்றது. தங்களது வாழ்வின் மிக முக்கியமான தருணத்திலும், நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஜனநாயகக் கடமையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இந்தத் தம்பதியினர் திருமணக் கோலத்திலேயே நேராக வாக்குச் சாவடிக்கு வந்தனர். பொத்தேரி அருகே அமைந்துள்ள காட்டூர் அரசு நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடிக்கு வந்த புதுமணத் தம்பதி,…
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் திருச்சி காஜா மியான் பள்ளியில் தனது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமை ஆற்றினார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, கடந்த ஐந்தாண்டு காலமாக முத்துவேல் கருணாநிதி ஆட்சி சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்திய மாநிலங்களுக்கெல்லாம் முன் உதாரணமான ஆட்சியாக பாராட்டைப் பெற்றுள்ளது. கடல் கடந்தும் தமிழகத்தின் ஆட்சியும், சாதனையும் அவர்கள் எல்லா தரப்பு மக்களுக்கும் செய்திருக்கிற சாதனைகள் அத்தனையும் பேசும் பொருளாகி உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்த காலை உணவு திட்டம் கனடா, ஸ்ரீலங்கா உள்ளிட்ட நாடுகளில் பரவலாக பேசப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படுகிறது. 234 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றிவாகை சூடும் நிலையில் இருக்கிறது. நான்கு முனை, ஐந்து முனைப் போட்டி என்பதெல்லாம் இல்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை திராவிட மாடல் ஆட்சிதான் முதல் முனை. எல்லா மக்களும் ஏற்றுக் கொண்டுள்ள திராவிட மாடல்…
வாக்குச்சாவடிக்குள் போலீசார் நுழையக்கூடாது என்று தமிழக போலீஸ் டிஜிபி கடுமையாக எச்சரித்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கான விதிமுறைகளை மிகவும் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மாநகர காவல் ஆணையர்களுக்கு தமிழ்நாடு காவல்துறை தலைவர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், தேர்தல் பணியில் உள்ள காவலர்கள் எக்காரணம் கொண்டும் வாக்குச்சாவடி மையங்களுக்குள் நுழையக்கூடாது. வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் அனுமதி இருந்தால் மட்டுமே உள்ளே செல்ல வேண்டும். காவலர்கள் அனைவரும் வாக்குச்சாவடியின் வெளிக்கதவு அருகிலேயே நின்று தங்களது கடமையை ஆற்ற வேண்டும். இது குறித்து மண்டல ரோந்துப் பிரிவினர் மற்றும் வயர்லெஸ் கருவிகள் மூலம் காவலர்களுக்குத் தொடர்ந்து அறிவுறுத்தப்பட வேண்டும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளதால், விதிமுறைகளை மீறும் காவலர்கள் உடனடியாகக் கண்டறியப்படுவார்கள். இந்த அறிவுறுத்தல்களை எவ்விதத் தெளிவற்ற நிலையும் இன்றி, காவலர்கள் வரை கொண்டு சேர்க்க வேண்டும் என்று அந்த உத்தரவில்…
மு.க.ஸ்டாலின் மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சராவார் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி தெரிவித்துள்ளார். தமிழக முன்னாள் முதல்வரும் போடி சட்டமன்ற திமுக வேட்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தனது சொந்த ஊரான பெரியகுளத்தில் உள்ள தென்கரையில், தனியார் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வத்தின் மூத்த மகனும் முன்னாள் தேனி மக்களவை உறுப்பினருமான ஓ.பி. ரவீந்திரநாத் இளைய மகன் ஜெயபிரதீப், ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் சண்முகசுந்தரம் மற்றும் அவரது குடும்பத்தார்கள் தங்களது ஜனநாயக கடமையினை நிறைவேற்றினார். செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றியை பெறும் நிலை இன்று உருவாகியுள்ளது என்றார். கடந்த 5 ஆண்டுகாலமாக நாட்டு மக்களுக்கு ஒரு சிறப்பான ஆட்சியை நாட்டு மக்களுக்கு முதலமைச்சர் தந்ததன் அடிப்படையில் அனைத்து மக்களும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மீண்டும் வெற்றி பெறும் என்பதை உறுதி செய்திருக்கிறார்கள். தமிழகத்தின் முதலமைச்சராக மீண்டும் 2-வது முறையாக மு.க.ஸ்டாலின்…
வாக்குச்சாவடிக்குள் புகைப்படம், வீடியோ எடுக்கக்கூடாது என தேர்தல் ஆணையம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறிய தவெக ஆதரவாளர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்துள்ளது. இன்ஸ்டாகிராமில் nadesangpkns என்னும் ஐடியைப் பயன்படுத்தும் இளைஞர் ஒருவர், வாக்குச் சாவடியில், தான் செங்கம் தொகுதியில் தவெக தரப்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு விசில் சின்னத்துக்கு வாக்களித்த வீடியோவை பதிவிட்டுள்ளார். வாக்குச் சாவடிக்குள் புகைப்படமோ, வீடியோ எடுக்கக் கூடாது எனவும், மீறினால் தண்டனை விதிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ள நிலையில், அதனை மீறி எடுக்கப்பட்டுள்ள இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. தேர்தல் ஆணைய விதிகளை மீறிய இந்த இளைஞருக்கு அபராதம் மற்றும் தண்டனை விதிப்பதோடு, அடுத்து வரக்கூடிய 10 தேர்தள்களில் இவர் வாக்களிக்க தடைவிதிக்க வேண்டும் என நெட்டிசன்கள் எதிர்ப்பு காட்டி வருகின்றனர்.
தேர்தலன்று வாக்கு செலுத்தி ஜனநாயக கடமையாற்றாமல் இருப்பதும் தேசத்துரோகம்தான் என சீமான் சீற்றம் காட்டியுள்ளார். சென்னை நீலாங்கரையில் உள்ள அரசுப் பள்ளியில் தனது வாக்கினை செலுத்திய நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். வாக்குப்பதிவு என்பது ஜனநாயகத்தின் கடைசி வலிமையான ஆயுதம். அதனை எல்லோரும் பயன்படுத்த வேண்டும். 100 சதவீதம் வாக்குப்பதிவாகாத நிலையில், வாக்கு செலுத்தாதவர்களுகு என்ன பிரச்சினை என்னும் வினா எழுகிறது. குண்டு வைப்பது, கொலை செய்வது, அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்துவிட்டு வரி கட்டாமல் இருப்பது, கணக்கு காட்டாமல் மறைப்பது இதுமட்டுமே தேசத்துரோகம் அல்ல.. வாக்கு செலுத்தாமல் இருப்பதும் ஒருவித தேசத்துரோகம்தான். நமது ஒரு வாக்கால் என்ன மாற்றம் வந்துவிடப்போகிறது என நினைக்கிறார்கள். ஒவ்வொரு வாக்கில் இருந்தும்தான் மாற்றம் வரும். அதனால் என்னில் இருந்தும், உங்களில் இருந்தும்தான் மாற்றம் வரும். எல்லோரும் வாக்கு செலுத்தவேண்டியது என்பது நமது பொறுப்பு, கடமை. இவ்வாறு சீமான்…