Author: Editor TN Talks

தமிழ்நாடு காங்கிரசின் புதிய தலைவரை தேர்வு செய்வது பற்றி தேசிய தலைமை தீவிர ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டார். ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றது. இந்தநிலையில், சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு விஷயங்களில் திமுக, காங்கிரஸ் இடையே சுமூகமான சூழல் ஏற்படவில்லை என பரவலாக பேசப்பட்டது.  கடைசிக் கட்டத்தில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட்டு, காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியானது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டார். இந்தநிலையில், தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் குறித்து காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கடும் விமர்சனங்களை முன்வைத்தார். நீண்ட காலம் கட்சிப் பணியில் இருப்பவர்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும், தகுதி வாய்ந்தவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாகவும்…

Read More

சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவுற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை வரும் 4-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு வேட்பாளராக, தலைவராக இருப்பவர் தவெக தலைவர் விஜய். அவர் இன்று காலை அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இதற்காக நேற்றிரவு தனி விமானம் மூலம் சென்னையிலிருந்து மதுரை வந்த விஜய், இன்று அதிகாலை அங்கிருந்து சாலை மார்க்கமாக திருச்செந்தூர் வந்தடைந்தார். அங்கு அவருக்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து பட்டு வேஷ்டி, சட்டையில் மூலவர் சுப்ரமணிய சுவாமியை தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகம் சார்பில் விஜய்க்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டதுடன், வேல் ஒன்றும் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. விஜய் வருகையை முன்னிட்டு அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கோயில் வளாகத்தில் திரண்டு, அவரை காண முண்டியடித்துக் கொண்டனர். பிறகு தனது தொண்டர்களை பார்த்து…

Read More

ஐபிஎல் தொடரில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற 39வது ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் களமிறங்கிய டெல்லி அணி பெங்களூரு அணி வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. 16.3 ஓவர்களில் டெல்லி அணி 75 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் முதல் 6 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்கள் எடுத்து  ஆட்டமிழந்து, ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தனர். அதன்பின்னர் வந்த மில்லர் மற்றும் அபிஷேக் ஆகியோர் இணைந்து அணியின் ஸ்கோரை சற்று உயர்த்தினர். பெங்களூரு அணி தரப்பில் ஜோஷ் 3.3 ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை…

Read More

சென்னையில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் வீட்டு உரிமையாளரின் மகனை போலீசார் கைது செய்துள்ளனர். தியாகராய நகர் காவல் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில், தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் 27 வயதுடைய பெண் ஒருவர் தனது  சகோதரியுடன் வாடகைக்கு வசித்து வருகிறார். கடந்த 25ஆம் தேதி இரவு சகோதரி வெளியில் சென்றிருந்த நிலையில்,  இளம்பெண் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இரவில் வீட்டின் உள் தாழ்ப்பாளை போடாமல் அசந்து தூங்கிய நிலையில், நள்ளிரவில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த, வீட்டு உரிமையாளரின் மகன் ஆனந்த கிருஷ்ணன் என்பவர், இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சத்தமிட்ட இளம்பெண்ணுக்கு ஆனந்த கிருஷ்ணன் கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்தக் கொடுமை தொடர்பாக எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்தில் இளம்பெண் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீஸார், ஆனந்த கிருஷ்ணனிடம் விசாரணை நடத்தி கைது செய்து…

Read More

நாகப்பட்டினம் அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர். பின்னர் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் காவிரி தனபாலன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். டெல்லியில் 29ஆம் தேதி   நடக்க உள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் தமிழகத்திற்கு எதிரான நிகழ்வு நடக்க இருக்கிறது என அச்சமாக உள்ளது. தற்போது தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தமிழகத்தில் காவந்து அரசு உள்ளதால் இந்த கூட்டம் கர்நாடகத்துக்கு மட்டுமே ஆதரவான சூழ்நிலையாக உள்ளது. காவிரி ஆணைய கூட்டத்தை கூட்டி முடிவெடுப்பது என்பது தமிழகத்திற்கும் மற்ற மாநிலங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனைக் கருத்தில் கொண்டு  நீர்வளத்துறை இந்த கூட்டத்தை ஒத்தி வைத்து தேர்தலுக்குப் பின் நிரந்தர அரசு அமைந்த உடன் கூட்டத்தை நடத்த வேண்டும். காவிரி ஆணையக் கூட்டத்தினை ஒத்தி வைக்காத…

Read More

ரூ.50 இலட்சம் வரை பரிசுத் தொகையை வெல்வதற்கான அரிய வாய்ப்பினை மத்திய கலாச்சார அமைச்சகம் அறிவித்துள்ளது. மத்திய கலாச்சார அமைச்சகம் சார்பில் ‘வந்தே மாதரம் ஃப்ரேம்ஸ்’ தேசிய திரைப்பட உருவாக்கப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி, நமது தேசியப் பாடலின் உணர்வை உங்கள் படைப்பாற்றலால் உயிர்ப்பிக்க ஒரு அரிய வாய்ப்பாகும். ரீல்ஸ், ஏ.ஐ. பிலிம் குறும்படம் என மூன்று பிரிவுகளில் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் மூன்று பரிசுகள் வழங்கப்படுகிறது. ரீல்ஸ் பிரிவில் ஒன்றரை லட்சம் ரூபாய் வரையும், ஏ.ஐ. பிலிம் உருவாக்கத்தில் ரூ.5இலட்சம் வரையும், குறும்படத் தயாரிப்பில் 15 இலட்சம் ரூபாய் வரையும் என மொத்தம் 50 இலட்சம் ரூபாய்க் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. 15 மற்றும் 15 வயதுக்கு மேற்பட்டோர் இந்தப் படைப்பாற்றல் போட்டியில் பங்கேற்கலாம். தங்களது படைப்புகளை இறுதிநாளான வரும் மே 7ஆம் தேதிக்குள்  http://vandemataram150.in என்னும் இணையத்தில் பதிவேற்ற வேண்டும்.

Read More

தேர்தல் நடைபெற்றுள்ள மாநில அரசுகள் தேர்ந்தெடுக்கப்பட்டப் பின்னர் காவிரி மேலாண்மை கூட்டத்தை கூட்டவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.  இதுதொடர்பாக  அவர் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டிஎம்சி காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட அடிப்படையில், இந்த நீர் முறையாக மாதவாரியாக வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்கும், காவிரி தொடர்பாக முன்னுக்கு வரும் பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதற்கும் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் ஐம்பதாவது கூட்டம் ஏப்ரல் 29ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் என்பது தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் தொடர்பானவை. தற்பொழுது தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வாக்கு எண்ணிக்கை வரும் மே மாதம்…

Read More

தமிழர்களின் கடும் எதிர்ப்பை மீறி அணு கனிம சுரங்கம் அமைக்கும் திட்டதை மத்திய அரசு கைவிடவில்லை எனில் கடுமையான போராட்டத்தை மக்களுடன் இணைந்து தமிழக வாழ்வுரிமைக்கட்சி முன்னெடுக்கும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி. வேல்முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது;- கன்னியாகுமரி மாவட்டத்தின் கடற்கரை மணலில் (placer deposits) மோனாசைட் — தோரியம் (Th) ~5-10% (சில இடங்களில் அதிகம்), ரேர் எர்த் எலிமென்ட்ஸ் (REE),சிறிய அளவு யுரேனியம். இல்மெனைட் (Ilmenite) — டைட்டானியம் (Titanium) மூலப்பொருளாகும். மேலும் ரூட்டைல் (Rutile), ஜிர்கான் (Zircon), கார்னெட் (Garnet), சில்லிமனைட் (Sillimanite) போன்றவைகள் அணு கனிம சுரங்க திட்டத்துக்கு முக்கியமானது. இந்தியா உலகின் மிகப்பெரிய தோரியம் இருப்புகளில் ஒன்றை கொண்டுள்ளது. தோரியத்தை எடுத்து அணு உலைகளில் (Thorium-based reactors) பயன்படுத்தலாம். மணவாளக்குறிச்சியில் IREL எனப்படும்Indian Rare Earths Limited) நிறுவனம் 1950ம் ஆண்டிலிருந்து தொடங்கப்பட்டாலும் 1963ம்…

Read More

மளிகைப் பொருட்களை டெலிவரி செய்ய வந்த 67வயது முதியவர் 20 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள தனியார் மகளிர் விடுதியில், சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரை சேர்ந்த 20 வயது இளம்பெண் தங்கியிருந்து எம்.பி.ஏ பயின்று வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு, இளம்பெண்ணுடன் இருந்த தோழி ஊருக்கு சென்ற நிலையில், அவர் மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது, விடுதிக்கு அருகே உள்ள மளிகைக் கடையில் மாணவி சில பொருட்களை ஆர்டர் செய்துள்ளார். பொருட்களை டெலிவரி செய்ய வந்த மளிகை கடைக்காரரான 67 வயது, தீபக் பிரதான் என்பவர், இளம்பெண் மட்டும் அறையில் தனியாக இருப்பதை அறிந்து,  உள்ளே புகுந்து அவரைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.பாதிக்கப்பட்ட மாணவி மறுநாள் காலை அளித்த புகாரினைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் இதர…

Read More

திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகராட்சியில் மின் மயானம் அமைப்பதற்கு, அதே பகுதியைச் சேர்ந்த பல்லடம் ரோட்டரி மின் மயான அறக்கட்டளையும், பல்லடம் பஞ்சாயத்து ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரியும், கடந்த 2015ல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து,  அறக்கட்டளை, மின் மயான கட்டுமான பணிகளை துவக்கிய நிலையில், திட்ட ஒப்புதல் பெறவில்லை என கூறி, கட்டுமான பணிகளை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், பல்லடம் நகராட்சி சார்பில் ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் மின் மயானம் அமைக்க அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, டெண்டர் கோரப்பட்டு, கட்டுமான பணிகளும் முடிவடைந்து விட்டன. அறக்கட்டளை செலவில் மின் மயானம் கட்டித்தர ஒப்பந்தம் செய்த நிலையில், அரசுக்கு செலவை ஏற்படுத்தும் வகையில், பல்லடம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரி, பணிக்கம்பட்டி கிராம பஞ்சாயத்து தலைவர் ஆகியோர், தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகக்…

Read More