Author: Editor TN Talks

தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழ்நாடு முழுவதும் சுமார் 75,000க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னதாக ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக வாக்குச்சாவடி அலுவலர்கள் மாதிரி வாக்குப்பதிவை நடத்தினர். இவிஎம் இயந்திரம் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்தனர். பின்னர் மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். சென்னை திருவான்மியூர் சட்டமன்ற தொகுதியில் முதல் ஆளாக தனது வாக்கினை செலுத்தினார் நடிகர் அஜித்குமார். நேற்று பெல்ஜியத்திலிருந்து சென்னை திரும்பிய அவர், இன்று காலை 6.50மணியளவில் வெள்ளை நிற கோட்சூட்டில் மாஸாக திருவான்மியூர் வாக்குப்பதிவு மையத்திற்கு வருகை தந்தார். அதிகாரிகளின் சரிபார்ப்புக்கு பின்னர், தனது வாக்கினை முதல் ஆளாய் செலுத்திவிட்டு சென்றார்.

Read More

தமிழக தலைமை செயலாளராக சாய்குமாரை நியமித்த தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த வீராசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அதில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த நிலையில், ஏப்ரல் 8ஆம் தேதி தமிழக தலைமை செயலாளர்  முருகானந்தத்தை மாற்றிவிட்டு, சாய்குமார் என்பவரை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவிவகித்த காலத்தில் அவரின் செயலாளராகப் பணியாற்றியவர் சாய்குமார். எனவே அவர் எப்படி நடுநிலைமையுடன் செயல்படுவார் என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக தேர்தல் ஆணையத்திடம் அளித்த மனுவை அது பரிசீலிக்கவில்லை. எனவே தலைமை செயலாளராக சாய்குமாரை நியமித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய…

Read More

தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக நடந்துவந்த தேர்தல் பரப்புரை ஒருவழியாக ஓய்ந்து, வியாழன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பல வாரங்களாக முழங்கிக்கொண்டிருந்த  மேடைகள், மைக் சத்தம், பேரணிகள் அனைத்தும் திடீரென நின்றுவிட்டன. தெருக்களில் ஓடிய பிரசார வாகனங்கள் மறைந்துவிட்டன. அரசியல் தலைவர்களின் மேடை பேச்சுகளும் நின்றுவிட்டன. இனி பேசப் போவது அரசியல் கட்சிகள் அல்ல. பேசப்போகிறவர் ஒருவரே — அவர்தான் வாக்காளர். ஜனநாயகத்தில் தேர்தலுக்கு முன் இருக்கும் இந்த நேரம் மிகவும் முக்கியமானது. அரசியல் கட்சிகள் தங்களின் கதைகளை, வாக்குறுதிகளை, குற்றச்சாட்டுகளை மக்களிடம் சொல்லும் காலம் முடிந்துவிடுகிறது. அதன் பிறகு ஆரம்பிக்கிறது ஒரு மௌனமான தீர்மானம்.இந்த ஆண்டின் தமிழக தேர்தல் பல காரணங்களால் சிக்கலானதாக மாறியுள்ளது. பாரம்பரிய திராவிட கட்சிகளின் போட்டி, புதிய அரசியல் சக்திகளின் வரவு, பணப்பட்டுவாடா குற்றச்சாட்டுகள், மேலும் சினிமா நட்சத்திர அரசியலின் தாக்கம் — இவை அனைத்தும் தேர்தல் சூழ்நிலையை வேறுபட்ட ஒன்றாக மாற்றியுள்ளன. வாக்காளர்கள்…

Read More

பழனி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொடைக்கானல் தாலுகாவைச் சேர்ந்த வெள்ளகெவி கிராமம், அடர்ந்த வனப் பகுதிகளின் நடுவே அமைந்துள்ளது. இக்கிராமத்திற்கு கொடைக்கானல் நகரில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தூரமுள்ள வட்டக்கானல் பகுதி வரை வாகனம் மூலம் சென்று, பின்னர் சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். குறிப்பாக இந்த கிராமத்திற்கு  சாலை வசதி இல்லாத நிலையில்  அங்கு உள்ள வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு அங்கேயே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது, இந்த மலைக்கிராமத்தில் சுமார் 250(ஆண்-136,பெண்-116) க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர், இதனிடையே நாளை நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக இந்த வாக்குசாவடிக்கு கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் இருந்து இன்று வாக்குப் பதிவு இயந்திரங்கள் பொதி சுமக்கும் குதிரைகள் மூலம் கொண்டு செல்லப் பட்டது. இதற்காக 4 வாக்குச் சாவடி அலுவலர்கள்,துப்பாக்கி ஏந்திய காவலர்கள்  பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் உபகரணங்களை கொண்டு சென்றனர். நாளை…

Read More

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் போலி வாக்குப்பதிவு மற்றும் தேர்தல் முறைகேடுகளை மேற்கொள்ள முயற்சிகள் நடப்பதாகவும், அதனைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்செல்வம், தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிற்கு புகார் அளித்துள்ளார். ஆள்மாறாட்டம் செய்தும், மோசடியான முறையில் வாக்களிக்கும் நோக்கத்துடனும், முகத்தை மறைக்கும் ஆடைகள் உள்ளிட்ட மதச்சார்புடைய உடைகளைத் தவறாகப் பயன்படுத்தக்கூடும்  எனவும் செல்வம் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் சட்டங்கள் மற்றும் நடத்தை விதிகளை மீறும் வகையில் வாக்காளர்களைப் பாதிக்கும் நோக்கில் வீட்டு உபயோகப் பொருட்கள், ரொக்கப் பணம் மற்றும் மின்னணுப் பணப் பரிமாற்றங்கள் வாயிலாகப் பரிசுகள் வழங்கப்படுவதாகவும் கூறியுள்ளார். குறிப்பிட்ட சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களையும், தேர்தல் பணியாளர்களையும் மிரட்டும் வகையிலும், தேர்தல் செயல்முறையைச் சீராக நடைபெறவிடாமல் தடுக்கும் வகையிலும் குழப்பங்களை விளைவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் என்னும் அச்சம் நிலவுவதாகவும் கூறியுள்ளார். தேர்தல் செயல்முறையின் நேர்மையைக் காத்திடவும், எந்தவொரு…

Read More

கோவை தெற்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு திமுகவினர் பணம் கொடுப்பதாகக் குற்றம்சாட்டி, அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் தர்ணாவில் ஈடுபட்டார். கோவை தெற்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு திமுகவினர் பணம் கொடுப்பதாக அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் குற்றம்சாட்டியுள்ளதோடு, இது குறித்து, மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டரிடம் அவர் நேரில் சென்று புகார் அளித்தார். ஆனால், புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையையும் தேர்தல் அதிகாரிகள் எடுக்கவில்லை எனக் கூறி, அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் கோவை கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ஆதரவாளர்களோடு அமர்ந்து தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்டதால், கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. கோவை தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி களமிறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Read More

ஈரோடு மாவட்டம்  மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர் கிருத்திகா சிவகுமார் குற்ற வழக்கை மறைத்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால் அவரைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என  தேர்தல் அதிகாரியான ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம்  புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் இரா.சா. முகிலன் மற்றும் சென்னிமலை மலை பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.சதீஷ் ஆகியோர்  அளித்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி வேட்பாளர்கள் தங்கள் மீதான அனைத்து குற்றவியல் வழக்குகளையும் படிவம் 26-ன் கீழ் தாக்கல் செய்யப்படும் சத்தியப்பிரமாண வாக்குமூலத்தில் குறிப்பிட வேண்டும் என்பது கட்டாயம். ஆனால், கிருத்திகா சிவகுமார் தாக்கல் செய்துள்ள சத்தியப்பிரமாண வாக்குமூலத்தின் 4 மற்றும் 5-வது பக்கங்களில் தன் மீது எந்தக் குற்றவியல் வழக்கும் இல்லை என்றும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். உண்மையில், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் கடந்த 06-07-2025 அன்று அவர்…

Read More

திருவள்ளூர் அடுத்த ஒதப்பை பகுதியில் ஸ்ரீபெருமந்தூர், ஒரகடம் ஆகிய பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளின் கழிவுகளை தரம் பிரிக்கும் கிடங்கு உள்ளது.  இந்தக் கிடங்கில் நேற்று இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் கிடங்கில் இருந்த கழிவுகள் தீப் பற்றி மளமளவென எரிந்துள்ளன. இதுகுறித்து காவல் பணியில் இருந்த பாதுகாவலர்கள் பென்னாலூர்பேட்டை காவல்துறைக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, திருவள்ளூர், திருநின்றவூர்,மற்றும் தேர்வாய் கண்டிகை  ஆகிய மூன்று பகுதியில் இருந்து வந்த  தீயணைப்பு வீரர்கள்  தீயை போராடி அணைத்தனர். தீ விபத்து தொடர்பாக பென்னாலூர் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக முதற்கட்டத் தகவல் வெளியாகி உள்ளது.

Read More

காஞ்சிபுரத்தை சேர்ந்த 16-வது மாணவி ஒருவர் பள்ளி விடுமுறை காரணமாக திருவண்ணாமலை மாவட்டம் பிரம்மதேசம் அருகே கல்பட்டு  கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றுள்ளார். சம்பவத்தன்று இரவு தனியாக இருந்த மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த 8பேர் கொண்ட இளைஞர்கள் கும்பல், மிரட்டி அருகில் உள்ள தோட்டத்துக்கு தூக்கிச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளது. பாதிக்கப்பட்ட நிலையில் வீட்டுக்கு வந்த மாணவி, தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து உறவினர்களிடம் தெரிவித்ததை தொடர்ந்து,  மாணவியை அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.  அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சதீஷ்குமார் மற்றும் பிரம்மதேசம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.  இளைஞர்களைத் தேடி வருகிறனர்.  மேலும் காஞ்சிபுரம் மருத்துவமனையில் சிகிச்சை…

Read More

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்வதற்காக இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு  முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றன. விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பரப்புரைகள், சுவர் விளம்பரங்கள், சமூக ஊடக விளம்பரங்கள் என பல்வேறு வகையிலும் அவை பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், சிறைக்கூடங்களில் அடைக்கப்பட்டிருப்பவர்களுக்கான வாக்குரிமை குறித்து எவ்வித முன்னெடுப்பும் எடுக்கப்படுவதில்லை. டிசம்பர் 21, 2023 கணக்கெடுப்பின்படி இந்திய சிறைகளில் மொத்தம் 5,30,333 சிறைவாசிகள் உள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கை குறிப்பிடுகிறது. இந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டு சிறைகளில் 19,738 சிறைவாசிகள் இருந்ததாகத் தகவல் தெரிவிக்கிறது. தடுப்புக் காவலில் உள்ளவர்கள் மட்டுமே பெரும்பாலும் தபால் வாக்கு மூலம் தங்கள் வாக்குரிமையை நிறைவேற்றுகின்றனர். மற்றவர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படுவது இல்லை. இந்த நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டவர்களைத் தவிர விசாரணை சிறைவாசிகளின் வாக்குரிமையும் பறிக்கப்படுகிறது. இந்திய சிறைகளில் உள்ளவர்களில் ஏறத்தாழ 75 சதவிகிதம் பேர் விசாரணை சிறைவாசிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் 80 முதல்…

Read More