Author: Editor TN Talks
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவிற்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன… அதிமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வேட்பு மனு தாக்கல் மற்றும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் தமிழக பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளில் வேட்பாளர்கள் யார் என்பது குறித்து தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல்… கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்த மேலிட பொறுப்பாளர் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், தமிழக பாஜக மூத்த தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார் அந்த ஆலோசனையின் இறுதியில் ஒரு தொகுதிக்கு மூன்று பேர் வீதம் 81 நபர்கள் அடங்கிய பட்டியல் அகில இந்திய தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளது… மத்திய தேர்தல் குழு இன்னும் கூடாத நிலையில் தொடர்ச்சியாக எரிவாயு போர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் காரணமாக பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோர் பல்வேறு பணிகளில் ஈடுபட்டதன்…
பிரதமர் நரேந்திர மோடி, நாளையும், நாளை மறுநாளும் என இரண்டு நாட்கள் பயணமாக சென்னை வருகிறார். நாளை பிற்பகல் 3.20 மணிக்கு தனி விமானத்தில் சென்னை வந்தடையும் அவர், சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி சென்று அங்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். பின் மாலை 6 மணியளவில் சென்னை திரும்பும் பிரதமர், கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்குகிறார். இரவில் ஹோட்டலில் வைத்து பாஜக தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. சனிக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் சென்னையிலிருந்து கேரளாவிற்கு செல்கிறார். பிரதமரின் வருகையை ஒட்டி, சென்னையில் சுமார் 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். பிரதமர் செல்லும் வழித்தடங்களில் 10 அடிக்கு ஒரு போலீஸ் வீதம் பாதுகாப்புக்காக நிறுத்தப்படவுள்ளனர். அத்தோடு கிண்டி, மற்றும் மீனம்பாக்கம் பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விரு பகுதிகளிலும் ட்ரோன்கள் பறக்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 23-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிந்து, தொகுதி பங்கீடு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தவெக சார்பில் முதல் முறையாக விஜய் களம்காணவுள்ள நிலையில், வேட்பாளார் பட்டியல் இன்னமும் வெளியிடவில்லை. மாறாக அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதற்கு வாய்ப்பிருக்கிறது என அரசல் புரசலாக பேசப்பட்டு வந்த நிலையில், இதற்கான விளக்கத்தை மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இது குறித்து தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர், தமிழ்நாட்டில் அதிமுகவுடனான உறவு சகோதரத்துவ அடிப்படையில் வலுவாக இருப்பதாக தெரிவித்த ஒன்றிய அமைச்சர் அமித் ஷா, தவெக தலைவர் விஜயுடன் கூட்டணி குறித்து பேசவில்லை எனவும் கூறினார். தமிழ்நாட்டில் பாஜகவின் பணி மிகக் குறைவானது எனவும் கூட்டணி கட்சிகளே பெருவாரியான பொறுப்புகளை மேற்கொண்டதாகவும் கூறினார். தேசிய ஜனநாயக் கூட்டணியை பொறுத்தவரை மூத்த சகோதரர் போன்று அதிமுக செயல்படுவதாக தெரிவித்த அமித்…
தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 23-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி அனைத்துக் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் வெளியீடு என பிசியாக வேலை பார்த்து வருகின்றன. குறிப்பாக அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில், டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளரான டிடிவி தினகரன் தனது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளார். அதன்படி, ” சைதாப்பேட்டை – செந்தமிழன் திருச்சி மேற்கு – ராஜசேகரன் பெரியகுளம் – டாக்டர் கதிர்காமு மடத்துக்குளம் – சண்முகவேலு திருப்பத்தூர் – ஞானசேகரன் காரைக்குடி – தேர்போகி பாண்டி நாங்குநேரி – இசக்கி முத்து பெரியகுளம் ( தனி ) – கதிர்காமு மன்னார்குடி – எஸ்.காமராஜ் திருவையாறு – கார்த்திகேயன் பூந்தமல்லி ( தனி ) – ஏழுமலை”…
தமிழக சட்டசபை தேர்தலுக்கான பணிகளை அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக செய்து வருகின்றன. தொகுதி பங்கீடு, சின்னம் ஒதுக்குதல், கூட்டணி பேச்சுவார்த்தை என ஒவ்வொரு கட்சியின் தலைமை அலுவலகலம் சூடுபறக்க வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தொடர்ந்து ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளையும், அதன் வேட்பாளர்களையும் அறிவித்து வருகின்றனர். அந்த வகையில், அதிமுக கூட்டணியில் உள்ள புதிய நீதி கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் இயக்குநர் சுந்தர்.சி போட்டியிட இருப்பதாக அக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார். இவர் இரைட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் ஜீவார் நகரில் ரூ.11,200கோடி மதிப்பீட்டில் முதற்கட்ட நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கான பணிகள் நிறைவடைந்துள்ளன. இதனை பிரதமர் மோடி திறந்து வைத்தார். முன்னதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்தியில், “உலகளாவிய விமான நிலைய மையம் என்ற இந்தியாவின் பயணத்தில் இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும் என்று தெரிவித்துள்ளது. நாட்டின் விமான நிலைய உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் ஒரு பெரிய நடவடிக்கையாக இது இருப்பதுடன், மண்டல மற்றும் சர்வதேச இணைப்பை அதிகரிக்கும் வகையிலும் அது இருக்கும். டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு அடுத்து, நொய்டா சர்வதேச விமான நிலையம் 2-வது பெரிய சர்வதேச விமான நிலையம் என்ற அளவில் உருவாக்கப்பட்டு உள்ளது. இதனால், டெல்லி நகரானது உலகளாவிய விமான நிலைய மையங்களில் முன்னணி பெற்ற நகராக இருக்கும். இந்த இரு விமான நிலையங்களும் ஒருங்கிணைந்து செயல்படும்போது, ஒட்டுமொத்தத்தில் நெருக்கடி குறைவதுடன், பயணிகளை கையாளும் திறனும் விரிவடையும். இந்தியாவின்…
த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்துக்கு முறையாக இணையதளம் மூலம் பதிவு செய்தால் அனுமதி வழங்கப்படும் என்று சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி குமரகுருபன் தெரிவித்துள்ளார். சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கில் வாக்குப்பதிவு எந்திரங்கள் தொகுதி வாரியாக பிரித்து, வாக்குச் சாவடிகளுக்கு ஒதுக்கப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குப்பதிவு எந்திரங்களை 16 தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணியை சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி குமரகுருபரன் நேற்று தொடங்கி வைத்தார்…. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் அரசியல் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்றால் அதற்கு முறையாக அனுமதி பெற வேண்டும். சுவிதா இணையதளத்தில் 48 மணி நேரத்துக்கு முன்னரே பதிவு செய்து அனுமதி பெறுவது கட்டாயம். த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்துக்கு முறையாக இணையதளம் மூலம் பதிவு செய்தால் அனுமதி வழங்கப்படும்”. ”மேடை அமைத்து பிரமாண்டமாக நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டால் பொது…
ஆண்டு இறுதித் தேர்வுகள் அனைத்து மாணவ- மாணவிகளுக்கும், அனைத்து மாநிலத்திலும் நடந்து கொண்டிருப்பதால், அது முடிந்த உடன் லாக்டவுன் அமுல் படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவிட்-19ல் அமுல்படுத்தப்பட்ட லாக் டவுன் போன்று இல்லாமல், எரிவாயு பொருள்களின் பதற்றத்தையும், தட்டுப்பாட்டையும், கட்டுப்படுத்தக்கூடிய புதுவகை லாக்டவுன் என சொல்லப்படுகிறது.! வளைகுடா நாட்டில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்படும் சூழலில் உள்ளது நமது இந்தியாவிற்கு, அச் சூழலை கருத்தில் கொண்டு எரிபொருள்களை மிச்சப்படுத்தவும், எரிபொருள்களின் தட்டுப்பாடுகளை தேசிய அளவில் வராமல் பாதுகாக்கவும், இந்த லாக்டவுன் அமல்படுத்து படுகிறது என பரவலாக பேசப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக பிரதமர் அலுவலகத்தில் உள்ள முதன்மை அதிகாரிகள் அனைத்து மாநிலத்திலும் உள்ள தலைமை செயலாளர்களிடமும், முதல்வர்களிடமும் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் வணிக நிறுவனங்கள் இயங்கும். அதாவது திங்கள், புதன், வெள்ளி, மீதி…
தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசார வேலைகளிலும், கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பாகவும் பேச்சுவார்த்தையை மும்முரமாக நடத்தி வருகின்றனர். இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியைப் போலவே விஜய்யின் தவெக கட்சியிம் மத்தக் கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் தனித்து களம்காண இருக்கிறது. முதல்முறையாக களம் காணும் தவெகவினர், செய்வதறியாது பல இடங்களில் பரிசுப் பொருட்களை வெளிப்படையாக விநியோகம் செய்து சர்ச்சையில் சிக்கிக் கொள்கின்றனர். தேர்தல் தேதி அறிவித்தது முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துள்ளது. ஆங்காங்கே பறக்கும் படையினர் அனுமதிக்கப்பட்ட அளவை விட எடுத்துச் செல்லப்படும் பொருட்கள் மற்றும் பணத்தை பிடித்து பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், திருச்செந்தூர் தொகுதி முழுவதும் தவெக சார்பில் குக்கர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அந்தக் குக்கரில் இடம்பெற்றுள்ள ஸ்டிக்கரில் விசில் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அந்த ஸ்டிக்கரில் தவெக நிர்வாகி ஜே.கே.ஆர் முருகன் என்பவரின் பெயர் மற்றும்…
ஈரான், இஸ்ரேல் போர் எதிரொலியால் கச்சா எண்ணெய் இறக்குமதி பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இது மறைமுகமாக பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. அந்த வகையில் தற்போது, தமிழ்நாட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன்களின் விலை ஒரு லிட்டருக்கு ரூ.3உயர்ந்துள்ளது. 20 லிட்டர் கேன் விலை ரூ.5உயர்ந்துள்ளது. மூலப்பொருட்களின் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த விலை உயர்வை அமலுக்கு கொண்டு வருவதாக குடிநீர் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் தெரிவிக்கையில், ”ஏற்கனவே கடந்த 20 ஆண்டுகளாக அனைத்து சூழல்களையும் சமாளித்து மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகித்து வருகிறோம். தற்போது மூலப்பொருட்கள் விலை உயர்வு, வேலை ஆட்கள் சம்பளம் அதிகரிப்பு, மின்கட்டண உயர்வு காரணமாக குடிநீர் விலையை உயர்த்தும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த விலையேற்றம் என்பது எங்களின் சங்கத்தை சேர்ந்த முறைப்படி சுத்திகரிக்கப்பட்ட அடைக்கப்பட்ட குடிநீர் வழங்கும்…