Author: Editor TN Talks
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இதனையொட்டி கடந்த ஒரு மாதகாலமாக நடைபெற்று வந்த அனல் பறந்த பிரசாரங்கள் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. நாளை காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகள் தேர்தலுக்கு முன்பாக ஏப்ரல் 21 முதல் 23-ம் தேதி வரை 3 நாட்களும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4-ம் தேதியும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து 3 நாட்கள் மதுக்கடைகள் மூடப்படுவதால், நேற்று முன்தினமே மதுப்பிரியர்கள் கடைகளில் குவியத் தொடங்கினர். 20-ம் தேதி மட்டும் ரூ.400 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது ரூ.320 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக ரூ.80கோடிக்கு விற்பனை நடந்துள்ளது.
அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் 40 நாட்களாக நீடித்த நிலையில் கடந்த 7-ம் தேதி வரை தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இரு நாடுகள் இடையே பாகிஸ்தானில் நடந்த அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. ஈரானுக்கு நெருக்கடி தரும் வகையில் ஹார்முஸ் நீர் முனை மற்றும் ஈரானின் துறைமுகங்களை அமெரிக்க போர்க் கப்பல்கள் முற்றுகையிட்டன. ஈரான் நோக்கி பயணித்த சரக்கு கப்பல்களை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இருநாடுகளிடையே 2-ம் கட்ட அனுமதி பேச்சுவார்த்தை மேற்கொள்ள பாகிஸ்தான் தீவிரமாக முயற்சி செய்து வரும் நிலையில், தற்காலிக போர் நிறுத்தத்தை கூடுதலா ஒருநாள், இன்றுடன் நீடித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். தற்காலிக போர் நிறுத்தம் இன்றுடன் முடிவடையும் நிலையில் ஈரான் உடனான போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரான் ஒருங்கினைந்த அமைதித் திட்டத்தை முன்வைக்கும் வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.…
கேரள மாநிலம் திருச்சூரில் பூரம் திருவிழா ஏப்ரல் 26-ம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக முண்டத்திக்கோடு பகுதியில் பட்டாசுகள் வாங்கி வைக்கப்பட்டிருந்தது. கொட்டகை அமைத்து பாதுகாக்கப்பட்ட பட்டாசுகள் கடும் வெப்பத்தால் திடீரென வெடித்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் சுமார் 13 பேர் உயிரிழந்த நிலையில் 40 பேர் படுகாயமடைந்தனர். திருச்சூர் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்து மிகுந்த வேதனையை அளிப்பதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”திருச்சூரில் பட்டாசு சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்து மிகுந்த வேதனையை அளிக்கிறது. காயமடைந்தவர்களுக்கு உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வதற்காக, முழு அரசு இயந்திரமும் களமிறக்கப்பட்டு, போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. தேவைப்பட்டால், மாநிலத்திற்கு வெளியில் இருந்து வழங்கப்படும் சிறப்பு சிகிச்சை உட்பட, தேவையான அனைத்து சிகிச்சைகளும் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பிரிவு, சுகாதாரம், வருவாய்…
தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவுக்கான இறுதிக்கட்ட வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர். திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது. தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்த நிலையில், வாக்குப்பதிவுக்கான இறுதிக்கட்ட பணிகள் தீவிரமடைந்துள்ளன. தமிழகத்தின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5கோடியே 73 லட்சத்து 43ஆயிரத்து 291 ஆகும். இவர்கள் வாக்களிக்க ஏதுவாக மாநிலம் முழுவதும் சுமார் 75,000க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 326 தேர்தல் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது. அத்தோடு 300 கம்பெனி துணை ராணுவத்தினரும், 1.20லட்சம் தமிழக போலீசாரும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பணிகளுக்காக சுமார் 3.60லட்சம் அரசு உழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.…
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் எம்.ஜி.ஆர் விஜயகாந்த் பாணியைப் பின்பற்றுகிறது என நினைத்தால் அது முற்றிலும் தவறு. கள எதார்த்தத்தை உற்று நோக்கினால், 2014-ஆம் ஆண்டு நரேந்திர மோடி கையில் எடுத்த அதே அரசியல் தந்திரங்களை தான் விஜய் இப்போது தமிழ்நாட்டில் அச்சுப்பிசகாமல் நகலெடுக்கிறார். விஜய்யின் அரசியல் ஆசான் மோடிதான் என்பது அவருடைய ஒவ்வொரு நகர்விலும் அப்பட்டமாகத் தெரிகிறது. பாஜகவில் எப்படி மோடியை விமர்சிக்க முடியாதபடி விசுவாசமிக்க ‘அந்தகப் பக்தி’ (Andh Bhakt) கொண்ட தொண்டர் படை இருக்கிறதோ, அதேபோல்தான் த.வெ.க-விலும் ஒரு தனிமனித துதிபாடல் கலாச்சாரம் கட்டமைக்கப்படுகிறது. தலைரின் தவறான நிலைப்பாடுகளையும், கொள்கை ரீதியான மௌனத்தையும், தார்மீகப் பொறுப்பின்மையையும் மறைக்க இந்தத் தொண்டர்களின் கண்மூடித்தனமான பக்தியே அவருக்கு இரும்புக் கவசமாகப் பயன்படுகிறது. தேசிய அளவில் மோடியை விமர்சித்தால் எப்படி ‘ஆன்டி-இந்தியன்’ என்று தேசத்துரோக முத்திரை குத்தப்படுகிறதோ, அதேபோல தமிழ்நாட்டில் விஜய்யை விமர்சித்தால் உடனே திமுகவுடன் தொடர்பு படுத்துவதியும்ம் முத்திரை குத்தியும்…
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ம் ஆண்டில் போலீஸ் விசாரணையின் போது தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது. இதில், அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உட்பட 9 போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் முழு விசாரணையும் முடிவடைந்த நிலையில், கடந்த மாதம் 23-ம் தேதி மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முத்துகுமரன், கைதான 9 போலீஸ்காரர்களும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார். அவர்களுக்கான தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும், தண்டனை குறித்து மத்திய அரசின் சி.பி.ஐ. மற்றும் மாநில அரசின் நிலைப்பாட்டை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். கடந்த 30-ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம்…
திருச்சி காவலர் மீது மோதிய ஆதவ் அர்ஜுனாவின் வாகனம் -கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் காவலர் அனுமதிக்கப்பட்டுள்ளார். தவெக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதற்காக இன்று திருச்சி மாநகராட்சி மண்டலம் இரண்டு அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். திருச்சி மரக்கடை பகுதியில் பிரச்சாரத்தை துவங்கிய பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார் இதற்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் விஜய் பிரச்சாரை முடித்துவிட்டு சென்ற பிறகு தவெக பொதுச்செயலாளர் பாதுகாப்பு அங்கிருந்து புறப்பட்டபோது பாதுகாப்பு பணியில் இருந்த திருச்சி ஆயுதப்படை காவலர் சதீஷ் என்பவர் கால் முறிவு ஏற்பட்டது இதனை அடுத்து அங்கு நின்று நடந்த போலீசார் காவலரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக களம் காணவுள்ள தவெக தேர்தல் வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளது. குறிப்பாக அக்கட்சியின் தலைவர் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் சென்னை பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். ஏற்கனவே பெரம்பூர் தொகுதியில் வேட்பு மனுதாக்கல் செய்த அவர், அங்கு பிரசாரமும் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து, இன்று திருச்சி வந்தடைந்த அவர், விமான நிலையத்தில் இருந்து திறந்தவெளி வேனில் ரோடு ஷோ மேற்கொண்டார். அப்போது, அவரை காணும் ஆர்வத்தில் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த பெண் ஒருவர் கீழே விழுந்ததை பார்த்த அவர், வேனில் இருந்து இறங்கிச் சென்று அப்பெண்ணிடம் நலம் விசாரித்தார். தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டிடுவதற்கான வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்கினார். அதன்பின் திருச்சி, தஞ்சாவூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார் விஜய்.
சட்டத்தில் எந்தத் தடையும் இல்லாதபோது, ஐபில் போட்டிகளை நடத்துவதை நீதிமன்றம் எப்படித் தடுக்க முடியும் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. சென்னை திருவல்லிக்கேணி தொகுதி வாக்காளர் பிரபாகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில், தேர்தல் சமயத்தில் சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடத்த தடை விதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் முன்பு முறையிட்டார். ஆனால் இந்த முறையீட்டை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர். வழக்குக்கு எண் வழங்கப்பட்டு, விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட பின்னரே, அது வழக்கமான நடைமுறையின்படி எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். சட்டத்தில் எந்தத் தடையும் இல்லாதபோது, போட்டிகளை நடத்துவதை நீதிமன்றம் எப்படித் தடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி,நீங்கள் போட்டியைப் பார்க்க விரும்பவில்லை என்றால், வீட்டிலேயே இருங்கள்,போட்டிகள்…
புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் உள்ள 30 சட்டசபை தொகு திகளுக்கு வாக்குப்பதிவு வருகிற 9-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். களத்தில் உள்ள 294 வேட்பாளர்கள் தொகுதிவாரியாக சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். புதுச்சேரியில் தவெக மற்றும் கூட்டணி கட்சியான நேயம் மக்கள் கழகம் வேட்பாளர்களை ஆதரித்து. அக்கட்சி தலைவர் விஜய் வருகிற 5-ந் தேதி பிரசாரம் செய்வதாக இருந்தது. ஆனால், போலீசார் பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு நாள் முன்னதாக, அதாவது 4-ந்தேதி (சனிக்கிழமை) பிரசாரம் செய்ய அனுமதித்துள்ளனர். கொக்குபார்க் சிக்னல், வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை சதுக்கம், சோனாம்பாளையம் சந்திப்பு, கூடப்பாக்கம் ஆகிய 4 இடங்களில் மட்டும் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணிக்கு தொடங்கி 4 மணி நேரத்திற்குள் பிரசாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்…