Author: Editor TN Talks
நாகை மாவட்டம் திருமருகலில் உள்ள அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. தேவாரப் பாடல் பெற்ற புகழ்பெற்ற இத்தலத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாத திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு தினமும் பஞ்சமூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செட்டிப்பெண் – செட்டிப்பிள்ளை திருக்கல்யாண உற்சவம் நேற்று நடைபெற்றது. இதனை தொடர்ந்து, பஞ்சமூர்த்திகள் திருத்தேரில் எழுந்தருளி இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு “ஹரஹர மகாதேவா” என முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் சாமி தரிசனம் செய்து பக்தி பரவசத்துடன் வழிபாடு மேற்கொண்டனர்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து ஐந்து நாட்கள் கடந்தும், முழுமையான வாக்குப்பதிவு விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிடாதது அரசியல் வட்டாரங்களில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வாக்குப்பதிவு சதவீதம் குறித்து ஆரம்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தாலும், முழுமையான எண்ணிக்கைகள் மற்றும் பாலின அடிப்படையிலான விவரங்கள் இன்னும் வெளிவராததால் திமுக உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகள் விளக்கம் கேட்டு வருகின்றன. அரசியல் கட்சிகளின் பதற்றம் தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்றது. காலை 7 மணி முதல் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. அன்றைய தினத்தின் இறுதியில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, மொத்த வாக்குப்பதிவு சதவீதம் 85.15% என அறிவிக்கப்பட்டது. ஆனால் இரண்டு நாட்கள் கழித்து மறுபரிசோதனை செய்யப்பட்டபோது அந்த எண்ணிக்கை 85.10% ஆக திருத்தப்பட்டது. அதாவது 0.05 சதவீதம் குறைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.இத்தகைய சிறிய திருத்தங்கள் தேர்தல் கணக்கீட்டில் சாதாரணமானவை என்றாலும், இதுவரை…
திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மு.க .ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்க தெய்வங்களின் ஆசி வேண்டி சிதம்பரத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் தெய்வீக பக்தர்கள் பேரவை சார்பில் சிறப்பு அபிஷேக அர்ச்சனை மற்றும் மண் சோறு சாப்பிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவனத் தலைவர் ஜெமினி எம்.என். ராதா தலைமையில் மாநில தலைவர்கள் ஆர். சம்பந்த மூர்த்தி, செல்வகுமார், பொதுச் செயலாளர்கள் வேல்முருகன், செந்தில்குமார், விஜயகுமார், ரகோத்தமன் உட்பட மற்றும் பலர் கலந்துகொண்டு மண் சோறு சாப்பிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனையில் கலந்து கொண்டு மண்சோறு சாப்பிட்டனர். திமுக வை இந்து விரோத கட்சியாக சித்தரிக்க வேண்டும் என பாஜக ,அதிமுக, பாமக போன்ற கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றன. ஆனால், இந்து சமய அறநிலைத்துறை மூலம் 4182 திருக்கோவிலுக்கு திராவிடமாடல் ஆட்சியில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளதாகவும், திமுக இந்துவிரோத கட்சியல்ல எனவும்…
பாலிவுட் நடிகர் அமீர்கான் தனது2 மனைவிகளையும் விவாகரத்து செய்தது ஏன் அன்பது குறித்து மனம் திறந்துள்ளார். பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமீர்கான், தனது 21வது வயதில் ரீனா தத்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜுனைத் என்னும் மகனும், ஐரா என்னும் மகளும் உள்ளனர். 16 ஆண்டுகள் நீடித்த இவர்களின் திருமணம் பந்தம் 2002 ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தது. இதன்பின்னர் 3 ஆண்டுகள் கழித்து, 2005ல் கிரண் ராவை திருமணம் செய்தார். இவர் அமீர்கான் நடித்த லகான் திரைப்படத்தின் உதவி இயக்குநராவார். இந்த தம்பதிக்கு ஆசாத் என்கிற மகன் உள்ளார். 16 ஆண்டுகள் கழித்து இந்த திருமணமும் முடிவுக்கு வந்தது. இந்தநிலையில் அண்மையில் தனது இரண்டு மனைவிகள் ரீனா தத்தா மற்றும் கிரண் ராவிடமிருந்து ஏன் பிரிந்தேன் என்பது குறித்து பேட்டி ஒன்றில் அமீர்கான் தெரிவித்துள்ளார். 21வயதில் ரீனா தத்தாவை காதலித்து திருமணம் செய்தபோது தனக்கு போதிய பக்குவம்…
சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, ‘அம்மா’ உணவகங்களில், இட்லி, சப்பாத்தி, சாம்பார் சாதம் விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது சென்னை மாநகராட்சியில், 383 ‘அம்மா’ உணவகங்கள் உள்ளன. இந்த உணவகங்களில், காலையில் 1 ரூபாய்க்கு இட்லி, 5 ரூபாய்க்கு பொங்கல்; மதியம் 3 ரூபாய்க்கு தயிர் சாதம், 5 ரூபாய்க்கு லெமன் சாதம், சாம்பார் சாதம், கருவேப்பிலை சாதம்; இரவில் 3 ரூபாய்க்கு இரண்டு சப்பாத்திகள் வழங்கப்பட்டு வந்தது. குறைந்த விலையில், தரமான உணவு கிடைத்ததால், ஏழைகள் மட்டுமின்றி நடுத்தர வர்க்கத்தினர், ஐ.டி., பிரிவு ஊழியர்கள் வரை இந்த உணவகங்களை நாடினர். பேரிடர் காலங்களிலும், அம்மா உணவகங்கள் தான், பெரும்பாலானோரின் பசியை போக்குகின்றன. ‘அம்மா’ உணவகங்கள் வாயிலாக ஆண்டுக்கு, 100 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டாலும், ஏழை, எளிய மக்களின் பசி போக்கும் வகையில், அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஒரு மாதத்திற்கு மேலாக சமையல் காஸ் தட்டுப்பாடு…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பொது சாலையை காங்கிரஸ் எம்.பி. கோபிநாத் ஆக்கிரமித்துள்ளாரா என ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் ஒசூர் மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓசூரை சேர்ந்த எஸ்.ஜி. நாயஸ் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், சிங்காரவேலு முதலியார் தெருவினை நேதாஜி சாலையுடன் இணைக்கும் பொது சாலையினை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.-வும், தற்போதைய எம்.பி.-யுமான கே.கோபிநாத் ஆக்கிரமித்து, இரும்பு கேட் போட்டுள்ளதுடன், கடைகளையும் கட்டியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். பதவி செல்வாக்கையும், அதிகாரத்தையும் பயன்படுத்தி, வருவாய் மற்றும் நகராட்சித் துறை அதிகார துஷ்பிரயோகம் செய்து, புறம்போக்கு நிலங்களுக்குப் பட்டா பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனவே, பொதுப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அகற்றும்படி மாவட்ட நிர்வாகத்திற்கும், வருவாய் துறைக்கும் உத்தரவிட வேண்டுமென மனுவில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.சுரேந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில்…
சாதி மதமற்றவர் என்பதை நாம் தான் பின்பற்ற வேண்டுமே தவிர, அதற்கு சான்றிதழ் அவசியம் இல்லை என, நடிகர் பார்த்திபன் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சாதி, மதமற்றவர் என சான்று வழங்கக் கோரி அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து சான்று வழங்க சோழிங்கநல்லூர் தாசில்தாரருக்கு உத்தரவிடக் கோரி நடிகர் பார்த்திபன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், சாதி, மதம், மொழி அடிப்படையிலான பிளவுகள், தேச ஒற்றுமைக்கு பாதிப்பானது என்பதால், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ, சாதி – மதமற்றவர் என சான்று கோரி விண்ணப்பித்ததாகக் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, ஒரு வாரத்தில் நடிகர் பார்த்திபனுக்கு சாதி மதம் மற்ற சான்றிதழ் வழங்குமாறு சோழிங்கநல்லூர் தாசில்தாருக்கு கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவின் அடிப்படையில், நடிகர் பார்த்திபனுக்கு, சாதி, மதம் சாராதவர் என சோழிங்கநல்லூர் தாசில்தாரர், ஏப்ரல் 27 ம் தேதி சான்று வழங்கியுள்ளார்.…
காதலில் சிக்கிய இளைஞர் உயிரிழப்பு – பெண் வீட்டார் மீது போலீசில் புகார் – கு.செல்வப்பெருந்தகை கண்டனம்
புதுக்கோட்டை மாவட்டம் திருமலைராயபுரம் நடுப்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் – விஜயலட்சுமி தம்பதியின் மகன் ஹரிகரன். திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு படிப்பினை கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் முடித்துள்ளார். கடந்த 21ஆம் தேதி முதல் ஹரிஹரன் மாயமானதாக போலீசில் பெற்றோர் புகார் அளித்திருந்தனர். முன்னதாக ஹரிகரன் கடந்த நவம்பர் மாதம் 17ஆம் தேதியும் மாயமாகி இருந்தார். விசாரணையில் வீட்டின் அருகே உள்ள மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண்ணும் மாயமானது தெரியவந்தது. இந்த நிலையில் இரண்டு நாள் கழித்து இருவரும் அவரவர் பெற்றோருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தாங்கள் தஞ்சாவூரில் இருப்பதாகவும் தெரியாமல் ஓடி வந்து விட்டதாகவும் சாப்பிட்டு மூன்று நாட்கள் ஆகிவிட்டது எனவும் கூறி அழுதுள்ளனர் பெற்றோர்கள் அவர்களை திரும்ப வரச் சொல்லி காவல் நிலையத்தில் வைத்து சமரசம் பேசி அவரவர் பிள்ளைகளை அழைத்துச் சென்று விட்டனர் இதன்பின்னர் இருவரும் எவ்விதத் தொடர்பும் இல்லாமல், இருந்துவந்த நிலையில்தான், கடந்த…
டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் அரசுக்கு 397 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியது தொடர்பாக அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் மற்றும் அறப்போர் இயக்கம் அளித்த புகார்களை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம், உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021 முதல் 2023ஆம் வரையிலான காலகட்டத்தில் 45 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் ரூ. 397 கோடி முறைகேடு நடந்துள்ளதாவும், இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் இ.சரவணன் மற்றும் ராஜ்குமார், அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன் ஆகியோர் சார்பில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, இந்த வழக்குகளின் தீர்ப்பை நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தனர். இந்நிலையில், இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு தொடர்பான புகார்களை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டனர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வடகலை – தென்கலை பிரச்னை அவ்வப்போது பூதாகரமாக வெடித்து வருகிறது. அந்த வகையில், வரதராஜ பெருமாள் கோயிலில் திருஅவதார உற்சவம் எனும் பெருமாளின் பிறந்தநாள் விழா கோலாகலமாக நடைபெற்றது. இதனையொட்டி, பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து சிறப்பு அலங்காரத்தில் மூலவர் தேவராஜ சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பெருமாளின் கருவறை மண்டபத்தில் அமர்ந்து தாதாச்சாரியாரி பிரிவினர் ஸ்தோத்திர பாடல் பாடுவதை வழக்கமாகவும், உரிமையாகவும் கொண்டுள்ளனர். இந்த நிலையில் தாதாச்சாரியார் பிரிவினர் ஸ்தோத்திர பாடல் பாடுவதில் தங்களுக்கும், உரிமை வழங்க வேண்டும் என கேட்டு தென்கலை ஐயங்கார்கள் பிரிவினர் திடீர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏராளமான போலீசார் கோயில் கருவறை முன்பு குவிக்கப்பட்டனர்.