இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல் அரசு மரியாதையுடன் அவரது பண்ணைவீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தமிழ்த் திரையுலகின் இயக்குநர் இமயம் பாரதிராஜா, தனது 84-வது வயதில் உடல்நலக் குறைவு காரணமாக ஜூன் 10ஆம் தேதி நீலாங்கரையில் உள்ள வீட்டில் உயிரிழந்தார்.
பாரதிராஜா உடலுக்கு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் உள்பட திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
பாரதிராஜா உடலுக்கு தமிழ்நாடு அரசு தரப்பில் இறுதிமரியாதை செலுத்தப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.
தேனி மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள காட்ரோடு பகுதியில் உள்ள பாரதிராஜாவின் பண்ணை வீட்டில், அவரது உடல் நல்லடக்கம் இன்று நடைபெற்றது.
முன்னதாக சென்னையில் இருந்து பண்ணை வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட பாரதிராஜாவின் உடலுக்கு அந்தப் பகுதியில் உள்ளவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
மேலும் சென்னையில் இருந்தும் திரைப்பிரமுகர்கள் இறுதி அஞ்சலி நிகழ்வில் வந்து கலந்து கொண்டனர்.
பாரதி ராஜாவின் இறுதி சடங்குகளை அவரது உடன்பிறந்த சகோதரரும், மனைவியும் செய்தனர்.
அமைச்சர்கள் நிர்மல்குமார், வன்னியரசு உள்ளிட்டோரும் பாரதிராஜாவின் இறுதி நிகழ்வில் பங்கேற்று அரசு தரப்பில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் பாரதி ராஜா உடலுக்கு காவல்துறையினர் துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை அளித்தனர். 3 ரவுண்டுகளாக கப்பட்டு, உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கிராமங்களையும், கிராம மக்களையும் வெண் திரையில் உலவவிட்ட இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் உடல் அதே கிராமத்து மண்ணில் விதைக்கப்பட்டுள்ளது.
