Close Menu
    What's Hot

    ஜான்சன் & ஜான்சன் பவுடரால் புற்றுநோய்!. பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.52,000 கோடி இழப்பீடு வழங்க ஒப்புதல்!

    20 நிமிடத்தில்.. சீனாவை அடுத்தடுத்து உலுக்கிய 2 நிலநடுக்கம்..!! பதற்றத்தில் மக்கள்..!!

    கூடலூர்; சாலையில் நடந்து சென்றவரைத் தூக்கி வீசிய கார்… பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»முதல்வர் குறித்து சர்ச்சை பேச்சு: திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் ஜாமின் தீர்ப்பு ஒத்திவைப்பு!
    Featured

    முதல்வர் குறித்து சர்ச்சை பேச்சு: திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் ஜாமின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

    Editor web1By Editor web1July 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    19 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாகக் கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனின் ஜாமின் மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

    தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து, தன்னை சிறையிலடைத்த மாஜிஸ்திரேட்டின் உத்தரவை ரத்து செய்யக் கோரியும், ஜாமின் வழங்கக் கோரியும் மார்க்கண்டேயன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், கைதுக்கான சரியான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை என்றும் புகாரின் உண்மைத்தன்மை குறித்து ஆரம்பகட்ட விசாரணையும் நடத்தப்படவில்லை என்றும் தெரிவித்தார். அரசியல் பேச்சுக்கள் மீது வழக்குப்பதிவு செய்ய அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞரின் ஒப்புதல் பெறப்படவில்லை என்றும் மாஜிஸ்திரேட் இயந்திரத்தனமாக சிறையிலடைக்க உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் வாதிட்டார்.

    காவல்துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், சட்டமன்றத்தைப் பூட்டினால் எலும்பை உடைத்துவிட்டுத்தான் அனுப்புவேன் என்றும், முதல்வரை ஒருமையிலும் பேசியுள்ளதாக குறிப்பிட்டார். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியுள்ளதாகவும், கைது செய்யாவிட்டால் மீண்டும் இதே குற்றத்தை அவர் மீண்டும் செய்யக் கூடும் என்றார். கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதுவும் அவருக்கு வழங்கப்பட்டு, அதில் அவர் கையெழுத்தும் போட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மாஜிஸ்திரேட் அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்து திருப்தியடைந்த பிறகே சிறையில் அடைக்க உத்தரவிட்டதாகவும், அந்த உத்தரவில் எந்த தவறும் இல்லை என்று வழக்கறிஞர் ஜான் சத்யன் வாதிட்டார்.

    இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி ஜி.கே.இளந்திரையன், யூகதத்தின் அடிப்படையில், நீதிமன்றத்துக்கு சுமை ஏற்படுத்துவதாக கூறி, மார்க்கண்டேயனின் மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமேகதாது அணை…. தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்திருக்கிறார் முதலமைச்சர் –  உதயநிதி சாடல்
    Next Article மேகதாது அணை… கீழ்நிலை மாநிலங்களின் ஒப்புதல் அவசியம்… பிரதமர் மோடிக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் கடிதம்…
    Editor web1
    • Website

    Related Posts

    ஜான்சன் & ஜான்சன் பவுடரால் புற்றுநோய்!. பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.52,000 கோடி இழப்பீடு வழங்க ஒப்புதல்!

    July 28, 2026

    20 நிமிடத்தில்.. சீனாவை அடுத்தடுத்து உலுக்கிய 2 நிலநடுக்கம்..!! பதற்றத்தில் மக்கள்..!!

    July 28, 2026

    கூடலூர்; சாலையில் நடந்து சென்றவரைத் தூக்கி வீசிய கார்… பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!

    July 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஜான்சன் & ஜான்சன் பவுடரால் புற்றுநோய்!. பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.52,000 கோடி இழப்பீடு வழங்க ஒப்புதல்!

    20 நிமிடத்தில்.. சீனாவை அடுத்தடுத்து உலுக்கிய 2 நிலநடுக்கம்..!! பதற்றத்தில் மக்கள்..!!

    கூடலூர்; சாலையில் நடந்து சென்றவரைத் தூக்கி வீசிய கார்… பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!

    போராட்ட மாணவர்கள் கைது விவகாரம்..!! விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    திருச்சி காவேரி ஆற்றில் விபரீதம்!. டன் கணக்கில் செத்து குவியும் மீன்களால் அதிர்ச்சி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.