Author: Editor TN Talks
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் வாக்கு எண்ணும் தேர்தல் அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி சார்பாக பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சியின் போது தபால் வாக்குகள் மற்றும் வாக்குபதிவு இயந்திரங்கள் ஆகியவற்றில் உள்ள வாக்குகளை எவ்வாறு எண்ண வேண்டும், வாக்கு எண்ணும் போது பராமிக்ககூடிய படிவங்கள் 18, 20, 21 E, 21 C மற்றும் E, 22 உள்ளிட்ட 15 ஆவணங்கள் குறித்தான பயிற்சியும், வாக்குச்சவாடி முகவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் 17C படிவத்தை வழங்குவது குறித்தும், வாக்கு எண்ணும் மையத்தில் செல்போன் கொண்டு வர கூடாது எனவும் வாக்கு எண்ணும் மையத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் தேர்தல் ஆணையத்தின் விதிகளை எவ்வாறு பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் வாக்கு எண்ணும் பணியில் இருக்கும். Micro Observer (நுண்…
ஈரானுடன் நடத்தி வரும் போரால் அமெரிக்காவுக்கு ரூ. 2 லட்சத்து 35 ஆயிரம் கோடி செலவாகியுள்ளதாக ராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கிய அமெரிக்கா ஈரானுடன் தொடர்ந்து போர் நடத்தி வந்தது. இந்த நிலையில் அமெரிக்கா போர் நிறுத்தம் அமலில் இருப்பதாக அறிவித்து, கடந்த 11ஆம் தேதி பாகிஸ்தானில் அமெரிக்கா மற்றும் ஈரான் தரப்பு பேச்சுவார்தை மேற்கொண்டது. ஈரானின் அணு ஆயுத திட்டங்கள் உள்ளிட்ட பல் வேறு அம்சங்களில் உடன்பாடு எட்டப்படாததால், பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனால் ஈரானின் துறைமுகங்கள் உள்பட ஒட்டுமொத்த கடற்பகுதியையும் அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளது, ஈரானுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனினும் லெபனானில் சமீபத்தில் இடைக்கால போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டதால் ஹார்முஸ் நீரிணையை கடந்த 17-ந்தேதி முழுமையாக ஈரான் திறந்தது. இந்த நிலையில், அமைதி பேச்சுக்காக தற்காலிக போர் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஈரான் போரினால் அமெரிக்காவிற்கு இதுவரை 25 பில்லியன் டாலர் அதாவது இந்திய…
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆறு கிராமங்களில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆர்.பாலகுறிச்சி, ஆர்.சீகம்பட்டி, ரெகுநாதபட்டி, வைரன்பட்டி, கோபால்பட்டி உள்ளிட்ட ஆறு கிராமங்கள், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியுடன் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி நடத்த தேர்தலில், இந்த கிராம மக்கள் யாரும் வாக்களிக்கவில்லை. இதனால், இந்த கிராமங்களில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்தக் கோரி, பாலகுறிச்சியை சேர்ந்த லட்சுமணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், திருப்பத்தூர் தொகுதியில் தங்கள் கிராமத்தை சேர்த்துள்ளதால், நிர்வாக உதவிகள் கிடைப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ஆறு கிராமங்களை புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தொகுதியில் சேர்க்க கோரி, பல ஆண்டுகளாக மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் ஆறு கிராமங்களை சேர்ந்த 2,012 வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை என்பதால், இந்த ஆறு கிராமங்களுக்கும் மீண்டும்…
அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி K. பழனிசாமி வெளியிட்டுள்ள மே தின வாழ்த்து செய்தி வருமாறு;- உழைக்கும் கரங்களின் ஒற்றுமையை உணர்த்தி, உழைப்பின் பெருமையை உலகுக்கு பறை சாற்றும் தொழிலாளர் தினமாகிய ‘மே’ தினத் திருநாளில், தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த ‘மே’ தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். உரிமைகள் மறுக்கப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்ட உழைக்கும் வர்க்கம் தங்களின் உரிமைக்காகவும், நலனிற்காகவும், பல நூற்றாண்டுகளாகப் போராடி அடிமை விலங்கினை உடைத்தெறிந்து, தங்கள் உரிமைகளை மீட்டெடுத்த திருநாள் ‘மே’ தின திருநாளாகும். “இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படித்தவன் தொழிலாளி! உருக்குப்போன்ற தன் கரத்தையே நம்பி ஓங்கி நிற்பவன் தொழிலாளி!” என்று, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள் தொழிலாளர்களின் சிறப்புகளை, தனது உணர்ச்சிமிகு பாடலின் மூலம் தெளிவுபடுத்தி உள்ளார். ‘உழைக்கும் தொழிலாளர்கள் அனைத்து வகைகளிலும் சிறப்புடன் வாழ்ந்திட வேண்டும்’ என்ற உன்னத நோக்கத்தோடு புரட்சித் தலைவர்,…
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா கடந்த பிப்ரவரி மாதம் செங்கல்பட்டு குடும்ப நல கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி சசிகலா முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. ஏப்ரல் 20ஆம் தேதி நடைபெற்ற வழக்கின் விசாரணையின்போது, விஜய் மற்றும் சங்கீதா தரப்பில், அவர்களது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகினர். விசாரணையை ஒத்திவைக்கும் படி விஜய் தரப்பு வழக்கறிஞர் கேட்டு கொண்டார். பிறகு, வழக்கு விசாரணையை ஜூன் 15ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி சசிகலா உத்தரவிட்டார். இந்த நிலையில், தவெக தலைவர் விஜயின் மனைவி சங்கீதா தொடர்ந்த விவகாரத்து வழக்கை விசாரித்து வந்த குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சசிகலா பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். குடும்ப நல நீதிபதியாக கடந்த மாதம் பொறுப்பேற்ற நிலையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே செங்கல்பட்டு குடும்ப நல நீதிபதியாக இருந்த சுஜாதா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி எப்போதுமே உழைப்பாளர்களின் உரிமைகளுக்காக போராடும், குரல் கொடுக்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு. செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ மே தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி வருமாறு; தொழிலாளர்கள் தாங்கள் போராடிப் பெற்ற உரிமைகளை காக்கும் பொருட்டு ஒவ்வொரு வருடமும் மே மாதம் முதல் தேதியை மே தினமாக கடைபிடித்துக் கொண்டாடி வருகிறார்கள். ஒன்றிய பா.ஜ.க. அரசு நீண்டகாலமாக நடைமுறையில் இருந்து வந்த தொழிலாளர் நலச் சட்டங்களை அகற்றிவிட்டு, அவர்களுக்கு விரோதமாக புதிய சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. பண மதிப்பிழப்பு, அதிகப்படியான சரக்கு மற்றும் சேவை வரி, பணவீக்கம், பொருளாதார தேக்கநிலையினால் பல சிறு குறு, நடுத்தர தொழிற்சாலைகள் மூடப்பட்டு, உற்பத்தி குறைந்து பலர் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளனர். தொழிலாளர்கள், பணியாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஒவ்வொரு முன்னேற்றத்திற்கும் அடிப்படைக் காரணம் உழைப்பாளர்களின் அர்ப்பணிப்பு. எனவே, அவர்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும். அவர்கள்…
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை வரும் 4-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள்? எந்த கட்சி பெரும்பான்மை பிடிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் மேலோங்கி காணப்படுகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பின் படி, ஒரு சிலர் திமுக மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனவும், இன்னும் சிலர் 180 இடங்கள் வரை தவெகவுக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுவதால், இந்த தேர்தல் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் இன்று தனது கட்சி வேட்பாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். 234 தொகுதிகளிலும் கூட்டணி அமைக்காமல் தனித்து களம் கண்ட தவெக சார்பில் 233 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். எடப்பாடி தொகுதியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று பிற்பகல் 1 மணியளவில் வேட்பாளர்களுடன் விஜய் ஆலோசனை நடத்தவுள்ளார். அனைத்து வேட்பாளர்களும்…
சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை மாநகர் வந்தடைந்த கள்ளழகருக்கு திரளான பக்தர்கள் எதிர்சேவை அளித்து வரவேற்றனர். சைவ, வைணவ ஒற்றுமையை உலகுக்கு உணர்த்தும் விழாவாக உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா திகழ்கிறது. அதன்படி, முதலில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருவிழா தொடங்கும். பின்னர், அழகர்கோயிலில் சித்திரைத் திருவிழா தொடங்கும். அதன்படி, கடந்த 19ம் தேதி மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக மீனாட்சி பட்டாபிஷேகம், அதைத்தொடர்ந்து மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், நேற்று (29.04.2026) தேரோட்டமும் விமர்சையாக நடைபெற்றது. இந்தநிலையில், அழகர்கோயிலில் கடந்த 27ம் தேதி சித்திரைத் திருவிழா தொடங்கியது. இதையடுத்து, நேற்று (29.04.2026) மாலை அழகர்கோயிலில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு புறப்பட்டார். கண்டாங்கி பட்டுடுத்தி கையில் நேரிக்கம்பு ஏந்தி தங்கப் பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 18ம்படி கருப்பண சுவாமி சன்னதி முன்பு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள்…
சென்னையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் இன்று (30.04.2026) ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி முதன்முறையாக களம் கண்டது. எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதைத் தவிர்த்து, மொத்தமுள்ள 233 தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் விஜய் போட்டியிட்டார். தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களுக்கு ஆதரவாக விஜய் தீவிர பரப்புரை மேற்கொண்டார். இந்நிலையில், சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று (30.04.2026) பிற்பகல் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மட்டுமே இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அனைத்து வேட்பாளர்களும் அந்தந்த வாக்குச்சாவடிகளில் பெறப்பட்ட ’17C’ ஒரிஜினல் படிவத்தை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 17C என்பது, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும்…
ஐபிஎல் 41வது லீக் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது. 10 அணிகள் பங்கேற்றுள்ள 19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 41வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று (29.04.2026) நடைபெற்றது. 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ், முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்ஸ் ஆகிய அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய ரிக்கல்டன் 55 பந்துகளில் 121 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு மும்பை அணி 243 ரன்கள் எடுத்தது. பிரஃபுல் ஹிங்கே 8 விக்கெட்டுகளையும், ஈஷான் மலிங்கா, சகிப் ஹூசைன், நிதிஷ்குமார் ரெட்டி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணியின்…