தமிழக அரசின் பட்ஜெட் நல்ல விதமாக இருக்கும் எனக் கூறியுள்ள நிதி அமைச்சர் மரிய வில்சன், தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையினை தமிழக முதல்வர் விரைவில் அறிவிப்பார் என உறுதி தெரிவித்துள்ளார்.
தமிழக நிதி அமைச்சர் மற்றும் நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சரான மரிய வில்சன் சென்னையிலிருந்து விமான மூலம் தூத்துக்குடிக்கு வருகை தந்தார் தூத்துக்குடி விமான நிலையத்தில் அமைச்சர் மரிய வில்சனுக்கு தமிழக வெற்றிக் கழகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்
இதைத் தொடர்ந்து தூத்துக்குடியில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற பணிமய மாதா பேராலயத்தில் அமைச்சர் மரிய வில்சன் வழிபாடு நடத்தினார் இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், உலக புகழ் பெற்ற பணிமயமாதா பேராலயத்திற்கு ஆண்டுதோறும் வருவேன். அந்த வகையில் தற்போது வந்துள்ளேன். மாதாவை தரிசனம் செய்துவிட்டு இங்கிருந்து துவங்குகிறேன்.

நெல்லை மாவட்டத்தில் ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டு நெல்லை மாவட்டத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறேன் என தெரிவித்தார்
தமிழக பட்ஜெட் விரைவில் எதிர்பார்க்கலாம். இந்த பட்ஜெட் நல்ல விதமாக இருக்கும். மேலும் தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை விரைவில் இந்த தமிழக முதல்வர் அறிவிப்பார் என அவர் தெரிவித்தார்.
