Author: Editor TN Talks
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள வனத்துறை கட்டுப்பாட்டிலான சுற்றுலா இடங்களுக்கு, கடந்த ஜனவரி 12 முதல் ‘கியூஆர் கோடு’ மூலம் ஒரே இடத்தில் நுழைவு கட்டணம் வசூலிக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டது. ஆனால், இந்த முறையால் குறிப்பாக விடுமுறை நாட்களில் பசுமை பள்ளத்தாக்கு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனை மாற்றி, பழைய முறையின்படி ஒவ்வொரு சுற்றுலா இடத்திலும் தனித்தனியாக கட்டணம் வசூலிக்க வேண்டும் எனக் கோரி, ஏப்ரல் 19ஆம் தேதி சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், 5 நாட்களுக்குள் மாற்று நடைமுறை கொண்டு வரப்படும் என உறுதி அளிக்கப்பட்டதால், அந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில் கோடை சீசன் காரணமாக சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து, கொடைக்கானல் நகரம்…
தமிழகத்தில் மே 7 ம் தேதி வரை பல இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ சுமார் 1.5 கிமீ உயரம்வரை, தெற்கு ஒடிசா முதல் மன்னார் வளைகுடா வரை, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. 01-05-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கனமழை பெய்யக்கூடும். 02-05-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய…
சர்வதேச நீதி மிஷன்( International Justice Mission -IJM) , கொத்தடிமை முறையால் பாதிக்கப்பட்டோருக்கான ஆய்வரங்குகளில் தமிழ்நாடு மாநில நீதித்துறை அகாடமி (Tamil Nadu State Judicial Academy) யின் வள ஆதார நிபுணராக (Resource Person) பங்களித்து வருகிறது. இந்த நிலையில், கொத்தடிமைத் தொழிலாளர்களை மீட்பது, அவர்களுக்கு மறுவாழ்வு வழங்குவது, மற்றும் கொத்தடிமை முறையை ஆதரிக்கும் குற்றவாளிகளுக்கு எதிரான வழக்குகளில் சிறப்பு கவனம் செலுத்தி, தொடர்ச்சியான சுற்றறிக்கைகள் மூலம் விரைவான தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசிற்கும், தமிழ்நாடு அரசு தலைமைக் குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகம்மது ஜின்னாவுக்கும் நன்றி தெரிவித்து இண்டெர்னேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் கடிதம் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக இந்த அமைப்பின் தமிழ்நாடு மாநிலத்தின் அட்வ்கெஸி ப்ரஸிடெண்ட் ரேச்சல் பிரசன்னா எழுதியுள்ள கடிதத்தில், “தமிழ்நாடு அரசு தலைமைக் குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகம்மது ஜின்னா , சிறப்பு கவனம் செலுத்தி, மாநில காவல்துறை மற்றும்…
பஞ்சாப்பின் முதலமைச்சர் பகவந்த் மான், தலைமையில் ஆம் ஆத்மியின் ஆட்சி நடந்து வருகிறது. முதலமைச்சர் பகவந்த் மான் மதுகுடித்து விட்டு அவை நடவடிக்கைகளில் கலந்து கொண்டுள்ளார் என காங்கிரஸ் மற்றும் ஷிரோமணி அகாலி தளம் ஆகிய கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டை கூறியுள்ளன. இது தொடர்பாக சபாநயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் ஊக்க மருந்து சோதனை மற்றும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளன. இதனை காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சுக்பால் சிங் கைரா வலியுறுத்தியதுடன், எங்களுக்கும் இந்த சோதனையை நடத்த வேண்டும் எனவும் அதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம் என கூறினார். அவையின் எதிர்க்கட்சி தலைவரான பிரதாப் சிங் பாஜ்வா கூறும் போது, முதலமைச்சர் மதுபோதையில் இருக்கும்போது, நாங்கள் அவைக்கு வருகை தந்து என்ன செய்து விட முடியும்? மாநில தலைவர் முற்றிலும் மயக்கத்தில் இருக்கும்போது,…
இன்றைய திருமணங்களில் தங்களது ஸ்டேட்டஸை நிரூபிக்க பல்வேறு விதமான இசைக் கச்சேரிகள் மற்றவர்களுக்கு எரிச்சலை தூண்டும் படியாக நடத்தப்படுகிறது. டிஜே என்ற பெயரில் பாடல்கள் கலந்து கலந்து அதிக சத்தத்துடன் ஒலிக்கப்படுவதால், மக்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து பேசுவது கூட சங்கடமாகி விடுகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரை வரை இதே நிலை தான் நீடிக்கிறது. இப்படி நிகழ்ச்சிகளின் போது ஒலிக்கப்படும் அதிக சத்தத்துடனான பாடல்கள் முலம் வயதானவர்கள், சிறு குழந்தைகளுக்கு உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. இந்த சத்தம் மனிதர்களுக்கு மட்டுமல்லாது, விலங்குகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது என்பதை உத்தரபிரதேசத்தில் நடந்த நிகழ்வு நிரூபணப்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டம் தரியாபூர் கிராமத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 25-ம் தேதி திருமண ஊர்வலம் ஒன்று டிஜே கச்சேரியுடன் நடைபெற்றது. அதில் ஒலிக்கப்பட்ட அளவுக்கு மீறிய சவுண்ட் அங்குள்ள ஒரு கோழிப்பண்ணையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒலியின் அளவு தாங்காமல் அங்கு இருந்த 140 கோழிகள்…
தகவல் உரிமை சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு, இரண்டு ஆண்டுகள் தாமதமாக பதிலளித்த, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்துக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தனியார் ஆசிரியர் கல்வியியல் கல்லுாரி மாணவர் பரத்ராஜ், கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த தேர்வில் கலந்து கொண்டு எழுதியுள்ளார். ஆனால், தேர்வு முடிவுகளில், குறிப்பிட்ட அந்த தேர்வில் பரத்ராஜ் பங்கேற்கவில்லை என, குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து விளக்கம் கேட்டு, தகவல் உரிமை சட்டத்தின் கீழ், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துக்கு பரத்ராஜ் விண்ணப்பித்து இருந்தார். இரண்டு ஆண்டுகளாகியும், அதற்கு பதில் அளிக்காத நிலையில், மாநில தகவல் ஆணையத்தில் பரத்ராஜ் புகார் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில் தகவல் அறியும் உரிமை சட்டப்படி, 30 நாட்களுக்குள் தகவல் வழங்க வேண்டும்; ஆனால் இரண்டு ஆண்டுகளாக தகவல்களை வழங்காததால், மன உளைச்சல்…
நீட் தேர்வில் முறைகேட்டைத் தடுக்க AI கேமரா, GPS, ஜாமர்கள் உள்ளிட்ட பல்வேறு புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எம்.பி.பி.எஸ். மற்றும் பிற மருத்துவ படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வான நீட் தேர்வு ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சி, மதுரை, கோவை என 30 நகரங்கள் உட்பட நாடு முழுவதும் 552 நகரங்களில் இந்த தேர்வு நடக்கிறது. நாடு முழுவதும் 22 லட்சத்து 79 ஆயிரத்து 743 மாணவர்கள் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தனர். இதில் மாணவர்கள் 9 லட்சத்து 46 ஆயிரத்து 815 பேர், மாணவிகள் 13 லட்சத்து 32 ஆயிரத்து 928. மொத்த விண்ணப்பதார்களில் 58 சதவீதம் பேர் பெண்கள் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் நடைபெற உள்ளது. மொத்தம் 180…
தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வரும் 4-ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கவுள்ளது. 28-ம் தேதி வரை அக்னி நட்சத்திரம் இருக்கும் என்பதால், இந்தக் காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் இயல்பை விட அதிகரிக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த நினையில், கத்திரி வெயில் காலத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தென்மேற்கு பருவமழை இந்தாண்டு இயல்பை விட குறைவாக பதிவாக வாய்ப்புள்ளதாகவும், சுப்பர் எல் நினோ நிகழ்வால் இயல்புக்கு மாறாக ஆகஸ்ட் வரை வெப்பத்தின் தாக்கம் நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஜுன் 1-ம் தேதி தொடங்கும் தென்மேற்கு பருவமழை, ஒரு வாரத்திற்கு முன்னதாகவே மே 23ம் தேதி முதல் 25-ம் தேதிகளில் தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். பருவமழை முன்னதாக தொடங்கினாலும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் மழை அளவு இயல்பை விட…
தேர்தல் முடிவுகள் குறித்து அதீத எதிர்பார்ப்புகள் தேவையில்லை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தேமுதிக தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்திடம் தேர்தலுக்குப் பிந்திய கருத்துக் கணிப்பு குறித்து கேட்டபோது, ”ஆக்கப் பொறுத்தவர்கள் ஆறப் பொறுக்க வேண்டும் தேர்தல் முடிவுகள் குறித்து அதீத எதிர்பார்ப்புகள் தேவையில்லை. எங்களுடைய கூட்டணி அமோக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சர் ஆவார்” எனப் பதிலளித்தார். ஆட்சி அதிகாரத்தில் பங்கு குறித்து கேள்விக்குப் பதிலளித்த அவர், “தேர்தல் களத்தில் அனைவரும் சிறப்பாக பணியாற்றி உள்ளோம் இந்த கேள்விக்கு வரும் 4ஆம் தேதி பிறகு பதில் அளிக்கிறேன்” என்றார். சேலம் கூட்டத்தில் முதலமைச்சரை வைத்துக் கொண்டு திமுக ஆட்சி மீதான விமர்சனத்தை முன்வைத்தது குறித்த கேள்விக்கு, தேமுதிக மீதான விமர்சனங்களுக்கும்…
மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள பார்கி அணையில் படகு கவிழ்ந்து சுற்றுலாப் பயணிகள் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையை சுற்றுலாப் படகில் பார்க்க சென்ற 31 பேர் இந்த விபத்தில் சிக்கி ஆற்றில் விழுந்தனர். அணையில் மூழ்கியதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், தத்தளித்த 15 பேரை மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர். படகு கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி காணாமல் போன மேலும் சிலரை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.