Author: Editor TN Talks
தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 110 தொகுதிகுகளுக்கு மேல் முன்னிலை பிடித்து வெற்றியை உறுதி செய்து வருகிறது. புதிதாக கட்சியை தொடங்கிய விஜய் தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே பெருவாரியான கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்கும் வகையில்110 தொகுதிகளுக்கும் மேல் முன்னிலையில் இருப்பது தமிழ்நாட்டின் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நடிகர் விஜய், ஆட்சி அமைப்பார் என்னும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் விஜய்க்கு அவர் சார்ந்துள்ள திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். நடிகர் விக்ரம் :- வாழ்த்துகள் தோழா, நீங்கள் இன்று வரலாற்றை உருவாக்கி இருக்கிறீர்கள்! நடிகர் சிவகார்த்திகேயன் :- போட்டியிட்ட முதல் தேர்தலில் இவ்வளவு பெரிய தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இந்த வெற்றியை பெற்றிருக்கும் விஜய் சாருக்கு வாழ்த்துகள். நீங்கள் திரைத்துறையை சார்ந்தவர் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி, மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள் சார் நடிகர் ரவிமோகன்: அண்ணா, அதிகாரத்தை கொடுக்கலாம்..…
கேரளாவில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நிலையில் உள்ளது. காங்கிரஸ் வெற்றிக்கும், இடதுசாரி கூட்டணி தோல்விக்கும் பின்னால் உள்ள காரணங்கள் என்ன என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது. தற்போதைய முன்னிலை நிலவரப்படி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 100 இடங்களிலும், இடதுசாரி கூட்டணி 36 இடங்களிலும் முன்னணியில் உள்ளன. இந்த மாற்றம், கேரளாவில் ஆட்சி மாற்றத்துக்கான வாக்காளர்களின் மனநிலையே மாறியிருப்பதையே வெளிப்படுத்துகிறது. இந்நிலையில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கான வெற்றியின் காரணங்கள் என்ன, இடதுசாரி கூட்டணி வீழ்ச்சி அடைந்தது ஏன் என்பதற்கான விரிவான காரணங்கள் இங்கே… 1. மாற்றத்திற்கான வாக்காளர்களின் விருப்பம் தொடர்ந்து பத்து ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி செய்த இடதுசாரி கூட்டணி மீது மக்களிடையே இயல்பான ஆட்சிக்கு எதிரான மனநிலை உருவானது. இளைஞர்கள் வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி போன்ற விஷயங்களில் மாற்றத்தை எதிர்பார்த்தனர். நடுத்தர வர்க்கம் பொருளாதார அழுத்தத்தை உணர்ந்தது…
தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக தலைவர் விஜய் சென்னையின் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பெரம்பூர், திருச்சி கிழக்கி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் விஜய் வெற்றி வாகை சூடுகிறார். பெரம்பூரில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வாக்கு எண்ணிக்கை மையமான லயோலா கல்லூரிக்கு சென்று அவர் வாங்க உள்ளார். இந்த நிலையில் திருச்சி கிழக்கிலும் விஜய் வெற்றி பெறும் நிலையில் அவர் ஏதேனும் ஒரு தொகுதியில் இருந்து விலக வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. தவெக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் இருந்து விலகுவார் எனவும், அங்கு மீண்டும் இடைத்தேர்தல் நடைபெறும்போது தவெக தரப்பில் நடிகை த்ரிஷா களமிறக்கப்படுவார் எனவும் தவெக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே நடிகை த்ரிஷாவை, தவெகவின் கொள்கை பரப்பு செயலாளர் எனவும், அவர் துணை முதலமைச்சராக பதவியேற்பார் எனவும் தவெகவினர் கூறி வருகின்றனர்.\
நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய்யின் வீட்டுக்கு நடிகை த்ரிஷா வருகை தந்துள்ளார். தமிழ் சினிமா நடிகைகளில் மார்க்கண்டேயனாக இருக்கும் த்ரிஷா இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இதற்காக அதிகாலையிலேயே திருப்பதி மலைக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இதன்பின்னர் சென்னை திரும்பினார். தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் த்ரிஷாவுடன் நெருக்கம் காட்டி வரும் நடிகர் விஜய்யின் தவெக 100 இடங்களுக்கு மேல் முன்னிலை வகித்து வருகிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் தவெகவினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். விஜய்யின் நீலாங்கரை வீட்டுக்கு முன்பாகவும் கட்சித் தொண்டர்களும், ரசிகர்களும் திரண்டு வந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தனது பிறந்த நாளுக்காக வாழ்த்து பெறவும், தேர்தல் வெற்றிக்காக வாழ்த்து சொல்லவும் நடிகை த்ரிஷா, தனது சொகுசு காரில் நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டுக்கு வருகை தந்துள்ளார்.தவெக முன்னிலை வகித்து வரும் நிலையில், நடிகை த்ரிஷாவும்,…
மேற்கு வங்க அரசியலில் மாபெரும் அரசியல் மாற்றமாக , பல ஆண்டுகளாக மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி செய்த மாநிலத்தில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றம் எவ்வாறு ஏற்பட்டது? மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி ஏன்? பாஜக எத்தகைய உத்திகளை பயன்படுத்தியது? SIR மூலம் வாக்காளர் பட்டியலில் ஏற்பட்ட மாற்றங்கள் எந்த அளவுக்கு தாக்கம் ஏற்படுத்தின போன்றவற்றை இங்கே விரிவாக பார்க்கலாம். திரிணாமுல் காங்கிரஸ் வீழ்ச்சி ஏன்? ஆட்சிக்கெதிரான அதிருப்தி (Anti-incumbency) 15 ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஆட்சி செய்ததால், சோர்வு மனநிலை வாக்காளர்களிடையே உருவாகியது.உள்ளாட்சி அளவில் ஊழல் குற்றச்சாட்டுகள், வேலைவாய்ப்பு பற்றாக்குறை, அரசு திட்டங்கள் தரமான முறையில் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் போன்ற அனைத்தும் சேர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான வாக்குகளாக மாறியிருக்கலாம். ‘சிண்டிகேட் ராஜ்’ மற்றும் உள்ளூர் குற்றச்சாட்டுகள் மேற்கு வங்காள அரசியலில் நீண்டகாலமாக பேசப்பட்டு வந்த ‘syndicate…
அரசியல் குடும்பத்தின் வாரிசாகவும் திரைப்படத் தயாரிப்பாளராகவும் இருந்து வந்த உதயநிதி ஸ்டாலினை திமுகவின் அரசியல் முகமாக்கும் முயற்சியின் முன்னெடுப்புதான் சினிமாவில் அவர் முகம் காட்டியது. ஒரு சில படங்களில் நடித்தாலும் தமிழ்நாட்டு மக்களிடையேயும் தன்னை அறிமுகம் செய்து கொண்ட உதயநிதிக்கு, திமுகவில் இளைஞரணிச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. தந்தை மு.க.ஸ்டாலினைப் போலவே இளைஞரணியில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கிய உதயநிதி, தந்தை காத்திருந்ததைப் போல நீண்ட காலம் எல்லாம் காத்திருக்காமல் எம்.எல்.ஏ, அமைச்சர், துணை முதலமைச்சர் என அடுத்தடுத்தப் படி நிலைகளுக்கு தாவிச் சென்றார். 2019 நாடாளுமன்ற தேர்தலில் அவர் மேற்கொண்ட பிரச்சாரத்துக்காக 2021 தேர்தலில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி அவருக்கு வழங்கப்பட்டு, அதில் 70ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.எல்.ஏவானார். அவருக்கு 2022-ல் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது. 2024-இல் துணை முதலமைச்சராகவும் பெருமைக்குரிய பதவியில் அமர்த்தப்பட்டார். இப்படி…
தமிழக அரசியலில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிர்ச்சி திருப்பமாக வாக்கு எண்ணிக்கையில், தமிழக வெற்றிக்கழகம் (தவெக) 100-ஐ தாண்டி முன்னிலை பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி அரசியல் சூழலை முற்றிலும் மாற்றி அமைத்துள்ளது. சமீபத்திய நிலவரப்படி, தமிழக வெற்றிக்கழகம் (தவெக) 104 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதனை தொடர்ந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) 74 இடங்களிலும், திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) 56 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.முதல் முறையாக முழுமையான தேர்தலை சந்திக்கும் கட்சியாக இருந்தாலும், விஜய் தலைமையிலான தவெக இந்த அளவுக்கு முன்னிலை பெறுவது, தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியதற்கான அறிகுறி என பார்க்கப்படுகிறது. மந்திர எண்’ நோக்கி தவெக தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை. தற்போது 104-ஐ தொட்டுள்ள தவெக, அந்த இலக்கை நோக்கி வேகமாக நகர்கிறது. இதே போக்கு தொடர்ந்தால், தவெக தனியாகவே ஆட்சி அமைக்கும் வாய்ப்பு அல்லது…
தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பல்வேறு ஊடகங்கள் வெளியிட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை எல்லாம் தவிடு பொடியாக்கி நடிகர் விஜய்யின் தவெக பெரும்பான்மை இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. பகல் 11 மணி நிலவரப்படி தவெக 104 இடங்களிலும், அதிமுக 75 மற்றும் திமுக 54 இடங்களிலும் முன்னணியில் உள்ளன. இதே நிலை தொடருமானால் தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 118 இடங்களைப் பெறுவது என்பது இயலாத காரியமாகி விடும். இதனால் தமிழ்நாட்டில் தொங்கு சட்டசபை ஏற்படும் நிலை நிலவுகிறது. இதனைச் சமாளிக்கும் வகையில் தற்போதே தவெகவில் இருந்து பல்வேறு கட்சிகளுடன் மறைமுகப் பேச்சுவார்த்தை தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தவெக முதன்மை நிர்வாகி ஆதவ் அர்ஜுனா மூலம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிடம் ஆதரவு தரக் கோரி பேச்சுவார்த்தையைத் தொடங்கி இருப்பதாக தவெக வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. ஏற்கனவே திமுகவுடன் காங்கிரஸ் தனது கூட்டணியை இறுதிப்படுத்தும்…
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தல் களத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க., பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணி என இருபெரும் அணிகளுடன், தமிழக அரசியலில் புதிய வரவான நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சியும் இறங்கின. இந்த நிலையில் 234 சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று (திங்கட்கிழமை) எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்கு எண்ணப்பட்டது. ஆரம்பத்தில் திமுக முன்னிலையில் இருந்தது. சிறிது இடைவேளை அடுத்து தவெக முன்னிலையில் பெற்றது. அதிமுக 2-ம் இடத்திலும், திமுக 3-ம் இடத்திலும் இருந்து வருகிறது. மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி, தவெக – 102 இடங்களிலும், அதிமுக – 78 இடங்களிலும், திமுக – 53 இடங்களிலும் இருந்து வருகிறது. நொறுங்கிய திமுக கோட்டை…
தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பரபரப்பான திருப்பம் உருவாகியுள்ளது. மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு முக்கிய அதிர்ச்சியாக, முதல்வர் முதல் பல முக்கிய அமைச்சர்கள் வரை பலர் முன்னிலை இழந்து பின்னடைவை சந்தித்து வருவது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதோடு, அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருடன், அமைச்சர்கள் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், பி.டி.ஆர். பழனிவேல் ராஜன், கோ.வி. செழியன், மா. சுப்பிரமணியன், கே.என். நேரு, அன்பில் மகேஷ் உள்ளிட்ட மொத்தம் 21 அமைச்சர்கள் பல்வேறு தொகுதிகளில் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.முக்கிய அமைச்சர்கள் பலர் பின்னடைவை சந்தித்திருப்பது, திமுகவின் மொத்த இட எண்ணிக்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுகவுக்கு எதிரான அதிருப்தி? அரசியல் நிபுணர்கள் இதை ஆட்சிக்கெதிரான அதிருப்தி (anti-incumbency) எனப் பார்க்கின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் உள்ளாட்சி மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த குறைகள்…