Author: Editor TN Talks
திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகள் தொடங்க லஞ்சம் வாங்கப்பட்டது என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டி வரும் நிலையில், அது உண்மைதான் என்பதுபோல், திமுக ஆட்சியில் தனது பள்ளி அனுமதிக்கு லஞ்சம் கேட்டார்கள் என ZOHO இயக்குநர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். தான் வெளியிட்ட பள்ளி தொடர்பான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், தவெக அரசுக்கு ஆதரவாக உருவாக்கப்பட்டவை என்றும் திமுக ஆதரவாளர்கள் விமர்சித்து வருவதாக தொழில்நுட்பத் தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்த அவர், கலைவாணி கல்வி மையத்தின் கீழ் தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் இலவச NIOS பள்ளிகள் செயல்பட்டு வருவதாக கூறினார். தேனி பள்ளி முதலில் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஒருவரால் தொடங்கப்பட்டதாகவும், அவர் நடத்திய சிபிஎஸ்இ பள்ளிக்கு மாநில அரசின் NOC பெற அதிகளவு பணம் கோரப்பட்டதால் பள்ளியை மூட வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். பின்னர்…
மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் வி.பி சிங் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக்கழக அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், வெங்கட்ரமணன் , மரிய வில்சன், குமார் ஆகியோர் சென்னை மாநிலக் கல்லூரியில் உள்ள வி.பி.சிங்கின் திரு உருவ சிலை மற்றும் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். சமூக நீதிக்காக போராடியவர் வி.பி.சிங். ஆட்சி கவிழ்க்கப்பட்ட போது கூட மக்களை முன்னிறுத்திய அவர், தனது வாழ்நாள் முழுவதும் தலித் சமூக மக்கள், பிற்படுத்தப்பட்டோர் சமூகத்திற்காக உழைத்தவர். காவேரி பிரச்சனைக்காக காவிரி நடுவர் மன்றத்தை அமைத்த வி.பி.சிங்குக்கு தமிழ்நாட்டுடன் அன்பும் உறவும் நீடித்திருந்தது. அவர் ஆட்சியில் இருந்த 11 மாதத்தில் 30 வருடங்களின் சாதனையை நிகழ்த்தியவர் எனப் புகழாரம் சூட்டினார். சமூக நீதி கணக்கெடுப்பை மு.க.ஸ்டாலின் அரசு செய்யவில்லை. ஆனால், வி.பி.சிங் வழியில் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யின் அரசு…
விஜய்… நாதாரி தலைவர் ; சிபிஎம் அதிகப்பிரசங்கித்தனம்; மதிமுகவில் ஆளே இல்லை – ஆ.ராசா சர்ச்சைப் பேச்சு!
திருவாரூரில் திமுக முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்லத் திருமண விழாவில் ஆ.ராசா பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில், திமுக முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இதில் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கலந்து கொண்டு உரையாற்றினார். அவரது பேச்சு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழாவில் பேசிய ஆ.ராசா, தமிழக சட்டமன்றத்தின் தற்போதைய நிலையை விமர்சித்தார். “ஒரு காலத்தில் பேரறிஞர் அண்ணா மற்றும் ராஜாஜி போன்ற தலைசிறந்த அரசியல் ஆளுமைகள் இருந்த சட்டமன்றத்தில், இன்று நாதாரி முதல்வரின் ஆட்சி நடைபெற்று வருகிறது” என்று குறிப்பிட்டார். மு.க.ஸ்டாலினைச் சுட்டிக்காட்டி, ஒரு தேர்தலை வைத்து எடைபோடுவீர்களா என கேள்வி எழுப்பினார். மேலும், திமுக கூட்டணி தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், “ஒரு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் திமுக கூட்டணியே இல்லை என்கிறார். திமுக கூட்டணியில் நீங்கள் இல்லை என்று கூற உங்களுக்கு உரிமை உள்ளது. கூட்டணியே…
மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்தநாளில் முதலமைச்சர் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் எளிமை, நேர்மை மற்றும் கொள்கைப் பற்றுடன் அரசியல் வாழ்வை முன்னெடுத்த முன்னாள் பிரதமர் வி.பி. சிங் அவர்களின் பிறந்தநாளில், அவருக்கு எனது சமூக நீதி வணக்கம். சமூக நீதிக்கான அவரது பங்களிப்பும், சமத்துவமான சமூகத்தை உருவாக்குவதற்கான அவரது அர்ப்பணிப்பும் இந்திய அரசியல் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திராவிட இயக்கம் தோன்றாத வடக்கே உதித்த சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் அவர்களின் பிறந்தநாள்! இந்தியா எத்தனையோ பிரதமர்களைக் கண்டிருக்கிறது. குறுகிய காலமே அப்பதவியில் இருந்தாலும் சமூகநீதியை நிலைநாட்டுவதற்காகப் பிரதமர் பதவியையே துச்சமாகக் கருதி வி.பி.சிங் காட்டிய உறுதி என்றென்றும் நாம் நினைத்துப் போற்றத்தக்கது. தி.மு.க.வைப் போலவே, ‘ஆட்சியும் பதவிகளும் முக்கியமல்ல; சமூகநீதிக் கொள்கையே முக்கியம்’ என வாழ்ந்து காட்டியவர் திரு. வி.பி. சிங் அவர்கள். தமிழ்நாட்டை…
கடந்த 25 வருடங்களில் மின்சார வாரியத்தில் நடந்த வரவு செலவு உள்ளிட்ட நிதியினங்கள் முதல் வேலை வாய்ப்பு குறித்த வெள்ளை அறிக்கையினை அமைச்சர் நிர்மல்குமார் வெளியிட்டு விளக்கமளித்தார். மின்வாரியத்தின் மொத்தக் கடன் ரூ.2.47 லட்சம் கோடியாக உள்ளது கடந்த 5 வருடங்களில் ரூ.87399 கோடி கடன் பெற்றும் மின்வாரியம் மேம்படுத்தப்படவில்லை கடந்த 5 வருடங்களில்தான் செலவும் அதிகம், கடனும் அதிகம். மின்வாரியத்தின் வருவாய் அதிகரித்துள்ள நிலையில் கடனும் அதிகரித்துள்ளது புதிதாக டிரான்ஸ்பார்மர்கள் வாங்கப்படவில்லை, பணியிடங்களும் நிரப்பப்படவில்லை. ஆனால் செலவு உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டிற்கு அதிகபட்சமாக 21,300 மெகாவாட் மின்சாரம் தேவையுள்ள நிலையில், தமிழ்நாடுமின்சார வாரியம் மூலமாக3495 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டிற்குள் 4246 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது மத்தியத் தொகுப்பில் இருந்து 13,566 மெகாவாட் மின்சாரம் தமிழ்நாடு வாங்குகிறது குறுகிய கால ஒப்பந்தம் மூலம் மின்சாரம் யூனிட்டிற்கு ரூ.8.91 கொடுத்து வாங்குகிறோம் தினசரி மின்சாரம் வாங்கும் நிலைகளில் அதிகம் செலவு…
திருவள்ளூர் மாவட்டத்தின் தனியார் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் நிகழ்ந்த, அம்மோனியா வாயு கசிவு காரணமாக 11 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையில், உயிரிழந்தோர்களில் 9 தொழிலாளர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனவும் 2 தொழிலாளர்கள் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வேல்ஸ் மருத்துவமனையில் 29 தொழிலாளர்களும், வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் 18 தொழிலாளர்களும், ராஜீ்வ் காந்தி அரசு மருத்துவமனையில் 10 தொழிலாளர்களும், ஸ்டான்லி மருத்துவமனையில் 10 தொழிலாளர்களும் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஸ்டான்லி மருத்துவமனையில் தமிழ்நாட்டை சேர்ந்த 6 நபர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள தொழிலாளர்களுக்கு அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது என தமிழக சுகாதரத்துறை தெரிவித்துள்ளது.
அப்பா மருத்துவர் ராமதாசை சந்தித்தத்தைத் தொடர்ந்து, இனி நல்லது நடக்கும் என அன்புமணி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி புதுச்சேரி அருகே நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் தனது மகள் வழி பேரன் முகுந்தனை பாமக இளைஞரணி தலைவராக நியமிப்பதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பொதுக்குழு மேடையிலேயே ராமதாசுடன் அன்புமணி நேரடியாக கருத்து மோதலில் ஈடுபட்டார். அது முதலே பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வந்தது. இதனால் பாமகவில் உள்ள அன்புமணியின் ஆதரவாளர்களை நீக்கிவிட்டு தனது ஆதரவாளர்களை நிர்வாகிகளாக மருத்துவர் ராமதாஸ் நியமித்தார். ஆனால் நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் ராமதாஸுக்கு இல்லை என்றும் பாமகவின் தலைவராக இருக்கக்கூடிய தனக்கே முழு அதிகாரம் இருப்பதாகவும் கூறி அன்புமணி ராமதாஸ் நீக்கப்பட்ட நிர்வாகிகள் தொடர்ந்து அதே…
நடிப்பின் உச்சகட்டத்தில் இருந்து அரசியலுக்கு வந்தவர் முதலமைச்சர். அவர் சட்டப்பேரவையில் நடிக்க வேண்டிய அவசியம் எப்போது இல்லை என வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், முதலமைச்சர் சட்டசபையில் நடிப்பதாக எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்தார். முதலமைச்சர் என்றைக்கும் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. நடிப்பிலே உச்சக்கட்டத்தில் இருந்து விட்டு அரசியலுக்கு வந்தவர். நாட்டு மக்களுக்காக பணியாற்றி வருகிறார். அவரின் ஒவ்வொரு பதிலையும் கேட்டார்கள். முதலில் அவர் ஏன் பேசாமல் இருக்கிறார் எனக் கேட்டார்கள். அவர் பேச்சைக்கேட்ட பிறகு தி.மு.க.திணறிப் போய் வெளியே சென்றது எனத் தெரிவித்தார்.
ஆட்சி மாற்றத்திற்கு முக்கிய காரணமே த்ரிஷா தான் அதனால் த்ரிஷா புகைப்படத்தை காரைக்குடி மாநகராட்சி மன்ற கூட்ட அரங்கில் வைக்க வேண்டும் என காரைக்குடி மாநகராட்சி கூட்டத்தில் மாநகராட்சி உறுப்பினர் மெய்யர் வலியுறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது அப்போது அதிமுக மாமன்ற உறுப்பினர் பிரகாஷ் தனது வார்டில் எந்த பணியும் நடக்கவில்லை என்று கூறி தான் அளித்த மனுக்களுடன் மேயர் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். மற்ற வார்டு மாமன்ற உறுப்பினர்களும் தங்கள் பகுதியில் எந்த வேலையும் நடக்கவில்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் எடப்பாடியின் புகைப்படத்தை கூட்ட அரங்கில் வைக்க வேண்டும் என்று கூறி அதிமுகவினர் முன்னாள் முதல்வர் எடப்பாடி புகைப்படத்தை வைத்தனர். இதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என்று கூறி திமுகவினர் முன்னாள் முதல்வர் ஸ்டாலின்…
பொதுவெளியில் பள்ளி மாணவிகளை கால்களைத் தடவியதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். அவரது விளக்கத்தில் கூறியிருப்பதாவது;- மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தியின் 56-வது பிறந்தநாள் விழா, முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மதுரை மேலூரில் புகையிலை, மது, கஞ்சா போதைப் பொருட்கள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் குற்றங்களுக்கு எதிரான ‘விரா” (விஜய் – ராகுல் ViRa) விழிப்புணர்வு மராத்தான் போட்டி நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் 4 கி.மீ. தூரம் பங்கேற்றதால் கடும் வெயிலின் காரணமாக சிலர் மயக்கமடைந்து கீழே விழுந்தனர். அந்த சிறுமிகளை மனிதாபிமான உணர்வோடு தொட்டு தூக்கி மயக்கத்தை போக்குகின்ற வகையில் தண்ணீரை தெளித்து முதலுதவி செய்தேன். இதற்கு பள்ளி கல்வித்துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்நோக்கம் கற்ப்பிக்கின்ற வகையில் இழிவுபடுத்தி, தி.மு.க. ஐ.டி. விங்கில் பதிவு செய்திருப்பது மிகவும்…