Author: Editor TN Talks
இந்தியாவின் முப்படை தலைமை தளபதியாக தமிழரான ராஜா சுப்ரமணி நியமிக்கப்பட்டிருக்கிறார். நாட்டின் முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணியை நியமித்து ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது. தற்போதைய தலைமை தளபதி அனில் சவுகானின் பதவிக்காலம் வரும் 30ஆம் தேதி முடிவடையும் நிலையில், புதிய தலைமை தளபதியாக ராஜா சுப்ரமணி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் முப்படை தலைமை தளபதியாக நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இந்திய ராணுவத்தில் 37 ஆண்டுகளுக்கும் மேலாக மிகச்சிறந்த சேவையாற்றி வரும் லெப்டினன்ட் ஜெனரல் ராஜா சுப்ரமணி, தேசிய பாதுகாப்பு கல்விக்கழகம் (NDA) மற்றும் இந்திய ராணுவ கல்விக்கழகத்தில் (IMA) இளநிலைப் பட்டம் பெற்றுள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஆய்வில் எம்.பில் பட்டம் பெற்றதோடு, டெல்லி மற்றும் லண்டனிலும் உயர்கல்வி பயின்றிருக்கிறார். டெல்லி தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் (NDC) முன்னாள் மாணவரான ராஜா சுப்ரமணி 1985 டிசம்பரில் கார்வால் ரைபிள்ஸ் படைப்பிரிவில்…
திருவாரூர் ஸ்ரீ தியாகராஜர் கோவிலில் நடைபெற்ற பிரம்மாண்டமான தெப்பத்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். திருவாரூர் ஸ்ரீ தியாகராஜர் கோவில் பங்குனி உத்திர ஆழித்தேரோட்டவிழா கடந்த மார்ச் 29ஆம் தேதி நடைப்பெற்றது. இதற்கு அடுத்து முக்கியத்துவம் வாய்ந்த தெப்பத் திருவிழா மே 8ஆம் தேதி தொடங்கியது. கமலாலய குளத்தில் 432 இரும்பு பேரல்களில் காற்று நிரப்பி 2 அடுக்காக மூங்கிலால் கட்டப்பட்டு மின்விளக்கு அலங்காரத்துடன் தெப்பம் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட தெப்பத்தில், ஸ்ரீ தியாகராஜ சுவாமி ஸ்ரீபார்வதி சமேத கல்யாணசுந்தரர் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தெப்பத்தில் இசை நிகழ்ச்சி நடைபெற்று 300 க்கும் மேற்பட்ட பக்தர்களுடன் இரண்டு கிலோமீட்டர் சுற்றளவு உள்ள குளத்தை சுற்றி தெப்பம் வலம் வந்தது , குளத்தின் சுற்றியுள்ள படித்துறைகளில் ஏராளமான பக்தர்கள் தெப்பம் வலம்வருவதை கண்டு தரிசித்தனர் , தெப்பதிருவிழாவில் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் , சட்டமன்ற உறுப்பினர் பூண்டிகலைவாணன் , மாவட்டவருவாய்…
சென்னையில் காற்றுடன் பெய்த மழையினால் தேனாம்பேட்டை ஆலயம்மன் கோயிலில் இருந்த நூறாண்டுகள் பழமையான அரசமரம் சாலையில் சாய்ந்தது. தமிழ்நாடு முழுவதும் கோடை மழை தீவிரமடைந்து வரக்கூடிய நிலையில் தலைநகர் சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் இரண்டு நாட்களாக அதிகாலை நேரத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று அதிகாலை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனிடையே பலத்த காற்று வீசியதால் சென்னை தேனாம்பேட்டை சிக்னல் சந்திப்பு அருகே உள்ள ஆலயம்மன் கோயிலில் இருந்த நூறாண்டுகள் பழமையான அரசமரம் சாய்ந்து சாலையில் விழுந்தது. சம்பவம் அறிந்த மின்வாரிய ஊழியர்கள், காவல்துறையினர் மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரத்தை அறுத்து அப்புறப்படுத்த கூடிய பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நூறாண்டுகள் பழமையான அரசமரம் கோவிலின் ஒருபுறம் சுவர் மீது விழுந்து சாலையில் இருந்த மின்விளக்கில்…
அமமுக எம்.எல்.ஏ கடிதம் என தவெக வெளியிட்டது போர்ஜரி என டிடிவி தினகரன் குற்றம்சாட்டிவரும் நிலையில், அமமுக எம்.எல்.ஏ காமராஜ் ஆதரவு கடிதம் எழுதிய வீடியோவை தவெக வெளியிட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றிய தவெக பெரும்பான்மைக்கான 118 இடங்களைப் பெறுவதற்காக ஆதரவை திரட்டி வருகிறது. இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள அமமுகவை சேர்ந்த எம்.எல்.ஏ காமராஜ், தங்களுக்கு ஆதரவு அளித்ததாக தவெக தெரிவித்து அந்தக் கடிதத்தை வெளியிட்டது. ஆனால், அந்தக் கடிதம் போர்ஜரி என்றும், தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் டிடிவி தினகரன் குற்றம்சாற்றியுள்ளார். ஆனால், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் எம்எல்ஏ காமராஜ் அவர்கள் தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆதரவளிப்பதாக தன் சுயநினைவுடன் மகிழ்ச்சியுடன் தான் கடிதம் எழுதியிருப்பதாக தவெக தெரிவித்துள்ளது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் தினகரன் அவர்கள் ஒப்புதலுடன் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளிப்பதாக எம்.எல்.ஏ காமராஜ் கூறியிருந்தார். ஆனால்…
தவெகவுக்கு ஆதரவு அளித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஹைதராபாத்துக்கு சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றிய தவெக ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்காக பல்வேறு கட்சிகளிடம் ஆதரவு கோரியது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் தனது 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவை தவெகவுக்கு வழங்கியுள்ளது. தொடர்ந்து சிபிஐ, சிபிஎம் கட்சிகளும் ஆதரவை அளித்துள்ளது. இந்த நிலையில் தவெகவுக்கு ஆதரவு வழங்கிய காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களை உடனடியாக தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்துக்கு செல்லும்படி காங்கிரஸ் அகில இந்திய தலைமை உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன்படி, நேற்று இரவு 7 மணிக்கு சென்னையில் இருந்து ஹைதராபாத் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ.க்கள் விஸ்வநாதன், ஜமால் முகமது யூனுஸ், தாரகை கத்பர்ட் ஆகிய 4 பேரும் திடீரென புறப்பட்டு சென்றனர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரவீன், ஏற்கனவே பெங்களூரு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் தெலுங்கானா மாநிலத்தில்…
தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க குதிரைபேரம் நடைபெறும் நிலையில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படுமா என பரபரப்பு கிளம்பியுள்ளது. தமிழ்நாட்டின் 16வது சட்டசபையின் பதவிக்காலம் மே 10ஆம் தேதியுடன் நிறைபெறுகிறது. 17-வது சட்டசபையை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடத்தப்பட்டு மே மாதம் 4ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. இதில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளையும் திமுக கூட்டணி 73 இடங்களையும், அதிமுக கூட்டணி 53 இடங்களையும் கைப்பற்றியிருக்கிறது. ஆட்சி அமைப்பதற்குத் தேவையான118 இடங்கள் இல்லாததால், தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்ற பல்வேறு கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் உடனடியாக தனது 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவை வழங்கியதன் வாயிலாக தவெகவுக்கு 113 இடங்கள் கிடைத்தது. மீதமுள்ள 5 இடங்களுக்காக தொடர்ந்து தவெக இடதுசாரி கட்சிகள், விசிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் தவெக. ஆட்சியமைக்க சி.பி.ஐ., சி.பி.எம். கட்சிகள்…
மேற்கு வங்க மாநிலத்தின் புதிய முதல்வராக சுவேந்து அதிகாரியை பாஜக எம்எல்ஏக்கள் ஒருமனதாக வெள்ளிக்கிழமை (மே 8) தோ்வு செய்தனா். இதையடுத்து அவா் சனிக்கிழமை (மே 9 ) அந்த மாநிலத்தின் முதல் பாஜக முதல்வராகப் பதவியேற்கிறாா். மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற தோ்தலில் பாஜக 207 தொகுதிகளில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. வெள்ளிக்கிழமை கொல்கத்தாவில் நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டாா். கூட்டத்தில் சுவேந்து அதிகாரி முதலமைச்சராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு, அதனை அமித்ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதன்பின்னா் ஆளுநர் மாளிகைக்கு சென்று சுவேந்து அதிகாரி, ஆட்சி அமைக்க உரிமை கோரியதை ஆளுநர் ஆா்.என். ரவி ஏற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து இன்று காலை கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் அணிவகுப்பு மைதானத்தில் பாஜக அரசின் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. சுவேந்து அதிகாரி முதலமைச்சராகவும், அமைச்சரவை சகாகளும் பதவியேற்கின்றனர். அவா்களுக்கு ஆளுநா் ஆா்.என்.…
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாக உள்ளது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள், கடந்த மார்ச் 2 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் சுமார் 8 லட்சம் மாணவ, மாணவியர்கள் பொதுத்தேர்வு எழுதினர். மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, மற்றும் results.digilocker.gov.in ஆகிய இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம். மேலும், 78452 52525 என்ற வாட்ஸ்அப் எண்ணின் மூலமும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளும் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்வு முடிவு தொடர்பான சந்தேகங்கள், விளக்கங்கள் மற்றும் ஆலோசனைகளுக்காக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் 14417, 104, 14416 என்ற உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தவெக விரைவில் ஆட்சி அமைக்கும் என்றும் விஜய்க்கு தனது வாழ்த்துக்கள் என்றும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் 15-வது சட்டப்பேரவை கடந்த 5-ம் தேதி உடன் முடிவடைந்த நிலையில் சட்டமன்றம் கலைக்கப்பட்டதாக துணை நிலை ஆளுநர் கைலாசநாதன் அறிவித்திருந்தார். இந்த நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை துணைநிலை ஆளுநர் கைலாசநாதனை ராஜ் நிவாஸில் நேரில் சந்தித்து வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரங்கசாமி, சட்டமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் அளித்திருப்பதாகக் கூறினார். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசனை செய்து ஆட்சி அமைக்க உரிமை கோறும் கடிதம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து, தமிழ்நாட்டில் தமிழக வெற்றி கழகம் ஆட்சி மிக விரைவில் அமையும் எனக் கூறிய ரங்கசாமி, தவெக தலைவர் விஜய்க்கு தனது வாழ்த்துக்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
லெபனான் – இஸ்ரேல் போர் நிறுத்தம் கடந்த ஏப்ரல் 17-ம் தேதி வாஷிங்டனில் எட்டப்பட்டது. ஆயினும் லெபனான் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த சூழலில் லெபனானில் நிலை கொண்டுள்ள இஸ்ரேல் படை வீரர்கள், அங்குள்ள பொதுமக்களின் சொத்துகளை சேதப்படுத்துவது, கொள்ளையடிப்பதுமான வீடியோகள் தொடர்ந்து வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. வீரர்கள் தங்களின் பெருமைக்காக அவர்களே அந்த வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அண்மையில் லெபனானின் தபெல் நகரில் இஸ்ரேல் ராணுவ சீருடையுடன் வீரர் ஒருவர் இயேசு கிறிஸ்து சிலையை அடித்து உடைத்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அதே தபெல் நகரில் இஸ்ரேலிய வீரர் ஒருவர் கன்னி மரியாளின் சிலையை அவமதிக்கும் வகையில் புகைப்படம் ஒன்று வெளியாகி சர்வதேச அளவில் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலிய வீரர் கன்னி மரியாள் சிலையின் வாயில் சிகரெட்டை வைத்து அவமதிப்பது போன்ற காட்சிகள் அந்தப் புகைப்படத்தில் பதிவாகியுள்ளது. சம்பந்தப்பட்ட…