Author: Editor TN Talks

புதுச்சேரியில் உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு செவிலியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு நிறுவனத்தில் உள்ள மருத்துவமனை கருத்தரங்க கூடத்தில் இன்று உலக செவிலியர் தினம் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. கை விளக்கு ஏந்திய காரிகை என்று அழைக்கப்படும் ஃப்ளோரன்ஸ் நைட்டிங் கேள் அவர்களின் பிறந்த நாளான மே 12ஆம் தேதி உலக செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று நடைபெற்ற செவிலியர் தின விழாவில், சுகாதாரத் துறை இயக்குனர் செவ்வேல், மருத்துவக் கண்காணிப்பாளர் ரமேஷ்,,உதவி செவிலியர் கண்காணிப்பாளர் மதி பக்கிரிசாமி,  தலைமையில் உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஆத்மநாதன் மக்கள் குறை தீர்ப்பு அதிகாரி ரவி முன்னிலையிலும்   செவிலியர்கள் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பிளாரன்ஸ் நைட்டிங்கில் உருவப்படத்திற்கு செவிலியர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர் இதில் இந்திரா காந்தி…

Read More

முதலமைச்சராக பதவியேற்ற உடனேயே பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் முதல்வர் விஜய். பதவியேற்றவுடன், 200 யூனிட் மின்சாரம் இலவசம், பெண்கள் பாதுகாப்புக்கான சிறப்பு அதிரடிப் படை அமைப்பு, போதைப் பொருட்களை ஒழிக்க தனிப்படை என 3 கையெழுத்துகளை இட்டார். இவற்றில் மதுபான ஒழிப்பு குறித்த அறிவிப்புகள் இல்லையே என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், 717 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். வழிபாட்டு தலங்கள் அருகே 500 மீட்டருக்குள் உள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகேயுள்ள 186 கடைகள், பேருந்து, ரயில் நிலையங்கள் அருகேயுள்ள 255 டாஸ்மாக் கடைகள் என மொத்தம் 717 கடைகளை 2 வாரத்திற்குள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மூடப்படும் கடைகளில் பணியாற்றி வந்த ஊழியர்கள் வேறு கடைகளில் பணி அமர்த்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய், கட்சித் தலைவர்களை தேடிச் சென்று சந்தித்தது தமிழ்நாட்டு அரசியல் களத்தில் வியப்புக்குரியதாகி உள்ளது. தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர்  விஜய் மே 11ஆம் தேதி சட்டப்பேரவையில் பெரம்பூர் எம்.எல்.ஏவாகப் பதவியேற்றுக் கொண்டார். இதன்பின்னர் பிற்பகலில் தமிழக அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்கப் புறப்பட்டார். 3.30 மணி அளவில் ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் இல்லத்துக்கு சென்ற முதலமைச்சர் விஜய்யை, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆரத்தழுவி வரவேற்றார். மு.க.ஸ்டாலினும் ஆரத்தழுவிய பின்னர் கைகளைப் பற்றி  வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். இருவரும் மலர்க் கொத்துகளைப் பறிமாறிக் கொண்டனர். அப்போது காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு என்னும் புத்தகத்தை மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் விஜய்க்கு வழங்கினார். இதன்பின்னர், அண்ணாநகரில் உள்ள வைகோ இல்லத்துக்கு சென்ற முதலமைச்சர் விஜய்யை, துரை வைகோ வரவேற்று அழைத்து சென்றார். வைகோ தனது குடும்பத்தினரை விஜய்க்கு அறிமுகப்படுத்தியதோடு அவர்கள் புகைப்படமும்…

Read More

பிரசித்திபெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையை ஒட்டி கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்ற திட்டம் சார்பில் 1008 திருவிளக்கு பூஜை மற்றும் பெண்கள் மாநாடு நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான சித்திரை மாத கடைசி ஞயிற்றுக்கிழமையை ஒட்டி, வழக்கம் போல திருவிளக்கு பூஜை மற்றும் ஆன்மீக சொற்பொழிவு நேற்று இரவு நடைபெற்றது. மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர வளாகத்தில் நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமஙளை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் கூடினர். அங்கிருந்து ஊர்வலமாக சென்ற பெண்கள், முக்கிய வீதிகள் வழியாக சென்று பகவதி அம்மன் கோயிலை வந்தடைந்தனர். அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜை மற்றும் ஆன்மீக சொற்பொழிவினில் பங்கேற்றனர். பின்னர் 6.30 மணியளவில் பகவதி அம்மன் கோயில் வளாகத்தில் 1008 திருவிளக்கு பூஜை…

Read More

அதிமுக சட்டமன்றக் குழு தலைவராக எஸ்.பி.வேலுமணி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் பரவிய நிலையில், எடப்பாடி பழனிசாமியை சட்டமன்ற குழு தலைவராக்க 17 எம்.எல்.ஏக்கள் மனு அளித்துள்ளதால் அதிமுக உடைகிறதா என கேள்வி எழுந்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலாவால் முதலமைச்சராக நியமிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி, பின்னர் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை கூவத்தூர் விடுதியில் தங்க வைத்ததும், அதன்பின்னர் அதிமுகவை கைப்பற்றியதும் நாடறிந்த ஒன்று.  இதில் அவருக்கு இன்னொரு இடைஞ்சலாக இருந்த ஓ.பன்னீர் செல்வத்தையும் பொதுக்குழுக் கூட்டத்தில் வைத்து வெளியேற்றி முழுவதுமாக அதிமுகவைக் கைப்பற்றினார். இந்த களேபர நிகழ்வுகளுக்குப் பின்னணியாக இருந்து எடப்பாடிக்கு ஆதரவாகச் செயல்பட்டவர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், தங்கமணி ஆகியோர்தான் என அதிமுகவினரே கூறியிருந்தனர். கடந்த 2021 தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தாலும் எதிர்க்கட்சி அந்தஸ்துடன் செயல்பட்டு வந்தது. இதனால் எப்படியும் மீண்டும் 2026 தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றும் நம்பிக்கையுடன் களம் அமைத்து செயல்பட்டும் வந்தது. இந்த நிலையில்தான் நடிகர் விஜய்…

Read More

முதலமைச்சர் விஜய், பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தலைவரை இம்மாதம் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி.ஜோசப் விஜய், தமிழகத்தில் புதிய அரசியல் களத்தினை முன்னிறுத்தி வருகிறார். பதவியேற்பு விழாவின்போது மேஜையை நகர்த்த உதவியது, பெரியார் திடலில் தானே பூத்தட்டை கையில் வைத்தபடி பெரியார் சமாதிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியது, தி.க.தலைவர் கி.வீரமணியிடம் இருந்து பூச்செண்டினை வாங்கி கீழே வைத்தது என வெகு இயல்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதேபோல், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக நிறுவனர் வைகோபால்சாமி ஆகியோரை சந்திக்க செல்வது என எதிர்க்கட்சியினரை ஒரு முதலமைச்சரே நேரில் சென்று சந்திக்கும் புதிய வழக்கத்தினையும் தமிழக அரசியல் களத்துக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய், மரியாதை நிமிர்த்தமாக டெல்லிக்கு சென்று பிரதமர், குடியரசுத் தலைவரை  சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…

Read More

முதல் அமைச்சர் விஜய்க்கு உரிய கால அவகாசம் கொடுத்து அதன்பின்னர் மக்கள் பிரச்னைகளை சட்டப்பேரவையில் பேசுவோம் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில்  தேமுதிக இடம்பிடித்து 10 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட பிரேமலதா விஜயகாந்த் மற்றுமே வெற்றி பெற்றார். இன்று சட்டசபைக்கு வருகை தந்த பிரேமலதா முதன்முறையாக எம்.எல்.ஏவாகப் பதவியேற்றுக் கொண்டார். உறுதிமொழி வாசிப்பதற்கு முன்பாக முதலமைச்சர் விஜய்க்கு மகிழ்ச்சியுடன் வணக்கம் செலுத்தியவர், பின்னர் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி உள்ளிட்ட திமுகவினருக்கும் வணக்கம் செலுத்தினார். இதன்பின்னர்  சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, ”தன்னை வெற்றி பெற வைத்த விருத்தாசலம் தொகுதி மக்களுக்கும், கூட்டணி கட்சிதலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். தனது வெற்றியை கேப்டன் விஜயகாந்துக்கு உரித்தாக்குவதாகக் கூறிய அவர், விருத்தாசலம் தொகுதி மக்களுக்கு கொடுத்த வாக்குகளை நிறைவேற்றுவேன், விஜய்க்கு உரிய கால…

Read More

முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை, முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் பிற்பகலில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 107 தொகுதிகளில் வென்ற தமிழக வெற்றிக் கழகம், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக தவெக தலைவர் சி.ஜோசப் விஜய்க்கு ஆளுநர் அர்லேகர்  மே 10ஆம் தேதி காலை பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் தவெகவை சேர்ந்த 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். இதன்பின்னர் விழா மேடையிலேயே இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்குவது, சிங்கப்பெண் அதிரடிப்படை, போதைப் பொருள் ஒழிக்க சிறப்பு காவல்படை என மூன்று அரசாணைகளில் கையெழுத்திட்டார். இதைத் தொடர்ந்து மாலையில் சோழவந்தான் தொகுதி தவெக எம்.எல்.ஏ கருப்பையாவுக்கு தற்காலிக சபாநாயகராக ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இன்று காலை சட்டப்பேரவையில்,  தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள்  தற்காலிக சபாநாயகர் கருப்பையா…

Read More

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்,  தொகுதி மாறி அனுப்பப்பட்ட தபால் வாக்கை மீட்டு, மறு எண்ணிக்கை கோரும் மனு மீது முடிவெடுக்க தேர்தல் அதிகாரிக்கு அதிகாரம் இல்லை என தேர்தல் ஆணையம், சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்கு பதிவான தபால் வாக்கு, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பப்பட்டதால், அந்த வாக்கை மீட்டு மறு எண்ணிக்கை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி, ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளரிடம் தோல்வியடைந்த சிவகங்கை – திருப்பத்தூர் திமுக வேட்பாளர் பெரியகருப்பன் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தேர்தல் ஆணையம் சார்பில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தேர்தல் முடிவுக்கு எதிராக தேர்தல் வழக்கு தான் தாக்கல் செய்ய முடியுமே தவிர, ரிட் வழக்கு தாக்கல் செய்ய முடியாது…

Read More

17-வது சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் பதவியேற்கும் நிகழ்வு இன்று காலை தமிழக சட்டப்பேரவையில் தொடங்கி நடைபெற்றது. தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ள சோழவந்தான் தொகுதி தவெக எம்.எல்.ஏ கருப்பையா முன்னிலையில் இந்தப் பதவியேற்பு நடைபெற்றது. பதவிப் பிரமாண வாக்குறுதி அளித்து ஒவ்வொரு எம்.எல்.ஏவும், பதவியேற்றுக் கொண்டு, அதற்குரிய ஆவணத்தில் கையெழுத்திட்டனர். முதலாவதாக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய், பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏவாக ஜோசப் விஜய் எனும் நான் எனத் தொடங்கி  உளமாற உறுதி கூறினார். அப்போது தவெக எம்.எல்.ஏக்கள் கையைத் தட்டி வாழ்த்து தெரிவித்தனர். அவரைத் தொடர்ந்து அமைச்சர்களாக பொறுப்பேற்ற புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜா, கே.ஏ.செங்கோட்டையன், ராஜ்மோகன் உள்பட 9 பேரும் அடுத்தடுத்து அழைக்கப்பட்டனர். இவர்களில் எம்.எல்.ஏ கீர்த்தனா தனது வெற்றிச் சான்றிதழை எடுத்து வராததால், அவர் பதவியேற்க முடியவில்லை. பின்னர் சான்றிதழை அளித்துவிட்டு பதவியேற்கும்படி சட்டப்பேரவை முதன்மைச் செயலாளர் சீனிவாசன் அறிவுறுத்தினார். இதன் பின்னர்  எதிர்க்கட்சித் தலைவர்…

Read More