Author: Editor TN Talks
முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;- தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முகத் திறமையால் முத்திரை பதித்த திரு. கே. பாக்யராஜ் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன். தனித்துவமான கதையாக்கம், நகைச்சுவை கலந்த நடிப்பு, கிராமிய வாழ்வியல் மற்றும் குடும்ப உறவுகளின் ஆழமான உணர்வுகளை பிரதிபலிக்கும் திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த கே. பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பு தமிழ்த் திரைப்பட உலகிற்கு அளப்பரியதாகும். அவரது ஒவ்வொரு படைப்பும் பொழுதுபோக்கோடு, மனிதநேயம் மற்றும் சமூக விழுமியங்களை பேசும் காலத்தால் அழியாத நினைவுகளாக என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். கே.பாக்யராஜ் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில்…
இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்,வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி;- மூத்த தமிழ் திரைப்பட இயக்குநரும், எழுத்தாளருமான கே. பாக்யராஜ் மறைவு, திரையுலகிற்கு பேரிழப்பாகும். தனித்துவமான கதை சொல்லும் திறன், படைப்பாற்றல் மற்றும் தமிழ் சினிமாவிற்கு அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு, அவரை ரசிகர்களின் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கச் செய்துள்ளது. அவரது திரைப்பயணம் மற்றும் மரபு, பல தலைமுறை திரைப்படக் கலைஞர்களுக்கும், சினிமா ரசிகர்களுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.” – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னோடி இயக்குநரும், சிறந்த நடிகரும், தனித்துவமான திரைக்கதை ஆசிரியரும், எழுத்தாளருமான கே. பாக்யராஜ் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. அண்மையில் திரையுலகில் தனது 50 ஆண்டுகால சாதனைப் பயணத்தை நிறைவு செய்து, திரையுலகினராலும் ரசிகர்களாலும் சிறப்பாகப்…
1980- களின் திரைக்கதை மன்னன் என்று திரையுலகினரால் போற்றப்படும் கே.பாக்யராஜ் 1951 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எழாம் தேதி கோவையில் பிறந்தவர். இவரது தந்தை பெயர் கிருஷ்ணசாமி நாயுடு. தாயார் அமராவதி அம்மாள். 1978-ஆம் ஆண்டு பதினாறு வயதினிலே படத்தை இயக்குனர் பாரதிராஜா இயக்கிய போது, அதில் உதவியாளராக சேர்ந்த பாக்யராஜ். பாரதிராஜாவின் இரண்டாவது படமான ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் கவுண்டமணியுடன் ஒரே ஒரு காட்சியில் தோன்றி நடித்தார். பாரதிராஜாவின் மூன்றாவது படமான ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தில் இரண்டு காட்சிகளில் நடித்தவர், அப்படத்திற்கு வசனமும் எழுதினார். தனது நான்காவது படமான ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் பாக்யராஜை கதாநாயகனாக அறிமுகம் செய்தார் பாரதிராஜா. கதாநாயகனாக வெற்றி பெற்ற பின்னர் சுதாகர், சுமதி நடித்த ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பாக்யராஜ் அதில் ஒரு குணச்சித்திரப் பாத்திரத்திலும் நடித்திருந்தார். பாக்யராஜை இயக்குனராக அறிமுகப் படுத்தியவர் பிரபல தயாரிப்பாளரான…
மறைந்த நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மீது மிகுந்த அன்பும் ஈடுபாடும் கொண்டவராவார். திரைத்துரையில் தனது தனித்துவம் வாய்ந்த திரைக்கதை பாணியாலும், வித்தியாசமான இயக்கம் மற்றும் வசனம் காரணமாகவும் பாக்யராஜின் திறமையை ஆரம்ப காலத்திலேயே எம்.ஜி.ஆர். கவனித்திருந்தார். அதுமட்டுமின்றி பல்வேறு நிகழ்ச்சிகள் அவரைப் பாராட்டி ஊக்கப்படுத்தியதோடு, பாக்யராஜ் நடித்த மற்றும் இயக்கியப் படங்களின் வெற்றிக்கு எம்.ஜி.ஆர் வாழ்த்து தெரிவித்திருப்பதோடு, அவரது விழாக்களிலும் பங்கேற்றுள்ளார். எம்.ஜி.ஆரால் தனது கலைவாரிசாக அறிவிக்கப்பட்ட பெருமைக்குரியவர் நடிகர் பாக்யராஜ் ஆவார். எம்.ஜி.ஆர், பாக்யராஜை மிகவும் அன்புடன் “பாக்கி” என்றுதான் அழைப்பார். பல்வேறு நேர்காணல்களிலும், எம்.ஜி.ஆர். தன்னிடம் மிகுந்த அன்புடன் பழகியதையும், அவரிடமிருந்து ஊக்கமும், பாராட்டும் கிடைத்ததையும் பாக்யராஜ் நினைவு கூர்ந்துள்ளார். எம்.ஜி.ஆர் நடித்து பாதியில் நின்ற ‘அண்ணா நீ என் தெய்வம்’ திரைப்படத்தை, அவர் மறைவுக்குப் பின் பாக்யராஜ் பொறுப்பேற்று முடித்து ‘அவசர போலீஸ் 100’ என்ற பெயரில் வெளியிட்டார். இது எம்.ஜி.ஆர்…
தமிழ்த் திரைப்பட நடிகரும், மிகச் சிறந்த இயக்குநருமான கே.பாக்யராஜ் தனது 73-வது வயதில் மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். தமிழ் திரையுலகில் திரைக்கதை அமைப்பதில் ஒரு தனித்துவமான பாணியை உருவாக்கியவர் கே. பாக்யராஜ். ஒரு இயக்குநராக, நடிகராக, எழுத்தாளராக மற்றும் இசையமைப்பாளராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட இவர், குடும்பப் பாங்கான கதைகளிலும், சமூகத்தைச் சாடும் நையாண்டிகளிலும் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தார். பாக்யராஜ் அவர்களின் மிகப்பெரிய பலம் அவரது திரைக்கதைதான். ஒரு சாதாரண கதையை, சுவாரசியமான திருப்பங்களுடன், நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகள் கலந்து சொல்லும் விதம் ரசிகர்களைக் கட்டிப்போடும். ‘முந்தானை முடிச்சு’, ‘மௌன கீதங்கள்’, ‘தூறல் நின்னு போச்சு’, ‘அந்த 7 நாட்கள்’ போன்ற படங்கள் அவரது படைப்பாற்றலுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள். இன்றும் பல இயக்குநர்களுக்கு அவரது திரைக்கதை அமைக்கும் முறை ஒரு பாடப்புத்தகமாக உள்ளது. இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களுடன் எளிதில் ஒன்றிவிடக்கூடியவர். நகைச்சுவை காட்சிகளில் தனது உடல்மொழியாலும் (Body…
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு நியமனத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டி தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எம்.எல்.ஏ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு;- மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதியாக வெங்கடநாராயணா நியமிக்கப்பட்டிருப்பதை தேமுதிக சார்பில் கடுமையாக கண்டிக்கிறோம். ஏற்கனவே கர்நாடக மாநில முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மற்றும் அங்குள்ள நீர்வளத்துறை அமைச்சர் “எங்கள் மாநில எல்லைக்குள் மேகதாது அணையை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது” என்ற நிலைப்பாட்டை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக தமிழ்நாடு கர்நாடக மாநிலங்களுக்கு இடையே காவேரி நீர் பிரச்சனை நீடித்து வரும் நிலையில், மேகதாது அணை தொடர்பாகவும் தமிழ்நாட்டின் உரிமையை பாதுகாக்கும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்றமும், காவேரி மேலாண்மை தொடர்பான அமைப்புகளும் இந்த விவகாரத்தில் சட்ட மற்றும் நிர்வாக வழிகாட்டுதல்களை வழங்கியுள்ள நிலையிலும், கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியில் உறுதியாக இருப்பதாக தொடர்ந்து…
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே வலசை- மணக்குளம் கிராமங்களுக்கு இடையேஉள்ள அய்யனார், தர்ம முனீஸ்வரர் கோயில் வளாக சுற்றுச்சுவர் எடுக்க குழி தோண்டியபோது, முதுமக்கள் தாழிகள் வெளிப்பட்டுள்ளன. இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் ராஜகுரு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் கோயில் அருகில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் தாழிகள் புதைந்துள்ளன. சுற்றுச்சுவர் எடுக்கத் தோண்டியபோது வெளிப்பட்ட ஒரு தாழிக்குள் 3 குவளைகள், தட்டு, கிண்ணம், கும்பா, சிறிய பானை ஆகியவை இருந்துள்ளன. இவை கறுப்பு சிவப்பு, சிவப்பு நிறமுடையன. 2018-ல் கோயிலின் தெற்கில் குளம் தோண்டியபோது முதுமக்கள் தாழிகள் வெளிவந்த பகுதியில் ஆய்வு செய்தபோது உடைந்த சுடுமண் தாங்கிகள், மூடிகளில் குறியீடுகள் இருந்தன. பெருக்கல் குறி, தலைகீழ் சூலம், ஏணி ஆகிய குறியீடுகள் மூன்று சிவப்பு நிற ஓடுகளிலும், ஏழு கறுப்பு சிவப்பு ஓடுகளிலும் உள்ளன. கி.மு.4000 முதல் கி.மு.1500 வரையிலான பெருங்கற்காலத்தின் ஆரம்பத்தில் இறந்தவர்களின் உடலை…
தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக முதலமைச்சர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளரும், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவருமான வெங்கடநாராயணா நியமிக்கப்பட்டுள்ளார். இதனை அரசியல் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். இது தொடர்பாக திமுக துணைப் பொதுச்செயலாளரும் தூத்துக்குடி எம்.பியுமான கனிமொழி வெளியிட்டுள்ள பதிவில் இரண்டு கேள்விகள் எழுவதாகத் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக டெல்லியில் ஒலிக்க வேண்டிய அரசு பொறுப்பில், ஒரு அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகவைச் சேர்ந்த ஒருவரை அமர்த்தியுள்ளது தவெக அரசு. தவெகவில் அப்பொறுப்புக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் கூட தகுதியானவர் இல்லையா? மேகதாது அணைக் கட்டும் விவகாரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் உரிமை சார்ந்த பிரச்சனைகளில், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நபர் தமிழ்நாட்டின் பிரதிநிதியாக செயல்படுவாரா? அல்லது அவரது சொந்த மாநிலமான கர்நாடகாவின் பிரதிநிதியாக செயல்படுவாரா? என கனிமொழி எம்பி வினா எழுப்பியுள்ளார்.
தோல்வியடைந்த மனநிலையில் இருக்கும் ஆ.ராசா, திமுகவை பாஜக பாதையில் இழுத்துச் செல்வதாக அமைச்சர் வன்னியரசு விமர்சித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகை தந்த சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசுக்கு ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் சீ.ம. ரமேஷ் கர்ணா, வாலாஜாபேட்டையில் உள்ள சுங்க சாவடியில் சிறப்பான வரவேற்பு அளித்தார் இதனைத் தொடர்ந்து ராணிப்பேட்டை அருகே உள்ள சுற்றுலா மாளிகையில் அமைச்சர் வன்னியரசு செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டார் அப்போது, தூய்மைப் பணியாளர்களை தனியார் மயமாக்கும் போக்கினை தமிழக அரசு கைவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்த நிலையில் தமிழக முதல்வர் அதனை ரத்து செய்து இருப்பதை மிகவும் வரவேற்பதாகவும் மேலும் திருமாவளவன் தூய்மைப் பணியாளர்களுக்காக கொடுத்த அறிக்கையில் காரணமாகவே தவெக சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா திருமாவளவனுக்கு எதிராக கண்டனத்தை தெரிவித்து இருந்ததாக தெரிவித்தார். திருமாவளவன் கொடுத்த ஆக்கபூர்வமான அறிக்கையை தமிழக முதல்வர் ஏற்றுக்கொண்டு இருப்பதால் தாவெக சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா விமர்சனத்தை புறக்கணிப்பதாக தெரிவித்த…
அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கு, அங்குள்ள ஆடுகள நிலை மற்றும் சூழலுக்கு விரைவாக தங்களை மாற்றிக்கொள்ள முடியாததே முக்கிய காரணம் என்று இந்திய தொடக்க வீரர் அபிஷேக் சர்மா தெரிவித்தார். தொடர்ச்சியாக போட்டிகள் நடைபெறும் நெருக்கடியான அட்டவணையில், குறைந்த பயிற்சி நேரத்திலேயே மைதான சூழலுக்கு விரைவாக ஏற்படுவது மிகவும் முக்கியம் என்றும் அவர் கூறினார். பெல்ஃபாஸ்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் டி20 போட்டியில், அயர்லாந்து 34 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்தது. டி20 உலக சாம்பியனான இந்தியாவை எந்த வடிவிலான கிரிக்கெட்டிலும் முதன்முறையாக அயர்லாந்து வென்றது இதுவே முதல் முறை. போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அபிஷேக் சர்மா, “ஒரு அணியாக நாம் எவ்வளவு விரைவாக ஆடுகள நிலைக்கு ஏற்ப மாறுகிறோம் என்பதுதான் முக்கியம். தொடர்ந்து போட்டிகள் நடைபெறும்போது, கிடைக்கும் குறுகிய பயிற்சி நேரத்திலேயே சூழலை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப…