Author: Editor TN Talks
பொது இடத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியதுபோல் வீடியோ வெளியிட்ட த.வெ.க. அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி திமுக மாணவர் அணி சார்பில் நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது;- இளைஞர்களையும் சமுதாயத்தையும் சீரழிக்கும் போதைப் பொருட்கள் பயன்பாட்டைத் தடுத்து நிறுத்துவதோடு, அதற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது சமூகப் பொறுப்புள்ள ஒவ்வொருவரின் கடமை. ஆனால், ஆளும் த.வெ.க. அரசில் இடம்பெற்றுள்ள மாண்புமிகு அமைச்சர்களின் செயல்பாடுகள் அவ்வாறானதாக இல்லை. குறிப்பாக, மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் டி.சரத்குமார், போதைப் பொருளைப் பயன்படுத்துவது போன்ற வீடியோ ஒன்று, போதைப்பொருள் ஒழிப்பு நாளன்று வெளியாகி சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அமைச்சரும் அதற்கு விளக்கமளிக்கிறேன் பேர்வழி என்று, த.வெ.க.வின் பாரம்பரியப்படி, குழந்தைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு அரசியல் செய்வதாகவே தோன்றுகிறது. அவர் போதைப் பொருள் பயன்படுத்தினாரா இல்லையா என்று அவரைக் காக்க பட்டிமன்றம் நடத்துவதைவிட, பொதுவெளியில் போதைப்…
முதலமைச்சர் ஜோசப் விஜய் குதிரைப்பேரத்தில் ஈடுபடுவதை வைகோவின் பேட்டி அம்பலப்படுத்தியிடுப்பதாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரை குற்றம்சாட்டியுள்ளார். அண்மையில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, செய்தியாளர்களிடம் பேசியபோது, சென்னை கோட்டையில், தான் முதலமைச்சர் விஜய்யை சந்தித்தபோது அவர் கூறியதாக தெரிவித்தது குதிரைப்பேரத்துக்கான ஆதாரம் என அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரை தெரிவித்துள்ளார். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற இரண்டு மதிமுக எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்யச் சொல்லி, தவெக-வில் இணையுமாறு தமிழ்நாடு முதலமைச்சர், தன்னிடம் பேசியதாக வைகோ வெளிப்படையாகவே பேட்டியளித்துள்ளார். இது அப்பட்டமான குதிரைப் பேரம் அல்லவா? என இன்பதுரை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், தமிழகத்தில் தவெக அரசு நடத்திவரும் குதிரைப் பேர அரசியலை நிரூபிக்க – வைகோ அளித்துள்ள இந்த ஒப்புதல் வாக்குமூல பேட்டி ஒன்று போதாதா என வினா எழுப்பியுள்ளார்.
விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் கொண்டாட வேண்டும் என்றும், உள்ளூர் கைவினைக் கலைஞர்கள் தயாரிக்கும் களிமண் விநாயகர் சிலைகளையே வாங்க வேண்டும் என்றும், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (PoP) சிலைகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியின் 135-வது அத்தியாயத்தில் நாட்டுமக்களிடம் உரையாற்றிய பிரதமர், இந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, சிலை தயாரிப்பாளர்களும் களிமண் சிலைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். “உங்கள் வீடு, குடியிருப்பு அல்லது பகுதியிலுள்ள விநாயகர் சிலை, நம் நாட்டின் மண்ணால், நம் குயவர்கள் மற்றும் உள்ளூர் கைவினைக் கலைஞர்களின் கைகளால் உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்யுங்கள்,” என்று பிரதமர் மோடி கூறினார். விநாயகர் சதுர்த்தி குறித்து பேசுமாறு பலர் தனக்கு கடிதம் எழுதியிருந்ததாக குறிப்பிட்ட அவர், சிலைகளை வாங்கும்போது அவை…
கிழக்கு ஆப்பிரிக்க தீவு நாடான செஷெல்ஸுக்கு மூன்று நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் பாட்ரிக் ஹெர்மினியுடன் ஞாயிற்றுக்கிழமை உயர்மட்ட பிரதிநிதிகள் அளவிலான பேச்சுவார்த்தை நடத்தினார். விக்டோரியாவில் உள்ள ஸ்டேட் ஹவுஸ் மாளிகையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், இந்தியா – செஷெல்ஸ் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இந்திய தரப்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். செஷெல்ஸ் தரப்பில் துணை அதிபர் செபாஸ்டியன் பிள்ளை, மீன்வளம், வேளாண்மை மற்றும் நீலப் பொருளாதாரத் துறை அமைச்சர் வாலஸ் காஸ்க்ரோ, வெளியுறவுத்துறை அமைச்சர் பாரி ஃபோரே, நிதி அமைச்சர் பியர் லாபோர்ட் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றனர். இதற்கு…
திரைப்பட இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜின் இறுதி ஊர்வலம் மரியாதையுடனும், கண்ணியத்துடனும் நடைபெற உதவிய தமிழ்நாடு அரசுக்கும் காவல் துறைக்கும் கே.பாக்யராஜ் குடும்பத்தினர் சார்பில் நடிகர் சரத்குமார் நன்றி தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழ் மக்களின் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கும், தமிழ்த் திரையுலகின் ஒப்பற்ற சாதனையாளரும், இந்தியாவின் இணையற்ற “திரைக்கதை மன்னன்” அன்பு நண்பர் K. பாக்யராஜ் அவர்களின் இறுதி ஊர்வலம் மிகுந்த மரியாதையுடனும், கண்ணியத்துடனும் நடைபெற சிறப்பான ஏற்பாடுகளையும் அனுமதியையும் வழங்கிய தமிழக அரசுக்கும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், உறுதுணையாக இருந்த அமைச்சர் பெருமக்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், ஆரம்பம் முதல் இறுதிவரை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு, மதிப்புமிக்க நிகழ்வாக நடத்திய தமிழ்நாடு காவல்துறையினருக்கும் பாக்யராஜ் குடும்பத்தினர், பார்த்திபன் மற்றும் தனது குடும்பத்தினர் சார்பில் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு லஞ்சம் ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குநர் ஏ.அருணின் செயல்பாடுகள் முதலமைச்சருக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாக யூடியூபர் சவுக்கு சங்கர் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகமுதல்வர்விஜய்கண்டெடுத்ததங்கம்செய்தவேலைஎனக் கூறி அவர் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், அருண்லஞ்சஒழிப்புத்துறைக்குபொருத்தமானவர்இல்லைஎன்றுமிகப்பெரியஎதிர்ப்புஅலைகிளம்பியது. ஆனால்இன்னமும்லஞ்சஒழிப்புத்துறைஇயக்குனராகவேதொடகிறார். அந்ததங்கம்செய்தவேலைஎன்னஎன்பதைபார்ப்போம்என கூறி ஒரு நிகழ்வினை குறிப்பிட்டுள்ளார். 1999இல் பணியில் சேர்ந்த உதவி ஆய்வாளர் ராஜலட்சுமி என்பவரின் முழுநேர வேலையே வசூல்தான் எனவும்பலபிரிவுகள் மாறிவிபச்சாரதடுப்புபிரிவுக்கு வந்தவரின், மாதமாமூல் 50 லட்சம். இதில் 30 லட்சம்மாதம்தோறும்அருணுக்குசென்றது. இத்தொகையைமாதம்தோறும்வாங்கிஅருணிடம்தந்தவர்அருணின்முகாம்உதவியாளர்ஐயப்பன்எனவும் தெரிவித்துள்ளார். மேலும் வசூலில் கொடிகட்டி பறந்த ராஜலட்சுமி மீது, 2026 பிப்ரவரியில் லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் விமலா என்பவர் சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்ததோடு, ராஜலட்சுமிவீட்டில் சோதனை நடத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார். இந்த சூழலில், முதல்வர்விஜய்கண்டெடுத்ததங்கம் (அருண்) லஞ்சஒழிப்புத்துறைக்குநியமிக்கப்படுவதாகவும், ஒருசிலநாட்கள் பொறுமையாக இருந்தஅந்ததங்கம்ராஜலட்சுமிமீதுசொத்துக்குவிப்புவழக்கைபதிவுசெய்தஆய்வாளர் விமலாவை சஸ்பெண்ட்செய்ததோடு, ஜாய்தயாள்என்ற DSPயைஊட்டிக்குமாற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளார். நேர்மையானஅதிகாரியானவிமலா, சென்னைஉயர்நீதிமன்றத்தைஅணுகிதனக்குநேர்ந்தஅநீதியைமுறையிட்டார். சென்னைஉயர்நீதிமன்றம், விமலாவின்பணிஇடைநீக்கத்தை “உள்நோக்கம்கொண்டது” என்றுகூறிதடைசெய்திருப்பதாகவும்…
தஞ்சாவூர் ஒரத்தநாட்டில் தஞ்சை மத்திய மாவட்ட அயலக அணி தலைவர் க.முத்தமிழ்ச்செல்வனின் மகன் மலரவன் – காவ்யாஸ் திருமண விழா நடைபெற்றது. இத்திருமணவிழாவில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ஷோபா மாடல் ஆட்சியின் போலிப் பிம்பம் கடந்த ஒரு மாதத்தில் அடித்து துவைக்கப்பட்டு கிடக்கிறது. ஒவ்வொரு நாளும் இந்த ஆட்சியின் அவலங்களை மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இந்த ஆட்சியின் சறுக்கல்களை, தவறுகளை இளைஞர்கள் இன்று தட்டிக் கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள். அவ்வாறு தட்டிக் கேட்கும் இளைஞர்களை, திமுகவினரை இந்த சோபா மாடல் ஆட்சி கைது செய்யத் தொடங்கி இருக்கிறார்கள். தூயசக்தி எனக் கூறிவிட்டு ஆட்சிக்கு வந்தவர்கள், ஆட்சிக்கு வந்த ஐந்தாவது நிமிடத்திலேயே குதிரைபேரத்தை தொடங்கி விட்டனர். சோபா போகும், பின்னாடியே முதலமைச்சர் போவார், அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு அவருக்குப் பின்னால் போகக் கூடிய காட்சிகள்தான் இந்த ஒரு மாதத்தில் ரிப்பீட்…
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் வீட்டின் அருகே விளையாட சென்ற சிறுவன் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கருக்காகுறிச்சி கிழக்கு திருமுருகப்பட்டணம் கிராமத்தைச் சேர்ந்த பாலாஜியின் 9 வயது மகன், திருமேனிநாதன் என்கிற கருப்பன்ஜி அங்குள்ள பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். சனிக்கிழமை அன்று, பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்த திருமேனிநாதன் மாலை வீட்டிற்கு பின்னால் விளையாடச் சென்றுள்ளார். இரவு நேரமாகியும் சிறுவன் வீடு திரும்பாததால், பெற்றோர் அவனைத் தேடியபோது, வீட்டிற்கு எதிரே உள்ள தண்ணீர் இல்லாத குளத்தில் கழுத்தில் காயங்களுடன் சிறுவன் திருமேனிநாதன் சடலமாக கிடந்ததைப் பார்த்து அலறித்துடித்துள்ளனர். இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வடகாடு போலீசார் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்த சிறுவனின் உடலை கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு…
திடீர் மாரடைப்பால காலமான இயக்குநர் கே.பாக்யராஜின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. தமிழ்த் திரையுலகில் இயக்குநராக, நடிகராக கோலோச்சியவர் கே.பாக்யராஜ். திரைக்கதை அமைக்கும் இவரது தனித்துவ பாணியினால், இவர் திரைக்கதை மன்னன் என்று கொண்டாடப்பட்டார். அண்மையில் மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் தலைசிறந்த சீடராக இருந்து, அவரால் மிகவும் பாராட்டப்பட்டவர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் தனது கலையுலக வாரிசு என புகழப்பட்டவர் பாக்யராஜ். நேற்று (ஜூன் 27) காலை நடைபயிற்சி சென்றவர், திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். பாக்யராஜின் திடீர் மரணம் குடும்பத்தினரையும் திரைத்துறையினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. முதலமைச்சர் ஜோசப் விஜய் உள்பட திரைத்துறையினர் அனைவரும் நேரில் வந்து பாக்யராஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இன்னும் ஏராளமானோர் வீடியோ வெளியிட்டு தங்களது இரங்கலைத் தெரிவித்தனர். திரைத்துறையில் அவர் புரிந்த சாதனையை கவுரவிக்கும் வகையில் பாக்யராஜ் உடலுக்கு அரசுதரப்பில் இறுதி மரியாதை செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பாக்யராஜின் உடல் இன்று…
2026 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் குரூப் ‘ஜே’ பிரிவில் நடைபெற்ற அல்ஜீரியா – ஆஸ்திரியா அணிகளுக்கு இடையிலான கடைசி லீக் போட்டி ரசிகர்களுக்கு விறுவிறுப்பான விருந்தாக அமைந்தது. இரு அணிகளும் 3-3 என்ற கோல் கணக்கில் டிரா செய்த நிலையில், இரு அணிகளும் நாக் அவுட் (ரவுண்ட் ஆஃப் 32) சுற்றுக்கு முன்னேறின. இதன் மூலம் ஈரான் அணியின் அடுத்த சுற்று கனவு முடிவுக்கு வந்தது. இரு அணிகளுக்கும் டிரா போதுமானது என்பதால், போட்டியின் தொடக்கத்தில் இரு அணிகளும் எச்சரிக்கையுடன் ஆடின. முதல் 20 நிமிடங்களில் கோல் கீப்பர்களுக்கு பெரிய சவால் எதுவும் ஏற்படவில்லை. முதல் குடிநீர் இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் சூடுபிடித்தது. ஆஸ்திரியா கேப்டன் டேவிட் அலாபா துல்லியமான நீண்ட பாஸ் ஒன்றை வழங்க, அதை பயன்படுத்திக் கொண்ட மார்கோ அர்னாவுடோவிச் கோல் அடித்து ஆஸ்திரியாவுக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். இதற்கு பதிலடி கொடுத்த அல்ஜீரியா, தொடர்ந்து…