Author: Editor TN Talks

நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம் இன்று சொன்னது போல் வெளியாகாமல் போனதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகரான சூர்யா ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் கருப்பு படத்தில் நடித்து முடித்துள்ளார். சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படத்தில் திரிஷா நாயகியாக நடித்துள்ளார். சுவாசிகா, இந்திரன்ஸ், யோகிபாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி, மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் நடித்துள்ள இப்படம் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், படம் வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இப்படத்திற்கான சிறப்பு காட்சிகளை இன்று காலை திரையிட தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியது. இன்று காலை 9 மணிக்கு திரையிடப்பட இருந்த காட்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தவிர்க்க முடியாத காரணங்களால் ‘கருப்பு’ திரைப்படத்தின் காலை 9 மணி சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. இதனால்…

Read More

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய மு.க.ஸ்டாலின், ”என்ன ஆனாலும் சரி, சூரியன் ஒருபோதும் மறையாது. திரும்ப உதித்தே தீரும். சூரியன் இல்லாமல் எதுவும் நடக்காது. இது இயற்கை நியதி மட்டுமில்ல, தமிழ்நாட்டு அரசியல் நியதியும் இதுதான். நடந்து முடிந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இப்ப அமைதிருக்கும் அரசும், கூட்டணிக் கட்சிகளோட தயவாலதான் ஆட்சியை அமைச்சிருக்கு. அதுவும் நம்ம கூட சேர்ந்து வெற்றி பெற்றவர்களின் ஆதரவோடதான் ஆட்சி அமைஞ்சிருக்கு. நமக்கு பெரும்பான்மை கிடைக்கலயே தவிர, கணிசமான எண்ணிக்கையில வாக்குகள் கிடைச்சிருக்கு. கொஞ்சம் வரலாற்றை திரும்பிப் பார்த்தால் 1989-ல நாம ஆட்சி அமைச்சோம். அடுத்து நடைபெற்ற 1991 தேர்தலில் வெறும் இரண்டு இடங்களில் மட்டுமே ஜெயிச்சோம்….96 ல மீண்டும் நம்ம ஆட்சி ஆனா அடுத்து வந்த 2001 தேர்தலில் நாம வென்ற இடங்கள் 37…

Read More

மயிலாடுதுறை அருகே வரகடை கிராமத்தில் உள்ள ஸ்ரீ அன்னபூரணி அம்பாள் சமேத ஶ்ரீ வைத்தியநாத சுவாமி என்கிற ஸ்ரீ வருந்தீஸ்வரர் கோயில் 14 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது; திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் தாழஞ்சேரி ஊராட்சி வரகடை கிராமத்தில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ அன்னபூரணி அம்பாள் சமேத ஶ்ரீ வைத்தியநாத சுவாமி என்கிற ஸ்ரீ வருந்தீஸ்வரர் கோயில் இன்று கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. 14 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோயில் பழமை மாறாமல் புனரமைக்கப்பட்டு கோவிலின் முன்பு யாகசாலை அமைத்து புனித நீர் அடங்கிய கடங்கள் வைத்து கடந்த 12 ஆம் தேதி முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. இதனை நான்கு கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து பூரணாஹூதி செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மேலதாள வாக்கியங்கள் மற்றும் செண்டை மேளம் முழங்க சிவாச்சாரியார்கள்…

Read More

உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்தாண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 06-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் காலை, மாலை என இருவேளைகளிலும் கற்பக விருட்சகம், யாளி, கருட, ஹனுமந்த, யானை ஆகிய வாகனங்களில் வீதியுலா வந்தார். தொடந்து ஏழாம் திருநாளான இம்மாதம் 24.04.2025ம் தேதி நம்பெருமாள் திருச்சிவிகை வாகனத்தில் புறப்பட்டு  நெல்லளவு கண்டருளினார். அதன் பின்னர் சித்திரை வீதிகளில் வலம் வந்த அவர் தயார் சன்னதி சென்றடைந்தார். அங்கு திருமஞ்சம் கண்டருளிய அவர் மீண்டும் மூலஸ்தானம் வந்தடைந்தார்.  எட்டாம் திருநாளான நேற்று(13 05 2826)அவர் தங்ககுதிரை வாகனத்தில் சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஒன்பதாம் திருநாளான இன்று அதிகாலை, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து சீர் வரிசையாக வந்த கிளிமாலையை அணிந்த படி மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட நம்;பெருமாள் மேஷ லக்கனப்படி…

Read More

அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசைஞானி இளையராஜா கால்பதித்து இன்றோடு 50 ஆண்டுகள் ஆகிறது.  இளையராஜாவின்  வாழ்க்கை, இசை, சாதனைகள் குறித்த 50 சுவாரஸ்யமான தகவல்கள் உங்களுக்காக ராசய்யா டூ ராஜா இளையராஜாவின் இயற்பெயர் “ஞானதேசிகன்” என்பதாகும். பள்ளிக்குச் சேர்க்கும்போது அவரது தந்தை அதை ‘டேனியல் ராசப்பா’ என மாற்றினார். கிராமத்தினர் அவரை ‘ராசய்யா’ என்று அழைத்தனர். தேனி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பண்ணைப்புரம் கிராமத்தில் ராசய்யா பிறந்தார். குடும்ப வறுமை காரணமாக ராசய்யா 8-ஆம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்தது. 1958-இல் அவரது அண்ணன் பாவலர் வரதராஜனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டபோது, தாயார் சின்னத்தாயின் அறிவுறுத்தலால் இளையராஜா முதன்முதலாக மேடையில் பாடினார். தனது அண்ணன்களுடன் இணைந்து ‘பாவலர் சகோதரர்கள்’ என்ற குழுவை உருவாக்கிய இளையராஜா, இந்தியா முழுவதும் 20,000-க்கும் மேற்பட்ட மேடைக் கச்சேரிகள் மற்றும் நாடகங்களில் வாசித்துள்ளார். கர்நாடக இசையை குரு தட்சிணாமூர்த்தி…

Read More

21 வயதுக்கு கீழே உள்ளவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என  டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது. புதிய அரசு பொறுப்பேற்றதும் டாஸ்மாக் கடைகளை முறைப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கல்வி நிலையங்கள் வழிபாட்டுத் தலங்கள் பேருந்து நிலையங்கள் அருகே இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என முதலமைச்சர் உத்தரவிட்டார். இந்த நிலையில் 21 வயது பூர்த்தி அடையாதவர்களுக்கு மதுபானங்கள் விற்கவோ வழங்கவோ கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் கடைக்கு வரும் வாடிக்கையாளரின் வயதில் சந்தேகம் ஏற்பட்டால் வயதிற்கான ஆதாரமான ஆதார் கார்டு, ஓட்டுனர் உரிமம் போன்ற ஏதேனும் உரிய ஆவணங்களை சரிபார்த்து மதுபானங்கள் விற்பனை செய்யப்பட வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. 21 வயதிற்கு கீழ் உள்ள வாடிக்கையாளருக்கு மதுபானங்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read More

Clean Politics-னு சொல்லி ஆட்சிக்கு வந்தவங்க, Dirty Politics பண்ணிட்டிருக்காங்க என தவெகவுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் பதிவிட்டிருப்பது இப்போது அவருக்கு எதிரான பூமராங்காகி உள்ளது. தி.மு.க. தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமையவோ, தொடரவோ திராவிட முன்னேற்றக் கழகம் தடையாக இருக்காது. குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில திமுக கூட்டணிக் கட்சிகள் நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ள நிலைப்பாட்டை மதிக்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளதோடு, Clean Politics-னு சொல்லி ஆட்சிக்கு வந்தவங்க, Dirty Politics பண்ணிட்டிருக்காங்க என தவெகவை விமர்சித்திருக்கிறார். தவெக ஆட்சி நிலைக்கத் தேவையான எண்ணிக்கையை தங்களது தோழமைக் கட்சிகள் வழங்கியுள்ளபோதும்,  பிளவுபட்ட அ.தி.மு.க. எனும் குழம்பிய குட்டையில மீன் பிடிக்க முயற்சி பண்ணி, அவங்க உறுப்பினர்களை விலைக்கு வாங்கியிருக்காங்க எனக் குற்றம்சாட்டியுள்ளார். “உங்களோட Starting-ஏ இப்படி இருந்தா Finishing எப்படி இருக்கும்?…

Read More

பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேர் திருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதனையொட்டி நம்பெருமான் தினமும் காலை, மாலை வேளைகளில் சிறப்பு அலங்காரத்தில் ஒவ்வொரு வாகனத்தில் வீதியுலா வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அந்த வகையில், விழாவின் 8-ம் நாளான இன்று, காலை நம்பெருமாள், கண்ணாடி அறையில் இருந்து வெள்ளி குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் ரங்கவிலாச மண்டபத்தை அடைந்தார். இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாலை 6.30 மணியளவில் ரெங்கவிலாச மண்டபத்தில் தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு, சித்திரை வீதிகளில் வலம் வந்து வையாளி கண்டருளி இரவு 9 மணியளவில் கண்ணாடி அறையை அடைகிறார். இன்று காலையில் நடைபெற்ற வாகன சேவையை முன்னிட்டு விஸ்வரூப சேவை ரத்து செய்யப்பட்டது.

Read More

மத்திய கிழக்கில் நிலவி வரும் போரால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது. இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை விரைவில் உயர்த்தப்படும் என கூறப்படுகிறது. அதேவேளை கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால், இறக்குமதிக்கான இந்தியா அந்நிய செலவாணி செலவிடும் அளவு அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டின் அந்நிய செலவாணி கையிருப்பு குறைந்து, ரூபாயின் மதிப்பு தொடர் சரிவை சந்தித்து வருகிறது. இதற்கிடைஇயில் கடந்த 10ம் தேதி தெலுங்கானாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ரிபொருள் நுகர்வை மிச்சப்படுத்த மக்கள் முன்வர வேண்டும் என்று அறிவுறுத்தினார். கொரோனா காலத்தை போன்றே வீட்டில் இருந்தே வேலை செய்வது, ஆன்லைன் மீட்டிங், வீடியோ கான்பிரஸ் போன்ற முறைகளை மக்கள் மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை ஊக்குவிக்க வேண்டும் என்றும் கூறினார். குறிப்பாக, ஓராண்டுக்கு திருமணத்திற்கு தங்கம் வாங்குவதை…

Read More

புதுச்சேரி முதலமைச்சரான என்.ரங்கசாமி இன்று காலை மீண்டும் பதவி ஏற்கிறார். அவருக்கு துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ் நாதன் பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறாா். 30 உறுப்பினா்களைக் கொண்ட புதுச்சேரி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 18 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. என்.ஆா்.காங்கிரஸ் 12, பாஜக 4, அதிமுக1, லட்சிய ஜனநாயகக் கட்சி 1 இடங்களைக் கைப்பற்றியது. முதலமைச்சர் ரங்கசாமி வெற்றி பெற்றுள்ள தட்டாஞ்சாவடி, மங்கலம் ஆகிய இரண்டு தொகுதிகளில் ஒன்றினை அவா் ராஜினாமா செய்கிறார். என்.ஆர்.ரங்கசாமி தலைமையிலான புதிய அரசின் பதவியேற்புவிழா இன்று காலை 9.47 மணிக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநா் மாளிகையில் நடைபெறுகிறது. முதலமைச்சர் மற்றும் மற்றும் சில அமைச்சா்களுக்கு துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறாா். பதவியேற்பு விழாவில் பாஜக தேசியத் தலைவா் நிதின்…

Read More