தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக போராட்டத்தில் முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா தொடர்பாக அவதூறாகப் பேசிய புகாரின்பேரில், உதயநிதி ஸ்டாலினை தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலைய போலீசார் சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் வைத்து கைது செய்து, அவரை காவல் துறை வாகனத்தில் தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்கின்றனர்.
இந்த நிலையில் உதயநீதி ஸ்டாலின் மீது என்னென்ன பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து காவல் துறை தெரிவித்துள்ளது.
196 bns பகைமையை தூண்டுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல்
192 bns கலவரத்தை தூண்டுதல்
352 bns பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் ஒருவரை வேண்டுமென்று அவமதித்தல்
79 bns பெண்ணின் கண்ணியத்திற்கு அல்லது மானத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசுதல்
296(b) bns பொது இடத்தில் அருவருப்பாக பேசுதல்
61 bns இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் இணைந்து சட்டவிரோத செயலை செய்ய திட்டமிடுதல்
351 bns ஒருவருக்கு மிரட்டல் விடுவது
தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை சட்டம் பிரிவு 4 மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 67
ஆகிய பிரிவுகளில் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
