Close Menu
    What's Hot

    பெண்கள் குறித்து கண்ணியக்குறைவான பேச்சு… உதயநிதிக்கு பெண்களே தக்க பதிலை வழங்குவார்கள் – அமைச்சர் கீர்த்தனா

    “ஆணவத்தை சாம்பலாக்கும் சுயமரியாதை தீ”!! உதயநிதி பேச்சுக்கு அமைச்சர் ரமேஷ் கண்டனம்..!!

    உதயநிதி கைது விவகாரம் தீவிரம்.. தடை கோரி நீதிமன்றத்தை நாடிய திமுக..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»த்ரிஷா குறித்து இரட்டை அர்த்தப் பேச்சு… உதயநிதியை கைது செய்யத் திட்டமா?… வீட்டை முற்றுகையிட்டுள்ள காவல் துறை…
    Featured

    த்ரிஷா குறித்து இரட்டை அர்த்தப் பேச்சு… உதயநிதியை கைது செய்யத் திட்டமா?… வீட்டை முற்றுகையிட்டுள்ள காவல் துறை…

    Editor TN TalksBy Editor TN TalksAugust 4, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    001 uthay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் நடிகை த்ரிஷாவைத் தொடர்பு படுத்தி இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக பேசியதாகக் கூறி  எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள  உதயநிதியின் வீட்டில் போலீசார் சூழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தஞ்சாவூர் நகரில் உள்ள பனகல் கட்டிடம் அருகே காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாகத் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், தமிழக முதலமைச்சரைப் பற்றியும் பெண்களைப் பற்றியும் நாகரிகமற்ற முறையில் ஆபாசமாகப் பேசியதாகத் தமிழக வெற்றிக் கழகத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

    குறிப்பாக, இந்த ஆர்ப்பாட்ட உரையின் போது கூட்டத்தில் இருந்தவர்கள் எழுப்பிய கோஷங்களுக்குப் பதிலளிப்பதாகக் கூறி, நடிகை த்ரிஷாவின் பெயரைச் சுட்டிக்காட்டி பாலியல் ரீதியாகவும் பெண்மையைக் கொச்சைப்படுத்தும் வகையிலும் உட்பொருளோடு பேசியதாகப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த உரையாடல் அடங்கிய 2 நிமிடம் 39 வினாடிகள் கொண்ட வீடியோவை திமுக ஐடி விங் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுப் பரப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக, தஞ்சாவூர் மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பைரவி தலைமையில் தவெக நிர்வாகிகள் தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளரிடம் நேரில் சென்று புகார் மனுவை அளித்துள்ளனர். அதில் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசிய உதயநிதி ஸ்டாலின் மற்றும் அந்த வீடியோவைப் பரப்பிய திமுக ஐடி விங் நிர்வாகிகள் மீது உடனடியாகச் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.

    001 uthay A

    இந்த நிலையில் இந்தப் புகார் தொடர்பாக தஞ்சாவூர் கிழக்கு போலீசார் சென்னை நீலாங்கரையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வீட்டுக்கு விசாரணைக்கு வந்துள்ளனர். அவர்கள் உதயநிதியை காவல் துறை விசாரணைக்கு வருமாறு அழைப்பாணை கொடுப்பதற்காக வந்ததாகவும், அவரை கைது செய்து அழைத்துச் செல்ல வந்ததாகவும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    தஞ்சாவூர் போலீசாருக்கு உதவியாக, சென்னை நீலாங்கரை காவல் இணை ஆணையர் விஜயகுமார் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய உள்ளதாக தகவல் பரவியதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு, சென்னை மாநகராட்சி மண்டலக்குழு தலைவர் மதியழகன் உள்பட திமுகவினர் அங்கு கூடியுள்ளனர்.

    உதயநிதியின் வீட்டுக்கு செல்லும் பாதையில் பேரிகார்டு வைத்து போலீசார் மறைத்துள்ளதால் திமுகவினர் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அத்துமீறி நுழைந்து சென்றுள்ளனர்.

    இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

    Controversy Police Security Tamil Nadu Politics Trisha Udhayanidhi Stalin
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகேரளாவில் கொட்டித்தீர்க்கும் கனமழை!. கண்முன்னே உள்வாங்கிய கிணறு!. இடிந்து விழும் நிலையில் வீடு!
    Next Article அப்பாவுக்கு பதவி உயர்வா? அனிதா ராதாகிருஷ்ணனுடன் மோதலா? திமுகவில் அடுத்த கட்ட நகர்வு!
    Editor TN Talks

    Related Posts

    பெண்கள் குறித்து கண்ணியக்குறைவான பேச்சு… உதயநிதிக்கு பெண்களே தக்க பதிலை வழங்குவார்கள் – அமைச்சர் கீர்த்தனா

    August 4, 2026

    “ஆணவத்தை சாம்பலாக்கும் சுயமரியாதை தீ”!! உதயநிதி பேச்சுக்கு அமைச்சர் ரமேஷ் கண்டனம்..!!

    August 4, 2026

    உதயநிதி கைது விவகாரம் தீவிரம்.. தடை கோரி நீதிமன்றத்தை நாடிய திமுக..!!

    August 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பெண்கள் குறித்து கண்ணியக்குறைவான பேச்சு… உதயநிதிக்கு பெண்களே தக்க பதிலை வழங்குவார்கள் – அமைச்சர் கீர்த்தனா

    “ஆணவத்தை சாம்பலாக்கும் சுயமரியாதை தீ”!! உதயநிதி பேச்சுக்கு அமைச்சர் ரமேஷ் கண்டனம்..!!

    உதயநிதி கைது விவகாரம் தீவிரம்.. தடை கோரி நீதிமன்றத்தை நாடிய திமுக..!!

    எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது…நடிகை த்ரிஷா குறித்து இரட்டை அர்த்தப் பேச்சில் காவல் துறை நடவடிக்கை

    அப்பாவுக்கு பதவி உயர்வா? அனிதா ராதாகிருஷ்ணனுடன் மோதலா? திமுகவில் அடுத்த கட்ட நகர்வு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.