Close Menu
    What's Hot

    வயலில் சிக்கிய முதலை!. தோளில் சுமந்து சென்று போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்த நபர்! வைரல் வீடியோ!

    ஜோசப் விஜய் அரசுக்கு உத்தரவிடக் கோரி நடிகர் பார்த்திபன் வழக்கு… எதற்காக?

    காவிரி பிரச்னைக்கு காரணமே கருணாநிதிதான்… உச்ச நீதிமன்றத்தை அணுகுவதே சட்டரீதியான வழி  – அமைச்சர் நிர்மல் குமார்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»திருவள்ளூர் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் கூட்டுறவு கடன் சங்கத்துக்கு எதிரான புகார்…. காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
    தமிழ்நாடு

    திருவள்ளூர் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் கூட்டுறவு கடன் சங்கத்துக்கு எதிரான புகார்…. காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

    Editor TN TalksBy Editor TN TalksAugust 1, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    006 hg
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தேசிய சின்னத்தை தவறாகப் பயன்படுத்தி நிரந்தர வைப்பீடுகள் வசூலிக்கப்பட்டதாக திருவள்ளுவர் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கூட்டுறவு கடன் சங்கத்துக்கு எதிரான புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னையைச் சேர்ந்த திலகவதி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தான் உறுப்பினராக இருக்கும், தனியார் கூட்டுறவு சங்கமான திருவள்ளுவர் போக்குவரத்கது கழக தொழிலாளர்கள் கூட்டுறவு கடன் சங்கம், அனுமதியின்றி இந்தியா தேசிய சின்னத்தை தவறாக பயன்படுத்தி 500 கோடி ரூபாய் அளவுக்கு  நிரந்தர வைப்பீடுகளை  வசூலித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

    இது சம்பந்தமாக, கிளாம்பாக்கம் காவல் நிலையத்திலும், லஞ்ச ஒழிப்புத் துறையிடமும், கடந்த ஜூன் 12 ஆம் தேதி புகார் அளித்த நிலையில், தேசிய சின்னத்தை மட்டும் அகற்றி உள்ளதாகவும், நிரந்த வைப்பீடுகளை வசூலித்த கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் ஜெயசங்கர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்பதால், தனது புகார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரின் புகார் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு விசாரணைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இது சம்பந்தமாக ஆரம்பகட்ட விசாரணை நடத்தில் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு 4 வாரங்களில் அறிக்கை அளிக்க வேண்டும் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு உத்தரவிட்ட நீதிபதி, அறிக்கை பெற்ற பிறகு தேவைப்பட்டால் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

    மேலும், கிளாம்பாக்கம் காவல் நிலையத்தில் மனுதாரர் அளித்த புகாரில் விசாரணை நடத்தி 2 வாரங்களில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

    Cooperative Credit Society Madras High Court police investigation Thiruvallur Transport Corporation
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதனிமைப்பட்டு நிற்கிறார் தனி ஆவர்த்தன முதலமைச்சர்… எப்போது அனைத்துக்கட்சி கூட்டம்? – மு.க.ஸ்டாலின் விமர்சனம்
    Next Article கம்பம்;  சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு… சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை தடை
    Editor TN Talks

    Related Posts

    ஜோசப் விஜய் அரசுக்கு உத்தரவிடக் கோரி நடிகர் பார்த்திபன் வழக்கு… எதற்காக?

    August 1, 2026

    காவிரி பிரச்னைக்கு காரணமே கருணாநிதிதான்… உச்ச நீதிமன்றத்தை அணுகுவதே சட்டரீதியான வழி  – அமைச்சர் நிர்மல் குமார்

    August 1, 2026

    இரட்டை சகோதரர்கள்… இரட்டை சகோதரிகள்… இரட்டை பாதிரியார்கள்… கேரளாவில் நடந்த வினோத திருமணம்!

    August 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வயலில் சிக்கிய முதலை!. தோளில் சுமந்து சென்று போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்த நபர்! வைரல் வீடியோ!

    ஜோசப் விஜய் அரசுக்கு உத்தரவிடக் கோரி நடிகர் பார்த்திபன் வழக்கு… எதற்காக?

    காவிரி பிரச்னைக்கு காரணமே கருணாநிதிதான்… உச்ச நீதிமன்றத்தை அணுகுவதே சட்டரீதியான வழி  – அமைச்சர் நிர்மல் குமார்

    இரட்டை சகோதரர்கள்… இரட்டை சகோதரிகள்… இரட்டை பாதிரியார்கள்… கேரளாவில் நடந்த வினோத திருமணம்!

    ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 15.4% உயர்ந்து ரூ.2.11 லட்சம் கோடியாக அதிகரிப்பு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.