Close Menu
    What's Hot

    நடுவானில் குலுங்கிய ஏர் இந்தியா விமானம்! 300 அடி கீழே சரிந்ததால் பயணிகள் படுகாயம்!

    இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக ஆசை!. பென் ஸ்டோக்ஸ் அதிரடி பேச்சு!

    உதயநிதி கைது… தவெக அரசின் ஜனநாயகப் படுகொலை… கே.என்.நேரு கண்டனம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»உதயநிதி ஸ்டாலின் பேச்சு சர்ச்சை: “அரசியலில் பெண்களை இழுப்பதை நிறுத்த வேண்டும்” – பாடகி சின்மயி கண்டனம்
    Featured

    உதயநிதி ஸ்டாலின் பேச்சு சர்ச்சை: “அரசியலில் பெண்களை இழுப்பதை நிறுத்த வேண்டும்” – பாடகி சின்மயி கண்டனம்

    Editor TN TalksBy Editor TN TalksAugust 4, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    010 sinmay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக அரசியலில் பெண்களை தொடர்புபடுத்தி பேசப்படுவதாக எழுந்துள்ள சர்ச்சைக்கு பாடகி சின்மயி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “அரசியலில் இருக்கும் ஆண்கள் உண்மையான மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு பதிலாக சம்பந்தமே இல்லாத பெண்களை அரசியல் விவாதங்களில் இழுப்பது முற்றிலும் தவறானது” என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், “திமுகவைச் சேர்ந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் அரசியல் மேடைகளில் தரக்குறைவாகவும் ஆபாசமாகவும் பேச முடிந்ததற்கு காரணம், அதற்கு ஊக்கம் அளிக்கப்பட்டதுதான். ஒருமுறை அல்ல, பலமுறை அவ்வாறு பேச அனுமதிக்கப்பட்ட பிறகே அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    உதயநிதி ஸ்டாலின் பேசியதாகக் கூறப்படும் கருத்து குறித்து, “அவர் பேசியதன் மறைபொருள் எனக்கு முதலில் புரியவில்லை. எனக்குத் தெரிந்த ஒருவர் பின்னர் விளக்கினார். அது தண்ணீர் இணைப்பு (Water Connection) பற்றிய பேச்சு என முதலில் நினைத்தேன். பெரும்பாலான பெண்களுக்கும் அதன் உண்மையான அர்த்தம் புரியவில்லை. அது ஆண்கள் மட்டுமே புரிந்துகொள்ளும் வகையிலான இரட்டை அர்த்தப் பேச்சாக இருந்தது” என்று சின்மயி தெரிவித்துள்ளார்.

    அத்துடன், “குறைந்தபட்சம் தனது ஆதரவாளர்களை அமைதியாக இருக்கச் சொல்லியிருக்கலாம் அல்லது அவர்கள் நாகரிகமாக நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கலாம். ஆனால் அதற்கு பதிலாக அவர் இன்னும் மோசமான கருத்தை முன்வைத்தார்” என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

    “இதை விமர்சிப்பவர்கள் தான் தரக்குறைவாக சிந்திக்கிறார்கள் என்று கூறுவது எளிது. ஆனால் இதே அரசியல் சூழல், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை எப்படி இழிவாக குறிப்பிட்டு பேசியது என்பதை நான் மறக்கவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், “முந்தைய தலைமுறை அரசியல்வாதிகளின் ஆபாசமான பேச்சுகள் இயல்பானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. அவர்களின் பழைய பேச்சுகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. ஆனால் புதிய தலைமுறை அரசியல்வாதிகள் அதைவிட சிறப்பாக நடந்து கொள்ள வேண்டும்; இன்னும் மோசமாக அல்ல” என்று அவர் கூறியுள்ளார்.

    ” இந்த விவகாரத்தில் பெண்கள் இன்னும் அதிகமாகக் குரல் கொடுக்காதது மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாகக் கூறியுள்ள சின்மயி, கோபத்துடனும், பெண்கள் ஒருமைப்பாட்டுடனும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய நேரம் இது” என்று வலியுறுத்தியுள்ளார்.

    Chinmayi Sripaada political controversy Tamil Nadu Politics Udhayanidhi Stalin Women
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎதிர்க்கட்சித் தலைவரை வலுக்கட்டாயமாக கைது செய்வதா? – எஸ்.டி.பி.ஐ கண்டனம்
    Next Article 100% தூய்மையானதா?. தேன், நெய், எண்ணெய் விற்பனை செய்ய டாபர் நிறுவனதுக்கு தடை!. FSSAI அதிரடி!
    Editor TN Talks

    Related Posts

    நடுவானில் குலுங்கிய ஏர் இந்தியா விமானம்! 300 அடி கீழே சரிந்ததால் பயணிகள் படுகாயம்!

    August 4, 2026

    இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக ஆசை!. பென் ஸ்டோக்ஸ் அதிரடி பேச்சு!

    August 4, 2026

    உதயநிதி கைது… தவெக அரசின் ஜனநாயகப் படுகொலை… கே.என்.நேரு கண்டனம்!

    August 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நடுவானில் குலுங்கிய ஏர் இந்தியா விமானம்! 300 அடி கீழே சரிந்ததால் பயணிகள் படுகாயம்!

    இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக ஆசை!. பென் ஸ்டோக்ஸ் அதிரடி பேச்சு!

    உதயநிதி கைது… தவெக அரசின் ஜனநாயகப் படுகொலை… கே.என்.நேரு கண்டனம்!

    உதயநிதிக்கு நாவடக்கம் தேவை; பொய்க்கால் அரசுக்கும் எடப்பாடி பழனிசாமி கண்டனம்

    100% தூய்மையானதா?. தேன், நெய், எண்ணெய் விற்பனை செய்ய டாபர் நிறுவனதுக்கு தடை!. FSSAI அதிரடி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.