Author: Editor TN Talks

பிஃபா உலகக் கோப்பை 2026 தொடரில் 32-வது சுற்றிலேயே ஜெர்மனி அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறியதைத் தொடர்ந்து, அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜுலியன் நாகல்ஸ்மேன் “ஜெர்மனி இனி உலக கால்பந்தின் முதல் தர அணிகளில் ஒன்றாக இல்லை” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார். நான்கு முறை உலகக் கோப்பையை வென்ற ஜெர்மனி, பராகுவே அணியுடனான மோதலில், பராகுவேவிடம் தோல்வியைத் தழுவி, தொடரிலிருந்து வெளியேறியது. இந்த முடிவு உலகக் கோப்பையின் மிகப்பெரிய அதிர்ச்சிகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. போட்டிக்குப் பிறகு பேசிய பயிற்சியாளர் நாகல்ஸ்மேன், “முதல் சுற்றிலேயே வெளியேறுவது ஜெர்மன் கால்பந்துக்கு போதுமானது அல்ல. தொடர்ந்து மூன்றாவது உலகக் கோப்பையிலும் ஆரம்ப கட்டத்திலேயே வெளியேறியுள்ளோம். எனவே, இனி முதல் தர அணிகளில் நாங்கள் இல்லை. இந்த முடிவு மிகவும் ஏமாற்றமளிக்கிறது,” என்று தெரிவித்தார். மேலும், ஜெர்மன் புட்பால் பெடரேஷன் (DFB) நிர்வாகம் தன்னை நம்பினால், பயிற்சியாளராக தொடர்ந்து செயல்படத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். ஜெர்மனியில்…

Read More

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களிடம், பேசியதாவது: ராகுல்காந்தியிடம் விஜய் ஆதரவு கேட்டதைத் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் தவெக ஆட்சிக்கு ஆதரவளித்தது. தமிழ்நாட்டில் மதசார்பற்ற அணி இருக்கவேண்டும், நேர்மையான முதலமைச்சர் இருக்க வேண்டும். அந்த இரண்டையும் நாங்கள் சாதித்துள்ளோம். செல்வப்பெருந்தகை தலைமையின்போது காங்கிரஸ் கட்சியின் சொத்துக்களை மீட்டதும், கிராமக் காங்கிரஸ் கமிட்டிக்கான உறுப்பினர்களை தேர்தெடுத்ததும் முக்கியமான முயற்சி. விழுந்து கிடந்த காங்கிரஸை நிலை நிறுத்தியது அழகிரி காலகட்டத்தில்தான். அதற்கு முன்பாக வீழ்ந்து கிடந்த காங்கிரஸை இவிகேஎஸ் இளங்கோவன், திருநாவுக்கரசு ஆகியோர் தூக்கி நிறுத்தினர். கூட்டணி அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற்று இரண்டு அமைச்சர்களைப் பெற்றிருப்பதன் மூலம் காங்கிரஸின் கனவு59 ஆண்டுகளுக்குப் பின்னர் நிறைவேறி உள்ளது. தமிழ்நாடு காங்கிரஸைப் பொறுத்தவரை ஒரே அணிதான். அது ராகுல்காந்தி தலைமையிலான அணிதான்! ராகுல்காந்திக்காகத்தான் ஓட்டு, கூட்டம், வெற்றி எல்லாம். ராகுல்காந்தி தலைமையிலான அணியில் என்னை டாஸ் போட அனுப்பி வைத்துள்ளார்கள். முன்பு செல்வப்பெருந்தகை டாஸ்…

Read More

செங்கல்பட்டு அருகே பள்ளி மாணவர்களை வற்புறுத்தி தவெகவினர் ரீல்ஸ் எடுத்த நிகழ்வு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கல்விக் கூடங்கள் என்பது அரசியல் சாயமற்ற புனித இடமாக இருக்க வேண்டும் என்பது சட்டம். ஆனால் தங்களின் அரசியல் விளம்பரத்திற்காகப் பிஞ்சு குழந்தைகள் படிக்கும் அரசுப் பள்ளியையே தவெக நிர்வாகிகள் தங்களின் அரசியல் மேடையாக மாற்றியிருக்கும் அதிர்ச்சிச் சம்பவம் செங்கல்பட்டில் அரங்கேறியுள்ளது தமிழக வெற்றி கழகத் தலைவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சருமான விஜய் அவர்களின் 52-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன அதன் படி செங்கல்பட்டு அடுத்த திருமணி பகுதியில் உள்ள அரசுப் பள்ளிக்குள் புகுந்த திருக்கழுக்குன்றம் ஒன்றிய செயலாளர் தலைமையிலான தவெகவினர் தங்களின் அரசியல் எல்லையைத் தாண்டிக் குதித்துள்ளனர் தோளில் கட்சித் துண்டைப் போட்டுக் கொண்டு கையில் விஜய் அவர்களின் புகைப்படத்தை ஏந்திக்கொண்டு பள்ளிக்குள் நுழைந்ததோடு நிற்காமல்  அங்குள்ள சின்னஞ்சிறு மாணவ-மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்களைக் கொடுத்துவிட்டு, ஹாப்பி…

Read More

பயத்தைத் தாண்டியவர்களுக்கு சிறைச்சாலையும், சிம்மாசனமும் ஒன்றுதான் என திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்.பியுமான கனிமொழி தெரிவித்துள்ளார். கடந்த 2001 ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியின்போது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கைது செய்யப்பட்டார். அந்த நிகழ்வைச் சுட்டிக்காட்டி, கனிமொழி எம்.பி தனது நினைவுகளை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், அச்சத்தைக் கடந்தவர்களுக்கு, சிறைச்சாலையும் அரியணையும் ஒன்றே – பழிவாங்கும் எண்ணம் கொண்ட ஓர் அரசால் என் தந்தை கைது செய்யப்பட்ட 2001-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் நாளன்று, இவ்வார்த்தைகள் எனக்கு வாழ்நாள் பாடமாக அமைந்தன எனக் குறிப்பிட்டுளார். சென்னை மத்திய சிறைச்சாலையின் வாசலில் அவர் தனித்து நின்றதாகத் தோன்றினாலும், ஆயிரக்கணக்கான ‘உடன்பிறப்புகள்’ அவருடன் நின்று, ஒவ்வொரு தியாகத்தையும் ஒவ்வொரு போராட்டத்தையும் பகிர்ந்துகொண்டனர் எனப் பதிவிட்டுள்ளார். கருணாநிதி சிறைப்படுத்தப்பட்டதை நினைவு கூர்ந்து கனிமொழி பதிவிட்டுள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து முன்னதாக எந்தப் பதிவும் வெளியிடப்படவில்லை.

Read More

அரசு நிர்ணயித்துள்ளக் கட்டணத்தை விட கூடுதலாக தனியார் மருத்துவக் கல்லூரிகள் வசூலித்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை காட்டிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக  முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார்கள் குவிந்து வருவதாக, மருத்துவக் கல்வி ஆராய்ச்சி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. தேசிய மருத்துவ ஆணையத்தின் உத்தரவு அடிப்படையில் 4 ஆண்டுகள் 6 மாதத்திற்கு மட்டுமே படிப்பிற்கான கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ள மருத்துவக் கல்வி ஆராய்ச்சி இயக்குநரகம்,  பல்வேறு தனியார் கல்லூரிகள் 5 ஆண்டுகள் 6 மாதத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு குற்றச்சாட்டு வந்திருப்பதாகவும், இதுதொடர்பாக, தனியார் மருத்துவக்கல்லூரிகளில் கட்டணம் வசூலிப்பது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது. அரசு நிர்ணயித்த கட்டணத்தை காட்டிலும் கூடுதல் கட்டணத்தை தனியார் கல்லூரிகள் வசூலிக்கும் பட்சத்தில் கடும் நடவடிக்கை  என எச்சரித்துள்ளதோடு,  விடுதி கட்டணம், போக்குவரத்து கட்டணம், உணவு கட்டணம் …

Read More

பிரிக்க முடியாதது எதுவோ என்றால் அது மனிதனும் சோஷியல் மீடியாவும் என்று சொல்வதற்கு இணங்க, இருவரும் ஆண்ட்ராய்டுகளாலும், ஐபோன்களாலும், இணையங்களாலும் ஒருவரை ஒருவர் கட்டுண்டு கிடக்கிறார்கள். அலாரம் அடித்து எழுந்த காலம் மாறி சமூக ஊடகங்களின் அறிவிப்பிலேயே இன்றைய விடியல் என்பது  தொடங்குகிறது. இப்படி மனிதனோடு பின்னிப் பிணைந்து கிடக்கும் சமூக ஊடகங்களை நினைவூ கூறும் வகையில் ஜூன் 30ஆம் தேதி உலக சமூக ஊடக தினமாகக் கொண்டாடப் படுகிறது. உலகெங்கிலும் உள்ள மக்கள், வணிகங்கள் மற்றும் சமூகங்களை இணைப்பதில் சமூக ஊடகங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை அங்கீகரிக்கும் வகையில், 2010-ஆம் ஆண்டு ‘மோஷோபிள்’ (Moshable) என்ற தொழில்நுட்ப செய்தி நிறுவனம் இந்த நாளைத் தொடங்கியது. நம் வாழ்க்கையின் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்ட இந்த டிஜிட்டல் தளங்களின் தாக்கத்தை சற்றுத் திரும்பிப் பார்ப்பது அவசியம். சமூக ஊடகங்கள் என்பது மனிதர்களைப் பொறுத்தவரையில்  வெறும் பொழுதுபோக்குக் கருவிகள் மட்டுமல்ல; அவை சமூக மாற்றத்திற்கான மிக…

Read More

பெங்களூரில் இருந்து திருவண்ணாமலைக்கு காரில் கடத்தி வரப்பட்ட சுமார் 5 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்களை மாவட்ட போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மடக்கி பிடித்து செங்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சுண்டக்கா பாளையம் பகுதியில் மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். வெளி மாநிலங்களில் இருந்து போதைப் பொருள் கடத்தப்பட்டு வரும் தகவலில் அவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர். அப்போது உத்தரப்பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலப் பதிவெண் கொண்ட இரண்டு சொகுசு கார்கள் விரைந்து வந்ததை தடுத்து நிறுத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தணிக்கை செய்தபோது, அதில் 500 கிலோ எடை கொண்ட ஹான்ஸ் , விமல்பாக் மற்றும் கூல்லிப் உள்ளிட்ட போதைப் பொருட்கள் மூட்டைகளில் இருந்ததைக் கைப்பற்றினர். தொடர்ந்து 4 இலட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களையும்,…

Read More

எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்வது தமிழ்நாடு அரசியலுக்கு ஆரோக்கியமானது அல்ல எனவும்,  எந்த பின்னணியில் இதை அவர்கள் செய்கிறார்கள் என்பது தெரியாது எனவும்  தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஆண்டிமடம்  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர் மீசை தமிழ்மாறனின் தாயார் மறைவுக்கு அஞ்சல் செலுத்துவதற்காக விசிக தலைவர் திருமாவளவன் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்து, சாலை மார்க்கமாக ஆண்டிமடம் சென்றார். முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா தொடர்பான கேள்விக்கு, எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்வது தமிழ்நாடு அரசியலுக்கு ஆரோக்கியமானது அல்ல எந்த பின்னணியில் இதை அவர்கள் செய்கிறார்கள் என்பது தெரியாது என்றார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் திடீர் திடீரென ராஜினாமா செய்வது  ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல எனவும் கூறினார். கூட்டணி கட்சிகளுக்கு நம்பிக்கை இல்லாமல் த.வெ.க வினர் அதிமுக எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைக்கிறார்களா என்கிற கேள்விக்கு, யூகமான கேள்விகளுக்கு யூகமாக பதில் சொல்ல முடியாது…

Read More

பாஜகவின் ‘மதமாற்ற தடைச்சட்ட’ அஜெண்டாவுக்கு தவெக துணைபோவதாக, திமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு  செயலாளர் டாக்டர் அ.சுபேர்கான் சந்தேகம் எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டின் நீண்டநெடிய சமூகநீதி வரலாற்றில், ஒருவரின் சமூக மற்றும் கல்வி ரீதியான பின்னடைவை அடிப்படையாகக் கொண்டே உரிமைகள் தீர்மானிக்கப்பட்டு வந்துள்ளன. முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் இஸ்லாமியர்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கியதும் அந்த போராட்ட வரலாற்றின் தொடர்ச்சிதான். ஆனால், இன்று தவெக அரசின் நிர்வாகக் குளறுபடிகளாலும், சட்ட ரீதியான அலட்சியத்தாலும் அந்த அடிப்படைத் தகர்க்கப்பட்டு, சிறுபான்மையினரின் உரிமைகள் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இஸ்லாத்துக்கு மதம் மாறிய நபர், பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் கேட்டு தொடர்ந்த வழக்கில், இஸ்லாமைத் தழுவிய பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டு உரிமையைப் பாதுகாக்கும்  அரசாணையை மதுரை கிளை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருப்பது, சமூகநீதிப் போரில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பின்னடைவாகும் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தீர்ப்பின் பின்னணியில் உள்ள சட்ட நுணுக்கங்களையும், தவெக…

Read More

பொது விநியோக பயன்பாட்டிற்கான ரேசன் அரிசியை கட்சி நலத்திட்ட உதவிகளாக வழங்கியதாக  மதுரை மேற்கு தொகுதியில் நடைபெற்ற சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் எனும் பெயரில் ரேசன் அரிசியை சட்டவிரோதமாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்திருப்பதாகவும், பொது விநியோக திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய ரேசன் அரிசியை பயன்படுத்தி அதனை நலத்திட்ட உதவிகள் எனும் பெயரில் அவர்களுக்கே விநியோகம் செய்திருப்பதாக மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் S.R.தங்கப்பாண்டி மீது பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரே ரேசன் அரிசியை சட்டவிரோதமாக கடத்தி பொதுமக்களுக்கு விநியோகம் செய்தாரா? அல்லது கடத்தல் கும்பலிடம் இருந்து அரிசியை வாங்கி விநியோகம் செய்தாரா ? என்பது குறித்து விரிவாக விசாரணை நடத்தி தொடர்புடைய அனைவரின் மீதும்…

Read More