Author: Editor TN Talks

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும், பெட்ரோல், டீசலுக்கு மத்திய அரசு கூடுதல் கலால் வரி விதித்துள்ளது. கடந்த பல மாதங்களாக இந்தியாவில் பெட்ரோல், டீசல், சி.என்.ஜி. உள்ளிட்டவைகளின் விலைகளில் மாற்றமின்றி தொடர்ந்து வந்தது. ஈரான், அமெரிக்கப் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததோடு, வரத்தும் குறைவானதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவைகளுக்கு தட்டுப்பாடு நிலவியது. இந்த நிலையில் மே 15ஆம் தேதி முதல் எரிபொருள்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின. பெட்ரோல், டீசல் உள்ளிட்டவை லிட்டருக்கு 3 ரூபாய் 10 காசுகள் வரை உயர்ந்தது. இந்த விலை உயர்வுக்கு தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்ததோடு, மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் விலை உயர்வை வாபஸ் பெறும்படி வலியுறுத்தியிருந்தனர். இந்த நிலையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீது கூடுதல் கலால் வரியை உயர்த்தியுள்ளது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோல் மீதுலிட்டருக்கு ரூ.3…

Read More

மதுவிலக்கு தொடர்பான முதலமைச்சரின் ஆக்‌ஷன இனிமேல்தான் பார்க்கப் போறீங்க என சிவகாசி தொகுதி எம்.எல்.ஏவும், அமைச்சருமான கீர்த்தனா தெரிவித்துள்ளார்.  சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த அமைச்சர்  கீர்த்தனா மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். சிவகாசியில் முதல் பெண் எம்எல்ஏ என சொல்கிறார்கள், அதைவிட சிறந்த எம்எல்ஏவாக பட்டம் வாங்க வேண்டும்  அதனை விஜய் அண்ணாகிட்ட கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என கண்களில் பட்டாம்பூச்சியை பறக்கவிட்டார். கடந்த ஐந்து வருடங்களாக எம்.எல்.ஏ அலுவலகம் திறக்கப்படாத நிலையில், சிவகாசி கோர்ட் அருகே எம்எல்ஏ அலுவலகம் திறக்கப் பட்டுள்ளது பொதுமக்கள் 24 மணி நேரம்  நேரடியாக வந்து சந்திக்கலாம். அண்ணன் விஜய் வழியில் எங்கள் சேவைகளை செய்து கொண்டே இருப்போம் எனத் தெரிவித்தார். மதுவால் உயிரிழப்பவர்களை விட வெடி விபத்தில் உயிரிழப்பவர் களுக்கான நிவாரண நிதி குறைவாக இருப்பது தொடர்பான வினாவுக்கு, இதற்கு முன்னால் ஆட்சியில் இருந்தவர்களிடம்…

Read More

தான் 2018-இல் சொன்னபடியே விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராகி விட்டார் என குருவாயூர் கோவிலில் இசைக்கருவி வசிப்பவரும், ரசிகருமான கிருஷ்ணதாஸ் என்பவர் தெரிவித்துள்ளார். கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவிலில் இசைக்கருவி வசிப்பவரான கிருஷ்ணதாஸ், நடிகர் விஜய்யின் துள்ளாத மனமும் துள்ளும் படத்தைப் பார்த்ததில் இருந்து விஜய்யின் தீவிர ரசிகராக இருந்து வருகிறார். விஜய்யின் புதுப்படங்கள் வரும்போதெல்லாம் கோயில்களுக்கு சென்று அங்க பிரதட்சனம் செய்வது உள்பட வேண்டுதல்களை எல்லாம் நிறைவேற்றியுள்ளார். இதையறிந்து கடந்த 2018ஆம் ஆண்டு ஊடகம் ஒன்று இவரைச் சந்தித்து பேட்டி கேட்டபோது, தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் வருவார் எனத் தெரிவித்துள்ளார். அந்த வீடியோவைப் பார்த்து பலரும் அவரை ஏளணம் செய்துள்ளனர். இந்த நிலையில் நடிகர் விஜய், தமிழ்நாட்டின் முதலமைச்சரான நிலையில், மீண்டும் அதே ஊடகம் கிருஷ்ணதாஸை சந்தித்து பேட்டி கண்டுள்ளது. அப்போது 108 கோயில்களில் விஜய்க்காக தான் அங்கப்பிரதட்சணம் செய்ததால், அவர் 108 தொகுதிகளைக் கைப்பற்றியதாகக் கூறியுள்ளார். மேலும்…

Read More

நீட் ஒழியாத வரை.. நம் பிள்ளைகளுக்கு நிம்மதியில்லை என திமுக துணைப் பொதுச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி கூறியுள்ளார். 2026 மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு புகார்கள் எழுந்த நிலையில், இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு, மறுதேர்வு வரும் ஜூன் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படும் என தேசியத் தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நீட் தேர்வே வேண்டாம் என முதலமைச்சர் ச.ஜோசப் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி,  ‘நீட்’ என்பதே அடிப்படையில் ஒரு மோசடிதான் என்பதை ஆரம்பத்திலிருந்து சொல்லிவருகிறது தி.மு.க. தொடர் முறைகேடுகளால், அதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தவும் செய்கிறது ஒன்றிய பாஜக அரசு. நீட் ஒழியாத வரை.. நம் பிள்ளைகளுக்கு நிம்மதியில்லை எனப் பதிவிட்டுள்ளார்.

Read More

1993ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அதன் மூலம், மே 15 ஆம் தேதியை சர்வதேச குடும்பங்கள் தினமாக அறிவித்தது.  உலகெங்கிலும் உள்ள மக்களை ஊக்குவிக்கவும், அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும், சமூக முன்னேற்றத்தை அதிகரிக்கவும் சர்வதேச குடும்ப தினம் கடைப் பிடிக்கப்படுகிறது. சுகாதாரம், கல்வி, குழந்தைகளின்உரிமைகள், பாலினசமத்துவம், சமநிலைமற்றும்சமூகஉள்ளடக்கல்போன்றஉலகெங்கிலும்உள்ளமக்களைப்பாதிக்கும்சிலமுக்கியத்தலைப்புகளில்கவனம்செலுத்துவதேஇந்நாளின்பின்னணியில்உள்ளயோசனையாகும். சர்வதேச குடும்பங்கள் தினமான இன்று உலக நாடுகளின் தலைவர்களும், இந்தியாவில் அரசியல் கட்சியினரும் தங்கள் வாழ்த்துக்களைப் பகிர்ந்து பதிந்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரும், தனது குடும்பத்தினருடன் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படத்தில் வேர்கள் உறுதியானால், தலைமுறைகள் உயர்ந்து நிற்கும். குடும்பத்தின் ஒற்றுமை,தலைமுறையின் பெருமை, குடும்ப தின நல்வாழ்த்துக்கள் எனப் பதிவிட்டுள்ளார்.

Read More

பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரியை குறைக்கவேண்டும் என தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். வளைகுடா போர் காரணமாக ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி மத்திய எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையையும், வணிக எரிவாயு சிலிண்டர் விலையையும், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளையும் உயர்த்தியுள்ளன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படையும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை போக்கும் வகையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க அரசு மாற்றம் வேண்டும் என்ற கொள்கையை அடிப்படையாக வைத்து செயல்படுவதாகச் செல்லப்படும் நிலையில், பெட்ரோலுக்கும், டீசலுக்கும், எரிவாயு சிலிண்டருக்கும் உள்ள விற்பனை வரியை…

Read More

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்துள்ளது. சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வரும் நிலையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. காலையில் 95.94 ஆக இருந்த நிலையில் பிற்பகலில் ரூபாயின் மதிப்பு 96.11 என சரிவை சந்தித்துள்ளது.ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் இறக்குமதி பொருட்களுக்கான விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருவதால், இந்திய பங்குச்சந்தையில் இருந்து அந்நிய முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி வருகின்றன.

Read More

திருச்சிக்கு அடையாளமாக விளங்கும் அறநிலைத்துறைக்கு சொந்தமான மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் தெப்பக்குளத்தை 30 வருடங்களுக்குப் பின்னர் தூய்மைப்படுத்தி, அழகுபடுத்தி அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்து தொடர்ந்து தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள கடைகனை நீதிமன்றம் உத்தரவு மூலமாக அங்கிருந்து அகற்றப்பட்டு வேறு இடத்திற்கு மாற்று அமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீர் முழுவதும் அகற்றப்பட்டு தெப்பக்குளம் தூர்வாரும் பணிக்கான பூமி பூஜை மாநகராட்சி ஆணையர் மதுபாலா தலைமையில் தொடங்கியது. தெப்பக்குளத்தின் மொத்த பரப்பளவு 20,984 சதுர மீட்டர் ஆகும். இதன் ஆழம் 3.50 மீட்டர் ஆகும். சுமார் 73.44 கன மீட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்டதாக தெப்பக்குளம் உள்ளது. தூர்வாரும் பணி தொடக்க நிகழ்வில் தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பின் பொதுச்செயலாளர் கோவிந்தராஜீலு, மலைக்கோட்டை கோவில் சார்பில் அதிகாரிகள், அறங்காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இப்பணிக்கு வணிகர் சங்கத்தின் சார்பில் முதற்கட்டமாக ரூ.25லட்சத்தை வணிகர்…

Read More

ஒன்றிய பாஜக அரசு சட்டத்தை மீறி செயல்படுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கு.செல்வப்பெருந்தகை கடிந்துரைத்துள்ளார். சி.பி.ஐ. இயக்குநர் பிரவீன் சூட் அவர்களுக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மற்றும் நீட் தேர்வை ரத்து செய்து மாநில அரசே தேர்வுகளை நடத்துவதற்கு அனுமதி வழங்க மறுப்பு தெரிவிக்கும் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தரப்பில் பல்வேறு மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் தண்டார்பேட்டை அஞ்சல்நிலையம் அருகே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர். கு. செல்வப்பெருந்தகை தலைமையிலும் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் சொர்ண சேதுராமன், பொருளாளர் ரூபி மனோகரன், அமைப்பு செயலாளர் ராம் மோகன், மாநில பொதுச் செயலாளர் S A வாசு சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள்…

Read More

 பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களால் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால், சில்லறை விற்பனையாளர்கள் நெருக்கடிகளைச் சந்தித்து வருவதாக தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அச்சங்கத்தின் தலைவர் க.ப.முரளி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- ​கடந்த நான்கு ஆண்டுகளாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்ட போதிலும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் (OMCs) இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் பொதுமக்களின் நலன் கருதி நிலைப்புத்தன்மையைப் பேணி வந்தன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய வளைகுடா போர் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்க்கான தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இது உலகளாவிய எரிசக்தி சூழலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வை அடுத்து உலகின் பல நாடுகள் தங்கள் சில்லறை விற்பனை விலையை உடனடியாக உயர்த்தின. இருப்பினும், இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த சில…

Read More