Close Menu
    What's Hot

    “தொகுதி மறுவரையறை தமிழகத்தை கடுமையாக பாதிக்கும் ” – ராகுல் காந்தி எச்சரிக்கை

    நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: திராவிடர் கழகம் வழக்கு

    “தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல்” – ராகுல் காந்தி ஆதங்கம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»இபிஎஸ் சுற்றுப்பயணம் – பாதுகாப்பு கோரி டிஜிபியிடம் அதிமுக மனு……
    தமிழ்நாடு

    இபிஎஸ் சுற்றுப்பயணம் – பாதுகாப்பு கோரி டிஜிபியிடம் அதிமுக மனு……

    Editor TN TalksBy Editor TN TalksJuly 3, 2025Updated:July 3, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    eps
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு டிஜிபி அலுவலகத்திற்கு முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை ஆகியோர் நேரில் வந்து இன்று மனு ஒன்றை கொடுத்துள்ளனர்.

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வரும் 7ம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு உரிய பாதுகாப்பு அளிக்க கோரி டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

    வருகிற 7 ஆம் தேதி முதல் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். சுற்றுப்பயணத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என அதிமுக சார்பில் மனு அளித்துள்ளோம். திருப்புவனம் விவகாரம் லாக்அப் மரணம் அல்ல. அது ஒரு படுகொலை என வெளிக்கொண்டு வந்தது அதிமுக தான். முதலமைச்சர் சாரி சொல்லிவிட்டால் போன உயிர் திரும்ப வந்து விடுமா?

    அஜீத்குமாருக்கு முன் நிகழ்ந்த 24 லாக்கப் மரணங்களுக்கு சாரி சொன்னாரா? முதல்வர்… தேர்தல் வருவதால் தான் இந்த விவகாரத்தில் அவர் சாரி சொல்லி உள்ளார். லாக்கப் மரணங்களுக்கு பெயர் போன மாநிலமாக தமிழகம் திகழ்வது வேதனை அளிக்கிறது. ரத்தக்கறை படிந்த அரசாக, ரத்தக்கறை படிந்த முதலமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகி இருக்க வேண்டும்.

    சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் இருக்கும் நடிகர்கள் ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை. நீதிமன்ற நடவடிக்கை காரணமாக தான் சிபிஐ வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இல்லை என்றால் எப்படி மாற்றுவார்கள். வெறும் சாரி மட்டும் சொல்லி முற்றுப்புள்ளி வைத்துவிட முடியாது இந்த லாக்கப் மரணத்தை.

    அஜீத்குமார் குடும்பத்தினரின் சாபம் 2026 தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
    ஜனவரி வரை தான் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர். அதுவரையிலாவது மக்களை காப்பாற்றும் எண்ணம் ஸ்டாலினுக்கு இருக்குமா என்றால் அதுவும் இருக்காது. பாண்டிய மன்னன் நீதி தவறியதால் மதுரை பற்றி எரிந்தது. இன்று தமிழகமே பற்றி எரிகிறது. சாரி சொன்னால் போதுமா? பதவி விலகியிருக்க வேண்டாமா? இதன் பின்னணியில் மூன்று திமுகவினர் இருப்பதாக கூறப்படுகிறது. ஏன் அவர்களை விசாரிக்கவில்லை. சாத்தான்குளம் வழக்கில் CBI விசாரணை மேற்கொண்டு வருகிறது. இன்னமும் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை” என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகானாவில் இருப்பதை பாக்கியமாக கருதுகிறேன்.. பிரதமர் மோடி!
    Next Article இது என்ன போலீஸ் ராஜ்ஜியமா? உயர்நீதிமன்றம் ஆவேசம்..
    Editor TN Talks

    Related Posts

    “தொகுதி மறுவரையறை தமிழகத்தை கடுமையாக பாதிக்கும் ” – ராகுல் காந்தி எச்சரிக்கை

    August 1, 2026

    நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: திராவிடர் கழகம் வழக்கு

    August 1, 2026

    “தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல்” – ராகுல் காந்தி ஆதங்கம்

    August 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “தொகுதி மறுவரையறை தமிழகத்தை கடுமையாக பாதிக்கும் ” – ராகுல் காந்தி எச்சரிக்கை

    நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: திராவிடர் கழகம் வழக்கு

    “தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல்” – ராகுல் காந்தி ஆதங்கம்

    பாரதிராஜா – பாக்யராஜுக்கு பிரம்மாண்ட அஞ்சலி: ஆகஸ்ட் 16-ல் ‘ராஜகோபுரங்களின் நினைவு உற்சவம்’

    கோவில் விழாக்களில் யானைகள் பயன்பாடு:  தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.