Close Menu
    What's Hot

    முதல்வர் மம்தாவின் பெயரில் சைபர் மோசடி!. போலி கடன் விளம்பரங்களால் மக்கள் குறிவைப்பு!.

    மகனை சரியா வளர்க்கல; கனவில் சொன்ன தாய்!. கண்ணீர் சிந்திய ராமதாஸ்!.

    விஜய் நாவை அடக்கி பேசவேண்டும்!. செல்லூர் ராஜு கொந்தளிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»விமானவிபத்து செய்திகளை வெளியிட வரைமுறை கோரி மனு
    இந்தியா

    விமானவிபத்து செய்திகளை வெளியிட வரைமுறை கோரி மனு

    Editor TN TalksBy Editor TN TalksJuly 17, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    images 5
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    விமான விபத்து தொடர்பான செய்திகளை வெளியிடுவது தொடர்பாக ஊடகங்களுக்கு விதிகளை வகுக்கும் படி மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    குஜராத்தில் மாநிலம் அகமதபாத்தில் இருந்து கடந்த ஜூன் 12 ம் தேதி லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நொடிகளில் கட்டுப்பாட்டை இழந்து மருத்துவக் கல்லூரியின் விடுதி வளாகத்தின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.

    இதில் விமானத்தில் பயணித்தவர்களில் 240 நபர்களும், மருத்துவ வளாகத்தில் இருந்த 19 நபர்களும் உயிரிழந்தனர்.  இந்த விபத்துக்கு விமான பைலட் தான் காரணம் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாகவும் இவ்வாறு ஊடகங்கள் சரிபார்க்கப்படாத, யூகமான, அவதூறான கருத்துகளை பரப்பி வருதாக கூறி கோவையை சேர்ந்த வழக்கறிஞர் பிரவீன் என்பவர் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனுவில் விமான விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் ஊடகங்கள் ஆதாரமற்ற வகையில் செய்தி வெளியிடுவது விசாரணையில் பாதிப்பை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.

    விமான விபத்திற்கு பைலட் தான் காரணம் என அடிப்படை ஆதாரமற்ற செய்திகளை வெளியிடுவது அந்த விபத்தில் இறந்த பைலட்டுகளை களங்கப்படுத்தும் செயல் எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

    அதனால் விமான விபத்து தொடர்பான செய்திகளை வெளியிடுவது தொடர்பாக ஊடகங்களுக்கு விதிகளை வகுக்கும் படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபயத்தால் திமுக கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கிறார் இபிஎஸ்..
    Next Article 1.2 கோடி பேர்களின் ஆதார் எண்களை முடக்கிய மத்திய அரசு.. காரணம் என்ன?
    Editor TN Talks

    Related Posts

    முதல்வர் மம்தாவின் பெயரில் சைபர் மோசடி!. போலி கடன் விளம்பரங்களால் மக்கள் குறிவைப்பு!.

    December 29, 2025

    உன்னாவ் வன்கொடுமை வழக்கு!. எந்த சூழ்நிலையிலும் குல்தீப் செங்காரை விடுவிக்க முடியாது!. ஜாமீனை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம்!

    December 29, 2025

    காங்கிரஸ் வெறும் கட்சியல்ல ; ஆன்மாவின் குரல் : சொல்கிறார் ராகுல்

    December 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதல்வர் மம்தாவின் பெயரில் சைபர் மோசடி!. போலி கடன் விளம்பரங்களால் மக்கள் குறிவைப்பு!.

    மகனை சரியா வளர்க்கல; கனவில் சொன்ன தாய்!. கண்ணீர் சிந்திய ராமதாஸ்!.

    விஜய் நாவை அடக்கி பேசவேண்டும்!. செல்லூர் ராஜு கொந்தளிப்பு!

    பொங்கல் பரிசு ரூ.5,000 வழங்கப்படும்!. வாக்குறுதி அளித்தார் எடப்பாடி பழனிசாமி!.

    சிவகார்த்திகேயன் உடன் இணையும் விஜய் ஆண்டனி!

    Trending Posts

    உன்னாவ் வன்கொடுமை வழக்கு!. எந்த சூழ்நிலையிலும் குல்தீப் செங்காரை விடுவிக்க முடியாது!. ஜாமீனை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம்!

    December 29, 2025

    தங்கம் விலை குறைவு!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?. இன்றைய நிலவரம் இதோ!.

    December 29, 2025

    விரைவு ரயில்களின் நேர மாற்றம்: பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! உங்கள் பயண நேரம் மாறுமா?

    December 29, 2025

    இன்றைய ராசிபலன் 29.12.2025: இவர்களுக்கு நினைத்தது நிறைவேறும்

    December 29, 2025

    முதல்வர் மம்தாவின் பெயரில் சைபர் மோசடி!. போலி கடன் விளம்பரங்களால் மக்கள் குறிவைப்பு!.

    December 29, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.