Close Menu
    What's Hot

    இயக்குநர் பாரதிராஜா இறுதிச்சடங்கு!. பண்ணை வீட்டில் பாதுகாப்பு குறித்து டிஐஜி சசிமோகன் ஆய்வு!

    பெண்களுக்கு எதிரா இனி எதுவும் நடக்க விடமாட்டோம்..!! கோவையில் களமிறங்கிய ‘சிங்கப்பெண்கள்’ SQUAD..!!

    தனியார்மயமாகிறதா டாஸ்மாக் விற்பனை..?? முதற்கட்ட பேச்சுவார்த்தை துவக்கம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»பாலியல் தொழிலில் ஈடுபட மறுத்த காதலி… குத்திக் கொன்ற காதலன்…
    இந்தியா

    பாலியல் தொழிலில் ஈடுபட மறுத்த காதலி… குத்திக் கொன்ற காதலன்…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 19, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    4 11
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆந்திராவில் பாலியல் தொழிலில் ஈடுபட மறுத்த லிவ் இன் டூ கெதரில் இருந்த காதலியை, காதலன் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஆந்திர மாநிலம் கொனசீமா மாவட்டம் சவரம் கிராமத்தை சேர்ந்தவர் புஷ்பா என்ற இளம்பெண். 22 வயதான இவருக்கு திருமணமாகி 4 வயதில் மகன் உள்ளான். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அவரை விவாகரத்து செய்தார் புஷ்பா. அதனால் சவரம் கிராமத்தில் தனது தாய் வீட்டில் குழந்தையுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

    வேலைத்தேடி கடந்தாண்டு விஜயவாடா சென்றுள்ளார் புஷ்பா. அங்கு ஷேக் ஷமி என்ற 22 வயது இளைஞருடன் புஷ்பாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரின் நட்பும் காதலாக மாற, இருவரும் சவரம் கிராமத்திற்கு அருகே ரசோலி என்ற பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து லிவ் இன் டூ கெதர் முறையில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து அறிந்த புஷ்பாவின் தாய் மற்றும் சகோதரர், அவர்களது காதலை ஏற்றுக் கொண்டதால், 4 பேரும் ரசோலியில் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதற்கிடையில் மதுபோதைக்கு அடிமையான ஷேக் ஷமி கடந்த சில மாதங்களாக புஷ்பாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    புஷ்பாவை பாலியல் தொழிலில் ஈடுபடும்படி ஷமி வலியுறுத்தி வந்ததாகவும், அதற்கு புஷ்பா மறுப்பு தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த 17-ம் தேதி வழக்கம் போல் இரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்த ஷமி, புஷ்பாவிடம் பாலியல் தொழிலில் ஈடுபடுமாறு கூறி மீண்டும் வலியுறுத்தியுளார். இதற்கு புஷ்பா மீண்டும் மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த ஷமி, வீட்டில் இருந்த கத்தியால் புஷ்பாவின் கழுத்து பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளார்.

    ரத்த வெள்ளத்தில் சரிந்த புஷ்பா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இருவரின் சண்டையையும் தடுக்க முயன்ற புஷ்பாவின் தாய் மற்றும் சகோதரனையும் ஷமி கத்தியால் தாக்கியதில் இருவரும் காயமடைந்தனர். கூச்சல் சத்தம் கேட்டு அங்கு திரண்ட அக்கம் பக்கத்தினர், காயமடைந்த இருவரையும் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் புஷ்பாவின் உடலை மீட்டனர். மேலும் கொலை செய்து விட்டு தப்பியோடிய ஷேக் ஷமியை தேடி வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleயானைத் தந்தத்தை விற்க முயன்ற 3 பேர் கைது…
    Next Article நயன்தாரா படப்பிடிப்பு வீடியோ லீக்… படக்குழு ஷாக்…
    Editor TN Talks

    Related Posts

    பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடக்கம்!

    June 11, 2026

    “4,399 நாட்கள் பிரதமர் பதவி; இது தனிநபர் சாதனை அல்ல”!. பிரதமர் மோடி பெருமிதம்!

    June 11, 2026

    அண்ணாமலையைப் பற்றி பேச இனி ஒன்றும் இல்லை: நிதின் நபின்

    June 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இயக்குநர் பாரதிராஜா இறுதிச்சடங்கு!. பண்ணை வீட்டில் பாதுகாப்பு குறித்து டிஐஜி சசிமோகன் ஆய்வு!

    பெண்களுக்கு எதிரா இனி எதுவும் நடக்க விடமாட்டோம்..!! கோவையில் களமிறங்கிய ‘சிங்கப்பெண்கள்’ SQUAD..!!

    தனியார்மயமாகிறதா டாஸ்மாக் விற்பனை..?? முதற்கட்ட பேச்சுவார்த்தை துவக்கம்..!!

    பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடக்கம்!

    “4,399 நாட்கள் பிரதமர் பதவி; இது தனிநபர் சாதனை அல்ல”!. பிரதமர் மோடி பெருமிதம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.