Close Menu
    What's Hot

    தமிழக காவல் அதிகாரிகள் 56 பேர் பணியிட மாற்றம்!

    வரும் 18ல் ‘தனுஷ் 55‘அப்டேட்!

    இந்தியா- சுலோவாகியா இடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
    TN Talks
    Home»தமிழ்நாடு»கரூர் துயரத்தில் அதிரடி தீர்ப்பு – ஆதவ் அர்ஜூனா சொன்னது என்ன?
    தமிழ்நாடு

    கரூர் துயரத்தில் அதிரடி தீர்ப்பு – ஆதவ் அர்ஜூனா சொன்னது என்ன?

    Editor TN TalksBy Editor TN TalksOctober 13, 2025Updated:October 13, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    adav
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கரூர் விவகாரத்தில் சிறப்பு விசாரணை குழுவை ரத்து செய்த உச்சநீதிமன்றம் உத்தரவு தொடர்பாக தவெகவின்
    ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”கரூர் சம்பவத்தில் வலி மிகுந்த நாட்களில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம், இதை கூற வார்த்தைகள் இல்லை. இதற்கு முன்பாக பல ஊர்களுக்கு தவெக தலைவர் விஜய் பயணம் மேற்கொண்டார். கடந்த 50 ஆண்டுகளில் எந்த அரசியல் கட்சிக்கும் இல்லாத எழுச்சியை மக்கள் பதிவு செய்தனர்.

    ஆனால் சில மாவட்டங்களை விடுத்து பிற அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறை ஒத்துழைப்பு வழங்கவில்லை. அசம்பாவிதம் நடந்த கரூருக்கு சென்ற போது காவல்துறை எங்களை வரவேற்றது, இது எங்கும் நடக்காதது. காவல்துறையே எங்களை உரிய இடத்துக்கு அழைத்து கொண்டு சென்றனர். எங்கெல்லாமல் மக்கள் வந்தனரோ அங்கெல்லாம் தவெக தலைவர் விஜய் மக்களை சந்தித்தார்.

    கரூரை பொறுத்த வரைக்கும் அந்த சம்பவம் நடைபெற்ற போது என்னென்ன விவகாரங்கள் நடைபெற்றதோ, அது அனைத்தையும் தலைமை நீதிபதியிடம் நாங்கள் அறிக்கையாக சமர்ப்பிக்க இருக்கிறோம். குறிப்பாக தவெக மாவட்ட செயலாளர் அனைவரையும் சம்பவத்தின்போது தடியடி செய்து போலீஸ் கலைத்தனர். கரூர் விவகாரத்தில் திமுக பல விளையாட்டுகளை விளையாடி உள்ளது.

    எங்கள் மீது எதற்காக திமுகவுக்கு இத்தனை கோபம்,
    ஒட்டு மொத்த தமிழ்நாடு அரசின் நிர்வாகமும் எங்களுக்கு எதிராகவே செயல்பட்டது. தமிழ்நாடு அரசின் மீது எந்த வகையிலும் நம்பிக்கை இல்லை. தமிழ்நாடு அரசு அமைத்த ஒரு நபர் குழு மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு நபரை வைத்து வழக்கை போட்டுவிட்டு அதில் சமந்தமே இல்லாமல் விஜய் மற்றும் அவருடைய அரசியல் மற்றும் அவருடைய தலைமை பண்பு உள்ளிட்டவத்தை குறித்து பேசி இருக்கிறது.

    உச்சநீதிமன்றத்தில் வாதாட எங்களுக்கு வழக்கறிஞர்கள் யாரும் கிடைக்கக் கூடாது என்பதற்காக பல்வேறு சதிகளை அரங்கேற்றி இருக்கிறார்கள். உச்சநீதிமன்றத்தில் எங்களுடைய தரப்பு அனைத்து நியாயங்களையும், கோரிக்கைகளையும் மூத்த வழக்கறிஞர்கள் கோபால் சுப்பிரமணியன் மற்றும் அரியமா சுந்தரம் மூலமாக நாங்கள் எடுத்து வைத்தோம்” என்றார்.

    மேலும் கரூரில் உயிரிழந்த 41 குடும்பங்களையும் வாழ்க்கை முழுவதும் தத்தெடுத்து அவர்களோடு பயணம் செய்ய தவெக தலைவர் விஜய் முடிவெடுத்துள்ளதாக ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article+1 மாணவர்களுக்கு புதிய வாய்ப்பு – Arrear தேர்வு அறிவிப்பு!
    Next Article எதிர்க்கட்சியாக இருந்தபோது தேவை; இப்போது சிபிஐ விசாரணை தேவையில்லையா? – அண்ணாமலை கேள்வி
    Editor TN Talks

    Related Posts

    தமிழக காவல் அதிகாரிகள் 56 பேர் பணியிட மாற்றம்!

    June 15, 2026

    இந்தியா- சுலோவாகியா இடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    June 15, 2026

    கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை! தவெக பிரமுகர் கைது!

    June 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழக காவல் அதிகாரிகள் 56 பேர் பணியிட மாற்றம்!

    வரும் 18ல் ‘தனுஷ் 55‘அப்டேட்!

    இந்தியா- சுலோவாகியா இடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை! தவெக பிரமுகர் கைது!

    விண்ணிலும் கடலிலும் இனி இந்தியா கெத்து… நிஜமாகும் பாதுகாப்பு அரண்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.