Close Menu
    What's Hot

    மீண்டும் எகிறி அடித்த தங்கம் விலை!. சவரனுக்கு ரூ.1,120 உயர்வு!. இன்றைய நிலவரம் இதோ!.

    திருப்பதியில் இன்றுமுதல் இலவச தரிசனம்!. கட்டுக்கடங்காத கூட்டம்!.

    விஜய்யுடன் கூட்டணியை விரும்பாத ப.சிதம்பரம்!. புதிய கட்சி தொடங்குகிறாரா?.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»இபிஎஸ்ஸுக்கு ஷாக் கொடுப்பாரா ஓபிஎஸ்? – நவ.24-ல் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
    அரசியல்

    இபிஎஸ்ஸுக்கு ஷாக் கொடுப்பாரா ஓபிஎஸ்? – நவ.24-ல் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 20, 2025Updated:November 20, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ops eps 1611740822 1620278462 1638336411 1653503923
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அதிமுக-வை ஒருங்கிணைப்பதற்காக தொண்டர்கள் மீட்புக் குழுவை நடத்திக் கொண்டிருக்கும் ஓபிஎஸ் 24-ம் தேதி சென்னையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி இருக்கிறார். இதில் என்ன ‘புரட்சிகரமான’ முடிவை எடுக்கப் போகிறார் என்று தெரியாத நிலையில், அவரது அடுத்த மூவ் குறித்து கலர் கலராய் செய்திகள் பத்திரிகைகளில் இடம் பிடிக்க ஆரம்பித்திருக்கின்றன.

    இபிஎஸ்ஸை பகைத்துக் கொண்டு ஓபிஎஸ் பின்னால் அணி வகுத்த முக்கிய தலைகளில், ஒரத்தநாடு வைத்திலிங்கமும், முதுகுளத்தூர் ராமர் எம்பி-யும் தான் தற்போது மிஞ்சி நிற்கிறார்கள். அதிலும் வைத்திலிங்கம் எந்த நேரத்திலும் எந்தப் பக்கமும் சாயலாம் என்ற பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.

    அதேசமயம், யாரைச் சேர்த்தாலும் ஓபிஎஸ், தினகரனை கட்சிக்குள் விடவே மாட்டேன் என்று கறாராய் நிற்கிறார் இபிஎஸ். என்றாலும் இவர்கள் இருவரையும் கூட்டணிக்குள் கொண்டுவரும் முயற்சிகளை இன்னமும் கைவிடவில்லை பாஜக. இதனால் இன்னும் காலம் இருக்கிறது என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் இபிஎஸ், மெதுவாகவே அடி எடுத்து வைக்கிறார்.

    இந்த நிலையில், ஓபிஎஸ் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டவிருப்பது குறித்து நம்மிடம் பேசிய மதுரையைச் சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர், ‘‘மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் சட்டசபை தேர்தலுக்கான உத்திகள் குறித்து பேசவிருக்கிறார்கள். எங்களது முதல் நோக்கம், தேர்தலுக்கு முன்பாக அதிமுக-வை ஒருங்கிணைப்பது.

    பழனிசாமி அதற்கு இனியும் தடையாக இருந்தால் தினகரன், செங்கோட்டையனுடன் இணைந்து எங்களுக்கு வாய்ப்புள்ள கூட்டணியில் இடம்பிடித்து பழனிசாமி நிறுத்தும் வேட்பாளர்களை காலிசெய்து அவருக்கு நாங்கள் யார் என்பதை புரியவைப்போம்.

    இதன் மூலம், தேர்தலுக்குப் பிறகுஅதிமுக-வை ஒருங்கிணைப்பது எங்களின் அடுத்த நோக்கமாக இருக்கும். அதற்காக என்னவெல்லாம் செய்யமுடியுமோ அதை எல்லாம் செய்வோம்” என்றனர்.

    இதனிடையே, தனது போடி தொகுதியை கைப்பற்றும் முதல்வரின் கனவு ஒருபோதும் பலிக்காது என்று ஓபிஎஸ் சொல்லி இருந்தாலும் போடிக்கு பதிலாக திருவாடானை தொகுதியில் போட்டியிடும் யோசனையிலும் இருப்பதாகச் சொல்லும் சிலர், அதற்காக அவரது குடும்பத்தினர் அங்கே சில முன்னேற்பாடுகளை செய்துவருவதாகவும் சொல்கிறார்கள்.எது எப்படி இருந்தாலும் இம்முறையாவது மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஓபிஎஸ் அதிரடியாக எதையாவது பேசி இபிஎஸ்ஸுக்கு நிஜமாகவே ஷாக் கொடுக்கிறாரா(!) என்று பார்க்கலாம்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபொங்கலுக்கு ரூ.5,000 போனஸ்? – பிஹார் பாணியில் கஜானாவை திறக்க திமுக திட்டம்
    Next Article அடுத்தடுத்து விலகும் முன்னாள் எம்எல்ஏக்கள்! – இருப்பைத் தொலைக்கிறதா புதுச்சேரி அதிமுக?
    Editor TN Talks

    Related Posts

    பொங்கல் கரும்பை உழவர்களிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்- அன்புமணி

    January 1, 2026

    “2026-ல் தர்மம் வெல்லும்; 26 தொகுதிகளில் பா.ம.க வெற்றி நிச்சயம்!” -பா.ம.க செயல் தலைவர் ப.ஸ்ரீகாந்தி

    January 1, 2026

    பொங்கல் போனஸ்!. அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்!. யார் யாருக்கு கிடைக்கும்?

    January 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மீண்டும் எகிறி அடித்த தங்கம் விலை!. சவரனுக்கு ரூ.1,120 உயர்வு!. இன்றைய நிலவரம் இதோ!.

    திருப்பதியில் இன்றுமுதல் இலவச தரிசனம்!. கட்டுக்கடங்காத கூட்டம்!.

    விஜய்யுடன் கூட்டணியை விரும்பாத ப.சிதம்பரம்!. புதிய கட்சி தொடங்குகிறாரா?.

    தீர்வு கிடைக்குமா?. அரசு ஊழியர்களுடன் அமைச்சர்கள் குழு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை!

    பொங்கல் கரும்பை உழவர்களிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்- அன்புமணி

    Trending Posts

    திருப்பதி சொர்க்க வாசல் தரிசனம்!. டேக்கனே தேவையில்லை!. பக்தர்களுக்கு ஃப்ரீ!.

    December 16, 2025

    மீண்டும் எகிறி அடித்த தங்கம் விலை!. சவரனுக்கு ரூ.1,120 உயர்வு!. இன்றைய நிலவரம் இதோ!.

    January 2, 2026

    திருப்பதியில் இன்றுமுதல் இலவச தரிசனம்!. கட்டுக்கடங்காத கூட்டம்!.

    January 2, 2026

    விஜய்யுடன் கூட்டணியை விரும்பாத ப.சிதம்பரம்!. புதிய கட்சி தொடங்குகிறாரா?.

    January 2, 2026

    தீர்வு கிடைக்குமா?. அரசு ஊழியர்களுடன் அமைச்சர்கள் குழு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை!

    January 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.