அதிமுக-வை ஒருங்கிணைப்பதற்காக தொண்டர்கள் மீட்புக் குழுவை நடத்திக் கொண்டிருக்கும் ஓபிஎஸ் 24-ம் தேதி சென்னையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி இருக்கிறார். இதில் என்ன ‘புரட்சிகரமான’ முடிவை எடுக்கப் போகிறார் என்று தெரியாத நிலையில், அவரது அடுத்த மூவ் குறித்து கலர் கலராய் செய்திகள் பத்திரிகைகளில் இடம் பிடிக்க ஆரம்பித்திருக்கின்றன.
இபிஎஸ்ஸை பகைத்துக் கொண்டு ஓபிஎஸ் பின்னால் அணி வகுத்த முக்கிய தலைகளில், ஒரத்தநாடு வைத்திலிங்கமும், முதுகுளத்தூர் ராமர் எம்பி-யும் தான் தற்போது மிஞ்சி நிற்கிறார்கள். அதிலும் வைத்திலிங்கம் எந்த நேரத்திலும் எந்தப் பக்கமும் சாயலாம் என்ற பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.
