Close Menu
    What's Hot

    பிரமாண்டமாக தயாராகும் புராண கதையில் அல்லு அர்ஜூன்!

    டெல்லி மெட்ரோ ரயில் புதிய வழித்தடங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்பதல்!

    கார்கள் மீது அரசுப் பேருந்து மோதி பயங்கர விபத்து! பலி 9ஆக உயர்வு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»திராவிட இயக்கத்தின் இலட்சியக் கவிஞர்…. மறைந்த ஈரோடு தமிழன்பனுக்கு வைகோ புகழாரம்
    தமிழ்நாடு

    திராவிட இயக்கத்தின் இலட்சியக் கவிஞர்…. மறைந்த ஈரோடு தமிழன்பனுக்கு வைகோ புகழாரம்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 22, 2025Updated:November 23, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vaiko
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவுக்கு மதிமுக பொது செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:

    தமிழ் இலக்கிய உலகில் ஒளிர்ந்த நட்சத்திரம் ஈரோடு தமிழன்பன் அவர்கள் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

    ஈரோடு மாவட்டத்திலுள்ள சென்னிமலையில் பிறந்த ந.ஜெகதீசன், கல்லூரியில் படிக்கிற நாள்களிலேயே தமிழன்பன் எனும் புனைபெயரில் கவிதைகளை எழுதினார்.

    டாக்டர் கலைஞர் அவர்களின்  தலைமையிலான கவியரங்கில் அவர் பங்கேற்ற போது, ‘ஈரோடு தமிழன்பன்’ என கலைஞர் அழைக்கவே, அதுவே பின்னாளில் பெயராக நிலைத்தது.

    புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் கவிதைகளால் ஈர்க்கப்பட்டு அவர் மீது பற்று கொண்டார்.

    கல்லூரியின் இளங்கோ மன்ற ஆண்டு விழாவிற்குத்  தலைமையேற்க, பாவேந்தரை அழைத்து வந்தார் தமிழன்பன்.

    பாரதிதாசனின் கவிதைகள் மீதான ஈர்ப்பும், அவருடனான நட்பும் தமிழன்பனுக்குப் பெரும் ஊக்கத்தை வழங்கின. கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு புரட்சிக் கவிஞரோடு பத்தாண்டுக் காலம் உடன் பயணித்தார். தமிழன்பனின் ‘நெஞ்சின் அலைகள்’ நாவலின் கையெழுத்துப் பிரதியை வாசித்த பாரதிதாசன், அதனை நூலாக்க உதவினார். பாரதிதாசன் மறைவுக்குப் பிறகு 1965இல் அந்த நாவல் வெளிவந்தது.

    அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியையும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலைப் பட்டத்தையும், முனைவர் பட்டத்தையும் பெற்றார். மரபுக் கவிதைகளை எழுதிக்கொண்டிருந்த தமிழன்பன், புதுக்கவிதையின் பக்கமாகத் தன் கவனத்தைத் திருப்பினார்.

    தமிழ்க் கவிதைப் பரப்பில், முன்னை மரபுக்கும் பின்னை புதுமைக்கும் பாலமாக இருந்து தமிழ் இலக்கிய உலகில் சிகரம் தொட்டவர்.

    சென்னை புதுக்கல்லூரி தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற தமிழன்பன், முன்பே ‘பொதிகை தொலைக்காட்சி’யில் பகுதிநேர செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றினார்.

    கவிதை, நாவல் எழுதியதோடு சிறுகதை, நாடகம், சிறார் இலக்கியம், வாழ்க்கை வரலாறு, திறனாய்வு, மொழிபெயர்ப்பு எனப் பல வகைமைகளிலும் 100-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இந்தி, வங்காளம், மலையாளம், ஆங்கிலம், உருது உள்ளிட்ட பல மொழிகளிலும் அவரது கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

    நிறவெறிக்கு எதிராகப் போராடிய ஆப்பிரிக்க – அமெரிக்கத் தலைவரான மார்ட்டின் லூதர் கிங் வாழ்க்கையைக் கவிதை வடிவில், ‘காலத்தால் மறையாத கருப்புச் சூரியன்’ எனும் நூலாக எழுதினார் தமிழன்பன்.

    தமிழ் இன உணர்வும் தன்மான உணர்வும் ஈரோடு தமிழன்பன் அவர்களை திராவிட இயக்கத்தின் இலட்சியக் கவிஞர்கள் வரிசையில் இடம்பெறச் செய்தது.

    “வணக்கம் வள்ளுவ“ என்ற நூலுக்காக சாகித்திய அகாதமி விருது பெற்ற ஈரோடு தமிழன்பன், தமிழ் மொழிக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் ஆற்றிய அருந்தொண்டு என்றென்றும் நிலைத்து நிற்கும்.

    ஈரோடு தமிழன்பன் அவர்கள் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் இலக்கிய ஆர்வலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு வைகோ குறிப்பிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஈரோடு தமிழன்பன் மறைவுக்கு மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல்
    Next Article தமிழர் பகுதிகளில் சிங்கள மேலாதிக்கத்தை நிறுவ முயலும் இலங்கை அரசாங்கத்தை இந்திய அரசாங்கம் கண்டிக்க வேண்டும்: ராமதாஸ்
    Editor TN Talks

    Related Posts

    கார்கள் மீது அரசுப் பேருந்து மோதி பயங்கர விபத்து! பலி 9ஆக உயர்வு!

    December 24, 2025

    பொங்கலுக்கு ரூ.5,000?. அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்!. அமைச்சர் அன்பில் மகேஷ் கொடுத்த அப்டேட்!

    December 24, 2025

    பெரியாரின் சமத்துவப் பாதையில் பயணித்து, சமூக நீதியை வென்றெடுப்போம்!. விஜய் ட்வீட்!

    December 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிரமாண்டமாக தயாராகும் புராண கதையில் அல்லு அர்ஜூன்!

    டெல்லி மெட்ரோ ரயில் புதிய வழித்தடங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்பதல்!

    கார்கள் மீது அரசுப் பேருந்து மோதி பயங்கர விபத்து! பலி 9ஆக உயர்வு!

    ரஷ்யா உடனான போர்: அமைதி ஒப்பந்தத்தை ஏற்றது உக்ரைன்!

    413 ரன்களை சேஸிங் செய்த கர்நாடக அணி! ஆரம்பம் முதல் அனல் பறந்த போட்டி

    Trending Posts

    கோலி, ரோஹித் அதிரடி சதம்! டெல்லி, மும்பை அணிகள் வெற்றி

    December 24, 2025

    கிங் கோலி மேலும் ஒரு சாதனை! சச்சினின் சாதனை முறியடிப்பு

    December 24, 2025

    அதிமுக 170, பாஜக 23, பாமக 23… கசிந்தது தொகுதி பங்கீடு

    December 24, 2025

    விரைவில் வடமாவட்டங்களில் சுற்றுப்பயணம்! தேர்தலுக்கு தயாராகும் இபிஎஸ்

    December 24, 2025

    வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பாகுபலி ராக்கெட்!

    December 24, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.