Close Menu
    What's Hot

    அதிமுகவிடம் 60 தொகுதிகளை கேட்கும் பாஜக… இபிஎஸ்சுடன் பியூஷ் கோயல் பேச்சு

    சென்னை – தூத்துக்குடிக்கு ரூ.13,400! 3 மடங்கு உயர்ந்த விமானக் கட்டணம்

    விஜய்யும், சீமானும் ஆர்எஸ்எஸ்சின் கையாட்கள்! புட்டு புட்டு வைத்த திருமாவளவன்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»இங்கிலாந்து அணிக்கு தொடர்ந்து தண்ணி காட்டி வரும் மிட்செல் ஸ்டார்க் !!!
    விளையாட்டு

    இங்கிலாந்து அணிக்கு தொடர்ந்து தண்ணி காட்டி வரும் மிட்செல் ஸ்டார்க் !!!

    Editor web2By Editor web2December 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20251206 233302
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் ஆஷஸ் தொடரில் இரண்டாவது போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இரண்டாவது போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி அதனுடைய முதல் இன்னிங்ஸில் 334 ரன்கள் எடுத்தது. அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 136 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க் ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்

    பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா அணி அதனுடைய முதல் இன்னிங்ஸில் 511 ரன்கள் குவித்து இருக்கிறது. அணியில் அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க் 77 ரன்கள் எடுத்து அசத்தினார்.

    முதல் இன்னிங்ஸில் பந்துவீச்சில் ஆறு விக்கெட்டுகள் என்று ஒரு பக்கம் அசத்த மறுபக்கம் முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் 77 ரன்கள் எடுத்து மிட்செல் ஸ்டார்க் இங்கிலாந்து அணிக்கு தண்ணி காட்டி வருகிறார். ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை கதிகலங்க வைத்து ஆட்டநாயகன் விருது வாங்கினார்.

    முதல் போட்டியின் தொடர்ச்சியாக தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இரண்டாவது போட்டியிலும் பந்து வீச்சு பேட்டிங் என இரண்டிலும் இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்கிறார்.

    20251206 232701

    பகல் இரவு ஆட்டமாக நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் ஒரு போட்டியில் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகள் மற்றும் ஒரு அரை சதம் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை மிட்செல் ஸ்டார்க் தட்டிச் சென்றுள்ளார்.

    20251206 233146

    அதேபோல டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஒன்பதாவது இடத்தில் களம் இறங்கி அதிக ரன்கள் அடித்த வீரர் என்கிற பெருமையையும் அவர் தட்டிச் சென்று இருக்கிறார்.

    20251206 235051

     

    177 ரன்கள் பின் தங்கிய நிலையில் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்து தடுமாறிக் கொண்டிருக்கிறது. இரண்டாவது இன்னிங்ஸிலும் மிட்செல் ஸ்டார்க் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    20251206 234941

    ஏறக்குறைய நாளை ஒரு சில மணி நேரங்களில் இந்த போட்டி நிறைவு பெறும். முதல் போட்டியை தொடர்ந்து இந்த இரண்டாவது போட்டியிலும் மிட்செல் ஸ்டார்க் ஆட்ட நாயகன் என்பதை தட்டிச் செல்லப் போகிறார் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

    Ashes Test cricket Australia england Gabba Mitchell Starc
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎலைட் வீரர்கள் வரிசையில் இணைந்த ரோஹித் ஷர்மா; இந்திய ரசிகர்கள் உற்சாகம் !!!
    Next Article அடுத்த இலக்கு சுங்க வரி சீர்திருத்தம்: நிதியமைச்சர் தகவல்
    Editor web2
    • Website

    Related Posts

    கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு… சிஎஸ்கே முன்னாள் வீரர் அறிவிப்பு

    December 23, 2025

    பாகிஸ்தானிடம் படுதோல்வி!. கேப்டன், கோச் மீது நடவடிக்கையா?. பிசிசிஐ அதிரடி!

    December 23, 2025

    இந்திய வீராங்கனைகளுக்கு ஜாக்பாட்!. 150% வரை சம்பள உயர்வு!. பிசிசிஐ அதிரடி அறிவிப்பு

    December 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அதிமுகவிடம் 60 தொகுதிகளை கேட்கும் பாஜக… இபிஎஸ்சுடன் பியூஷ் கோயல் பேச்சு

    சென்னை – தூத்துக்குடிக்கு ரூ.13,400! 3 மடங்கு உயர்ந்த விமானக் கட்டணம்

    விஜய்யும், சீமானும் ஆர்எஸ்எஸ்சின் கையாட்கள்! புட்டு புட்டு வைத்த திருமாவளவன்

    “என்னை ஏமாத்திட்டாங்க..” விஜய் காரை மறித்து கதறிய பெண்! பரபரப்பான பனையூர்!!

    கூடங்குளத்தில் ஐயப்ப பக்தர்களின் மண்டல பூஜை விழா

    Trending Posts

    இன்று தமிழகம் வருகிறார் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல்!. EPS உடன் பேச்சுவார்த்தை!.

    December 23, 2025

    கூடங்குளத்தில் ஐயப்ப பக்தர்களின் மண்டல பூஜை விழா

    December 23, 2025

    சென்னையில் அதிர்ச்சி!. திருமணமான 9 நாட்களில் மனைவியை கொன்று தற்கொலை செய்துகொண்ட கணவன்!.

    December 23, 2025

    உலகின் மிகக் கொடூரமான சர்வாதிகாரி!. இந்தியர்களை நாட்டை விட்டு வெளியேற்றிய இடி அமீன்!.

    December 23, 2025

    இந்திய வீராங்கனைகளுக்கு ஜாக்பாட்!. 150% வரை சம்பள உயர்வு!. பிசிசிஐ அதிரடி அறிவிப்பு

    December 23, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.