Close Menu
    What's Hot

    ராகுல் காந்தி பொய் பிரசாரங்களின் தலைவர்; நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர்!. கடும் விமர்சனம்!

    பாகிஸ்தானிடம் படுதோல்வி!. கேப்டன், கோச் மீது நடவடிக்கையா?. பிசிசிஐ அதிரடி!

    உலகின் மிகக் கொடூரமான சர்வாதிகாரி!. இந்தியர்களை நாட்டை விட்டு வெளியேற்றிய இடி அமீன்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இறுதிப் போட்டியில் இந்தியா- பாக். மோதல்
    விளையாட்டு

    ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இறுதிப் போட்டியில் இந்தியா- பாக். மோதல்

    Editor web1By Editor web1December 19, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Cric
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    12வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    துபாயில் 19 வயதுக்குட்பட்டோருக்கான 12வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. லீக் சுற்று முடிவில் தொடரின் அரையிறுதிக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்காளதேச அணிகள் தகுதி பெற்றன.

    அதன்படி, முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேச அணிகள் மோதின. இதில், வங்கதேசத்தை வீழ்த்திய பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

    மற்றொரு  அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி மழை காரணமாக தாமதமாக தொடங்கியது. இதனால், போட்டி 20 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

    டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஆயுஷ் மாத்ரே பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்தது. இந்திய வீரர்கள் ஹெனில் படேல் மற்றும் கனிஷ்க் சவுஹான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    139 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின், தொடக்க ஆட்டக்காரர்கள் ஆயுஷ் மாத்ரே 7 ரன்களிலும், வைபவ் சூர்யவன்ஷி 9 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இருப்பினும் ஆரோன் ஜார்ஜ்- விஹான் மல்ஹோத்ரா இணை சிறப்பாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். 18 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த இந்திய அணி, 139 ரன்கள் அடித்து, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    வரும் 21ம் தேதி நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅரசன்’ படத்தில் ’டூரிஸ்ட் பேமிலி’ நடிகை!
    Next Article வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தால் பதற்றமடைய வேண்டாம்!- இபிஎஸ்
    Editor web1
    • Website

    Related Posts

    பாகிஸ்தானிடம் படுதோல்வி!. கேப்டன், கோச் மீது நடவடிக்கையா?. பிசிசிஐ அதிரடி!

    December 23, 2025

    இந்திய வீராங்கனைகளுக்கு ஜாக்பாட்!. 150% வரை சம்பள உயர்வு!. பிசிசிஐ அதிரடி அறிவிப்பு

    December 23, 2025

    ஆசிய இளைஞர் பாட்மிண்டனில் பதக்கம் வென்ற தமிழக பாரா வீரர்களுக்கு பாராட்டு விழா

    December 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ராகுல் காந்தி பொய் பிரசாரங்களின் தலைவர்; நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர்!. கடும் விமர்சனம்!

    பாகிஸ்தானிடம் படுதோல்வி!. கேப்டன், கோச் மீது நடவடிக்கையா?. பிசிசிஐ அதிரடி!

    உலகின் மிகக் கொடூரமான சர்வாதிகாரி!. இந்தியர்களை நாட்டை விட்டு வெளியேற்றிய இடி அமீன்!.

    இந்திய வீராங்கனைகளுக்கு ஜாக்பாட்!. 150% வரை சம்பள உயர்வு!. பிசிசிஐ அதிரடி அறிவிப்பு

    “இந்திய அரசமைப்பை முழுமையாக அப்புறப்படுத்த பாஜக முயற்சி” – பெர்லினில் ராகுல் காந்தி பேச்சு!

    Trending Posts

    இன்று தமிழகம் வருகிறார் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல்!. EPS உடன் பேச்சுவார்த்தை!.

    December 23, 2025

    இந்திய வீராங்கனைகளுக்கு ஜாக்பாட்!. 150% வரை சம்பள உயர்வு!. பிசிசிஐ அதிரடி அறிவிப்பு

    December 23, 2025

    “இந்திய அரசமைப்பை முழுமையாக அப்புறப்படுத்த பாஜக முயற்சி” – பெர்லினில் ராகுல் காந்தி பேச்சு!

    December 23, 2025

    அரசியலுக்கு வராமலேயே நல்லது செய்ய முடியும்: சிவராஜ்குமார் கருத்து

    December 23, 2025

    விமான ஓடுதளத்தில் தேர்வு: 187 இடத்துக்கு 8,000 பேர் போட்டி

    December 23, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.