தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் தேதி குறித்து, டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதன்படி, தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குபதிவு நடைபெற்று மே 4ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்படுகிறது. வேட்புமனு தக்கல் மார்ச் 30ஆம் தேதி ஏப்ரல் 6ஆம் நாள் நிறைவு பெறுகிறது. வேட்புமனுக்கள் மீது ஏப்ரல் 7ஆம் தேதி பரிசீலனை நடைபெறுகிறது. ஏப்ரல் 9ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெறும் கடைசி நாளாகும்.
புதுச்சேரியில், மார்ச் 16ஆம் தேதி, வேட்புமனு தாக்கல் தொடங்கி, 23ஆம் தேதி நிறைவு பெறுகிறது. மார்ச் 24ஆம் தேதிபரிசீலனை முடிவுற்று மார்ச் 26ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாகும். புதுச்சேரியில் வாக்குப்பதிவு ஏப்ரல் 9ஆம் நாள் நடக்கிறது. மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
இதே போல் கேரளா மற்றும் அசாம் மாநிலங்களில் ஏப்ரல் 9ஆம் நாள் தேர்தல் நடைபெற்று மே 4 ஆம் தேதி முடிவுகள் வெளியாகிறது.
மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 என இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்று மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
