Close Menu
    What's Hot

    டாஸ்மாக் பார்கள் மேலும் 3 மாதங்கள் இயங்க அனுமதி வழங்கப்படுமா? இன்று முக்கிய ஆலோசனை..!

    திருச்சி : காதல் திருமணம் செய்த பெண்ணை கடத்திய பெற்றோர்..! சினிமா பாணியில் விரட்டிப் பிடித்த போலீசார்..!

    வெட்கமில்லையா விஜய் அரசே..?? ஸ்டிக்கர் ஒட்ட கல்வெட்டை அகற்றுவதா? கொந்தளித்த திமுக..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மும்பையை புரட்டி எடுக்கும் கனமழை..!! 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..!!
    Featured

    மும்பையை புரட்டி எடுக்கும் கனமழை..!! 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..!!

    editor5By editor5July 6, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 14 3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மராட்டிய மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக மும்பை, தானே மற்றும் பால்கர் மாவட்டங்களில் இன்று அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பை முன்னிட்டு மாநில அரசு எடுத்துள்ள இந்த முடிவு, பெற்றோர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

    இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்ட எச்சரிக்கையின்படி, கோவா, ஒடிசா, குஜராத், மராட்டியம் உள்ளிட்ட மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரை மாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக 24 மணி நேரத்தில் 204.4 மில்லிமீட்டருக்கு மேல் மழை பெய்யக் கூடிய பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. மும்பை, தானே மற்றும் பால்கர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மழை தொடர்ந்து பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நேற்று மராட்டியத்தில் பெய்த கனமழையால் மும்பையில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதிக காற்றுடன் கூடிய மழையில் ஒரு மரம் முறிந்து விழுந்ததில் இரு பேர் சிக்கி உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்தது. சாலைகளில் நீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரயில் சேவைகள் தாமதமடைந்தன. பல குடியிருப்பு பகுதிகளில் மின்விநியோகம் தடைபட்டது. மக்களின் அன்றாட வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    மும்பை மாநகராட்சி (BMC) வெளியிட்ட அறிக்கையில், “பலத்த காற்று, உயர் அலை மற்றும் தொடர் மழை காரணமாக தேவை இல்லாத நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்” என்று மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. எனினும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வாளர்கள், இந்த மழை அடுத்த இரு நாட்களுக்கு தொடரும் என கணித்துள்ளனர். மலைப்பகுதிகளில் மண்சரிவு, கடற்கரைப் பகுதிகளில் வெள்ள அபாயம் அதிகம் உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மீனவர்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த கனமழை மராட்டியத்தின் பொருளாதார நடவடிக்கைகளையும் பாதித்துள்ளது. குறிப்பாக, விவசாயம் மற்றும் போக்குவரத்துத் துறைக்கு சவாலாக உருவெடுத்துள்ளது. மாநில அரசு நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. மக்களும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    Heavy Rain Mumbai
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleICC T20 உலகக் கோப்பை 2026: சரித்திரம் படைத்த ஆஸ்தி., மகளிரணி..!! இங்கிலாந்தை வீழ்த்தி 7வது பட்டம்..!!
    Next Article மும்பையில் சோக சம்பவம்..!! கனமழையால் இடிந்து விழுந்த கட்டிடம்.. 6 பேர் பரிதாப பலி..!!
    editor5

    Related Posts

    டாஸ்மாக் பார்கள் மேலும் 3 மாதங்கள் இயங்க அனுமதி வழங்கப்படுமா? இன்று முக்கிய ஆலோசனை..!

    July 6, 2026

    திருச்சி : காதல் திருமணம் செய்த பெண்ணை கடத்திய பெற்றோர்..! சினிமா பாணியில் விரட்டிப் பிடித்த போலீசார்..!

    July 6, 2026

    வெட்கமில்லையா விஜய் அரசே..?? ஸ்டிக்கர் ஒட்ட கல்வெட்டை அகற்றுவதா? கொந்தளித்த திமுக..!!

    July 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டாஸ்மாக் பார்கள் மேலும் 3 மாதங்கள் இயங்க அனுமதி வழங்கப்படுமா? இன்று முக்கிய ஆலோசனை..!

    திருச்சி : காதல் திருமணம் செய்த பெண்ணை கடத்திய பெற்றோர்..! சினிமா பாணியில் விரட்டிப் பிடித்த போலீசார்..!

    வெட்கமில்லையா விஜய் அரசே..?? ஸ்டிக்கர் ஒட்ட கல்வெட்டை அகற்றுவதா? கொந்தளித்த திமுக..!!

    கல்வி இன்று கோயிலாக இல்லை; கடையாக மாறிவிட்டது..! மாணிக்கம் தாகூர் கண்டனம்..!

    நேட்டோ மாநாட்டில் ஜெலன்ஸ்கியை சந்திக்கிறார் டிரம்ப்..!! உக்ரைன் போர் முடிவுக்கு புதிய முயற்சி..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.