Close Menu
    What's Hot

    அதிக கோல்கள் அடித்தால் மட்டும் போதாது! “கோல்டன் பூட்” விருதுக்கான பிஃபா-வின் புதிய விதிகள் என்ன?

    அதிமுகவினர் மாறவில்லை ; தவெகவால் விலை பேசப்பட்டவர்கள் கட்சி மாறியிருக்கிறார்கள் – அக்ரி கிருஷ்ணமூர்த்தி

    அரசு பேருந்து கட்டணத்திலேயே 500 ஆம்னி பேருந்துகளை இயக்க தயார்!. முதலமைச்சரிடம் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கரூரில் வைரலான போஸ்டர்… விஜய், ஜோதிமணி பெயர்களால் கிளம்பிய விவாதம்..!!
    Featured

    கரூரில் வைரலான போஸ்டர்… விஜய், ஜோதிமணி பெயர்களால் கிளம்பிய விவாதம்..!!

    editor5By editor5July 17, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 28
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கரூர் மாவட்டத்தில் கோவில்களுடன் தொடர்புடைய இனாம் நிலங்கள் தொடர்பான நீண்டகால பிரச்சினை அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்து சமய அறநிலையத் துறை சமீபத்தில் பிறப்பித்த உத்தரவு ஒருபுறம் விவாதங்களை கிளப்ப, அதைப் பாராட்டி காங்கிரசார் ஒட்டிய நன்றி போஸ்டர் மற்றொரு சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

    மாவட்டத்தில் புகழிமலை பாலசுப்பிரமணியர், கல்யாண பசுபதீஸ்வரர், குப்புச்சிபாளையம் ரவீஸ்வரர், வெஞ்சமாங்கூடலூர் விக்ருதீஸ்வரர் உள்ளிட்ட நான்கு கோவில்களுடன் இணைக்கப்பட்ட சுமார் 3,084.95 ஏக்கர் இனாம் நிலங்களின் பத்திரப்பதிவு தடையை நீக்க அறநிலையத் துறை உத்தரவிட்டது. 1963-ம் ஆண்டு மைனர் இனாம் ஒழிப்புச் சட்டத்தின்படி, இந்த நிலங்கள் பல கிராமங்களில் 471 சர்வே எண்களில் பரவியுள்ளன. சுமார் 3,390 பட்டாதாரர்கள் பயனடையும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசு தரப்பு தெரிவிக்கிறது.

    இந்த உத்தரவு வெளியான சில நாட்களிலேயே, கரூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் கீர்த்தன் பெரியசாமி பெயரில் நன்றி தெரிவிக்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அதில், “கரூரில் 3,084 ஏக்கர் இனாம் நிலப் பிரச்சினையைத் தீர்த்து மக்களின் நீண்டகால கனவை நனவாக்கிய கர்த்தரின் தேவதூதராகிய முதல்வர் ஜோசப் விஜய்” என்றும், “கரூர் மக்களின் இதயங்களில் மாரியம்மனாக வாழும் எம்.பி. ஜோதிமணி” என்றும் புகழ்ந்து எழுதப்பட்டிருந்தது. இந்த வாசகங்கள் இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாக பாஜக, இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சமூக வலைதளங்களில் போஸ்டரின் படங்கள் வேகமாகப் பரவி, ஆதரவு-எதிர்ப்பு விவாதங்களை தூண்டியுள்ளன.

    பாஜக மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் இதை “இந்து சமய உணர்வுகளுக்கு எதிரான செயல்” என்று விமர்சித்துள்ளனர். மறுபுறம், சில தரப்பினர் இந்த நிலங்கள் உண்மையில் கோவில் சொத்துகள் அல்ல; இனாம் சட்டத்தின்படி மக்களுக்கு வழங்கப்பட்ட ரயத்துவாரி பட்டா நிலங்கள் என்று விளக்குகின்றனர். தவறுதலாக தடை விதிக்கப்பட்டதை நீக்கியதாகவும் அரசு தரப்பு கூறுகிறது. இந்த விவகாரம் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்காக உள்ள நிலையில், இறுதி முடிவு நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பொறுத்தே அமையும்.

    jothimani Karur viral poster
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபழநி கோயில் நில மோசடி விவகாரம்..! அறநிலையத்துறை அதிகாரிகள் சிபிசிஐடி விசாரணை..!
    Next Article அர்ஜென்டினா – ஸ்பெயின் உலகக் கோப்பை இறுதிப் போட்டி..!! ரசிகர்களுடன் நேரில் ரசிக்கிறார் அதிபர் டிரம்ப்..!!
    editor5

    Related Posts

    அதிக கோல்கள் அடித்தால் மட்டும் போதாது! “கோல்டன் பூட்” விருதுக்கான பிஃபா-வின் புதிய விதிகள் என்ன?

    July 17, 2026

    அதிமுகவினர் மாறவில்லை ; தவெகவால் விலை பேசப்பட்டவர்கள் கட்சி மாறியிருக்கிறார்கள் – அக்ரி கிருஷ்ணமூர்த்தி

    July 17, 2026

    அரசு பேருந்து கட்டணத்திலேயே 500 ஆம்னி பேருந்துகளை இயக்க தயார்!. முதலமைச்சரிடம் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை!

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அதிக கோல்கள் அடித்தால் மட்டும் போதாது! “கோல்டன் பூட்” விருதுக்கான பிஃபா-வின் புதிய விதிகள் என்ன?

    அதிமுகவினர் மாறவில்லை ; தவெகவால் விலை பேசப்பட்டவர்கள் கட்சி மாறியிருக்கிறார்கள் – அக்ரி கிருஷ்ணமூர்த்தி

    அரசு பேருந்து கட்டணத்திலேயே 500 ஆம்னி பேருந்துகளை இயக்க தயார்!. முதலமைச்சரிடம் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை!

    காவிரி நீர்;  ஒன்றிய அரசு விவசாயிகளை ஏமாற்றுகிறது – அமைச்சர் ஷாஜஹான் குற்றச்சாட்டு!

    “இப்போது சிரிப்பார்கள்… நாளை என்னைத் தேடி வருவார்கள்!” – சீமான் சீரியஸ் பேச்சு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.