Close Menu
    What's Hot

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»மாநில அளவிலான கோ போட்டி… பதக்கங்களை அள்ளிய மாணவர்கள்…
    தமிழ்நாடு

    மாநில அளவிலான கோ போட்டி… பதக்கங்களை அள்ளிய மாணவர்கள்…

    Editor TN TalksBy Editor TN TalksMay 24, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    37 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பீகாரின், பாட்னாவில் நடைபெற்ற மாநில அளவிலான கோ விளையாட்டுப் போட்டியில், கோவை சேர்ந்த தமிழ்நாடு கோ-கேம் அசோசியேஷன் மாணவ, மாணவியர் 16 மாநிலங்களைச் சேர்ந்த போட்டியாளர்களுடன் மோதி, ஒரு தங்கம் மற்றும் நான்கு வெள்ளிப் பதக்கங்களை வென்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்து உள்ளனர்.

    இப்போட்டியில் மூன்று மாணவிகளும் இரண்டு மாணவர்களும் என மொத்தம் ஐந்து பேர் தமிழகம் சார்பில் பங்கேற்றனர். கடுமையான பயிற்சிக்குப் பிறகு கள மிறங்கிய இவர்கள், ஜூனியர், சப்-ஜூனியர் மற்றும் சீனியர் என மூன்று பிரிவுகளிலும் சிறப்பாக விளையாடினர். அதில் கோவை போத்தனூர் ரயில்வே பள்ளி மாணவி சம்ரிதா தங்கப் பதக்கம்மும், சுந்தராபுரம் பகுதியில் உள்ள செங்கோட்டையன் பள்ளி மாணவி லக்ஷனா, மதுசுந்தராபுரம் பகுதியில் உள்ள விக்னேஸ்வரா மேல்நிலைப் பள்ளி மாணவி அபி மற்றும் மாணவர் சஞ்சய் ஆகிய நான்கு மாணவர்களும் வெள்ளிப் பதக்கமும் வென்று உள்ளனர்.

    36 1

    சர்வதேச அளவில் ஒலிம்பிக் போட்டிகளில் 23-வது இடத்தைப் பிடித்து உள்ள கோ விளையாட்டு, இந்தியாவில் மேலும் பிரபலம் அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
    இந்நிலையில் வெற்றிவாகை சூடி போத்தனூர் ரயில் நிலையத்திற்கு வந்த மாணவர்களுக்கு சால்வை அணிவித்து வற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. இத்தகைய வெற்றிகள் தமிழகத்தில் கோ விளையாட்டின் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    35

    இது குறித்து பயிற்சியாளர் கூறும் போது :

    கோ கேம் என்பது 2500 ஆண்டுகளுக்கு முன்பு சைனாவில் வந்ததாகவும், அவர்கள் விசு, பதுக்கா என்று அழைப்பதாகவும், இது சதுரங்க போட்டி போன்று மூளைக்கான விளையாட்டு என்றும், இந்த கோ கேம் விளையாட்டை ஊக்கப்படுத்த நண்பர்கள் மூலம் மாணவர் ஒருவருக்கு பயிற்சி அளித்ததாகவும், அவரை வைத்துக் கொண்டு இத்தனை பேரை உருவாக்கியதாக தெரிவித்தார். இந்த விளையாட்டுகளை அங்கீகரித்ததற்கு பின்னர் அரசு இந்த விளையாட்டுப் போட்டிகளுக்கு உதவிகள் செய்தால் இன்னும் முன்னேறலாம் என்று கோரிக்கை விடுத்தார்.

    37 1

    தேசிய அளவில் போட்டிகளில் பங்கேற்க உள்ள கல்லூரி மாணவர் கதிர் இது குறித்து கூறும் போது :

    இந்த விளையாட்டு போட்டிகளில் மூன்றாண்டுகளாக தொடர்ந்து பங்கு பெற்று வருவதாகவும், எட்டு பேர் கொண்ட குழுவாக அவர்கள் சென்றதாகவும், இரண்டு தங்கப் பதக்கம், மூன்று வெள்ளி மற்றும் ஒரு வெண்கல பதக்கம் வென்று வந்ததாகவும் கூறினார். அரசு மேற்கொண்டு உதவி செய்தால் மேலும் பல மாணவர்கள் இந்தப் போட்டியில் பதக்கம் வெல்வார்கள் என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகனமழை காரணமாக மூடப்படுகிறது தொட்டப்பட்டா.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
    Next Article மெட்ரோ முதல் மீனவர் உரிமை வரை: பிரதமரிடம் ஸ்டாலின் கோரிக்கைகள்!!
    Editor TN Talks

    Related Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    Trending Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    October 13, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.