Close Menu
    What's Hot

    நாங்கள் யாருக்கும் அஞ்சமாட்டோம்!. 6 மாதத்தில் தவெக ஆட்சி கவிழும்!. அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேச பேச்சு!

    ஈரானில் கமேனியின் பிரம்மாண்ட இறுதிச்சடங்கு தொடங்கியது!. மகன் மொஜ்தபா பங்கேற்கவில்லை!

    தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தொடக்கம்!. 9.30 மணிக்கு மேல் அனுமதி இல்லை!. 

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Uncategorized»திருச்சியுடன் குண்டூரை இணைக்க எதிர்ப்பு.. உயர்நீதிமன்றத்தின் உத்தரவு என்ன?
    Uncategorized

    திருச்சியுடன் குண்டூரை இணைக்க எதிர்ப்பு.. உயர்நீதிமன்றத்தின் உத்தரவு என்ன?

    Editor TN TalksBy Editor TN TalksMay 27, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    28 4
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருச்சி மாநகராட்சியுடன், குண்டூர் ஊராட்சியை இணைப்பதற்கு இறுதி முடிவு எடுக்கும் முன், கிராம மக்களின் எதிர்ப்பு மனுக்களை , முறையாக பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தமிழக ஆளுநரின் செயலாளர், நகராட்சி நிர்வாக துறை செயலாளருக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.

    திருச்சி குண்டூரை சேர்ந்த மரிய மைக்கேல் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குண்டூர் கிராம ஊராட்சியை , திருச்சி மாநகராட்சியுடன் சேர்க்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அரசின் இந்த முடிவை , நகராட்சி நிர்வாகம் மற்றும் குடி நீர் வழங்கல் துறை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட்டு உள்ளது.

     

     

    27 4

    மகாத்மா காந்தி 100 நாள் வேலைத் திட்டத்தின் மூலம் தற்போது சுமார் 1800 பயனாளிகள் பயன்பெற்று வருகிறோம். இது முற்றிலும் தடைபடும். எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும்.மேலும் கடந்த 15.08.2024 அன்று கிராம சபை கூட்டத்தில் குண்டூர், திருவளர்ச்சிப்பட்டி, அய்யம்பட்டி, அயன்புத்தூர் கிராம மக்கள் ஒன்று கூடி, குண்டூர் கிராமத்தே மாநகராட்சியுடன் இணைக்க வேண்டாம் என ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். எனவே, குண்டூர் கிராமத்தை மாநகராட்சியாக மாற்றுவதற்கு எங்களின் ஒட்டுமொத்த ஆட்சேபணையை அரசுக்கு தெரிவித்து மனு அனுப்பி உள்ளோம். அதை பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

    29 3

    இந்த மனு நீதிபதிகள் ஸ்ரீமதி, விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்ட த்தின் 3(2)(c) இன் படி, கிராம மக்களின் ஆட்சேபனை மனுவை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை , குண்டூர் கிராம மக்களின் ஆட்சேபனை மனுவை 2 வாரங்களில், ஆளுநரின் செயலாளருக்கு அனுப்ப வேண்டும்.

    இறுதி உத்தரவை பிறப்பிக்கும் முன், கிராம மக்களின் ஆட்சேபனை மனுவை முறையாக பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும், தமிழக ஆளுநரின் செயலாளர், நகராட்சி நிர்வாக துறை செயலாளருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருமண விவகார செய்திகளை நீக்க வேண்டும்… ஊடகங்களுக்கு ரவி மோகன் நோட்டீஸ்…
    Next Article 60 ஆண்டுகளாக பட்டா இல்லை… வட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டம்…
    Editor TN Talks

    Related Posts

    நாங்கள் யாருக்கும் அஞ்சமாட்டோம்!. 6 மாதத்தில் தவெக ஆட்சி கவிழும்!. அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேச பேச்சு!

    July 4, 2026

    தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தொடக்கம்!. 9.30 மணிக்கு மேல் அனுமதி இல்லை!. 

    July 4, 2026

    தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி வேட்டை!. ரூ.57 லட்சம் பறிமுதல்!

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நாங்கள் யாருக்கும் அஞ்சமாட்டோம்!. 6 மாதத்தில் தவெக ஆட்சி கவிழும்!. அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேச பேச்சு!

    ஈரானில் கமேனியின் பிரம்மாண்ட இறுதிச்சடங்கு தொடங்கியது!. மகன் மொஜ்தபா பங்கேற்கவில்லை!

    தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தொடக்கம்!. 9.30 மணிக்கு மேல் அனுமதி இல்லை!. 

    தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி வேட்டை!. ரூ.57 லட்சம் பறிமுதல்!

    இங்கிலாந்து – இந்தியா 2வது டி20 போட்டி!. முதல் வெற்றி யாருக்கு?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.