Close Menu
    What's Hot

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»திருமண விவகார செய்திகளை நீக்க வேண்டும்… ஊடகங்களுக்கு ரவி மோகன் நோட்டீஸ்…
    சினிமா

    திருமண விவகார செய்திகளை நீக்க வேண்டும்… ஊடகங்களுக்கு ரவி மோகன் நோட்டீஸ்…

    Editor TN TalksBy Editor TN TalksMay 27, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    23 6
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நடிகர் ரவி மோகன் கடந்த 2009-ம் ஆண்டு தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் என்பவரது மகள் ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் திருமண வாழ்க்கையை முறித்துக் கொள்வதாக ரவி மோகன் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

    ஆனால் ரவிமோகனுடன் இணைந்து வாழவே விரும்புவதாக ஆர்த்தி அறிக்கை வெளியிட, அதன் பிறகு தனக்கு விவகாரத்து பெற்றுத் தரக்கோரி ரவி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனக்கு மரியாதை இல்லை எனவும், பொம்மைப் போல் நடத்தப்படுவதாகவும் ரவி, ஆர்த்தி மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதற்கிடையில் தயாரிப்பாளர் ஐசரி கணேசன் இல்ல திருமண விழாவில் பாடகியும், மனநல மருத்துவருமான கெனிஷாவுடன் ஜோடியாக ரவி மோகன் பங்கேற்றது பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

    25 5

    புதிதாக வந்தவர்களால் அழகாக தெரிந்த வாழ்க்கை தற்போது கசக்க ஆரம்பித்து விட்டதாக ஆர்த்தி, தனது மௌனத்தை கலைத்து ரவி மீது சில குற்றச்சாட்டுகளை முன்வைத்து அறிக்கை வெளியிட்டார். அதன் பிறகு மீண்டும் ரவி பலகோடி ரூபாய்க்கு கடனை என்மீது சுமத்தியதாக ஆர்த்தி மட்டுமல்லாது அவரது தாயும், தயாரிப்பாளருமான சுஜாதா மீதும் குற்றசாட்டுகளை முன்வைத்ததோடு, கெனிஷா தனது வாழ்க்கையின் அழகான துணை என்றும் அறிக்கை வெளியிட்டார்.

    இவ்வாறு இருவரும் மாறி மாறி அறிக்கை மூலம் ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக் கொள்ள, ரவி மோகனின் விவாகரத்து வழக்கு கடந்த 21-ம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கோரி ஆர்த்தி மனு தாக்கல் செய்தார். இது தொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு ஜூன் 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    24 6

    இதற்கிடையில், தனக்கு எதிராக அவதூறு கருத்துகளை வெளியிட ஆர்த்திக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கூறி நீதிமன்றத்தில் ரவி மோகன் மனு தாக்கல் செய்திருந்தார்.
    இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இருவரும் அவதூறு கருத்துகளை வெளியிட தடைவிதித்து, ஏற்கனவே பதிவு செய்த கருத்துகளை நீக்க உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மேற்கோள்காடி, தனது திருமண விவகாரம் தொடர்பான செய்திகளை 24 மணி நேரத்தில் நீக்கம் செய்ய வேண்டும் என நடிகர் ரவி மோகன் அனைத்து ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அத்தோடு தன்னைப் பற்றி சமூக வலை தளங்களில் பதிவிட்டுள்ள அவதூறு கருத்துகளை நீக்க வேண்டும் என ஆர்த்தி மற்றும் அவரது தாய் சுஜாதா ஆகியோருக்கும் ரவி மோகன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபுதிய வகை கொரோனா எதுவும் இல்லை… சுகாதாரத்துறை இயக்குநர் விளக்கம்…
    Next Article திருச்சியுடன் குண்டூரை இணைக்க எதிர்ப்பு.. உயர்நீதிமன்றத்தின் உத்தரவு என்ன?
    Editor TN Talks

    Related Posts

    ஜெயிலர் 2 படத்தின் அசத்தல் அப்டேட்..! படக்குழுவின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்..!

    July 2, 2026

    இணையத்தில் வெளியான ஜனநாயகன் படத்தை 1.20கோடி பேர் பார்த்துள்ளனர்..! ஜாமின் மனு தள்ளுபடி..!

    July 2, 2026

    இந்த மாதம் வெளியாகிறதா ‘ஜனநாயகன்’? வைரலாகும் பரபரப்பு தகவல்..!!

    July 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்கள்!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.