Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»“வடசென்னை 2” ஷூட்டிங் அடுத்த ஆண்டில் துவக்கம் – தனுஷ்
    சினிமா

    “வடசென்னை 2” ஷூட்டிங் அடுத்த ஆண்டில் துவக்கம் – தனுஷ்

    Editor TN TalksBy Editor TN TalksJune 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    manikandan1232025m3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    “வடசென்னை 2” ஷூட்டிங் அடுத்த ஆண்டில் தொடங்கப்படும் என்று குபேரா பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் கூறியுள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    தமிழ் சினிமாவின் கல்ட் திரைப்படங்கள் என்று ஒரு பட்டியல் எடுத்துக் கொண்டால் அது வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2018-ம் ஆண்டு வெளிவந்த வடசென்னை படத்திற்கு ஒரு முக்கிய இடமுண்டு.

    வடசென்னையின் கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களை உள்ளடக்கிய அவர்களின் வாழ்வியலை பிரதிபலித்த உன்னத படைப்பு வடசென்னை. கடற்கரையோரங்களில் வசித்து வந்த மீனவ மக்கள், விரிவாக்கம் என்ற பெயரில் எப்படி ஆதிக்க சக்தியினராலும், அரசாலும் பூர்வகுடியில் இருந்து விரட்டப்பட்டனர் என்பதை ரத்தமும்,சதையுமாக விவரித்ததில் வடசென்னை படத்திற்கு முக்கிய பங்கு உண்டு. 1975 தொடங்கி 2000 வரையிலான காலகட்டத்தில் காசிமேடு, ராயபுரம் பகுதியில் எத்தகைய மாற்றங்கள் நிகழ்ந்தன என்பதை வரலாற்றுத் தரவுகளுடன் புனைவு கலந்து உருவாக்கப்பட்ட படைப்பே வடசென்னை.

    இதில் தனுஷ், அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், டேனியல் பாலாஜி, பவன், ஐஸ்வர்யா, ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். மண்ணின் மணத்தோடு எடுக்கப்பட்ட இப்படத்தில் ஒவ்வொருவரும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருந்தனர். பாடல்கள், ஒளிப்பதிவு, பின்னணி இசை, சண்டைக் காட்சிகள் என ஒவ்வொன்றும் குறிப்பிட்டு சொல்லும்படி உலகத்தரத்தில் எடுக்கப்பட்டிருந்தது. பொருளாதாரதீயாகவும், விமர்சன ரீதியாகவும் வடசென்னை படம் அபார வெற்றி பெற்றது.

    இதன் இரண்டாம் பாகம் எப்போது வருமென தனுஷ் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்நிலையில் தெலுங்கின் முன்னணி நடிகரான நாகார்ஜுனாவும், தனுசும் இணைந்து குபேரா என்ற படத்தில் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி உள்ள இப்படத்தை சேகர் கம்முலா தயாரித்து இயக்கி உள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

    இதில் பேசிய நடிகர் தனுஷ், என்னைப்பற்றி வதந்தி பரப்பி முடக்கி விடலாம்னு நெனக்கிறீங்க, தம்பிங்களா கொஞ்சம் தள்ளி போய் விளையாடுங்க, இங்க இந்த சர்க்கஸ் எல்லாம் வேண்டாம். நாலஞ்சு வதந்திகளை பரப்பி என்னை முடிச்சிடலாம்னு நெனச்சா அதைவிட முட்டாள்தனம் வேறெதுவும் இல்லை. என் ரசிகர்கள் எல்லாம் தீப்பந்தம் மாதிரி. அவங்க எரிஞ்சுகிட்டே இருக்கும்வரை நான் போய்ட்டே இருப்பேன். ஒரு செங்கல்லை கூட என்னிடம் இருந்து பிய்த்து எடுக்க முடியாது என்றார்.

    அப்போது வடசென்னை -2 எப்போது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். அடுத்த ஆண்டு படபிடிப்பு தொடங்கும் என்று உற்சாகத்துடன் தனுஷ் கூற, ரசிகர்கள் விசில் சத்தம் பல டெசிபல்களை தாண்டியது.

    dhanush Dhanush News Dhanush Upcoming Movies Kollywood Updates Tamil Cinema News Vada Chennai 2 Vada Chennai Sequel Vada Chennai Shooting Vetrimaaran Vetrimaaran Movies சினிமா அப்டேட் தமிழ் சினிமா தனுஷ் தனுஷ் படங்கள் வடசென்னை 2 வடசென்னை தொடர்ச்சி வெற்றிமாறன்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசிகரெட் புகைக்கும் வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் – அன்புமணி
    Next Article அண்ணா பல்கலை.வழக்கு – பாஜக வரவேற்பு…
    Editor TN Talks

    Related Posts

    மீண்டும் அதிர்ச்சி கொடுத்த விஷால்! போட்டோவை பார்த்து பதறிய ரசிகர்கள்! என்ன ஆச்சு..??

    August 8, 2026

    முதல்வர் விஜய்யிடம் விவாகரத்து கோரும் மனுவை வாபஸ் பெற்றார் சங்கீதா; வழக்கு முடித்து வைப்பு!

    August 7, 2026

    13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வரும் ’மூடர் கூடம் – 2’..! ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பு..!

    August 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.