Close Menu
    What's Hot

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»நேரில் ஆஜராவதில் விலக்குக் கோரி பொன்முடி மனு.. 21-ந் தேதிக்கு ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்..
    தமிழ்நாடு

    நேரில் ஆஜராவதில் விலக்குக் கோரி பொன்முடி மனு.. 21-ந் தேதிக்கு ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்..

    Editor TN TalksBy Editor TN TalksJune 12, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    b9398f21 6fac 467e ab18 b11035cac1e9
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்கக் கோரி, முன்னாள் அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை ஜூன் 21 ம் தேதிக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

    கடந்த 2006 – 2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் உயர்கல்வி மற்றும் கனிம வளங்கள், சுரங்கத்துறை அமைச்சராக க.பொன்முடி பதவி வகித்தபோது, விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் செம்மண் வெட்டி எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.

    பின்னர், செம்மண் முறைகேடு தொடர்பாக கிடைத்த பெருந்தொகை ஹவாலா பரிவர்த்தனை மூலம் வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகக் கூறி, சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் திமுக முன்னாள் எம்.பி. கவுதம சிகாமணி உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக அமலாக்கத் துறை சார்பில் 2023 ஆகஸ்ட் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில், சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத் துறை தரப்பில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    அதில், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன்கள் கவுதம சிகாமணி, அசோக் சிகாமணி ஆகியோர் நிர்வாக இயக்குனர்களாக உள்ள மருத்துவமனை மற்றும் நிறுவனங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெ.ஒம்பிரகாஷ் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன்கள் கவுதம சிகாமணி, அசோக் சிகாமணி உள்ளிட்டோர் நேரில் ஆஜராகியிருந்தனர். அவர்களுக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன.

    இதற்கிடையில் வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலகளிக்க கோரி முன்னாள் அமைச்சர் பொன்முடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அப்போது பொன்முடி தரப்பில், அரசு பணி காரணமாக தன்னால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என்றும், தற்போது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தெரிவித்தார்.

    மேலும் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ வாகவும், திமுகவின் செயற்குழு உறுப்பினராக இருப்பதால் சட்டமன்ற தேர்தல் தொடர்பான பணிகள் தனக்கு வழங்கபட்டிருப்பதையும்,
    தனது வயதையும் கருத்தில் கொண்டு விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என பொன்முடி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    அமலாகத்துறை தரப்பில், பொன்முடி தற்போது திமுகவின் செயற்குழு உறுப்பினராக இல்லை என்பதால் அவர் விசாரணையில் இருந்து ஆஜராக விலக்களிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பொன்முடி நேரில் ஆஜராவதில் விலக்களிக்க கோரிய மனு மீது ஜூன் 21 ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறி, பிரதான வழக்கை ஜூலை 7 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

    Madras High Court Ponmudi Ponmudi court case Ponmudi exemption request Ponmudi high court hearing Ponmudi latest news Tamil Ponmudi legal issue 2025 Ponmudi next hearing date Ponmudi personal appearance case Tamil Nadu minister court update TN minister Ponmudi case
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபாமகவின் தலைவராக நானே நீடிப்பேன் – ராமதாஸ் திட்டவட்டம்
    Next Article பழனி மலையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு… தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவு..
    Editor TN Talks

    Related Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    Trending Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    October 13, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.