Close Menu
    What's Hot

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»ராசிபலன்»முருக பக்தர்கள் மாநாடு குறித்து அவதூறாக பேசுவதா?…
    ராசிபலன்

    முருக பக்தர்கள் மாநாடு குறித்து அவதூறாக பேசுவதா?…

    Editor TN TalksBy Editor TN TalksJune 10, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    7 28
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முருக பக்தர்கள் மாநாடு குறித்து பலரும் அவதூறாக பேசி வருகின்றனர்., இந்துக்களை ஒற்றுமை படுத்தவே இந்த மாநாடு நடைபெறுகிறது. – இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணிய பேட்டி.

    மதுரை பாண்டி கோவில் பகுதியில் உள்ள அம்மா திடலில் ஜூன் 22ஆம் தேதி நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்நிலையில்., நீதிமன்றம் உத்தரவின் பேரில் ஆறுபடை வீட்டின் கோபுரம் போன்ற அமைப்புடன் மட்டுமே மாநாடு நடத்த உத்தரவிட்ட நிலையில், நீதிமன்ற வழிகாட்டுதலின் படி மதுரை வண்டியூர் செல்லும் சாலையில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்தில் 6 படை வீட்டில் இருந்து பூஜிக்கப்பட்ட வேலை எடுத்து வந்து கணபதி ஓமம், வேல் பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து., முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ள இடத்தை இந்து முன்னணி தலைவர் காடேஷ்வரா சுப்ரமணியன் பார்வையிட உள்ளார்.

    முன்னதாக,

    இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசியவர்.

    முருக பக்தர்கள் மாநாட்டில் வருகின்ற 13ஆம் தேதி கண்காட்சி நடைபெற உள்ளது. நேற்றயதினம் 6 படை வீட்டிலிருந்து முருகனின் வேல் எடுத்து வந்து மதுரையில் கட்சி அலுவலகத்தில் அதற்கான பூஜை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த மாநாட்டை பற்றி அவதூறாக பல்வேறு அமைப்பினர் பேசி வருகின்றனர்., இந்துக்களை ஒற்றுமை படுத்தவே முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. பல்வேறு நாடுகளில் இருந்து கலந்து கொள்ள ஏராளமானோர் வருகை தரவுள்ளனர்.

    கிறிஸ்துவர்கள் சென்னிமலை தங்களது என கூறியது குறித்து எந்த கட்சியினரும் கண்டனம் தெரிவிக்க வில்லை. மேலும்., திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தின் எதிரொலியாகவும் இந்த மாநாடு திருப்பு முனையாக அமையும். மாநாட்டில் கலந்து கொள்ள முதல்வருக்கு அழைப்பு விடுக்க காத்திருக்கிறோம். அவர் அனுமதி கொடுத்தல் அவரை சந்தித்து அழைப்பு கொடுக்க உள்ளோம். உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்தனார்., ஆந்திர துணை முதல்வர் பவன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளார்.

    திமுக மட்டுமின்றி அதனை சாராத நாம்தமிழர் கட்சி மற்றும் இந்துக்களை ஆதரிக்கின்ற கட்சியினர் உட்பட அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

    நீதிமன்ற உத்தரவு 13ஆம் தேதி நல்ல முடிவு வரும் என நம்புகிறோம். திமுகவின் அமைச்சர் சேகர் பாபு இந்த மாநாட்டிற்கு வர மாட்டார்கள் என ஏன் கவலை பட வேண்டும்.? ஜூலை 7ஆம் தேதி நடைபெற உள்ள மாநாட்டிற்கு தான் மக்கள் வருவார்கள் என கூறுகிறார்.! கடவுள் இல்லை என்று கூறியவர்கள் கூட முருக பக்தர்கள் மாநாடு நடத்துகின்றனர். தாராளமாக நடத்தட்டும் ஆனால் ஏன் பயப்படுகிறார்.? அச்சுகிறார் என தெரியவில்லை.

    இந்துக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது 2026 இல் தேர்தல் வருகிறது.! சிறுபான்மை ஓட்டு பறிபோகி விடுமோ என்று எண்ணத்தில் திமுகவினர் உள்ளனர்.

    நீங்கள் கூறிய இயக்கங்கள் எல்லாம் நக்சலைட் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்., இந்துக்களை அவதூறாக பேசுபவர்கள்.! நக்கலைட் சிந்தனைகள் உள்ளவர்களிடம் வேறு எதுவும் எதிர்பார்க்க முடியாது.!

    எந்த அரசியல் கட்சி தான் நிதி வாங்காமல் இருகிறது என சொல்லுங்கள்.! பொய்யான அரசியல் செய்யவே மதுரையில் காவல்துறையினர் எங்கள் நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர்..! இந்த மாநாட்டை தடுக்கவே இதுபோன்ற பொய் வழக்குகள் போட்டு காவல்துறையினர் இது போன்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நடிகர் ரஜினிக்கு அழைப்பு விடுத்திருக்கிறோம் அவர் நிச்சயம் வருகிறேன் என கூறியுள்ளார். அதேபோல்இயக்குனர் மோகன் மற்றும் ரஞ்சித் ஆகியோர் கலந்து கொள்கிறோம் என கூறி இருக்கிறார்கள் என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகல்வி நிதியில் கோட்டை விட்ட தமிழக அரசு – அன்புமணி சாடல்
    Next Article தொழில் முனைவர் திட்ட முறைகேடு: சிபிஐ விசாரணை கோரிக்கையை நிராகரித்த சென்னை உயர்நீதிமன்றம்
    Editor TN Talks

    Related Posts

    12 ராசிகளுக்கான வார பலன்கள் @ டிச.26 – 31

    December 26, 2025

    இன்று நாள் எப்படி? 12 ராசிகளுக்கும் துல்லிய கணிப்பு

    December 26, 2025

    ஜோதிட நாள்காட்டி 25.12.2025 | மார்கழி 10

    December 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    Trending Posts

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    December 27, 2025

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    December 27, 2025

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    December 26, 2025

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    December 26, 2025

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    December 26, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.