Close Menu
    What's Hot

    குழந்தைகளை தாக்கும் புதிய கோவிட் வைரஸ்!. இந்தியாவிற்கு ஆபத்து?. அறிகுறிகள் என்ன?

    அண்ணாமலைக்கு சீட் கொடுக்காதது ஏன்?. பியூஷ் கோயல் பதில்!

    பெரம்பூர் – திருச்சி கிழக்கு!. விஜய் தாக்கல் செய்த தேர்தல் பிரமாணப் பத்திரங்களில் குளறுபடி?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»ரவி மோகன் வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய வங்கி
    சினிமா

    ரவி மோகன் வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய வங்கி

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 24, 2025Updated:September 24, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250924 WA0103
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நடிகர் ரவி மோகனின் ஈசிஆர் சொகுசு பங்களா வீட்டிற்கு வாங்கிய கடனை முறையாக செலுத்தாததால் தனியார் வங்கி அதிகாரிகள் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.

    சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் ரவி மோகனின் சொகுசு பங்களா வீட்டை (ICICI BANK) தனியார் வாங்கி கடனில் வாங்கியுள்ளார். கடந்த 11 மாதங்களாக கடன் தொகையை ரவி மோகன் செலுத்தாததால் வங்கி நிர்வாகம் சார்பில் மூன்று அதிகாரிகள் ரவி மோகன் வீட்டில் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டினர்.

    தொடர்ந்து வாங்கிய கடனை கட்டாவிட்டால் விரைவில் வீட்டை ஜப்தி செய்ய உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக வங்கி சார்பில் ரவி மோகனுக்கு கொரியர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், அதற்கு எந்தப் பதிலும் அளிக்கப்படாத நிலையில் இன்று இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் ரவி மோகன் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் “டச் கோல்ட் யுனிவர்சல்” என்ற தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.அந்த தயாரிப்பு நிறுவனத்துடன் ரவி மோகன் கடந்த 2024 செப்டம்பரில் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், முதல் படத்திற்காக அவருக்கு முன்பணமாக ரூ.6 கோடி வழங்கப்பட்டதாகவும், ஆனால் ரவி மோகன் அந்த நிறுவனத்தின் படத்தில் நடிக்காமல், வேறு நிறுவனத்தின் படங்களில் நடித்து வருவதாகவும் அந்த நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.

    தங்களுடைய பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டபோது ரவி மோகன் உறுதியளித்ததாகவும், ஆனால் பணத்தைத் திருப்பித் தராமல் தனது சொந்தத் தயாரிப்பில் படம் எடுத்து வருவதாகவும் அந்த நிறுவனத்தின் இயக்குநர் பாலசந்தர் தெரிவித்துள்ளார்.

    எனவே அவருக்கு வழங்கப்பட்ட முன்பணத்தைத் திரும்பப் பெறவும், ரவி மோகனின் ஈசிஆர் பங்களாவை ஜப்தி செய்து பணத்தைத் திருப்பித் தரவும் கோரி அந்த நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

    இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனம் ரவி மோகனின் ஈசிஆர் சொகுசு பங்களாவை ஜப்தி செய்து தரும்படி கூறிய நிலையில் அந்த வீடு தனியார் வங்கியில் கடன் பெற்று வாங்கியதும், வாங்கிய கடனை நடிகர் ரவி மோகன் சரியாக கட்டவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

    actor jayam ravi Ravi Mohan
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநேற்று எகிறிய தங்கம் இன்று சரிவு..
    Next Article செல்வபெருந்தகையை தாக்கிப் பேசிய இபிஎஸ்…
    Editor TN Talks

    Related Posts

    டிஎன்ஏ சோதனையில் சிக்கிய மாதம்பட்டி ரங்கராஜ்!. ஜாய் கிரிசில்டா சட்டப் போராட்டத்தில் வெற்றி!

    March 30, 2026

    இயக்குநர் மீது பாலியல் புகார்!. “தவறாகத் தொட்டார்”!. கும்பமேளா புகழ் மோனாலிசா குமுறல்!

    March 25, 2026

    சினிமாவை விட்டு விலகுகிறாரா த்ரிஷா?. அடுத்த இலக்கு அரசியலா? புதிய படங்களில் கமிட் ஆகாதது ஏன்?.

    March 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    குழந்தைகளை தாக்கும் புதிய கோவிட் வைரஸ்!. இந்தியாவிற்கு ஆபத்து?. அறிகுறிகள் என்ன?

    அண்ணாமலைக்கு சீட் கொடுக்காதது ஏன்?. பியூஷ் கோயல் பதில்!

    பெரம்பூர் – திருச்சி கிழக்கு!. விஜய் தாக்கல் செய்த தேர்தல் பிரமாணப் பத்திரங்களில் குளறுபடி?

    மகளிா் இடஒதுக்கீடு!. மீண்டும் ஏப்.16ல் கூடும் நாடாளுமன்றம்!. கூடுதலாக 3 நாள் நடத்த திட்டம்!.

    இந்தியாவின் 3வது அணு ஆயுத அசுரன்!. எதிரிகளை அதிரவைக்கும் ஐஎன்எஸ் அரிதமான்! கடற்படையில் இணைப்பு!

    Trending Posts

    குழந்தைகளை தாக்கும் புதிய கோவிட் வைரஸ்!. இந்தியாவிற்கு ஆபத்து?. அறிகுறிகள் என்ன?

    April 3, 2026

    அண்ணாமலைக்கு சீட் கொடுக்காதது ஏன்?. பியூஷ் கோயல் பதில்!

    April 3, 2026

    பெரம்பூர் – திருச்சி கிழக்கு!. விஜய் தாக்கல் செய்த தேர்தல் பிரமாணப் பத்திரங்களில் குளறுபடி?

    April 3, 2026

    மகளிா் இடஒதுக்கீடு!. மீண்டும் ஏப்.16ல் கூடும் நாடாளுமன்றம்!. கூடுதலாக 3 நாள் நடத்த திட்டம்!.

    April 3, 2026

    இந்தியாவின் 3வது அணு ஆயுத அசுரன்!. எதிரிகளை அதிரவைக்கும் ஐஎன்எஸ் அரிதமான்! கடற்படையில் இணைப்பு!

    April 3, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.