ஜனநாயகன் சர்ச்சைக்கு மத்தியில் பொங்கலுக்கு தெறி படம் ரீரிலிஸ் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டநிலையில், அதுவும் ஒத்திவைக்கப்படுவதாக கலைப்புலி தாணு அறிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையையொட்டி, வரும் 9ம் தேதி ஜனநாயகன் படம் திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் சென்சார் பிரச்சனையால் ரிலிஸ் ஆவதில் தாமதமாகி கொண்டே செல்கிறது. அதாவது, சென்சார் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது வரும் 21ம் தேதி விசாரிக்கப்படவுள்ளது. மேலும் சென்சார் வழங்கவேண்டும் என்று கூறி உச்சநீதிமன்றத்தில் படக்குழுவும் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு பட்டியலில் இருப்பதால் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, ஜனநாயகன் படம் தள்ளிப்போனதால் தெறி படம் பொங்கல் நாளி (ஜன.15) ரீ ரிலிஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தியேட்டரை திருவிழாவாக்க ரசிகர்கள் தயாராகி வந்தனர். இந்த நிலையில், ரி ரீலிஸாகவுள்ள பட (ஜன நாயகன்) தயாரிப்பாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தெறி பட ரீ ரிலீஸ் ஒத்திவைக்கப்படுவதாக கலைப்புலி தாணு அறிவித்துள்ளார். இதனால், விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
