Close Menu
    What's Hot

    “நான் இல்லாவிட்டால் வாடிகனே இருக்காது”!. போப் லியோவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

    சுந்தர்.சி-ஐ தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி அவுட்?. ரஜினி படத்தில் திடீர் திருப்பம்!

    இது திராவிட மாடல் அரசு அல்ல; கிட்னி திருடும் அரசு!. அண்ணாமலை ஆவேசம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»மிரட்டல் வந்திருந்தால் மன்னித்து விடுங்கள்.. விஜய் சேதுபதி மன்னிப்பு கேட்டது ஏன்? மகனால் வந்த சோதனை…
    சினிமா

    மிரட்டல் வந்திருந்தால் மன்னித்து விடுங்கள்.. விஜய் சேதுபதி மன்னிப்பு கேட்டது ஏன்? மகனால் வந்த சோதனை…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 3, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    10 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வாரிசு நடிகர்கள் சினிமாவில் வருவது என்பது வழக்கமான ஒன்று தான். தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய திரையுலகிலேயே அடுத்தடுத்து சினிமாவை ஆள்வது என்னவோ வாரிசு நடிகர்கள் தான். அந்த வகையில் தமிழ் சினிமாவின் புதிய வாரிசு நடிகராக வளர்ந்து கொண்டு வருகிறார் நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா.

    தமிழ் மட்டுமின்றி பாலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் விஜய்சேதுபதி. கடைசியாக இவர் நடிப்பில் தமிழில் நேரடியாக வெளியான மகாராஜா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன்பிறகு வெளியான ஏஸ் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் அவரது மகனான சூர்யா பீனிக்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார்.
    இந்த திரைப்படத்தின் புரமோஷனில் சூர்யா சேதுபதி பேசிய வீடியோக்களை நீக்குமாறு மிரட்டியதாக புகார் எழுந்தது.

    இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் சூர்யா பேசும் போது, நான் வேறு அப்பா வேறு என பேசியிருந்தது விமர்சனங்களை சந்தித்தது. பீனிக்ஸ் திரைப்படம் வரும் 4-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் 2-ம் தேதி பத்திரிக்கையாளர்களுக்கும், திரைத்துறையினருக்கும் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இதில் கலந்து கொண்ட சூர்யா, வாயில் பபுல்காம் மென்றுகொண்டு போஸ் கொடுத்தார். இந்த செயல் மக்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியது.

    அவர் மீது எதிர்மறையான விமர்சனங்களுக்கு அவரை இட்டுச் சென்றது. இந்த நிலையில், சூர்யாவின் சர்ச்சை பேச்சு மற்றும் இன்னும் பல வீடியோக்களை நீக்குமாறு சூர்யா மற்றும் விஜய் சேதுபதி தரப்பில் இருந்து சிலருக்கு மிரட்டல் வந்ததாக புகார்கள் எழுந்தன. இது குறித்து சமீபத்தில் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட விஜய்சேதுபதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ”எங்கள் தரப்பில் இருந்து யாருக்காவது அழைப்பு வந்து, மிரட்டல் நடந்து இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக” கூறியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபுது கணவன்களை குறிவைக்கும் புது மனைவிகள்… பீகாரில் மேலும் ஒரு சம்பவம்…
    Next Article ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கு சிபிஐக்கு மாற்றப்படுமா? தமிழக காவல்துறை பதிலளிக்க உத்தரவு..
    Editor TN Talks

    Related Posts

    சுந்தர்.சி-ஐ தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி அவுட்?. ரஜினி படத்தில் திடீர் திருப்பம்!

    April 13, 2026

    நடிகை திரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!. சென்னையில் பரபரப்பு!

    April 13, 2026

    மீண்டும் படம் நடிக்கும் விஜய்? ‘ஜனநாயகன்’ நஷ்டத்தை ஈடு செய்ய அதிரடி முடிவு?

    April 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “நான் இல்லாவிட்டால் வாடிகனே இருக்காது”!. போப் லியோவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

    சுந்தர்.சி-ஐ தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி அவுட்?. ரஜினி படத்தில் திடீர் திருப்பம்!

    இது திராவிட மாடல் அரசு அல்ல; கிட்னி திருடும் அரசு!. அண்ணாமலை ஆவேசம்!

    3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்!. தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

    ஊதிய உயர்வு போராட்டத்தில் கலவரம்!. வாகனங்களுக்கு தீ வைப்பு!. 144 தடை உத்தரவு அமல்!

    Trending Posts

    ஊதிய உயர்வு போராட்டத்தில் கலவரம்!. வாகனங்களுக்கு தீ வைப்பு!. 144 தடை உத்தரவு அமல்!

    April 13, 2026

    தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026!. பணப்பட்டுவாடாவைத் தடுக்க ட்ரோன் கண்காணிப்பு!.

    April 13, 2026

    ”எரிபொருளுக்காக ஏங்குவீர்கள்”!. அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை!.

    April 13, 2026

    மீண்டும் படம் நடிக்கும் விஜய்? ‘ஜனநாயகன்’ நஷ்டத்தை ஈடு செய்ய அதிரடி முடிவு?

    April 13, 2026

    இலக்கு மாறிய ஏவுகணை; சிதறிய உயிர்கள்!. நைஜீரிய அரசின் தவறால் நிகழ்ந்த 100 பேர் மரணம்!

    April 13, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.