Close Menu
    What's Hot

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»மாவட்டம்»17 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்… களைகட்டியது காஞ்சிபுரம்
    மாவட்டம்

    17 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்… களைகட்டியது காஞ்சிபுரம்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 8, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    kncc
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கடந்த 17 ஆண்டுகளுக்கு பிறகு ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேக விழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.

    பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்கான ஸ்தலமாக விளங்கும் காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ ஏலவார்குழலி உடனுறை ஏகாம்பரநாதர் திருக்கோயில் 3500 ஆண்டுகள் பழமையானது. இக்கோயிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.29 கோடி மதிப்பில் கோயில் ராஜா கோபுரம், 1000 கால் மண்டபம், மூலவர் என அனைத்து பகுதிகளும் புராணமைப்பு செய்யப்பட்டு பூரண கும்ப மகா கும்பாபிஷேகம் இன்று (டிச.08) நடைபெற்றது.

    இன்று அதிகாலை 5:45 மணிக்கு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. 100க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மூன்று நாட்களாக யாக சாலையில் நடத்தி வந்த யாகங்கள் முடிவுற்ற நிலையில் மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டு, அதிகாலை 4:30 மணியளவில் புனித நீர் கலசத்தை ஊர்வலமாக கோபுரங்களுக்கு எடுத்து சென்றனர்.

    கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்த பின்பு, காலை 6:30 மணியளவில் மூலவர்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வருகை தந்த 40க்கும் மேற்பட்ட ஓதுவாமூர்திகள் பக்க இசைக்கருவிகளுடன் திருமுறை பாராயணம் பாடினர். கோயில் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள நிலையில், ரிஷி கோபுர நுழைவு வாயிலில் கோயில் பெயரை மலர்களால் எழுத்துக்கள் கோர்க்கப்பட்டு, பக்தர்களை கவரும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

    இன்று கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்கள் கோயில் சன்னதி வழியாக மட்டுமே அனுபதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் ராஜ கோபுரத்தில் இருந்து ஆலயத்துக்கு உள்பகுதியில் வரிசையாக வருவதற்கு காவல்துறையினர் தடுப்புகளை அமைந்துள்ளனர். ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம் விழாவை ஒட்டி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 4 மாவட்டத்தை சேர்ந்த 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் இரண்டு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, ஒவ்வொரு பகுதியிலும் போலீசார் சிறிய கோபுரம் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகள், கோயிலுக்கு அருகே உள்ள கிராம பள்ளிகள் உள்பட மாவட்டத்தில் மொத்தம் 149 பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி உத்தரவிட்டிருந்தார். இதன் பின் 12 மணியளவில் மஹா அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு திருக்கல்யாணமும், பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும் நடைபெற உள்ளன.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமழைக்காலத்தில் சளி, இருமல் பிரச்சனையா? இதை செய்து பாருங்க
    Next Article நாளை முதல் டி20 போட்டி… இந்தியா, தெ.ஆப்பிரிக்கா மீண்டும் மோதல்
    Editor TN Talks

    Related Posts

    திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரம்!

    March 28, 2026

    திமுக-வின் 164 தொகுதிகள், வேட்பாளர்கள் பட்டியல் விவரம்!

    March 28, 2026

    திமுக, கூட்டணி கட்சிகளின் தொகுதிகள், வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

    March 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    Trending Posts

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    April 11, 2026

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    April 11, 2026

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    April 11, 2026

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    April 11, 2026

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    April 11, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.