தமிழக அரசியலில் நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பு கூடி வரும் நிலையில், மிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இன்று காலை மீண்டும் ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கரைச் சந்திக்க அனுமதி கோரியுள்ளதாகத் தெரிகிறது.

ஏற்கனவே காங்கிரஸ் கட்சி தனது 5 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுக் கடிதத்தை விஜய்யிடம் வழங்கியுள்ள நிலையில், தற்போது தவெக கூட்டணியின் பலம் 113-ஆக உயர்ந்துள்ளது. பெரும்பான்மைக்கு இன்னும் 5 இடங்களே தேவைப்படும் நிலையில், விசிக மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவைப் பெற்று, அந்தப் பட்டியலுடன் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க மீண்டும் உரிமை கோர விஜய் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆளுநர் மாளிகை இதுவரை தவெக-விற்குப் பச்சைக்கொடி காட்டாத சூழலில், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வரும் விஜய், அடுத்தகட்டமாகத் தனது பலத்தை நிரூபிக்கத் தயாராகி வருகிறார். இன்று காலை 11 மணி அளவில் ஆளுநருடனான சந்திப்பு உறுதியானால், தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பதில் நிலவும் இழுபறிக்கு ஒரு முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், சட்டம் ஒழுங்கு பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு மாநிலம் முழுவதும் உளவுத்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், தமிழகமே ஒருவித அரசியல் போர்க்களமாகக் காட்சியளிக்கிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version