Author: Editor web3
கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அது கோடிக்கணக்கானவர்களின் உணர்வாகவும், ஆயிரக்கணக்கானவர்களின் தொழிலாகவும் உள்ளது. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி, தற்போது உலகெங்கிலும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட இந்த விளையாட்டு, பல நாடுகளின் பொருளாதாரத்திற்கும் முக்கிய பங்களிப்பு செய்கிறது. ஆனால் அனைத்து கிரிக்கெட் சங்கங்களும் ஒன்று போலவே செல்வத்தை வைத்திருப்பதில்லை. அவை ரசிகர்களுக்கு ஏற்பவும், அந்த நாடுகளில் உள்ள சூழலுக்கு ஏற்பவும் மாறுபடுகிறது. இந்தநிலையில், உலகில் உள்ள கிரிக்கெட் சங்கங்களில் பணக்கார கிரிக்கெட் சங்கமாக இருப்பது இந்திய கிரிக்கெட் சங்கமான பிசிசிஐ தான். இந்தியா முழுவதும் ஒரு மதத்தை போல கிரிக்கெட் இருக்கும் என்பதற்கேற்ப, அதன் ரசிகர்களும் கோடிகணக்கில் உள்ளார்கள். முக்கியமாக, ஐபிஎல் காரணமாக பிசிசிஐ-க்கு அதிக வருமானம் வரத்தொடங்கியது. தற்போது, சுமார் ரூ.2,200கோடி மதிப்போடு, பிசிசிஐ உலகின் மிகப் பணக்கார சங்கமாக உள்ளது. உலகளாவிய வருமானத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு 70 சதவீதத்துக்கும் மேலாக கிடைக்கிறது. 2024 முதல்…
நேபாளத்திற்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றதையடுத்து, 2026 டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 கட்டத்தை எட்டிய முதல் அணியாக மேற்கிந்திய தீவுகள் தகுதிபெற்றது. தோல்வியுடன் நேபாளம் வெளியேறியது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற லீக் சுற்றின் 25வது போட்டியில் நேபாளத்தை ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மேற்கிந்திய அணி வெற்றி பெற்றது. டி20 உலகக் கோப்பையிலிருந்து ஓமன் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட இரண்டாவது அணியாக நேபாளம் மாறியது. மேற்கிந்திய தீவுகள் அணி, தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று அடுத்த கட்டத்திற்கு தகுதி பெற்றது. ஷாய் ஹோப் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி ஆறு புள்ளிகளையும் சேர்த்து +1.820 என்ற நெட் ரன் ரேட்டை பெற்றுள்ளது. அதிகபட்ச புள்ளிகள் மற்றும் உயர்ந்த நெட் ரன் ரேட்டுடன், இந்த அணி குழு C புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதுவரை நடந்த மூன்று போட்டிகளில், மேற்கிந்திய தீவுகள் அணி ஸ்காட்லாந்தை 35…
வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி என்றும் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு தமிழகத்தை போன்று அசாமில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது, மேலும் மாநிலம் தேர்தல் நடவடிக்கைகளில் பரபரப்பாக உள்ளது. இந்தநிலையில், அசாம் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக குறிவைத்து, வடகிழக்கு மாநிலங்களை புறக்கணிப்பதாக குற்றம் சாட்டினார். குவஹாத்தியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், வடகிழக்கு மாநிலங்களை பாஜகவின் அஷ்டலட்சுமி என்று கருதுவதாகக் கூறினார். அசாமில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் தனது அரசு கவனம் செலுத்தி வருகிறது. நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அசாமுக்கு இதுவே தனது முதல் பயணம் என்றும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். காங்கிரஸ் காலத்தில் அசாமிற்கு வெறும் 10,000 கோடி ரூபாய் வரிப் பகிர்வு வழங்கப்பட்டதாகவும், தற்போது, 50,000 கோடி ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்டுள்ளதாகவும் மோடி கூறினார். பிரம்மபுத்ரா…
அதிரடி ஷாட்களுக்கு பெயர்போன கிரிக்கெட் நட்சத்திரம் பீகார் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இந்த ஆண்டு தனது 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ளார். U-19 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் 175 ரன்கள் குவித்து அசத்தினார். தொடர் முழுவதும் 439 ரன்கள் எடுத்து, அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தார். அதேபோல், 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் 1.1 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் வாங்கப்பட்டார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஏலம் எடுக்கப்பட்ட மிக இள வயது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், தனது 14-வது வயதில் டி20 சதமடித்து சாதனை படைத்தார். மேலும் ஐபிஎல் வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்த இந்தியர் என்ற பெயரையும் பெற்றார். இந்நிலையில், இப்போது தனது 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதத் தயாராகி வருகிறார். பீகாரின் சமஸ்திபூர் மாவட்டத்தில் அமைந்துள்ள போடார்…
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு மார்ச் 9 ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி மார்ச் 9 முதல் ஏப்ரல் 2 வரை நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். பல முக்கியமான சட்டங்களும் ஒரு முக்கியமான மசோதாவும் நாடாளுமன்றத்தில் விவாதம் மற்றும் நிறைவேற்றத்திற்காக அறிமுகப்படுத்தப்படுவதால் இந்த கூட்டத்தொடர் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், முதல் அமர்வில் செய்தது போல் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தினால், அது இறுதியில் அவர்களுக்கு பாதகமாக இருக்கும் என்று கிரண் ரிஜிஜு கூறினார். பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த தகவலின்படி, “மார்ச் 9 ஆம் தேதி, மக்களவையில் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதிப்போம். முதல் நாளிலேயே அதை எழுப்புவதே விதி.…
சட்டமன்ற தேர்தலை காரணம் காட்டி மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தடுத்து நிறுத்த சதி நடைபெறுவதை உணர்ந்து தான் முதலமைச்சர் முன்பணமாகவே கோடைக்கால சிறப்பு நிதியை அறிவித்துள்ளார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு முன்னாள் முதலமைச்சர்கள் அறிஞர் அண்ணா, கருணாநிதி சிலைகளை திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், இன்றைய நவீன தமிழ்நாட்டை உருவாக்கியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. அவரது வழியில் நமது முதலமைச்சர் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறார். ஆட்சிக்கு வந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து மகளிருக்கான அந்த ‘விடியல் பயண திட்டம்’. இதன் மூலம் தினமும் ஏராளமான மகளிர் பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், விலையில்லா மடிக்கணினி திட்டம் என்று பல்வேறு திட்டங்களை…
சட்டமன்ற தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27ம் தேதி நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தால் சிறப்பு தீவிர திருத்த பணிகள்(எஸ்ஐஆர்) நடைபெற்றது. இதையொட்டி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 5.43 கோடி பேர் மட்டுமே இடம்பெற்று இருந்தனர். இதில், சிறப்பு தீவிர திருத்த பணியின்போது உயிரிழந்த வாக்காளர்கள் 26,95,672 பேர், இடம் பெயர்ந்தோர் மற்றும் குறிப்பிட்ட முகவரியில் வசிக்காதவர்கள் 66,44,881 பேர், இரட்டை பதிவு வாக்காளர்கள் 3,98,278 பேர் என மொத்தம் 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. இதனையடுத்து, வரைவு வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் செய்ய கடந்த டிசம்பர் 19ம் தேதி முதல் பிப்ரவரி 10ம் தேதி வரை(நேற்று) காலஅவகாசம் வழங்கப்பட்டது. இதில் பெயர் சேர்க்க 17.10 லட்சம் பேரும், நீக்கம் செய்ய கோரி…
ஐந்தரை லட்சம் பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்படும் என்கிற தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அதன் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தவாறு ஐந்தரை லட்சம் பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்படவில்லை என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புக்கொண்டுள்ளார். தேனாறும், பாலாறும் ஓடும் என்று பொய்யான வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, அதை நிறைவேற்றத் தவறியதும், வெட்கமே இல்லாமல் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு செய்த துரோகத்தை ஒப்புக்கொள்வதும் கண்டிக்கத்தக்கவை. அரசுப் பணிகளுக்கு போட்டித் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்குவதற்காக சென்னையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,‘‘திமுக ஆட்சியில் இதுவரை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வாயிலாக 45,126 பேர், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக 24,927 பேர், ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக 12,894 பேர், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக…
முல்லைக்காடு கப்பல் கட்டும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கோவளம், பசுவந்தரை, தன்பாடு மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் செயல்பட்டு வரும் சிறு உப்பு உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் வகையில் முல்லைக்காடு பகுதியில் கப்பல் கட்டும் தளம் (Shipyard) அமைக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. முல்லைக்காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல தலைமுறைகளாக பாரம்பரியமாக நடைபெற்று வரும் உப்பு உற்பத்தித் தொழில், அப்பகுதி மக்களின் முக்கியமான மற்றும் ஒரே வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், அங்குள்ள உப்பளங்கள் அழிக்கப்படும் அபாயம் உருவாகி, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழ்நிலை ஏற்படும். பாரம்பரிய தொழில்களை பாதுகாப்பதும், தொழிலாளர்களின் உரிமைகளை காப்பதும் அரசின் அடிப்படை கடமையாகும். எனவே, முல்லைக்காடு பகுதியில் கப்பல் கட்டும் திட்டத்தை உடனடியாக…
டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற நாடு முழுவதும் பிரார்த்தனைகள் மற்றும் வழிபாடு செய்யப்படுகின்றன. நடப்பு டி20 உலகக்கோப்பையின் குரூப்-ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இரு அணிகளும், இன்று தங்களது மூன்றாவது லீக் ஆட்டத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்திய நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு இலங்கை, கொழும்புவில் உள்ள ஆர். பிரேமதாசா மைதானத்தில் இன்று போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சி மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) செயலி நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இதுவரை இவ்விரு அணிகளும் 16 டி20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்தியா 13-3 என்ற கணக்கில் வலுவான முன்னிலை வகிக்கிறது. டி20 உலகக்கோப்பையைப் பொறுத்தவரை, 8 போட்டிகளில் விளையாடி இந்தியா 7-1 என்ற கணக்கில் பாகிஸ்தானை ஆதிக்கம் செலுத்தி வருகிறது. https://x.com/ANI/status/2022893023282200837? இந்தநிலையில், டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற நாடு முழுவதும்…