Author: Editor web3

ஜப்பான் பிரதமர் சனாயே தாகைச்சி நாளை (ஜூலை 1) முதல் 3 வரை அதிகாரப்பூர்வ பயணமாக இந்தியா வருகிறார். மார்ச் 2022-க்குப் பிறகு நடைபெறும் முதல் வருடாந்திர உச்சிமாநாடான இதில், பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். பிரதமர் தாகைச்சி பொறுப்பேற்ற பிறகு மேற்கொள்ளும் முதல் இந்தியப் பயணம் இது என்பதால், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் இது மிக முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது. இந்த மூன்று நாள் பயணத்தில் பொருளாதார ஒத்துழைப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது. குறிப்பாக, செமிகண்டக்டர் மற்றும் முக்கியமான தாதுக்கள் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்துதல், செயற்கை நுண்ணறிவு, பேட்டரி தொழில்நுட்பம் மற்றும் மருந்தியல் துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. மேலும், ஒடிசாவில் மேற்கொள்ளப்படவுள்ள பெரிய அளவிலான பசுமை அம்மோனியா திட்டம் மற்றும் உயிரி எரிவாயு திட்டங்கள் குறித்து முக்கிய அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன. பிராந்திய பாதுகாப்பு மற்றும் கடல்சார்…

Read More

சட்டம் – ஒழுங்கு குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆய்வு நடத்திய நாளிலேயே மயிலாடுதுறையில் காதல் ஜோடி மர்ம மரணம் அடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக திமுக கடுமையாக விமர்சித்துள்ளது. திமுகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைத்தளத்தில் “கலெக்டர்கள்-காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆய்வு நடத்தும் நாளிலேயே சீரழிந்த சட்டம்-ஒழுங்கு! ” எனக் குறிப்பிட்டு இன்று (30.06.2026) வெளியிட்டுள்ள பதிவில், “மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்ற 19 வயது இளைஞரும், 16 வயது பெண்ணும் காதலித்த விவகாரத்தில், வெவ்வேறு சாதிகளைச் சார்ந்த இரு வீட்டாருக்கும் பிரச்சினை ஏற்பட்ட நிலையில், இளைஞரும் அந்தப் பெண்ணும் ஒரு குடிசையில் தூக்கில் தொங்கும் காட்சிகளைப் பார்த்து தமிழ்நாடே பதைபதைக்கிறது. இந்த மர்ம மரணங்கள் குறித்து பல சந்தேகக் கேள்விகள் எழுந்திருப்பதுடன், சிங்கப்பெண் என்கிற ஸ்டிக்கர் திட்டத்தின் ஆட்சியில், +2 படிக்கும் பெண்ணின் உயிருக்குக்கூட பாதுகாப்பு இல்லாத மோசமான சூழல் நிலவுவதை உணர…

Read More

வங்கக்கடலின் வடபகுதியிலிருந்து ஜம்மு காஷ்மீர் வரை சுமார் 1,500 கிலோமீட்டர் நீளத்திற்கு பருவமழை தாழ்வுப்பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த பிரம்மாண்டமான மழை மேகக் கூட்டத்தை INSAT-3DS செயற்கைக்கோள் தெளிவாகப் படம் பிடித்துள்ளது. பருவமழையின் முதுகெலும்பாகக் கருதப்படும் இந்த தாழ்வுப்பகுதி, இதுவரை இமயமலை அடிவாரத்தை ஒட்டியே இருந்தது. இதனால் சமவெளிப் பகுதிகளான டெல்லி, ஹரியானா மற்றும் ராஜஸ்தான் ஆகியவை கடும் வெப்பத்தில் தகித்தன. ஆனால், தற்போது இந்தத் தாழ்வுப்பகுதி தெற்கு நோக்கி நகரத் தொடங்கியுள்ளதால், ஜூலை 1 முதல் ஜூலை 4-க்குள் வட இந்தியாவின் பல பகுதிகளில் பருவமழை தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம்  கணித்துள்ளது. இந்த வார இறுதியில் வங்கக் கடலில் உருவாகும் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, பருவமழையின் வேகத்தை மேலும் அதிகரிக்கும். இதனால், டெல்லி, பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும்.…

Read More

தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக பணியாற்றி வரும் ராஜேந்திர அர்லேக்கர், நாளை காலை திடீர் பயணமாக டெல்லி செல்ல உள்ளார். தமிழ்நாட்டிற்கு நீண்ட நாட்களாக ஒரு முழுநேர ஆளுநரை நியமிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் சூழலில், பொறுப்பு ஆளுநரின் இந்த டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி செல்லும் ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளார். இந்தச் சந்திப்பின்போது தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் புதிய ஆளுநர் நியமனம் தொடர்பான முக்கிய ஆலோசனைகள் இடம்பெறலாம் எனக் கூறப்படுகிறது. தன்னுடைய டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு, நாளை இரவே அவர் மீண்டும் சென்னை திரும்ப உள்ளார். இந்தத் திடீர் பயணம், தமிழக ஆளுநர் விவகாரத்தில் ஏதேனும் ஒரு முக்கிய முடிவை மத்திய அரசு எடுக்கப்போகிறதா என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Read More

ஈரான் தனது ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவினால், “நாளைக்கே போர் தொடங்கலாம்” என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ்  பகிரங்கமாக எச்சரித்துள்ளார். தேவைப்பட்டால், அமெரிக்காவின் உதவியின்றி இஸ்ரேலே நேரடியாகத் தாக்குதல் நடத்தத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ராணுவ மற்றும் தூதரக செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரேல் காட்ஸ், “ஈரான் எதன் மீதும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தும் சமன்பாட்டை இஸ்ரேல் ஒருபோதும் ஏற்காது. ஈரான் தாக்கினால், இஸ்ரேல் பதிலுக்குத் தக்க அடி கொடுக்கும். இதற்கான இலக்குகள் ஏற்கனவே தயார் நிலையில் உள்ளன” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஈரானுடனான போர் மீண்டும் தொடங்குவதற்கு இரண்டு சூழல்கள் இருப்பதாக குறிப்பிட்ட காட்ஸ், எந்தவொரு வெளிநாட்டு உதவியையும் சாராமல், இஸ்ரேல் தனது சொந்த பலத்தில் தாக்குதலை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக  கூறியுள்ளார். ஈரானின் உச்சத் தலைவரான மொஜ்தபா காமேனி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த காட்ஸ், “மரணத்திற்கு குறி வைக்கப்பட்டுள்ளார். மேலும், ஈரானியப் பேச்சாளர்கள் பேச்சுவார்த்தையின்…

Read More

வருமான வரி செலுத்துபவர்களுக்கு ஜூலை மாதம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். தனிநபர் வருமான வரி தாக்கல் முதல் TDS மற்றும் இதர வரி தொடர்பான படிவங்களைச் சமர்ப்பிப்பது வரை, இந்த மாதத்தில் பல முக்கிய காலக்கெடு முடிவடைகின்றன. எனவே, அபராதம் மற்றும் வட்டி அபாயத்தைத் தவிர்க்க, இந்தத் தேதிகளைக் குறித்து வைத்துக்கொள்வது அவசியம். ஜூலை 7 TDS டெபாசிட் செய்ய கடைசி நாள்: காலாண்டு அடிப்படையில் TDS டெபாசிட் செய்பவர்கள், ஏப்ரல் – ஜூன் காலாண்டிற்கான TDS தொகையை ஜூலை 7-க்குள் டெபாசிட் செய்ய வேண்டும். இதனுடன் தொடர்புடைய அறிவிப்புகள் மற்றும் ஆவணங்களையும் அன்றைய தினத்திற்குள் பதிவேற்ற வேண்டும். ஜூலை 15: நிறுவனங்களுக்கான அறிக்கை சமர்ப்பிப்பு: நிதி நிறுவனங்கள், பங்குச் சந்தைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் தாங்கள் சமர்ப்பிக்க வேண்டிய குறிப்பிட்ட அறிக்கைகள் மற்றும் தகவல்களை ஜூலை 15-க்குள் வழங்க வேண்டும். இது முக்கியமாக நிறுவனங்களுக்குப் பொருந்தும். ஜூலை 30 TDS…

Read More

நாளை தொடங்கவுள்ள இங்கிலாந்திற்கு எதிரான T20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில், யார் களமிறங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஓப்பனிங் பேட்டிங் வரிசையில் சஞ்சு சாம்சன் மற்றும் சூர்யவன்ஷி ஆகிய இருவரில் யாருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்ற விவாதம் எழுந்துள்ளது. தற்போது வெளியாகும் தகவல்களின்படி, இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் சஞ்சு சாம்சனே தொடக்க வீரராக களமிறங்க அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இன்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில், அயர்லாந்து அணிக்கு எதிராக எந்த பேட்டிங் வரிசையை அணி நிர்வாகம் பயன்படுத்தியதோ, அதே வரிசையையே இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியிலும் தொடரத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால், அணியில் ஏற்கனவே தொடக்க வீரராக நம்பிக்கையைப் பெற்றுள்ள சஞ்சு சாம்சனுக்கே முதல் முன்னுரிமை வழங்கப்பட உள்ளது. சூர்யவன்ஷியின் நிலை என்ன? மறுபுறம், சூர்யவன்ஷியைப் பொறுத்தவரை, முதல் போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைப்பது சற்று கடினம் என்றே கருதப்படுகிறது. அணி…

Read More

ஐரோப்பாவில் நிலவும் கடும் வெப்ப அலை காரணமாக, ஜெர்மனியின் பெர்லின் நகரில் விசித்திரமான மற்றும் பயனுள்ள முன்னெடுப்பை அந்நாட்டு போலீசார் கையில் எடுத்துள்ளனர். பொதுவாக போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் நீர் பீரங்கிகளை தற்போது வெயிலில் தவிக்கும் பொதுமக்களையும் சுற்றுலாப் பயணிகளையும் குளிர்விக்கப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். 40°C-க்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ள நிலையில், பிராண்டன்பர்க் கேட் உள்ளிட்ட முக்கிய இடங்களில் இந்த நீர் பீரங்கிகள் மூலம் மெல்லிய நீர்த் தெளிப்பு நடத்தப்படுவது வைரலாகி வருகிறது. https://x.com/Rainmaker1973/status/2071283413911265701? இதய நிபுணர்கள் மற்றும் காலநிலை ஆரோக்கிய நிபுணர்கள், இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். “மனித உடல் வியர்வை மூலம் தன்னைத்தானே குளிர்வித்துக் கொள்கிறது. நீர் பீரங்கி மூலம் தெளிக்கப்படும் நீர், உடலில் பட்டு ஆவியாகும்போது, அது தோலின் வெப்பத்தை குறைத்து, இதயத்தின் அழுத்தத்தைக் குறைக்கிறது” என்று ஹார்வர்ட் பொது சுகாதாரப் பள்ளி நிபுணர் டாக்டர் ரெனீ சலாஸ் விளக்குகிறார். குறிப்பாக வயதானவர்கள் மற்றும் வெப்பத்தால் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு…

Read More

ஹியூஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற ஃபிஃபா உலகக்கோப்பை தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றான (ரவுண்ட் 32) ஜப்பானுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் பிரேசில் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இந்த வெற்றியின் மூலம் 88 ஆண்டுகளுக்குப் பிறகு, உலகக்கோப்பை நாக்-அவுட் சுற்றில் பாதியிலேயே பின்தங்கியிருந்து கம்பேக் கொடுத்து பிரேசில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்டத்தின் முதல் பாதியில் ஜப்பான் அணி 1-0 என முன்னிலை பெற்று பிரேசிலுக்கு அதிர்ச்சி அளித்தது. ஆனால், இரண்டாம் பாதியில் சுதாரித்துக் கொண்ட ஐந்து முறை சாம்பியனான பிரேசில் அணி, கேஸமிரோ அடித்த கோல் மூலம் சமநிலை எட்டியது. ஆட்டம் கூடுதல் நேரத்திற்குச் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆட்டத்தின் கடைசி 30 வினாடிகளில் கேப்ரியல் மார்டினெல்லி ஒரு அற்புதமான கோலை அடித்து பிரேசிலுக்கு வெற்றியைத் தேடித் தந்தார். இதன் மூலம் ஜப்பான் அணி தொடரில் இருந்து வெளியேறியது. 1986-ம் ஆண்டு…

Read More

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த காதலர்கள் இருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வாலிபரின் குடும்பத்தினர் இது ‘ஆணவக்கொலை’ என குற்றம் சாட்டியுள்ளதால் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்துவின் மகன் பார்த்திபன் (19). கொத்தனார் வேலை செய்து வந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த இவரும், சாத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு முடித்த மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் சிறுமியின் வீட்டிற்குத் தெரியவந்ததை அடுத்து, இரு குடும்பங்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பார்த்திபனின் பெற்றோர், பெண் வீட்டார் மீது பொறையார் காவல் நிலையத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நேற்று புகார் அளித்திருந்தனர். இந்த நிலையில், நேற்று நள்ளிரவு சுமார் 3 மணியளவில் சாத்தங்குடி பகுதியில் உள்ள ஒரு கீற்றுக் கொட்டகையில்…

Read More