Author: Editor web3

ஈரான் மீது கடந்த ஒரு மாதமாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury) போர் இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரானுடன் எவ்வித உடன்படிக்கையும் (Deal) செய்துகொள்ளாமலேயே அமெரிக்கப் படைகள் அங்கிருந்து வெளியேறும் என்றும், ஈரானின் அணு ஆயுதக் கனவு முற்றிலுமாக சிதைக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார். ஈரான் இனி அணு ஆயுதங்களை வேகமாக உருவாக்க முடியாத அளவுக்கு அந்நாட்டை “கற்காலத்திற்கு” (Stone Age) தள்ளிவிட்ட பிறகே அமெரிக்கா அங்கிருந்து கிளம்பும் என்று டிரம்ப் மிகக் காட்டமாகத் தெரிவித்தார். ஈரானின் ராணுவக் கட்டமைப்பு 100% அழிக்கப்பட்டுவிட்டதாகக் கூறிய அவர், இன்று இரவு 9 மணிக்கு (அமெரிக்க நேரம்) போர் குறித்த மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த…

Read More

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் இருந்து தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு வெளியேற முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக கூட்டணியில் தமக்கு உரிய தொகுதிகள் ஒதுக்கப்படாததால் அதிருப்தியில் இருந்த அவர், இன்று சென்னை தி.நகரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, தனியரசு தனது ஆதரவாளர்களுடன் விரைவில் தவெக-வில் இணைய உள்ளதாகவும், அவருக்குக் கொங்கு மண்டலத்தின் முக்கியத் தொகுதியான காங்கேயம் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தத் திடீர் திருப்பம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் தனது தேர்தல் வியூகத்தை அதிரடியாக மாற்றி வருகிறார். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் சுமார் 3 முதல் 5 தொகுதிகளில் வேட்பாளர்களை மாற்ற விஜய் திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகின. அதன் ஒரு பகுதியாகவே, பிற…

Read More

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவர் சுந்தர்.சி.  தற்போது அரசியலில் களமிறங்கியுள்ளார்.அதிமுக – பாஜக கூட்டணியில் புதிய நீதிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட மதுரை மத்திய தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் நடிகரும், இயக்குநருமான சுந்தர்.சி போட்டியிடுகிறார். இந்த நிலையில் தான் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுந்தர்.சியிடம் அதிமுக களத்தில் இல்லை என்று தவெக விஜய் கூறியது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சுந்தர்.சி, “விஜய் சார் மேல அன்பும், மரியாதையும் எனக்கு உண்டு. என்னோட மனைவி அவரை தம்பி என்று தான் சொல்வார். அதேபோல் விஜய்யும் எனது மனைவியை அக்கா என்று தான் கூப்பிடுவார். அதனால் எந்த வகையிலும் விஜய் மற்றும் அவரது கட்சியை, அவரது வேட்பாளரை பற்றி விமர்சிக்க நான் தயாராக இல்லை. ஆனால் மதுரை மத்திய தொகுதியை பொறுத்தவரை உதயசூரியனுக்கும் இரட்டை இலைக்கும் தான் போட்டி.” என்றார். தொடர்ந்து  பேசிய சுந்தர்.சி, “என்னை ஆதரித்து குஷ்பூ…

Read More

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ‘Y’ பிரிவு பாதுகாப்பில் கடுமையான குறைபாடுகள் இருப்பதாகவும், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் நிலவுவதாகவும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என அமித்ஷாவுக்கு நிர்மல் குமார் கடிதம் எழுதியுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடும் விஜய், நேற்று பெரம்பூரில் பிரச்சாரம் மேற்கொண்டபோது அவர் மீது பாட்டில்கள் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு தற்செயலான நிகழ்வு அல்ல என்றும், திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி என்றும் தவெக மாநிலச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்திருந்தார். சென்னை பெரம்பூரிலிருந்து கொளத்தூர் நோக்கி விஜய் சென்றபோது, அவருக்கு வழங்கப்பட்ட விஐபி பாதுகாப்பு நெறிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதற்கிடையே, தவெக-வின் சட்டப் பிரிவு நிர்வாகி நிர்மல் குமார், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அவசரக் கடிதம் ஒன்றை…

Read More

மத்தியில் ஆளும் பாஜக அரசு அத்தியாவசியப் பொருட்களின் விலையைத் தொடர்ந்து உயர்த்தி வருவதாக காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது. இது குறித்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில் இன்று உரையாற்றிய மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே, மோடி அரசு நாட்டின் மூலோபாய மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை முற்றிலும் சீர்குலைத்துவிட்டது;  சாதாரணக் குடிமக்கள் நிவாரணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் வேளையில், பாஜக தலைமை இந்த நெருக்கடியான சூழலிலும் “பொதுமக்களைச் சுரண்டுவதிலும், நாட்டைக் கொள்ளையடிப்பதிலும்” மட்டுமே முழுமையாகக் கவனம் செலுத்தி வருவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். ‘X’ தளத்தில் பதிவிட்ட கார்கே, மோடி அரசு நாட்டின் மூலோபாய மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை முற்றிலுமாக “அழித்துவிட்டது” என்று குற்றம் சாட்டிய அவர், அதன் நேரடி பாதிப்பை 140 கோடி இந்தியர்கள் அனுபவித்து வருவதாகத் தெரிவித்தார். இன்று (ஏப்ரல் 1) புதிய நிதியாண்டு தொடங்குவதை ஒட்டி, இன்று முதல், அன்றாடத் தேவைக்கான…

Read More

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் தனது கட்சி தனித்துப் போட்டியிடும் என அறிவித்து வேட்பாளர்களையும் வெளியிட்டுள்ளார். இந்நிலையில், அங்குள்ள 22 முக்கிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள அக்கட்சி சார்பில் அனுமதி கோரப்பட்டது. ஆனால், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலைக் காரணம்காட்டி, காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையம் வெறும் 5 இடங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது. மேலும், அந்த இடங்களிலும் தலா 2 மணி நேரத்திற்குள் பிரச்சாரத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தவெக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சென்னையில் உள்ள பெரம்பூர் மற்றும் கொளத்தூர் பகுதிகளில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டபோது, கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. பாதுகாப்பு குறைபாடு காரணமாக விஜயால் தனது உரையை முழுமையாக ஆற்ற முடியாமல் பாதியிலேயே பிரச்சாரத்தை நிறுத்திச் செல்லும் சூழல் உருவானது. இதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு ஏற்படும்…

Read More

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக, தனக்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. நீண்ட இழுபறிக்குப் பிறகு தொகுதிப் பங்கீடு நிறைவடைந்துள்ள நிலையில், கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் நேரடியாகக் களம் இறங்குவது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் அவர்கள் முதன்முதலில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விருத்தாசலம் தொகுதியிலேயே பிரேமலதா போட்டியிடுவது அக்கட்சித் தொண்டர்களிடையே மிகுந்த நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தந்துள்ளதோடு, அந்தத் தொகுதியை மீண்டும் தங்களது கோட்டையாக மாற்றும் முனைப்பில் அவர்கள் செயல்பட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த திங்கட்கிழமை (மார்ச் 30) தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்ரல் 6-ம் தேதி (திங்கட்கிழமை) இறுதி நாளாகும். இடையில் சனி…

Read More

பட்டப்படிப்பு முடித்து வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ₹5,000 வழங்கப்படும் என பாமக தேர்தல் வாக்குறுதியாக அன்புமணி அறிவித்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாமகவின் தேர்தல் அறிக்கையை அந்தக் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் வெளியிட்டார். அதில், வேலைவாய்ப்பு:  5 இலட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும். 2026-27, 2027-28 ஆகிய இரு ஆண்டுகளில் மட்டும் 2.5 இலட்சம் பேருக்கு அ வேலைவாய்ப்பு வழங்கப்படும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட் நான்காம் தொகுதிப் பணிகளுக்கு 35,000 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். இரண்டாம் தொகுதிப் பணிகளுக்கு 10,000 பேர் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அரசுப் பள்ளிகளில் வகுப்புக்கு ஓர் ஆசிரியர் வீதம் நியமிக்கவும், காலியிடங்களை நிரப்ப ஒரு இலட்சத்திற்கும் கூடுதலான ஆசிரியர்கள் நியமிக்கப்படவேண்டும். முதல்கட்டா 2025-26ஆம் ஆண்டில் 40,000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். காவல்துறை, தீயவிப்புத்துறை, வனத்துறை உள்ளிட்ட சீருடைப் பணிகளுக்கு 20,000 தேர்வு செய்யப்படுவார்கள். போக்குவரத்துத்…

Read More

ஐபிஎல் 2026 தொடரின் 4-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியை எதிர்கொண்ட பஞ்சாப் கிங்ஸ் (PBKS), கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. இருப்பினும், இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்கத் தவறியது. அதாவது, மெதுவான பந்துவீச்சு விகிதத்தை (Slow Over-rate) கடைப்பிடித்ததற்காக, அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஐபிஎல் நடத்தை விதிகளின் கீழ் (Article 2.22), இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணி செய்யும் முதல் தவறு இது என்பதால், குறைந்தபட்ச அபராதத் தொகையான 12 லட்சம் ரூபாய் விதிக்கப்பட்டுள்ளது. இதே தவறு மீண்டும் தொடர்ந்தால் அபராதத் தொகை அதிகரிப்பதுடன், கேப்டனுக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடையும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த சீசனில் மெதுவான பந்துவீச்சிற்காக அபராதம் விதிக்கப்பட்ட முதல் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்டத்தில்…

Read More

நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் என்டிஏ கூட்டணி வேட்பாளராக இரட்டை இலை சின்னத்தில் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் திரு.வி.க.நகர் தொகுதியில் களமிறங்குகிறார். அவருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் ஆதரவு தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் கூறுகையில், “திருமதி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் மிகுந்த துணிச்சலோடு பொது வாழ்விற்கு வந்திருப்பதை நான் வரவேற்கிறேன். ஆம்ஸ்ட்ராங் மறைவிற்குப் பிறகு, அவரது அரசியல் பணியைத் தொய்வின்றித் தொடர வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் களமிறங்கியிருப்பது பாராட்டிற்குரியது. பொற்கொடிக்குச் சமூகத்திலும் அரசியலிலும் உரியப் பாதுகாப்பும், அங்கீகாரமும் தேவை. அதனைப் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக வழங்கியிருப்பதை நான் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். திருமாவளவனின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில், குறிப்பாக திமுக கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கவலை தெரிவித்த திருமாவளவன், அவருக்கு அரசியல் களம் ஒரு பாதுகாப்புக் கவசமாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். அதிமுக வேட்பாளருக்கு…

Read More