Close Menu
    What's Hot

    ‘ஸ்ரீவைகுண்டத்தில் போட்டி’ – சமகக தலைவர் எர்ணாவூர் நாராயணன் அறிவிப்பு

    ஒரே மாவட்டத்தில் 8 மாதங்களில் 409 குழந்தைகள் பலி! ம.பி.யில் அதிர்ச்சி

    தங்க அங்கி சபரிமலைக்கு புறப்பட்டது… மண்டல பூஜையில் ஐயப்பனுக்கு அணிவிப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தேர்தல் 2026»2026 தேர்தலில் துரோகம் வீழ்த்தப்படும் – ஜெ., நினைவிடத்தில் டிடிவி சபதம்
    தேர்தல் 2026

    2026 தேர்தலில் துரோகம் வீழ்த்தப்படும் – ஜெ., நினைவிடத்தில் டிடிவி சபதம்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 5, 2025Updated:December 5, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ttv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் துரோகம் வீழ்த்தப்பட வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாளான இன்று (டிச.5) அவரது நினைவிடத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மரியாதை செலுத்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

    அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், அதிமுகவை அமித் ஷா தான் இயக்குகிறாரா? என்ற கேள்விக்கு, ”அது பற்றி எனக்கு தெரியாது. அம்மாவின் தொண்டர்கள் தான் அதிமுகவை இயக்குகிறார்கள்” என்றார்.

    திருப்பரங்குன்ற தீப விவகாரம் குறித்த கேள்விக்கு, ”அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்பது அம்மா வழியில் செயல்படக்கூடிய இயக்கம். அரசியலுக்காக மதத்தையும், சாதியையும் கையில் எடுக்கும் இயக்கமல்ல. இந்த விஷயத்தில் அங்குள்ள இந்து, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ சமுதாய மக்கள் எல்லோரும் உறவினர்களாக, சகோதரர்களாக அமைதியாக வாழ்கின்ற விதத்திலும், பொது அமைதிக்கும், மத நல்லிணக்கத்திற்கும் இடையூறு வரும் வகையில் எந்த ஒரு அரசியல் கட்சியோ, அமைப்போ செயல்படகூடாது. அதுவே தமிழ்நாட்டு மக்களின் விருப்பம்.

    தமிழ்நாடு மக்கள் சாதி மதங்களை எல்லாம் கடந்து எந்த ஒரு பேதம் இல்லாமல் சகோதர சகோதரிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மதத்தின் பெயராலோ, சாதியின் பெயராலோ எந்த ஒரு இடைஞ்சலையும் யாரும் ஏற்படுத்துவதை தவிர்த்து விட வேண்டும். இது போன்ற அரசியலை தமிழ்நாட்டு மக்கள் உறுதியாக ஏற்க மாட்டார்கள். தொடர்ந்தது தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ வேண்டும் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு” என்றார்.

    எங்களை பொருத்தவரை இந்த தேர்தலில் துரோகம் வீழ்த்தப்பட வேண்டும். இதில் அமமுகவின் பங்கு உறுதியாக இருக்கும். அதைத்தான் உறுதிமொழியாகவும் எடுத்து உள்ளோம்” என்றார்.

    தே.ஜ., கூட்டணியில் மீண்டும் அமமுக இணையுமா? என்ற கேள்விக்கு, ”எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் வரை இணைவதற்கு வாய்ப்பே இல்லை” என தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎன் மகன் சரவணனுக்கு பெயர் வைக்க காரணமே ஏவிஎம் சரவணன் தான் – சிவக்குமார் உருக்கம் !!!
    Next Article பாஜக கூட்டணியில் அமமுக மீண்டும் சேருமா? டிடிவி தினகரன் பதில்
    Editor TN Talks

    Related Posts

    ‘ஸ்ரீவைகுண்டத்தில் போட்டி’ – சமகக தலைவர் எர்ணாவூர் நாராயணன் அறிவிப்பு

    December 24, 2025

    அதிமுகவிடம் 60 தொகுதிகளை கேட்கும் பாஜக… இபிஎஸ்சுடன் பியூஷ் கோயல் பேச்சு

    December 23, 2025

    தென் மாவட்டத்தில் தொகுதி வேண்டும்… கூட்டணிக்கு ஜான் பாண்டியன் நிபந்தனை

    December 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘ஸ்ரீவைகுண்டத்தில் போட்டி’ – சமகக தலைவர் எர்ணாவூர் நாராயணன் அறிவிப்பு

    ஒரே மாவட்டத்தில் 8 மாதங்களில் 409 குழந்தைகள் பலி! ம.பி.யில் அதிர்ச்சி

    தங்க அங்கி சபரிமலைக்கு புறப்பட்டது… மண்டல பூஜையில் ஐயப்பனுக்கு அணிவிப்பு

    ஜோதிட நாள்காட்டி 24.12.2025 | மார்கழி 09

    இன்றைய ராசிபலன் @ 24 டிசம்பர் 2025

    Trending Posts

    அமெரிக்காவின் ‘புளூபேர்ட்-6’ செயற்கைக்கோளை சுமந்து இன்று (டிச. 24) விண்ணில் பாய்கிறது பாகுபலி ராக்கெட்!

    December 24, 2025

    2வது T20: இலங்கையை வீழ்த்தியது இந்திய அணி

    December 24, 2025

    ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ படத்தின் டீசர் வெளியீடு!

    December 23, 2025

    ‘ஸ்ரீவைகுண்டத்தில் போட்டி’ – சமகக தலைவர் எர்ணாவூர் நாராயணன் அறிவிப்பு

    December 24, 2025

    ஒரே மாவட்டத்தில் 8 மாதங்களில் 409 குழந்தைகள் பலி! ம.பி.யில் அதிர்ச்சி

    December 24, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.