‘டான் பிக்சர்ஸ்’ நிறுவன உரிமையாளர் ஆகாஷ் பாஸ்கரன், அமலாக்கத்துறையின் விசாரணைக்கு அஞ்சி காணாமல் போயுள்ள நிலையில், முன்னணி நடிகர்கள் சிவகார்த்திகேயன், தனுஷ் மற்றும் சிம்புவையும் இந்தத் துறை விசாரணைக்கு அழைக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

முன்னதாக டாஸ்மாக் நிறுவனத்தில் 1000 கோடி ரூபாய்க்கு மேல் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக, அதன் தலைமை அலுவலகம் மற்றும் பல மதுபான ஆலைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டனர். இந்தச் சுற்றுப்பட்டியில் ‘பராசக்தி’ படத்தை தயாரித்து வரும் ஆகாஷ் பாஸ்கரனின் வீடு, தொழிலதிபர் தேவகுமார் உள்ளிட்ட பலர் வீடுகளிலும் சோதனைகள் நடைபெற்றன.

ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத்தில் தேடுதல் வேட்டையில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவருக்கு மே 21ம் தேதியன்று நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகாததோடு, தற்போது தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.

ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் உள்ள திரைப்படங்கள் :

சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’, தனுஷின் ‘இட்லி கடை’, சிம்புவின் 49வது படம்  ஆகியவற்றிற்காக இந்த மூன்று நடிகர்களுக்கும் பெரும் தொகை ரொக்கமாக வழங்கப்பட்டதாக அறிக்கைகள் கூறுகின்றன. இதில் சட்டவிரோத பணமாற்றங்கள் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு, தற்போது அவர்கள் மூவரும் விசாரணைக்கு உட்படலாம் என அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் தெரிந்துகொள்ள: தனுஷ், சிவகார்த்திகேயன் பட தயாரிப்பாளர் வீட்டில் ED சோதனை..

இதனை தொடர்ந்து திரையுலகத்திலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version