மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள பார்கி அணையில் படகு கவிழ்ந்து சுற்றுலாப் பயணிகள் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையை சுற்றுலாப் படகில் பார்க்க சென்ற 31 பேர் இந்த விபத்தில் சிக்கி ஆற்றில் விழுந்தனர். அணையில் மூழ்கியதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், தத்தளித்த 15 பேரை மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

படகு கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி காணாமல் போன மேலும் சிலரை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version