Author: Editor TN Talks

‘ஹார்ட் பீட்’ தொடரில் ரீனா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை தீபா பாலு, அந்த தொடரிலிருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. டெலி ஃபேக்ட்ரி நிறுவனம் தயாரித்து வரும் ஹார்ட் பீட் இணையத் தொடரில் ரீனா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை தீபா பாலு. இந்தத் தொடரின் 2வது பாகம் நிறைவுற்று 3-வது சீசன் வரும் ஜூலை 30-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்லது. 2-வது சீசனின் முடிவில், ரீனா கதாபாத்திரத்துக்கு, கார்த்திக் குமார்தான் தனது தந்தை என்னும் விவரம் தெரிவதாகவும், ரீனா கோமாநிலைக்குச் செல்வது போன்றும் முடிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 3-வது சீசனின் அறிவிப்பு வெளியான நிலையில், ரீனா கதாபாத்திர நடிகை தீபா பாலு, தடாலடியாக வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. “சில இடங்களில்… சில மனிதர்களை… விட்டுப்போவது எளிதல்ல. ஆனால் சில ’பிரிவு’ நமது நல்லதுக்காகத்தான். எப்போதும் நன்றியுடன் இருப்பேன்.…

Read More

  பள்ளி, கல்லூரிகளில் தவெக தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடத்தியது தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தி, கல்வி நிறுவனங்களின் தலைமை பதவி வகிப்பவர்கள், ஊழியர்களை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலரும், வழக்கறிஞருமான கவிகணேசன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கடந்த 22 ஆம் தேதி, தவெக தலைவரின் பிறந்த நாளை ஒட்டி, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில், அந்த கட்சியினர், கட்சி கொடி, சின்னங்களுடன் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளதாகக் கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சிகளின்போது மாணவர்களை தவெக தலைவருக்கு பிறந்தநாள் பாடவும், கோஷம் எழுப்பவும்  செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் தவெக தலைவரின் முகத்தின் வடிவில் 3000 மாணவர்களை வெயிலில் அமரச் செய்துள்ளனர். குழந்தைகளை பள்ளிகளின் தலைமை பொறுப்பை வகிப்பவர்கள் கவனித்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில், பெற்றோர் அனுப்பி வைக்கும் நிலையில், மாணவர்களை அரசியல் கொண்டாட்டங்களுக்கு பயன்படுத்துவது கல்வி நிறுவனங்களின் நோக்கத்துக்கு விரோதமானது…

Read More

பணியில் இருக்கும் போது, கூடுதல் கல்வித்தகுதியை பெறும் அரசு ஊழியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வந்தது. நிதிச்சுமை காரணமாக, 2020 ஆம் ஆண்டு முந்தையை கொள்கையை ரத்து செய்த தமிழக அரசு, ஒரே தவணை ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்தது. இதை எதிர்த்தும், உயர்கல்வி பெற்ற அரசு ஊழியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்கக் கோரியும், அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் ஆர்.கலைமதி அசங்கிய அமர்வு, உயர்கல்வி தகுதி பெற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்க ஊதிய உயர்வை ரத்து செய்து அரசு எடுத்த கொள்கை முடிவை சட்டவிரோதம் எனக் கூற முடியாது எனத் தெரிவித்து, வழக்குகளை முடித்து வைத்தது. மேலும் அந்த தீர்ப்பில், அரசு ஊழியர்களை ஊக்குவிக்க வழங்கப்பட்ட ஊக்க ஊதிய உயர்வை ரத்து செய்த பின், அதை…

Read More

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டி, விசிக மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி விமர்சித்துள்ளது, அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அருகே காளவாக்கம் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, திமுக ஆட்சியில் கமிஷன், கட்டிங்,கரப்ஷன் இருந்ததாகவும், கூட்டணி தர்மத்திற்காக இதுவரை அதுகுறித்துப் பேசவில்லை. இப்போது கூட்டணியில் இல்லை; அதனால் பேசுகிறோம் எனவும் கூறினார். இதில் செய்தியாளரின் கேள்வியை எதிர்கொள்ளமுடியாமல் டென்ஷனான வைகோ, அவரை ஒருமையில் பேசியதால் அந்த சந்திப்பில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் வைகோவின் இந்த பேட்டியை விசிக மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி விமர்சித்துள்ளார். கூட்டணி தர்மம் என்பதற்காக கூட்டணியில் இருக்கும்போது தவறுகளை பொறுத்து கொண்டோம் இப்போது அதை சொல்கிறோம் என்பது மக்களுக்கான தர்மம் ஆகுமா? என அவர் வினவியுள்ளார். நேற்றைய கூட்டணியை பற்றி இன்றுதான் சொல்லமுடியும் என்றால் இன்றைய கூட்டணியை பற்றி நாளைதான் சொல்ல வேண்டி வரும் என்றாகாதா? எனவும் விமர்சித்துள்ளார். “ANYONE…

Read More

திமுகவும், அதிமுகவும் இணைந்து ஆட்சியை அமைக்க தொடர்ந்து குறுக்குவழியில் திட்டமிட்டு வருவதாக அமைச்சர் நிர்மல்குமார் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல்குமார், திமுக மற்றும் அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க முயற்சித்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக ஐ.யு .எம். எல் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டினார். “திமுக மற்றும் அதிமுக இணைந்து ஆட்சியைப் பிடிக்க முயற்சிப்பதாக ஒரு மாதத்திற்கு முன்பே நாங்கள் கூறியிருந்தோம். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்து வெளியே வருவதற்கு இதுதான் காரணம் என்றார். தங்களின் சொத்துக்களை பாதுகாத்துக் கொள்வதற்காக  மு.க.ஸ்டாலினும், மற்றும் எடப்பாடி கே. பழனிசாமியும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம்சாட்டியவர்,  மேலும், “பாஜகவின் முழு ஆதரவுடன் திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க  தொடர்ந்து குறுக்கு வழியில் முயற்சி செய்துவருவதாகவும், இறுதியில் திமுகவும் அதிமுகவும் தனித்தே நிற்கும் நிலை ஏற்படும் எனவும் தெரிவித்தார். இன்னும் சில ஆண்டுகளில்…

Read More

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற குளோபல் ஸ்கில்ஸ் சேலஞ்ச் ஆஸ்திரேலியா 2026 போட்டியில் இந்திய அணி சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி 3 தங்கம், 1 வெள்ளி மற்றும் 1 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. ஜூன் 23 முதல் 29 வரை நடைபெற்ற இந்த சர்வதேச திறன் போட்டியில், இந்தியா, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, சீனா, அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், தென் கொரியா உள்ளிட்ட 16 நாடுகளைச் சேர்ந்த சுமார் 600 போட்டியாளர்கள், நிபுணர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் Additive Manufacturing பிரிவில் கர்நாடகவின் பவன் பத்ராவதி சுரேஷா, – Cloud Computing பிரிவில் டெல்லியை சேர்ந்த மௌசம் குமார் கிரி,  – Health and Social Care பிரிவில் டெல்லியைச் சேர்த விஷ்ணுப்ரியா சுனில் ஆகியோ தங்கப்பதக்கங்களை வென்றனர். 3D Digital Game Art பிரிவில் மகாராஷ்டிராவின் ஹர்ஷ் ரமேஷ் வெள்ளிப் பதக்கமும்,  Painting and…

Read More

எடப்பாடி பழனிசாமியின் சந்தர்ப்பவாத நிலைப்பாட்டிற்குப் பலியாகாமல் அதிமுகவை விட்டு வெளியேறுவதாக எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஜூன் 29-ஆம் தேதி தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த கரூர் அதிமுக எம்.எல்.ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிமுகவில் இருந்தும் விலகியுள்ளார். எம்.ஜி.ஆரின் லட்சியப்பாதையிலும், ஜெயலலிதாவின் பேரன்பிலும் அரசியல் பயணத்தைத் தொடங்கி ரத்தமும் சதையுமாக அதிமுகவை முழுமூச்சாகக் கருதி வாழ்ந்தவன் தான் என அறிக்கையொன்றில் கூறியுள்ள எம்.ஆர். விஜயபாஸ்கர்,  ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக சந்தித்த அத்தனை நெருக்கடி நேரங்களிலும், ஒற்றைத் தலைமையாக எடப்பாடி கே. பழனிசாமியின் பின்னால் உறுதியாக நின்றதாகவும் கூறியுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியின்  அதிகார அடக்குமுறையால், தன் மீது 43 பொய் வழக்குகள் சுமத்தப்பட்டதாகவும், கழக உடன்பிறப்புகள் வாழ்வு சிதைக்கப்பட்டதோடு, தனது குடும்பத்தின் நிம்மதி குலைக்கப்பட்டடாகவும் தெரிவித்துள்ளார். திமுகவின் அத்தனை அராஜகங்களையும் தூள்தூளாக்கி, செந்தில் பாலாஜியின் அதிகார மமதையை வீழ்த்தி  கரூரில் மீண்டும் அதிமுக கொடியை ஏற்றியவன் தானும் தன்னுடன்…

Read More

அதிமுகவில் தன்னை நம்பி வந்த நிர்வாகிகளை விட்டுவிட்டு தனக்கு மட்டும் பதவி பெறத் தயாராக இல்லை என்றும், தன்னுடன் இருந்த 30 மாவட்டச் செயலாளர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படாத நிலையில், தனக்கு மட்டும் பதவி வழங்கப்பட்டால் அதை ஏற்க முடியாது என்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாக கூறப்படும் வீடியோ காட்சிகளை அவரது ஆதரவாளர்கள் வெளியிட்டுள்ளனர். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை எஸ்.பி. வேலுமணி தனது ஆதரவாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்தக் கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அந்தக் கூட்டத்தில், சட்டமன்றத் தேர்தல் முடிந்த பின்னர் அடுத்த 25 நாட்களில் நடந்த அரசியல் நிகழ்வுகள் மற்றும் கட்சியின் உள்நிலை குறித்து தனது ஆதரவாளர்களிடம் எஸ்.பி. வேலுமணி விரிவாக விளக்கிப் பேசியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்தக் கூட்டத்தில் அவர் பேசியதாகக் கூறப்படும் சில நொடி வீடியோ காட்சிகளை அவரது ஆதரவாளர்கள் இன்று சமூக…

Read More

ஒன்றிய அரசு சிபிஎஸ்இ பள்ளிகளில் புகுத்தியிருக்கும் மும்மொழித் திட்டம் தற்காலிகமாகத் திரும்பப் பெறப்பட்டதுபோன்ற ஒரு தோற்றம் சில ஊடகங்களின் செய்திகள் மூலம் உருவாகியிருக்கலாம். மும்மொழித் திட்டம் திரும்பப்பெறப்படவில்லை. சிபிஎஸ்இ  அதைத் தொடர்ந்து செயல்படுத்துவதாகவே அறிவித்துள்ளது என விசிகஎம்.பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளதால் தமிழ்நாட்டு மாணவர்களைக் குழப்புவதுபோல ஒரு அறிவிப்பை அது வெளியிட்டுள்ளதாகவும் அவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 2026-27 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு எந்த மாற்றமும் இருக்காது என்றும், அவர்கள் தொடர்ந்து இரண்டு மொழிகளைக் கொண்ட பழைய முறையையே பின்பற்றுவார்கள் என்றும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. * இப்பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் மூன்றாவது மொழியைப் பயில வேண்டிய அவசியமில்லை.” என்றும் கூறியுள்ள சிபிஎஸ்இ ஒன்பதாம் வகுப்பில் தற்போது பயிலும் மாணவர்கள் 3 மொழியைப் படிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது. மூன்றாம் மொழி (R3) உங்கள் பள்ளியால் நடத்தப்படும் பள்ளி அளவிலான அக மதிப்பீட்டின் (internal…

Read More

தமிழ்நாடு அரசு கலைக்கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான இடங்கள் காலியாக உள்ளதால் மாணவர் சேர்க்கை நடவடிக்கையை சீரமைக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இந்த ஆண்டும் ஆயிரக்கணக்கான இடங்கள் காலியாக உள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் கவலை அளிக்கின்றன. ஒரே மாநிலத்தில் தனியார் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை விரைவாக நிறைவு செய்து கொள்ளும் நிலையில், அரசு கல்லூரிகளில் மட்டும் பெருமளவில் இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது, தற்போதைய சேர்க்கை முறையில் உள்ள குறைகளை வெளிப்படுத்துகிறது. தமிழகத்தில் 1,044 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ள நிலையில், அரசு கல்லூரிகளில் முதல் கட்ட கலந்தாய்வுக்குப் பிறகும் 43 சதவீத இடங்கள் காலியாக இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. இது மாணவர்களின் ஆர்வக் குறைவு அல்ல; மாறாக, சேர்க்கை நடைமுறைகளில்…

Read More