Author: Editor TN Talks
கொரோனாவின் போது மனநலம் பாதிக்கப்பட்டு டெல்லியில் இருந்து தவறி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூருக்கு வந்து சுற்றித்திரிந்த டெல்லியை சேர்ந்த முகமது ஆரிப் என்ற இளைஞரை ஐந்து ஆண்டுகளுக்கு பின்பு அவரது குடும்பத்தோடு சேர்த்து வைத்திருக்கிறது டேனியல் நல்ல சமாரியன் மனநல காப்பகம் என்னும் தொண்டு நிறுவனம். புது டெல்லி ஆர்.கே.புரம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஆரிப். கார் டிரைவர் மற்றும் மெக்கானிக்கான இவர் கொரோனா காலத்தின்போது மனநலம் பாதிக்கப்பட்டு டெல்லியில் இருந்து ரயில் மூலம் வழிதவறி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதிக்கு வந்து அங்கே சுற்றி திரிந்துள்ளார். இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் முகாம் மூலம் மீட்கப்பட்ட முகமது ஆரிப் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியில் அமைந்துள்ள நல்ல சமாரியன் மனநல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டு அங்கு அவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளாக சிகிச்சைக்கு பின் தற்போது நல்ல நிலையில் உள்ள முகமது ஆரிப் தனது முகவரி மற்றும்…
போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை ‘தேசவிரோதிகள்’ என முத்திரை குத்துவதை பாஜகவும், பிரதமர் நரேந்திர மோடியும் நிறுத்த வேண்டும் என்று கரப்பான்பூச்சி கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே வலியுறுத்தியுள்ளார். மும்பையில் உள்ள நிதா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தில் (NMACC) நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜென் Z மற்றும் ஜென் ஆல்பா தலைமுறையினருடன் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நேற்று கலந்துரையாடினார். அப்போது, உண்மையான பிரச்சினைகளுக்காக போராட இளம் தலைமுறையினருக்கு உரிமை உள்ளது என்றும், அவர்களை தேசவிரோதிகள் என அழைக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதுகுறித்து பேசிய அபிஜீத் திப்கே, “ஜென் Z இளைஞர்களை தேசவிரோதிகள் என அழைக்கக் கூடாது, போராடுவது அவர்களின் உரிமை, அவர்கள் எழுப்பும் பிரச்சினைகள் உண்மையானவை என்று மோகன்பகவத் கூறுவதை வரவேற்கிறேன்” என்றார். மேலும், ஆளும் கட்சிக்கு வழிகாட்டியாக இருக்கும் மோகன் பகவத், மாணவர்களின் போராட்டங்கள் தொடர்பான அரசியல் அணுகுமுறையை மாற்ற பாஜக தலைமைக்கு அறிவுறுத்த…
சென்னையில் பெரம்பூர், கொளத்தூர்,மாதவரம் உட்பட 30 இடங்களில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்த ஊழியர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை செம்பியத்தைச் சேர்ந்த ஜி.தேவராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இதுபோல, 2022ஆம் ஆண்டு முதல் 2026ஆம் ஆண்டு வரை கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையை சம்பந்தபபட்ட பணியாளர்களிடமிருந்து வசூலித்து அரசுக்கு செலுத்த வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு எதிராக பணி நீக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும், ரசீது புத்தகங்களை பராமரிக்க வேண்டும் என்றும் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார். மேலும், நுகர்வோர் வாங்கும் ஒவ்வொரு பாட்டிலுக்கும் ரசீது கொடுக்க வேண்டும்…
குதிரை பேர வழக்கில் 13 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருந்த நிலையில், மேலும் ஒருவருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்தியதாக திருவல்லிக்கேணி போலீசார், 14 பேரை கைது செய்துள்ளனர். திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மாற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் உள்பட இந்த வழக்கில் இதுவரை 13 பேர் ஜாமீன் பெற்றுள்ளனர். திருவல்லிக்கேணி காவல் நிலையத்தினரின் விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், ஜாமீன் கோரி கிருஷ்ணன் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், கிருஷ்ணனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதன் மூலம் குதிரை பேர வழக்கில் கைது செய்யப்பட்ட 14 பேருக்கும் ஜாமின் கிடைத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. குதிரை பேர வழக்கில் கார்த்திகேயராஜா என்பவர் முன் ஜாமீன் கோரிய மனுவை செப்டம்பர் 1 ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அதுவரை…
உத்தரப் பிரதேசத்தில், தந்தைக்கு பதிலாக உயிருடன் இருந்த மகனுக்கே மரணச் சான்றிதழ் வழங்கிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்புரி மாவட்டம் ரன்னவுட் நகராட்சி 14-வது வார்டைச் சேர்ந்த கில்டா ஆதிவாசி என்பவரின் தந்தை ஜிக்னா ஆதிவாசி, கடந்த 2022 அக்டோபர் 24 அன்று உயிரிழந்தார். இதையடுத்து, 2023-ஆம் ஆண்டு தனது தந்தையின் மரணச் சான்றிதழ் பெற கில்டா நகராட்சியில் விண்ணப்பித்தார். ஆனால், படிப்பறிவு இல்லாததால் வழங்கப்பட்ட சான்றிதழை அவர் சரிபார்க்கவில்லை. பின்னர், தனது தந்தையின் நிலத்தை தனது பெயருக்கு மாற்றுவதற்காக வருவாய்த் துறையை அணுகியபோது, தந்தைக்கு பதிலாக கில்டா ஆதிவாசியே இறந்ததாக மரணச் சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. நகராட்சியின் இந்த அலட்சியப் பதிவுப் பிழையால், ஆதார் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ தரவுத்தளங்களில் கில்டா “இறந்தவர்” என பதிவு செய்யப்பட்டார். இதனால் அவரது ரேசன் அட்டை செயலிழந்ததோடு, அரசின் நலத்திட்ட உதவிகள் நிறுத்தப்பட்டன. பரம்பரைச் சொத்து பெயர் மாற்றமும் முடங்கியது. இதன்காரணமாக…
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பயணித்த ‘மரைன் ஒன்’ (Marine One) ஹெலிகாப்டர் தொடர்பாக ஏற்பட்ட விமானப் பாதுகாப்பு நடைமுறை மீறல் குறித்து, அமெரிக்க கூட்டாட்சி விமானப் போக்குவரத்து நிர்வாகம் (FAA) மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) விசாரணை நடத்தி வருகின்றன. கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி பிற்பகல் 2.30 மணியளவில், வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அருகேயுள்ள எலிப்ஸ் (Ellipse) பகுதியில் இருந்து மரைன் ஒன் ஹெலிகாப்டர் புறப்பட்டு, மேரிலாந்தில் உள்ள ஜாயிண்ட் பேஸ் ஆண்ட்ரூஸ் விமானத் தளத்துக்கு சென்றது. அங்கிருந்து அதிபர் டிரம்ப் மேற்குக் கடற்கரைப் பயணத்தை தொடங்க இருந்தார். ஆனால், ஹெலிகாப்டர் புறப்படும் நேரத்தில் அருகிலுள்ள ரொனால்ட் ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்தில் (DCA) வழக்கம்போல் வர்த்தக விமான போக்குவரத்து நிறுத்தப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். விதிமுறைகளின்படி, மரைன் ஒன் புறப்படுவதற்கு 3 நிமிடங்களுக்கு முன்பே அந்தப் பகுதியிலுள்ள மற்ற அனைத்து விமானங்களின்…
கடந்த 2021 முதல் பிரதமர் நரேந்திர மோடி 44 வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டு 65 நாடுகளுக்கு சென்றுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் (MEA) மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது. மேலும், அந்த வெளிநாட்டு பயணங்களின்போது மொத்தம் 316 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2026-ஆம் ஆண்டில் மட்டும் பிரதமர் மோடி இதுவரை 13 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் நார்வே பயணமே அதிக செலவானதாக இருந்து, அதற்காக ரூ.12.46 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட அதிகாரப்பூர்வ தகவலின்படி: 2021 – ரூ.36.18 கோடி 2022 – ரூ.55.81 கோடி 2023 – ரூ.102.12 கோடி 2024 – ரூ.100.58 கோடி 2025 – ரூ.67 கோடிக்கும் மேல் (இது தற்காலிக மதிப்பீடு; சில பயணங்களின் கணக்குகள் இன்னும் முடிக்கப்படவில்லை.) மே 2022 முதல் டிசம்பர் 2024 வரை பிரதமர் மோடியின் 38 வெளிநாட்டு பயணங்களுக்கு ரூ.258 கோடி செலவிடப்பட்டதாகவும் அமைச்சகம்…
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் நிறுவனர் அபிஜித் டிப்கே, மக்களின் பிரச்சினைகளை நேரடியாக அறியும் நோக்கில் ‘என்ன சொல்கிறார்கள் மக்கள்’ (Kya Bolti Public) என்ற நாடு தழுவிய மக்கள் தொடர்பு பிரச்சாரத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளார். இந்த பிரச்சாரத்தின் முதல் கட்டமாக கல்வித் துறையில் உள்ள பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதுகுறித்து பேசிய அபிஜித் டிப்கே, “நாங்கள் முதலில் எடுத்துக்கொள்ளும் பிரச்சினை கல்விச் சீர்திருத்தம். நாட்டில் தரமான கல்வி பெறுவது பல குடும்பங்களுக்கு எட்டாத ஒன்றாக மாறிவிட்டது. முதல் வகுப்பிலேயே ஆண்டுக் கட்டணம் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. அதற்கு மேலாக நன்கொடையும் கேட்கப்படுகிறது” என்றார். மேலும், “அவ்வளவு வருமானம் இல்லாத நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்கள் இந்தக் கட்டணங்களை எப்படி செலுத்த முடியும்? குழந்தைகளைப் படிக்க வைக்க பெற்றோர் கடன் வாங்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது” என்று அவர் கூறினார். கல்லூரிகள்…
பெண் பத்திரிகையாளரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தெஹல்கா (Tehelka) இதழின் நிறுவனர் தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, இந்த வழக்கில் கோவா அமர்வு நீதிமன்றம் 2021-ஆம் ஆண்டு வழங்கிய விடுதலை தீர்ப்பை ரத்து செய்த பம்பாய் உயர்நீதிமன்றத்தின் கோவா அமர்வு, தருண் தேஜ்பாலை குற்றவாளி என அறிவித்தது. 2013 நவம்பரில், கோவாவில் தெஹல்கா இதழ் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியின் போது, பெண் பத்திரிகையாளரை ஹோட்டலில் பாலியல் வன்கொடுமை செய்ததாக தருண் தேஜ்பால் மீது குற்றச்சாட்டு எழுந்தது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், 2013 நவம்பர் 23-ஆம் தேதி கோவா காவல்துறை முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்தது. முன்ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நவம்பர் 30-ஆம் தேதி கோவா குற்றப்பிரிவு போலீசார் தருண் தேஜ்பாலை கைது செய்தனர். பின்னர், 2014 ஜூலை மாதத்தில் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதால், அவர் நீதிமன்றக்…
அமோனியா வாயு கசிவு வழக்கில் ஆலை உரிமையாளர்கள் உள்ளிட்ட 3 பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் என்னும் இடத்தில் செயல்பட்டு வந்த இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில், ஜூன் 21 ஆம் தேதி அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு, இதில் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக, தொழிற்சாலை உரிமையாளர் ஜோசப் ஜெகன், தண்டையார்பட்டியைச் சேர்ந்த மோகன், தொழிற்சாலை மேலாளர் டேனியல் மற்றும் தொழிலாளர் முகவர் சுரேஷ் ஆகியோரை திருவள்ளூர் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள தொழிற்சாலை உரிமையாளர்கள் ஜோசப் ஜெகன் மற்றும் மோகன், மேலாளர் டேனியல் டைட்டஸ் சிங் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி சி.குமரப்பன் முன் விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விசாரணை இன்னும் முழுமையாக முடிவடையவில்லை, ஜாமீன் வழங்கக் கூடாது என்று…