Author: Editor TN Talks
‘Anti-Drag’ பாதுகாப்புவசதியுடன்கூடியமுதல்மெட்ரோரயில்சேவையைசென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இன்று தொடங்கிவைத்தது. இதனால்பயணிகள்பாதுகாப்புமேலும்மேம்பாடு அடைந்துள்ளது. சென்னைமெட்ரோரெயில்லிமிடெட் (CMRL), பயணிகள்பாதுகாப்பில்முக்கியமானமுன்னேற்றமாக, ‘Anti-Drag’ பாதுகாப்புவசதிபொருத்தப்பட்டமுதல்மெட்ரோரயிலைஇன்றுபயணிகள்சேவைக்காகஅறிமுகப்படுத்தியது. இந்தரயில்சேவையை CMRL இயக்குநர் (Systems and Operations) மனோஜ்கோயல்தொடங்கிவைத்தார். இந்நிகழ்வில் CMRL மூத்தஅதிகாரிகள்மற்றும்ஒப்பந்தநிறுவனஅதிகாரிகள்கலந்துகொண்டனர். ‘Anti-Drag’ வசதிஎன்பது CMRL கட்டம்-1 ரயில்களில்உள்ளதானியங்கிகதவுகளுக்குகூடுதலாகஇணைக்கப்பட்டுள்ளபாதுகாப்புஅம்சமாகும். ஏற்கனவேசெயல்பாட்டில்உள்ளதடைகள்கண்டறியும் (Obstacle Detection) அமைப்புக்குமேலாகஇதுசெயல்படும். இந்தவசதி, குறிப்பாகஇந்தியசூழ்நிலைக்கேற்பவடிவமைக்கப்பட்டுள்ளது. பெண்கள்அணியும்சேலை, ஷால், துப்பட்டாபோன்றஉடைகள்கதவுகளில்சிக்கிக்கொள்ளும்அபாயத்தைகருத்தில்கொண்டுஇந்தஅமைப்புஉருவாக்கப்பட்டுள்ளது. கதவுகளில்உடைஅல்லதுவேறுபொருள்சிக்கியநிலையில், எந்ததிசையிலும்இழுக்கும்அழுத்தம்ஏற்பட்டால், இந்தஅமைப்புஅதைகண்டறியும். இதனல், உடனடியாக: ரயிலின்பிரேக்தானாகசெயல்படும் ரயில்இயக்கம்நிறுத்தப்படும் சம்பந்தப்பட்டகதவுமீண்டும்திறக்கப்படும் பொருள்அகற்றப்பட்டபிறகு, ரயில்சேவைவழக்கம்போல்மீண்டும்தொடங்கும். இந்தசாதனை, இந்தியமெட்ரோரயில்களில் ‘Anti-Drag’ பாதுகாப்புவசதிமுதன்முறையாகசெயல்படுத்தப்பட்டதையும், சர்வதேசதரமான EN 14752:2025 விதிமுறைகளுக்குஏற்பஉலகிலேயேமுதன்முறையாகஅமல்படுத்தப்பட்டிருக்கக்கூடியதிட்டமாகவும்கருதப்படுகிறது. இந்தபாதுகாப்புவசதிசென்னைமெட்ரோரெயில்லிமிடெட் (CMRL) மற்றும் ஓசூர், பெங்களுரைச் சேர்ந்த மேலும் 2 நிறுவனங்களின்கூட்டுமுயற்சியால்உருவாக்கப்பட்டுஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. முதல்ரயிலில்வெற்றிகரமாகஅறிமுகப்படுத்தப்பட்டதைத்தொடர்ந்து, CMRL கட்டம்-1ல்இயங்கும்மீதமுள்ள 51 ரயில்களிலும்இந்த ‘Anti-Drag’ பாதுகாப்புவசதியைசெயல்படுத்தும்பணிகள்தீவிரமாகநடைபெற்றுவருகின்றன.
முதலமைச்சர் விஜய்யின் தனிச் செயலர் செந்தில் குமார் ஆளுநரை சந்தித்து பேசியுள்ளார். அவர் தமிழக அமைச்சரவை பட்டியலுடன்ஆளுநரை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தலில் 107 தொகுதிகளில் வெற்றி பெற்றதோடு, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவோடு, புதிய முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய் கடந்த 10-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அப்போது அவருடன் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, கே.ஏ.செங்கோட்டையன், சி.டி.ஆர் நிர்மல் குமார் உள்பட 9 பேர் அமைச்சர்களாக முதற்கட்டமாக பதவி ஏற்றுக்கொண்டனர். இந்த நிலையில் முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் முதன்மைச் செயலர் செந்தில்குமார், இன்று மக்கள் மாளிகைக்கு வந்து, ஆளுநர் ஆர்லேகரை சந்தித்துப் பேசினார். அப்போது தமிழக அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான கோப்புகளை அவர் வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்கனவே பதவியேற்ற 9 அமைச்சர்களுக்கும் ஒதுக்கப்பட்ட இலாகாக்கள் குறித்த…
மகாராஷ்டிரா முதலமைச்சர் குறித்து வெளியிடப்பட்ட செய்தி ஒன்றுக்கு, கூச்சமே இல்லையா என தமிழ்நாடு எம்.பி ஜோதிமணி கடுமை காட்டியுள்ளார். மகராஷ்டிரா முதலமைச்சரான பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஷ், பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை ஏற்று எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்துள்ளார். அவர் விமானத்தில் வணிக வகுப்பில்( Business Class) பயணம் செய்யாமல் எகனாமி வகுப்பில் பயணம் செய்தார் என செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்த செய்தியைச் சுட்டிக்காட்டித்தான் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, இப்படியெல்லாம் செய்தி வெளியிட கூச்சமே இல்லையா என தனது சமூக வலைத்தளத்தில் கடுமை காட்டி பதிந்துள்ளார். அவர் தனது பதிவில், இன்று பல்வேறு ஊடகங்கள் மோடியின் கோரிக்கையை ஏற்று எரிபொருள் பயன்பாட்டை குறைக்க மகாராஷ்டிர முதலமைச்சர் திரு. தேவேந்திர பட்னவிஷ் அவர்கள் வணிக வகுப்பில் ( Business Class) பயணம் செய்யாமல் எகானமி வகுப்பில் பயணம் செய்தார் என்று கூச்சமே இல்லாமல் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளனர். ஒரு விமானம் பறக்கும்…
தமிழகத்தில் தவெக தலைமையிலான அமைந்துள்ள புதிய அரசில் அடுத்த 3 நாட்களில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தவெக வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஜோசப் விஜய் தலைமையில் புதிய அரசு தமிழகத்தில் நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தலில் 107 தொகுதிகளில் வெற்றி பெற்றதோடு, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவோடு, புதிய முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய் கடந்த 10-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அப்போது அவருடன் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, கே.ஏ.செங்கோட்டையன், சி.டி.ஆர் நிர்மல் குமார் உள்பட 9 பேர் அமைச்சர்களாக முதற்கட்டமாக பதவி ஏற்றுக்கொண்டனர். இதன்பின்னர் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்த விஜய்க்கு, அதிமுகவில் இருந்து சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் 25 பேரும், அமமுக எதிர்ப்பு எம்.எல்.ஏ காமராஜும் ஆதரவு அளித்தனர். இந்த நிலையில் தவெக அமைச்சரவையில் 34 அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் எனக் கூறப்படுகிறது.…
பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோளை தமிழ்நாடு ஆளுநர் அர்லேகர் செயல்படுத்தியிருக்கிறார். ஈரான்- அமெரிக்கா – இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் போர் பதற்றம் காரணமாக, சர்வதேச அளவில் எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும், தேவைக்கேற்ப எரிபொருள்கள் கிடைக்காமல் பெட்ரோல் பங்குகளில் வாகனங்களோடு முண்டியடிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இதன் எதிரொலியாக பெட்ரோல், டீசல், சி.என்.ஜியின் விலையை எண்ணெய் நிறுவனங்களும் உயர்த்தியுள்ளன. இந்த நிலையில் அண்மையில், ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, சர்வதேச போர் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடியைக் கட்டுப்படுத்தும் வழிமுறையாக அடுத்த ஓராண்டுக்கு தங்கம் வாங்குவதை பொதுமக்கல் தவிர்க்க வேண்டும், பெட்ரோல் டீசலை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் நாட்டு மக்களிடம் கோரிக்கை வைத்தார். பிரதமரின் கோரிக்கையை ஏற்று பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் சிக்கன நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு வழங்கப்பட்டு வந்த காவல்துறை பாதுகாப்பு வாகனங்களின்…
முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் வாக்குறுதி அளித்த மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூம்.2500 எப்போது செயல்படுத்தப்படும் என்னும் கேள்விக்கு- அமைச்சர் நிர்மல்குமார் பதில் அளித்துள்ளார். மதுரையில் மீனாட்சி அம்மனை தரிசித்த பின்னர் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது போதைப்பொருள் நடமாட்டத்தை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறிய அவர், சட்டம் ஒழுங்கு குறித்து நாள்தோறும் முதலமைச்சர் ஆய்வு செய்து வருவதாகவும், ஒவ்வொரு துறை ரீதியாகவும் முதலமைச்சர் தொடர் ஆய்வில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கடந்த 50 ஆண்டுகளாக புரையோடிப்போயுள்ள துறைகளை முதலமைச்சர் தீவிரமாக ஆராய்ந்து அதனை சீர்ப்படுத்தும் நடவடிக்கையில் வேகம் காட்டுவதாகக் குறிப்பிட்ட அமைச்சர் நிர்மல் குமார், தேர்தலில் தவெக அளித்த முக்கிய வாக்குறுதியான மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ.2,500 என்பது, பட்ஜெட்டுக்கு பிறகு செயல்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் தனியார் அமைப்பு சார்பில் சமூக நலத்திட்ட உதவிகளை இயக்குநர் சௌந்தர்யா ரஜினிகாந்த் வழங்கினார். நாகர்கோவில் ரவுண்ட் டேபிள் 176 மற்றும் நாகர்கோவில் லேடீஸ் சர்க்கிள் 196 ஆகிய அமைப்புகள் இணைந்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவினை நடத்தியது. தனியார் திருமண மண்டபத்தில் Apex Laboratories நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் (CSR) கீழ் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பிரபல இயக்குநரும் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராகத் தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியன் (Magesh Raj Pasilian) கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் ‘ஸ்ரீ பாலாஜி ஆர்த்தோடிக்ஸ்’ (Sree Balaji Orthotics) நிறுவனம் தயாரித்த 27 செயற்கைக் கால்களை மாற்றுத்திறனாளிகளுக்கு சௌந்தர்யா ரஜினிகாந்த் வழங்கினார். இதேபோல் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், 5 பெண்களுக்கு மின்சார ஆட்டோக்கள் (E-Autos) வழங்கப்பட்டன. சுமார் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்ட இத்திட்டம், சமூக நலன் மற்றும் பெண்களின் பொருளாதார…
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தமிழக முதலமைச்சருமான ச.ஜோசப் விஜய்யின் வீடு சென்னை கிழக்குகடற்கரை சாலையில் உள்ள நீலாங்கரை காஸுரினோ டிரைவ் சாலையில் அமைந்துள்ளது. முதலமைச்சரின் பக்கத்து வீடுதான் இயக்குநர் பாரதிராஜாவின் வீடு. இதே சாலையில்தான் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரையின் வீடு, இந்திய கிரிக்கெட் வீரர் உள்ளிட்ட பல விவிஐபிகளின் வீடுகளும் உள்ளன. முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து 17 கிலோமீட்டர் பயணித்து தலைமை செயலகத்திற்கு வருகிறார். இதனால் வழிநெடுகிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் மக்கள் சிரமத்திற்கு உள்ளாவதாகவும் செய்திகள் வெளியாகின இந்நிலையில் முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி வாகன அணிவகுப்பு செல்வதற்கென தனியாக பாதை அமைக்கப்பட்டுள்ளது. சீராக போக்குவரத்து நடைபெறவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் சிறப்பு மாற்று போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி சாலையின் ஒரு பகுதியில் கூம்பு வடிவ பிளாஸ்டிக் தடைகள் வைக்கப்பட்டு போக்குவரத்து பிரித்து விடப்படுகிறது. இதனால் முதலமைச்சரின் கான்வாய் செல்லும்போதே,…
தனது மனைவியின் உயிரை காப்பாற்றி தருமாறு, காமெடி நடிகர் முத்துக்காளை, தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய்க்கு கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும், ஸ்டண்ட் கலைஞராகவும் இருந்து வருபவர் முத்துக்காளை. என் புருஷன் குழந்தை மாதிரி படத்தில், செத்து செத்து விளையாடுவோமா என இவர் நடிகர் வடிவேலுவுடன் போடும் காமெடி ஆட்டமும், இம்சை அரசன் 24-ஆம் புலிகேசியில் ஒற்றனாக வந்து இவர் செய்யும் லந்துவும் மறக்கமுடியாத நகைச்சுவை காட்சிகள். முத்துக்காளையின் மனைவி மாலதிக்கு மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவு காரணமாக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், தலையில் அறுவை சிகிச்சை செய்யட்டுள்ளது. ஆயினும், கிருமி தொற்றால், ‘கடந்த 17 நாட்களாக மூச்சு விட சிரமப்பட்டு கொண்டு, நினைவின்றி இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தனது மனைவிக்கு, உரிய மேல் சிகிச்சை அளிக்க உதவி வேண்டும்’ என தமிழக முதல்வர் ஜோசப் விஜயிடம் உதவி கோரி நடிகர் முத்துக்காளை வீடியோ…
முன்னாள் துணை முதல்வரின் செயலாளராக இருந்த பிரதீப் யாதவ், தகவல் தொழில்நுட்பத் துறை கூடுதல் தலைமைச் செயலாளராகவும், கடல்சார் வாரிய செயலாளராக இருந்த டி.என்.வெங்கடேஷ், கைத்தறித் துறை முதன்மைச் செயலாளராகவும், உயர்கல்வித் துறை செயலராக இருந்த பிசங்கர், வேளாண்மைத் துறை செயலாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வேளாண் துறை இயக்குநராக இருந்த பி.முருகேஷ், மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளராகவும், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக ஜி.லதாவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விடுப்பில் இருந்து வரும் காயத்ரி கிருஷ்ணன் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை இயக்குநராகவும், தமிழ்நாடு மீன்வள மேம்பாட்டுக் கழக இயக்குநர் கே.வி.முரளிதரன், வேளாண் துறை தலைவராகவும், நில அளவைத் துறை இயக்குநராக இருந்த தீபக் ஜேக்கப், அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் மாநில பேரிடர் குறைப்பு முகமை இயக்குநராக இருந்த முத்துக்குமரன் கரூர் மாவட்ட ஆட்சியராகவும், திருவள்ளூர் துணை கலெக்டர் அப்துல் ராசி, பொன்னேரி துணை கலெக்டராகவும், செங்கல்பட்டு துணை கலெக்டர் நல்லசிவன்,…