Author: Editor TN Talks
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். “அப்போது பேசிய அவர், கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சிகளும் ஒவ்வொரு கருத்தைக் கூறிக் கொண்டிருக்கின்றன. ஆட்சியில் பங்கு வேண்டும்; அதிக இடங்கள் வேண்டும் என்று கேட்பது அவரவா் உரிமை. ஆனால், மதிமுக கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் இதுபோன்ற எந்தவித நிபந்தனையும் விதித்தது இல்லை. வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். அப்போது, கூட்டணி கட்சிகளின் இந்தக் கோரிக்கைகள் எல்லாம் எடுபடாது; ஏற்கப்படாது. மதிமுக சோா்ந்துவிடவில்லை என்பதை மெய்ப்பிக்கும் வகையில், திருச்சியிலிருந்து மதுரை வரை 180 கி.மீ. தொலைவு நடந்து சென்று பல லட்சம் மக்களை சந்தித்து வருகிறேன். திமுகவின் ஈட்டி முனையாக மதிமுக திகழும். வந்தே மாதரம் பாடல் முழுமையாகப் பாடப்பட வேண்டும் என்ற சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதற்கு எனது கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்” என்றாா்.
திமுக அரசால் வழங்கப்படும் ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை இனி ரூ.2,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தேர்தல் நெருங்கக் கூடிய நேரத்தில் பெரிய கட்சிகள் மாறி மாறி கவர்ச்சியான தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றன. குறிப்பாக போன தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதியான மகளிர் உரிமைத் தொகை பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு 1.31கோடி மகளிருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் மகளிருக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். திமுகவின் திட்டங்களை அதிமுக காப்பி அடிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த நிலையில், இனி வரும் காலங்களில் மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அத்தோடு தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருப்பதால் அடுத்த 3 மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகையை முடக்க பார்ப்பதாகவும் ஆகையால் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல்…
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகையை தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.1,000-ல் இருந்து ரூ.2,000-ஆக உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்தது. தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த போது, மகளிர் உரிமைத் தொகையை வழங்கும் உத்தரவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார். அதன்படி, 2023 செப்டம்பர் மாதம் முதல் மகளிருக்கு மாதம் தோறும் உரிமைத் தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இதுவரை சுமார் 1.30 கோடிக்கும் அதிகமான பெண்கள் மகளிர் உரிமைத் தொகையால் பயனடைந்து வருகின்றனர். இந்தநிலையில், சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரவுள்ளநிலையில், மகளிர் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்ற மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் குறித்த புதிய அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்…
தவெக தலைவர் விஜய் மீண்டும் தனது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை தொடங்கியுள்ளார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு ஈரோட்டில் மிகுந்த பாதுகாப்புடன் மக்களை சந்தித்த அவர், தற்போது சேலத்தில் பொதுவெளியில் மீண்டும் தலைக்காட்ட உள்ளார். இது மக்களை சந்திக்கும் நிகழ்ச்சியாக அல்லாது, நிர்வாகிகள் கூட்டமாக நடைபெறும் என கட்சி தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள சுமார் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நுழைவுச் சீட்டு அல்லாத நபர்கள், பெண்கள், கர்ப்பிணிகள், வயது முதிர்ந்தோர், குழந்தைகள் இந்நிகழ்ச்சிக்கு வர வேண்டாம் எனவும், வீட்டில் இருந்தபடியே நேரலையில் கண்டு கொள்ளலாம் எனவும் கட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மதியம் 12 மணி முதல் 3.30மணி வரை நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்காக காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் விமான நிலையம் வருகிறார் தவெக தலைவர் விஜய். அங்கிருந்து…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கமான @INCTamilNadu)-வில் மோடி அரசை விமர்சிப்பது போன்ற கேலிச் சித்திரம் ஒன்று பதிவேற்றப்பட்டிருந்தது. பதில் சொல்லுங்கள் மோடி என தலைப்பிலான அந்தக் கேலிச் சித்திரத்தில், எரிவாயு விலை உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, சுற்றுச்சூழல் மாசு, வர்த்தகக் கொள்கைகள், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல தீவிரமான மக்கள் பிரச்சினைகள் குறித்து மோடி பதில் அளிக்காமல் வெளிநாட்டுக்கு விமானத்தில் சென்றுவிடுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த கார்ட்டூனை, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 69A பிரிவின் கீழ், ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தன்னிச்சையாக தடை செய்திருப்பதாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சமூக ஊடக மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை கண்டித்துள்ளது. இது தொடர்பாக சமூக ஊடகத் துறை தலைவர் எஸ்.நபில் அகமது அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்; அதில், அந்த கார்ட்டூன், இந்தியாவின் ஒவ்வொரு குடும்பத்தையும் நேரடியாகப் பாதிக்கும் முக்கிய பிரச்சினைகள் குறித்து பிரதமர் பதிலளிக்க வேண்டும்…
கரூர் சம்பவத்திற்கு பிறகு, தமிழ்நாட்டில் மக்களை நேரடியாக சென்று சந்திக்காத தவெக தலைவர் விஜய், நாளை சேலத்தில் கட்சி நிர்வாகிகளை சந்திக்கவுள்ளார். இதற்காக சேலத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்தக் கூட்டத்தில் விஜய் கலந்து கொள்ளவுள்ளதால், பல்வேறு கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. கூட்டத்தில் பங்கேற்கவுள்ள 4,998 பேருக்கு நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் கலந்து கொள்ளும் கழக நிர்வாகிகள் சந்திப்பு மற்றூம் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி, நாளை ( பிப்.13 ) மதியம் 12 மணி முதல் 3 மணிக்குள் நடைபெறவுள்ளது. காவல்துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின் படி, இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க அனுமதி பெற்றவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 4,998 பேர் மட்டுமே…
தந்தை மகனுக்கு இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் இன்று பாமக என்ற கட்சி இரு பிரிவாக பிரிந்து கிடக்கிறது. அன்புமணி தரப்பினர் மற்றும் ராமதாஸ் தரப்பினர் என இருபிரிவாக இருப்பவர்களுக்கு மத்தியில், நிர்வாகிகளும் தொண்டர்களும் யாரைப் பின்பற்றுவது என்ற குழப்பத்தில் உள்ளனர். அவ்வப்போது தனது மகன் அன்புமணி குறித்து பொது வெளியில் திட்டித் தீர்த்து வருகிறார் ராமதாஸ். தேர்தல் நெருங்கும் நேரத்தில் அன்புமணி தரப்பு பாமகவினர் அதிமுகவோடு கூட்டணிக்கு சென்றுவிட, ராமதாஸ் தரப்பை திமுக இழுக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. பாமக சின்னம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், யார் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் வழக்கம் போல அன்புமணி தரப்பை கடுமையாக சாடினார். அதாவது, ”ஒரு கூட்டம் பொய் சொல்வதையே…
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே முற்றுகை போராட்டம் நடைபெற்றது. 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஊரக மற்றும் நகர்ப்புற மகளிர் திட்ட பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் மாவட்ட நிர்வாகத்தால் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களை மகளிர் மேம்பாட்டு நிறுவன பணியாளர்களாக அங்கீகரித்து 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் பணியாளர்களை காலமுறை ஊதியம் வழங்கி நிரந்தப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தில் மாநில ஊராக வாழ்வாதர இயக்க பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்து நாம் தமிழகர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது போராட்டக்காரர்களை சந்திக்க சீமானுக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் போலீசாருடன் சீமான் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் மற்றும் சீமான் ஆகியோரை…
ஒரு திரைப்படத்தை உருவாக்குவது என்பது எவ்வளவு கடினம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதிலும், இந்த தேதியில் படம் வெளியாகப் போகிறது என முன்கூட்டியே அறிவித்து விட்டு படம் எடுப்பது மிகவும் சவாலான ஒன்று. அப்படி தேதியை அறிவித்து விட்டு வெளியாக முடியாமல் போன படங்கள் பல. அப்படி தேதியை குறிப்பிட்டு விட்டு பிறகு வெளியாகும் படங்களுக்கு பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் மிகவும் அடிப்பட்டு போகும். குறிப்பாக பாலையாவின் அகாண்டா 2 படம் டிசம்பர் மாதம் வெளியாக இருந்தது, பிறகு தள்ளிப்போனது. அதனால் அப்படத்தின் கலெக்ஷனும் குறைந்ததாக கூறப்பட்டது. அவ்வளவு ஏன்? கோலிவுட்டில் விஜய்யின் கடைசிப் படமான ஜனநாயகன் படம் பொங்கலுக்கு வெளியாகும் எனக் அறிவிக்கப்பட்ட நிலையில், ஒரு மாதம் ஆகியும் வெளிவர முடியாமல் கிடப்பில் கிடக்கிறது. இங்கு நிலைமை இப்படி இருக்க ஹாலிவுட்டில் 100 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகக் கூடிய படம் ஒன்றை 2015-லேயே எடுத்து பத்திரமாக பூட்டி வைத்துள்ளார்களாம்.…
மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ”அவையில் சுதந்திரமாக பேச வாய்ப்பளிக்க வேண்டும். பொருளாதார ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ள இரண்டு அம்சங்கள் குறித்து பேச வேண்டும். எரிசக்தியையும், பொருளாதாரத்தையும் ஆயுதமாக பயன்படுத்தும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம் நாட்டின் வலிமை என்ன என்பதை நாம் உணர வேண்டும். 140கோடி மக்களே இந்தியாவின் வலிமை. முன்பு இருந்தது போன்ற உணவு பொருட்கள் தட்டுப்பாடு எதுவும் தற்போது இல்லை. இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. உலகத்தில் பதற்றமான நிலை மற்றும் போர்களுக்கான காலமாக காணப்படுகிறது. அதே நேரத்தில் செயற்கை நுண்ணறிவுக்கான காலம் வந்துவிட்டது. பாகிஸ்தானின் ராணுவத் தளபதியை காலை உணவுக்கு அழைத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உபசரித்தார். ஆனால், இந்த அரசு அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டு தான் இருந்தது. அமெரிக்காவுக்கு இந்தியாவின் தரவுகள் மிகவும் முக்கியம்.…