வேட்புமனுவில் சொத்து மற்றும் வருமான விவரங்களை  மறைத்தது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது விசாரணை நடத்த வருமான வரித்துறைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வெற்றி பெற்று, எம்.எல்.ஏ.வாக பதவியேற்றுள்ளார்.

 இந்தநிலையில்,  எடப்படி பழனிசாமி தாக்கல் செய்த வேட்புமனுவில், தனது  சொத்து மற்றும் வருமான விவரங்களை மறைத்து விட்டதாகக் கூறி,  எடப்பாடி தொகுதியை சேர்ந்த வாக்காளர் சக்திவேல் பெருமாள் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், எடப்பாடி பழனிசாமி தனது வேட்புமனுவில் சொத்துக்கள் குறித்து முழுமையான விவரங்களை தெரிவிக்கவில்லை  என்றும்,

2021, 2026ஆம் ஆண்டுகளில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வேட்புமனுக்களை ஒப்பீட்டால், ஏராளமான வேறுபாடுகள் உள்ளதாகவும்,

 உண்மை தகவல்கள்  மறைக்கப்பட்டுள்ளதால்  இது குறித்து விசாரணை நடத்த வருமான வரித்துறைக்கு   உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது வருமானவரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே இதேபோல வழக்குகளில் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும்,,

இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. தேர்தல் வழக்கு தான் தொடர முடியும் எனவும் தெரிவித்தார்.

 இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version